என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100652"
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம். எல்லாவற்றையும் விட விளையாட்டு மேலானது தான். அதேநேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது குறித்து தற்போது எங்களால் எதுவும் சொல்ல முடியாது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.
பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்று பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. இதனை தான் நாம் தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து நமது அரசு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 60 ரன் எடுத்தார்.
இதன்மூலம் அவர் வெற்றிகரமான சேசிங்கில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். 80 இன்னிங்சில் அவர் 5004 ரன்னை எடுத்தார். சராசரி 96.23 ஆகும். இதில் 21 சதமும், 20 அரைசதமும் அடங்கும்.
இந்த ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். தெண்டுல்கர் 5490 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
கோலி கேப்டன் பதவியில் வெற்றிகரமாக ரன் சேசிங்கில் 2050 ரன் (27 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.
வெற்றிகரமான ரன் சேசிங்கில் அதிக ரன் எடுத்த ‘டாப் 5’ வீரர்கள் வருமாறு:-
1. தெண்டுல்கர் (இந்தியா) 5490 ரன் (124 இன்னிங்ஸ்)- சராசரி 55.45.
2. விராட் கோலி (இந்தியா) 5004 ரன் (80 இன்னிங்ஸ்)- சராசரி 96.23.
3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 4186 ரன் (104 இன்னிங்ஸ்) -சராசரி 57.34.
4. காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 3950 ரன் (100 இன்னிங்ஸ்)- சராசரி 56.42.
5. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) 3750 ரன் (90 இன்னிங்ஸ்)- சராசரி 46.87. #ViratKohli
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய அணியும் தற்போதுள்ள வேகப்பந்து குழு போல் செயல்பட வில்லை. தற்போது அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. இதை நம்ப முடிய வில்லை. இதுபோன்ற செயல்பாட்டையும் தீவிரமான ஆட்டத்தையும் பார்த்ததில்லை. இது கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு கிடைத்ததாகும்.
நம்மிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறையபேர் உள்ளனர். இதன்மூலம் இன்னும் திறமைவாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிய முடியும். கோலியின் ஆக்ரோஷம் நல்ல பயன்களை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
2018-ம் ஆண்டு இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 179 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா ஆகியோர் சேர்ந்து 136 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். #kapildev #indiateam #kohli
இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று ஐசிசி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவரது பந்துவீச்சு பரிசோதனையில் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்தது.
அகில தனஞ்ஜெயா இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 27 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்டும், டி20-யில் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லியில் நடந்து வரும் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 3-வது நாள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்து 19 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவுதம் கம்பீர் 185 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் கம்பீர் முதல் தர போட்டியில் பதிவு செய்த 43-வது சதம் இதுவாகும்.
இந்தூரில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஜய் ரோஹேரா 267 ரன்கள் (21 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை 21 வயதான அஜய் ரோஹேரா படைத்தார். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டில் மும்பை வீரர் அமோல் முஜூம்தார் 260 ரன்கள் எடுத்ததே முதல் தர போட்டியில் அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. ரோஹேராவின் அபாரமான இரட்டை சதத்தின் உதவியுடன் மத்திய பிரதேச அணி இன்னிங்ஸ் வெற்றியை வசப்படுத்தியது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் ( பிரிவு) கேரள அணி முதல் இன்னிங்சில் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 116 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பாபா இந்திரஜித் (92 ரன்), கவுசிக் காந்தி (59 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. #RanjiTrophy #Gambhir
அதன்பின் 20 ஓவர் கிரிக்கெட் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு மிக அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரவு எமிரேட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்துகள் போட்டியை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், விளையாட்டு விதிமுறையை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்சும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும்.
ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை (Bowling End) மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகள் வீசலாம். அதிகபட்சமாக 20 பந்துகள்தான் வீச முடியும்.
கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிப்பவர் விராட்கோலி.
இந்திய அணி கேப்டனான அவர் விளையாட்டு மட்டுமின்றி விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
இந்த நிலையில் விராட்கோலி இந்த ஆண்டில் ரூ.170 கோடி வருமானம் ஈட்டிய தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் பட்டியலில் அவர் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களில் கோலி 82-வது இடத்தில் உள்ளார். அவர் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சைவிட அதிக வருவாய் ஈட்டியுள்ளார்.
டிஸ்காட், ‘ஆடி’கார், பூமா, உபர் உள்ளிட்ட 21 விளம்பர நிறுவனங்கள் கோலி கைவசம் உள்ளன.
வாட்ச், கார்கள். விளையாட்டு உபகரணங்கள், மோட்டார் பைக், துணி மணிகள், சுகாதார உணவு, எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட விளம்பரங்களில் அவர் பங்கேற்று வருகிறார்.
சமூக வலை தளங்களில் கோலியை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஸ்புக்கில் ரூ.3.7 கோடி பேரும், டுவிட்டரில் 2.71 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 2.5 கோடி பேரும் கோலியை பின் தொடர்கிறார்கள். #ViratKholi
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த முதல் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது. ஹீலி 46 ரன்னும், லென்னிங் 31 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 17.3 ஓவரில் 71 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 71 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 3 முறை சாம்பியனான (2010, 2012, 2014) ஆஸ்திரேலியா 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த (2016) உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்றதற்கு ஆஸ்திரேலியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரடிப்படி வருகிற 25-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomensWorldT20 #WWT20 #EngvAUS
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக திகழ்ந்துள்ளார்.
ரன்மெஷின் சிங் என்று அழைக்கப்படும் அவர் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.
விராட் கோலி தனது முழு அதிகாரத்தையும் தனிநபர் ஆட்சி போல் செயல்படுத்துவது தவறு என்ற பரவலான எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.
பயிற்சியாளர் விவகாரத்தில் அவர் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியது உதாரணத்துக்கு ஒன்றாகும்.
இந்த நிலையில் விராட் கோலியை முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம் பவான்களில் ஒருவருமான பிஷன்சிங் பெடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒரு நபர் (விராட்கோலி) தனது இஷ்டத்துக்கு ஏற்றப்படியும், விருப்பப்படியும் செயல்படுகிறார். நாமும் அவரை விட்டுக் கொண்டு இருக்கிறோம். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
அணில் கும்ப்ளே விவகாரத்தில் அணில் என்ன கூறி இருக்க போகிறார். ஆனால் அவர் பெருந்தன்மையாக அப்படியே அதனை விட்டு விட்டார்.
தற்போதுள்ள இந்திய அணி நன்றாக இருக்கிறது. ஆனால் நமது அணி ஒருநபரால் தான் ஆனது. அனைத்தும் கோலிதான்.
அவர் மீது அதிகமான கவனம் இருந்தால் எப்படி ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும். ஒரு கேப்டனாக, ஒரு வீரராக அவர் மீது நாம் கடும் அழுத்தங்களை ஏற்படுத்துகிறோம்.
இவ்வாறு பிஷன்சிங் பெடி கூறினார்.
கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே 2017-ம் ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடதக்கது. #ViratKohli
6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.
‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்தன. தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் (‘ஏ’ பிரிவு), நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்தது.
மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் 22-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. #WomensT20WorldCup
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்