search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    பிரதமர் மோடி மீதான புகாரில் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கவில்லை என தலைமை தேர்தல் கமிஷனர் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா மீது கூறப்பட்ட நடத்தை விதிமீறல் புகாரில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கவில்லை. தகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது. இதனை கமிஷனர் அசோக் லாவசா அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார். நான் யாருக்கும் நன்னெறி நீதிபதி அல்ல. லாவசாவைவிட சற்று மூத்தவன். அவருடைய உணர்வுகள் எப்படி இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் பொய் சொன்னதில்லை.



    தேர்தல் கமிஷனில் அனைவரும் ‘ஜெராக்ஸ் காப்பிகள்’ இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. பேசுவதற்கும் ஒரு நேரம், அமைதியாக இருப்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால் ஒன்று அது ஒருமித்த கருத்தாக இருக்கும் அல்லது பெரும்பான்மையினர் கருத்தாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தெலுங்குதேசம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலிலும், ஆந்திர சட்டசபை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

    தேர்தல் தோல்விக்கு பின்னர், குண்டூரில் நேற்று நடந்த கட்சி நிறுவனர் என்.டி.ராமாராவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. அவர்களுக்கு நாம் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும். அவர்கள் சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவிடுவோம்” என்றார்.

    மேலும், “நமது கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாம் மக்களுக்கு பணி ஆற்றுவோம். நாம் நமது தவறுகளை ஆராய்ந்து சரி செய்வோம். மக்கள் பணியில் நம்மை மறுஅர்ப்பணம் செய்வோம்” எனவும் குறிப்பிட்டார்.
    விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

    இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

    தேர்தல் தோல்வி குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது’’ என்று கூறி இருந்தார்.

    இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

    நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

    இன்னும் 1 வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா இன்று பதவியேற்றார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
    பிரிட்டோரியா:

    தென்னாப்பிரிக்க நாட்டி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, சிரில் ராமபோசா (வயது 66) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது.  அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.  இதனை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் கடந்த வாரம் கூறினார்.



    இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்டு ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி இன்று அதிபராக ராமபோசா பதவியேற்று கொண்டார். 

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராமபோசா, ஊழலை ஒழிக்கவும், தடுமாறும் பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார்.  
    சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி தலைவர்கள் இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநில கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி, ஆட்சியை பிடித்துள்ளது. 32 தொகுகிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா 17  தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பி.எஸ். கோலே தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற குழுவினர், இன்று கவர்னனனர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். எனினும், முதலமைச்சர் யார்? என்பதை அக்கட்சி வெளியிடவில்லை. விரைவில் அறிவிக்க உள்ளதாக கோலே தெரிவித்தார்.



    முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கோலேவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், அவர் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

    ஊழல் வழக்கில் கோலே சிறைத்தண்டனை பெற்றதாலும், 2017ல் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாலும் அவரை முதலமைச்சராக பதவியேற்க அழைக்கலாமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்பு விழா 28-ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பாராளுமன்ற தேர்தலில் இதர மாநிலங்களுக்கு மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் அபாரமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். சில மாநிலங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்களும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் அம்மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சரிசமமான பலத்துடன் இறுதிச்சுற்று முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

    ஆனால், இவற்றுக்கு எல்லாம் மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), ஆ.ராசா (நீலகிரி), ஜெகத் ரட்சகன் (அரக்கோணம்), பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்) மற்றும் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய முக்கிய பிரமுகர்கள் காலையில் இருந்தே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    மேலும் மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலைகள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், வடசென்னை, சேலம், கடலூர், பொள்ளாச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளில் லட்சத்துக்கும் அதிமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    தி.மு.க.வின் வெற்றிக் கணக்கில் முதல் வரவாக நீலகிரி தொகுதியில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


    தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. பல வேட்பாளர்கள் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் இவர்களின் வெற்றி உறுதியாகி விட்டதாக கருதப்படுகிறது.

    நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலையில் உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சிவகங்கை, திருச்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், திருவள்ளூர், கரூர், திருவள்ளூர் ஆகிய 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

    சிவகங்கையில் முன்னாள் மத்திய மந்திரியின் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும், திருச்சியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், ஆரணியில் விஷ்ணுபிரசாத்தும், கன்னியாகுமரியில் வசந்தகுமாரும் முன்னிலையில் உள்ளனர்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் சற்று பின்தங்கி மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

    விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் உள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவை ஆகிய 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி வேட்பாளர் நவாஸ்கனி தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணி ஒரே ஒரு தொகுதியான தேனியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவிந்திரநாத் குமார் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

    இதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே புதுவையிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.
    வியன்னா:

    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகினார். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபர் அலெக்சாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில், மைய வலதுசாரி மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசில் மைய வலதுசாரி மக்கள் கட்சியின் செபாஸ்டியன் குர்ஸ் பிரதமராக உள்ளார். தீவிர வலதுசாரி சுதந்திர கட்சியின் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் துணைப்பிரதமராக இருந்து வந்தார்.



    இந்த நிலையில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்காக ரஷிய முதலீட்டாளரிடம் பேரம் பேசி உள்ளார்.

