search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-ம் இடத்துக்கு தள்ளப்படும், மாநில கட்சிகள் கூட்டணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் என்று அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley #Congress #Manufacturing
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தங்களுக்கான தேர்தல் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதமருக்கும், அவருடைய போட்டியாளர்களுக்கும் இடையிலான புகழ் இடைவெளி மிகப்பெரிதாக உள்ளது.

    மொத்த மக்களவை தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இல்லவே இல்லை. அல்லது, 3-வது, 4-வது இடத்தில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி மொத்தம் 225 தொகுதிகளில்தான் போட்டியிடும் நிலையில் உள்ளது. அங்கெல்லாம் பா.ஜனதாவுடன்தான் நேரடி போட்டி நிலவும்.

    எனவே, தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு ஓரம்கட்டப்படும். மாநில கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றும்.

    காங்கிரஸ் கட்சி, ஊழல் புகாரில் சிக்கித் தவித்த கட்சி. ஆனால், பிரதமர் மோடியோ ஊழலற்ற ஆட்சியை தந்து வருகிறார்.

    எனவே, காங்கிரஸ் கட்சி கண்டுபிடித்த உத்திதான், இட்டுக்கட்டுவது. உண்மையான பிரச்சினை இல்லை என்றால், புதிதாக உருவாக்குவது. அப்படி போலியாக உருவாக்கியதுதான், ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த விவகாரம். ஆனால் அது எடுபடவில்லை.

    அது, அரசுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம். இதில், தனிநபர் சம்பந்தப்படவில்லை. தங்களது போர் திறனுக்கு அந்த விமானம்தான் ஏற்றது என்று ராணுவப்படைகள் விருப்பம் தெரிவித்தன. ரபேல் போர் விமானங்களின் விலையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரிகளும் சொல்லவில்லை. ஏனென்றால், இது தேசநலன் சம்பந்தப்பட்ட விவகாரம்.

    பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்தபோது, அவர் இது ரகசிய ஒப்பந்தம் அல்ல என்று தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்த கூற்று, உடைத்து எறியப்பட்டு விட்டது.

    முன்பு, போபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் கட்சி சிக்கி தவித்தபோது, அதை திசைதிருப்ப வி.பி.சிங் மகன் பெயரில் செயின்ட் கிட்ஸ் தீவில் போலியாக ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டது. ‘நாங்கள் ஊழல்வாதி என்றால், நீங்களும் ஊழல்வாதிதான்’ என்று காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சி அப்படி செய்தது. அதுபோன்றுதான் இப்போதும் செய்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வியூகம், மதச்சார்பின்மைக்கு புதிய அர்த்தம் கொடுத்து, சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவது. ‘இந்து பாகிஸ்தான்’ என்ற சொற்றொடரும், தலீபான்களுடன் இந்துக்களை ஒப்பிடுவதும் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்கான நோக்கம்தான். அதன்மூலம், இந்துக்களுடன் பகையை உண்டாக்க பார்க்கிறது. ஆனால், அது காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை உண்டாக்கி விடும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  #ArunJaitley #Congress #Manufacturing  #tamilnews 
    வேலூர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் உறுப்பினர் தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் உறுப்பினர் தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த மோதலை தொடர்ந்து காரில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் 2 வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்து 12 பேரை கைது செய்தனர்.

    வேலூர் அண்ணா சாலை சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் நேற்று காலை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த கூட்டத்தில் சி.எஸ்.ஐ. போதகர் சாது சத்யராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது சர்ச்சில் திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஸ்ரீதரன், வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ், தெற்கு இன்ஸ்பெக்டர் லோகநாதன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர்.

