என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100652"
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலுக்கு எதிராக நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அணி கேப்டன் இந்திரஜித் கூறியுள்ளார்.
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது, திண்டுக்கல் டிராகன்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. பரப்பான இந்த ஆட்டத்தில் திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து திருச்சி வாரியர்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் நிருபர்களிடம் கூறியதாவது:-
173 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் சிறந்த ஸ்கோர் தான். இதனால் விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் 87 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து விட்டோம்.
எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதும் தெரியும். ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு வந்தவுடன் தோல்வியின் எல்லையை குறைக்க முடியும் என்று நினைத்தோம்.
கடைசி 5 முதல் 6 ஓவரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எல்லாம் நல்ல படியாக அமைந்ததால் வெற்றி பெற்றோம். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.
சுரேஷ் குமார் நீண்ட காலமாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் தான் வீரர்கள் ஏலத்தில் அவரை விரைவிலேயே எடுத்தோம். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து திண்டுக்கல் அணி வீரர் ஹரி நிஷாந்த் கூறும் போது 172 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். எங்களது பீல்டிங் தரத்தை மேம்படுத்த வேண்டும்“ என்றார்.
இன்று ஒய்வு நாளாகும். நாளைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL #TNPL2018 #DDvRTW
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் கோல்டன் சிட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்குமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் கோல்டன்சிட்டி பகுதி ஊராட்சியை சேர்ந்தது என்பதால், அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நண்பர், பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கருக்கு பழக்கமானவர். இதனால் அவர் மூலம், கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குமாறு சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை மனுவுடன் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, கோல்டன் சிட்டி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தை சச்சின் தெண்டுல்கர் ஒதுக்கீடு செய்தார்.
அந்த நிதியின் மூலம் கோல்டன் சிட்டி பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்த சாலையானது 3.75 மீட்டர் அகலத்திலும், 20 செ.மீ. தடிமனிலும் வெட்மிக்ஸ் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டு அடுக்காக தார்ச்சாலை போடப்பட உள்ளது. இச்சாலை இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது, என்றார்.
கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்த சச்சின் தெண்டுல்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். #SachinTendulkar #tamilnews
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் தொடர் வருகிற 3-ந் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டுப்ளின் நகரில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது.
இரு அணிகளும் 2009-ம் ஆண்டு நாட்டிங்காமில் மோதிய ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணி வீரர்கள் விவரம்:- இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ரெய்னா, டோனி, தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், பும்ரா, சித்தார்த் கவூல், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், ராகுல்.
அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), பால்பிரின், வில்லியம் போர்ட்டர் பீல்டு, கெவின் ஓபிரையன், ஜேம்ஸ் ஷனான், ஷிமிசிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன், ரேன்கின், ஸ்டூவர்ட் பாய்ன்டர், மெக்பிரின், ஜோசுவா லிட்டில், டாக்ரெல், பீட்டர் சேஸ்
நெருக்கடிக்கு மத்தியில் பொறுமையாக ஆடியது போன்று தெரிந்ததே என்று ஜோஸ் பட்லரிடம் நிருபர்கள் கேட்ட போது ‘விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் நான் பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருந்தது. நெருக்கடியை தணிக்க முயற்சித்தேன். அப்போது இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி எந்த மாதிரி சமாளிப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்தேன். அவர் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக ஆடியிருப்பார். அதைத் தான் நானும் களத்தில் செய்தேன்’ என்றார். #MSDhoni #JosButtler
இதனால் அடுத்து வரும் கவுண்டி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ‘சவாலான இந்திய தொடருக்கு ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார். #jamesAnderson #England
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் விக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து, ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இப்போட்டி தொடரில் இன்று கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 72 ரன் எடுத்தது. இந்திய தரப்பில் எக்தா பிஸ்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து 73 ரன் இலங்கை விளையாடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. மிதாலிராஜ், தீப்தி சர்மா டக் அவுட் ஆனார்கள்.
இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணியிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.
வங்காளதேசம்- மலேசியா இடையேயான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழையும். ஒரு வேளை வங்காளதேசம் தோல்வி அடைந்தால் 6 புள்ளியுடன் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். #IndiaVsPakistan #WomensAsiaCupT20Final
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்