    இது தொடர்பாக ரகசியமாக வீடியோ எடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் பதவி விலகி விட்டார்.

    இருப்பினும் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் அலுவலகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்து, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இதே பரிந்துரையை அந்த நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் வான் டிர் பெல்லனிடம் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் செய்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் கூறுகையில், “முடிந்த வரையில் வெகு விரைவாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் அதிபரிடம் பரிந்துரை செய்து இருக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இது போதும் என்று நேர்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதை வீடியோ காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.

    இதை அதிபர் அலெக்சாண்டரும் உறுதி செய்து கூறும்போது, “துணைப்பிரதமர் பதவி விலகி விட்டதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் தேவைப்படுகிறது. பிரதமர் செபாஸ்டியன் குர்ஸிடம் விவாதித்து முடிவு எடுப்பேன்” என குறிப்பிட்டார். பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஊழலுக்கு எதிராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பகல் ஒரு மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


    8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபடசமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 52.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் 47.55 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 43.89 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 36.66 சதவீதம் வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 36.37 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 36.20 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 35.60 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 34.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    ஒட்டுமொத்தமாக மேற்கண்ட 59 தொகுதிகளிலும் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்களிக்க 4 ஆம்னி பஸ்களில் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் தடுத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடை பெற்றது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணி மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 ஆம்னி பஸ்கள் வந்தன. அதனை வழிமறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, எஸ்.பி. விக்ரமன் ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பஸ்களில் முஸ்லிம்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளியூர் நபர்களுக்கு இங்கு அனுமதியில்லை என்றனர்.


    இதையடுத்து பஸ்சில் வந்தவர்கள், நாங்கள் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், பள்ளப்பட்டியை சேர்ந்தவரா? என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து விட்டு அனைவரும் செல்லும்படி அறிவுறுத்தினர்.

    இதற்காக அவர்களின் வாக்காளர் அட்டையை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொழில் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் முஸ்லிம் வாக்குகள் மட்டும் 30 சதவீதம் உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் வாக்களிக்க வந்த இஸ்லாமியர்கள் கூறுகையில், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நாங்கள் வாக்களிக்க வந்தோம். ஆனால் போலீசார் எங்கள் மீது சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். எங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை பார்த்த பிறகே வாக்களிக்க செல்ல அனுமதி அளித்தனர். நாங்கள் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க வரவில்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளோம். இருப்பினும் போலீசார் எங்களிடம் விசாரணை நடத்தியது வருத்தமளிக்கிறது என்றனர்.

    பாராளுமன்றத்துக்கு இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.

    அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

    கடந்த 6-ந்தேதி 51 தொகுதிகளுக்கும், 12-ந் தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது.

    பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்குவங்காளம் (9), சண்டிகர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இந்த 59 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 30-ந்தேதி இந்த 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.

     


    கடந்த 2 வாரங்களாக இந்த 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் 8 மாநிலங்களிலும் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்கள். அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோரும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மாநில கட்சிகளின் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்பட்டதால் அங்குள்ள 9 தொகுதிகளிலும் நேற்று முன்தினமே பிரசாரம் ஓய்ந்தது.

    மற்ற 50 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதமாக பரபரப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.

    நாளை (ஞாற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் 6 கட்ட தேர்தல் மூலம் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. நாளை 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெறும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.

    நாளை நடக்கும் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற் காக 59 தொகுதிகளிலும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    59 தொகுதிகளில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாளை சத்ருகன்சின்கா, ரவிசங்கர்பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த 50 தொகுதிகளிலும் 33 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை மாநில கட்சிகளின் கடுமையான சவால் காரணமாக பாரதிய ஜனதா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 19-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
    புதுடெல்லி:

    ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    வரும் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிக்கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

    இதையொட்டி 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில் அமித் ஷா பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் ஒருநாள் முன்னதாகவே (நேற்று முதல்) பிரசாரத்துக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    மீதமுள்ள 59 தொகுதிகளில் நடைபெற்றுவந்த உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுவடைந்தது. 

    19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். முன்னர் ஆறுகட்டங்களாக நடந்த தேர்தலுடன் அனைத்து தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் படிப்படியாக முடிவுகள் அறிவிக்கப்படும். 
    21-ந் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகே எதிர்க் கட்சிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விஜயவாடா:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது.

    7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குபதிவு 59 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 23-ந்தேதி நடக்கிறது.

    இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு வருகிற 21-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மேற் கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் 21-ந் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகே எதிர்க் கட்சிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி, பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் புறக்கணிக்க திட்டமிட்டு இருந்தனர். இந்த மூன்று கட்சிகளும் முக்கிய எதிர்க்கட்சிகளாகும்.

    இந்த புறக்கணிப்பு திட்டம் காரணமாகவே 21-ந்தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு எந்த ஒரு கூட்டமும் தேவையில்லை என்று எதிர்மறையான பதிலை தெரிவித்து உள்ளார். இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் கூட்டம் தேர்தல் முடிவுக்கு பிறகு நடத்தப்படுகிறது.

    தேர்தல் முடிவுக்கு பிறகே எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பது தெரியவரும். அதற்கு பிறகு கூட்டம் நடத்தினால் தான் பயனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சி கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கிறது.

    ×