    இதற்கிடையே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேவாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த விருதம்பட்டு இ.பி. காலனியை சேர்ந்த தேவா என்பவருக்கு சொந்தமாக காரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது காரில் ஒரு கைத்துப்பாக்கி, 2 வீச்சரிவாள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் துப்பாக்கி, வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து தேவா (வயது30) யோவான் (30) வேதாந்தம் (44) அன்புகிராண்ட் (28) சந்தோஷ் (28) ஆகிய 5 பேரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஓல்டுடவுன் வடிவேலு (எ) இஸ்ரேல், சதீஷ்குமார், சந்தோஷ், ராமச்சந்திரன், பின்ட் மஞ்சுளா, திலீப் ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

    கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று இல.கணேசன் எம்.பி. கூறியுள்ளார். #LaGanesan #BJP

    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. நகர தலைவர் ஆர்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களை மாவட்ட தலைவர் தாமோதரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. பா.ஜ.க. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட கூறமுடியவில்லை. அந்த அளவுக்கு ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஏழை மக்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கியது ஒரு மகத்தான திட்டம் ஆகும். அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கியது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். ஏழைகளுக்கு வீடு வழங்கிய திட்டம் நாட்டில் அடித்தட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முலம் நரேந்திர மோடிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் சேலம்-சென்னை இடையே அமையும் 8 வழிச்சாலை திட்டம் இயற்கையாகவே சுமூகமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு 90 சதவீதம் மக்கள் தானாகவே முன்வந்து நிலம் கொடுத்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    நிலம் கொடுத்த மக்களுக்கு சந்தை மதிப்பைவிட ஒன்னரை மடங்கு அதிகமாக பணத்தை தமிழக அரசு தருகிறது. இந்த வி‌ஷயத்தில் தூத்துக்குடி சம்பவம் போல் துப்பாக்கிசூடு வரை போகாமல் சுமூகமான முறையை கையாண்டு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருவதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்குதேசம் பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏன் அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும் என்று மற்றவர்கள் வலியுறுத்துகின்றனர் என எனக்கு புரியவில்லை.

    ஆந்திரா மாநிலம் சம்மந்தமான பிரச்சினைக்கு அவர்கள் இந்த வழியை மேற்கொண்டுள்ளனர். நமக்கு தேவையானவற்றை மத்திய அரசு கேட்ட உடன் செய்கின்றது. அத்துடன் மேலும் தேவைப்படுவதை கேட்டுப் பெற்றுக் கொள்ளபோகிறோம்.

    எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த பிரச்சினையை தமிழக எதிர்கட்சிகள் எதன் அடிப்படையில் பேசுகின்றனர் என்றே புரியவில்லை. இது ஒரு மாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைதான். தேசிய பிரச்சனை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கவர்னர் ஆய்வு நடத்துவதை ஏன் தி.மு.க. எதிர்த்து போராட்டம் நடத்துகிறது என தமிழக மக்களுக்கே புரியவில்லை. பிரதமர் நரேந்திரமோடி எது செய்தாலும் அதனை தி.மு.க. செயல்தலைவர் எதிர்கின்றார். ஏன், எதற்கு என புரியாமல் செயல்படும் அவரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்.

    பா.ஜ.க.வை சார்ந்து அ.தி.மு.க. இல்லை. இங்குள்ள கட்சிகள் பா.ஜ.க-அ.தி.மு.க. உறவு குறித்து தவறாக பேசிவருகின்றன. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டுக்கும், மத்திய அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் தனக்கு அடிபணியாதவர்களை மிரட்ட வருமான வரித்துறையை பயன்படுத்தினார்கள். அந்த தேவை பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன், கோட்ட பொருப்பாளர் குணா, இணை பொருப்பாளர் அருள், ஒன்றிய பொருளாளர் சதீஷ், ஒன்றிய வர்த்தகர் அணி தலைவர் பாலாஜி, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் திருமால், முகையூர் ஒன்றிய தலைவர் அரிகிருஷ்ணன், அரகண்டநல்லூர் நகர தலைவர் ஏ.வி.கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

    முடிவில் மாவட்ட துணைத்தலைவர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார். #LaGanesan #BJP

    பாகிஸ்தான் தேர்தலில் வரும் புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் உறுதியுடன் உள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தேர்தலில் வரும் புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் உறுதியுடன் உள்ளார். #ImranKhan

    342 இடங்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் புதன்கிழமை (25-ந் தேதி) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

    இந்த தேர்தலில் பல கட்சிகள் களத்தில் குதித்து இருந்தாலும் கூட, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு இம்ரான்கான் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள், அங்கு ஆட்சியைப் பிடித்து விட முடியும் என்ற அவரது உறுதியை காட்டுகிறது.

    இதுபற்றி அவர் கூறும்போது, “பாகிஸ்தானை மீண்டும் உயர்த்திக்காட்டுவதுதான் எங்கள் இலக்கு. அதை நோக்கியே பிரசாரம் செய்கிறோம். எங்கள் முக்கிய கொள்கை, ஊழலை ஒழிப்பதாகும்” என்று குறிப்பிட்டார்.

    இம்ரான்கான் தொடர்ந்து பேசும்போது, “இதுவரை பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகள் திடீரென தேர்தல்கள் நேர்மையாக நடைபெறாது என கவலை வெளியிட்டு வருகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகள் எங்கள் ஆதரவு பெருகி வருவதை காட்டுவதே இதற்கு காரணம். எனவே இப்போதே அவர்கள் கதை கட்டத் தொடங்கி விட்டனர்” என்று கூறினார்.

    “நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை, மக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது, இந்த ஊழல்களால்தான் நாட்டில் பணம் இல்லாமல் போய் விட்டது. மனித வள மேம்பாட்டுக்கு பணம் இல்லாத நிலை வந்து விட்டது” என்றும் இம்ரான்கான் சாடினார்.

    ஆனால் நவாஸ் ஷெரீப் தண்டிக்கப்படுவதற்கு உண்மையான காரணம், அவர் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பு கொள்கையிலும், வெளியுறவு கொள்கையிலும் ராணுவத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததுதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இப்போதும் தேர்தலில் நேரடியாக ராணுவத்தின் தலையீடு இருக்காது என்று கூறப்பட்டாலும், அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டதாக புகார் எழுந்து வருகிறது.

    நவாஸ் ஷெரீப் கட்சி வேட்பாளர்கள் பலரும், தாங்கள் கட்சி தாவுமாறு ராணுவ உளவுப்பிரிவினரால் மிரட்டப்படுவதாகவும், நவாஸ் ஷெரீப்புக்கு அனுதாப அலை இருப்பது போல செய்திகளை வெளியிடக்கூடாது என ஊடகத்தினர் அறிவுறுத்தப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    தேர்தலை சீர்குலைக்க சதி நடப்பதாக நவாஸ் ஷெரீப் கட்சியினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் இம்ரான்கான் கட்சியினரோ ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்குத்தான் நவாஸ் ஷெரீப் தரப்பினர் குற்றம்சாட்டுவதாக கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போதைய நிலவரப்படி நவாஸ் ஷெரீப் கட்சிக்கு சாதகமாக உள்ளது. அவரது கட்சிக்கு 32 சதவீதத்தினரின் ஆதரவும், இம்ரான்கான் கட்சிக்கு 29 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறுகின்றன. இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் 3 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  #ImranKhan #PakistanGeneralElection
    நீண்ட நாட்கள் மன்றத்தில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை எதிர்பார்க்க கூடாது என்று ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் எப்போது கட்சியைத் தொடங்குவார் என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

    தற்போது படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி, கட்சிப் பெயர் மற்றும் கொடி, கொள்கைகளை அறிவிப்பதற்கு முன்பு தனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர் மன்றங்களை ‘‘ரஜினி மக்கள் மன்றம்’’ என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்துக்கு வரும் வெளிமாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் சில கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் கூறப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தலில் டிக்கெட் கொடுப்பது தொடர்பான சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சீட்டை எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது.

    மன்றத்தில் உள்ள சில நிர்வாகிகள் தாங்கள் நீண்ட ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருப்பதால், தங்கள் அனுபவம் மற்றும் விசுவாசத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட தங்களுக்கே டிக்கெட் தர வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

    தேர்தல் வரும்போது யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். யாருக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பதும் அவருக்கு தெரியும்.

    எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், நீண்ட நாள் ரசிகர்களும் எம்.எல்.ஏ. சீட்டை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு பதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கட்சி தொடங்க முடியும். எனவே அதிகமான உறுப்பினர்களை சேர்த்துக் காட்டுங்கள்.

    இவ்வாறு ரஜினி மன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டு வருகிறது.

    ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் இந்த உத்தரவு மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்களாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ரஜினி கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களின் பண பின்புலம் பற்றி தனியாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ரஜினி மன்றத்தில் உள்ள நடுத்தர வகுப்பை சர்ந்தவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    மற்ற கட்சிகளைப் போல பணம் இருப்பவர்களுக்குத் தான் ரஜினியும் டிக்கெட் கொடுப்பாரா? என்று நீண்ட நாள் ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    வருகின்ற தேர்தல்களில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உலா வரும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    காமராஜரின் 116-வது பிறந்த நாளையொட்டி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் த.மா.கா. பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்:-

    காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தருவதற்கு நூறு சதவீதம் தகுதி பெற்ற ஒரே கட்சியாக த.மா.கா. வளர்ந்து கொண்டு வருகிறது. காமராஜருக்கு பிறகு யாராலும் தமிழகத்தில் இதுவரை நல்ல ஆட்சியை தர முடியவில்லை. இன்றைய அரசியல்வாதிகள் சுய நலத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். பொது நலம், தொலைநோக்கு பார்வை யாரிடமும் இல்லை குறுகிய பார்வை மட்டுமே உள்ளது.

    இன்று விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. காமராஜர் ஆட்சியில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் கட்டினார். இன்று கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடைகள் திறந்து வருகிறார்கள்.

    லோக் ஆயுக்தா சட்டத்தை சீர்திருத்தங்களுடன் பலமான சட்டமாக தமிழகத்தில் வந்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

    வருகின்ற தேர்தல்களில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உலா வரும். தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும் கூட்டணி அரசியல் தான் வருங்காலத்தில் ஏற்படும். இது காலத்தின் கட்டாயம். யதார்த்த உண்மை ஆகும். நல்லவர்கள் இணைந்து நாடாளும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிற இந்த முக்கிய தருணத்தில் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்கு அடித்தளமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.#SIFCC
    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் மனு கடந்த 7-ந்தேதி நிராகரிக்கபட்டது

    இதை எதிர்த்து ஏ.எம்.ரத்தினம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த தேர்தலில் போட்டியிடும் நபர் வேறு எந்த சங்கத்திலும் உறுப்பினராக இருக்ககூடாது என்றுதேர்தல் விதி உள்ளதாக கூறி, தன்னுடைய மனுவை நிராகரித்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார் தேர்தலுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை 27-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது. #SIFCC 

    அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல என்றும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju
    மதுரை:

    அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை காளவாசலில் ரூ.55 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை வருகிற 15-ந் தேதி காலை 8.40 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இது மதுரை நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியமான திட்டமாகும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நவீன வாகன நிறுத்துமிடம், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்சை இணைத்து உயர்மட்ட மேம்பாலம், வைகை ஆற்றை சீரமைப்பதுடன் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள், அப்பல்லோ சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், குருவிக்காரன்சாலையில் மேம்பாலம்.

    ரூ1,250 கோடி மதிப்பில் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் மதுரை நகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம், கீழவாசலில் உயர்மட்ட மேம்பாலம், கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் போன்ற சிறப்பான திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    மத்திய அரசுடன், அ.தி.மு.க. அரசு இணக்கமாக இருப்பதால் வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற முடிகிறது.

    தரைவழி போக்குவரத்துக்கு மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு, தமிழகத்துக்கு தந்துள்ளது.

    மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல்படுவதை தேர்தல் கூட்டணியாக கருதிவிட முடியாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

    தேர்தல் நேரத்தில் கட்சிகள் அணி மாறுவது உண்டு. தொகுதி பங்கீட்டில் கூட வெளியேறிய கட்சிகளும் உள்ளன.


    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் லட்சியத்தை நோக்கி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வழி காட்டுதலுடன் பயணம் செய்து வருகிறோம்.

    அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். #ADMK #TNMinister #SellurRaju
    ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2014-ம் ஆண்டு பிரதமாராகி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Chidambaram
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்துவரும் சுஷ்மா சுவராஜ் குறித்து முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை சுஷ்மா சுவராஜ் சிறப்பாக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ் என்றும் அப்போதே அவர் பிரதமர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.



    ஆனால், 2014-ம் ஆண்டு தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி, அதில் தோல்வியையே கண்டனர் என்றும் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அறிவாற்றல் மிக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பணிகளை சிறப்பாக செய்து வருவதாகவும், உதவும் குணம் மிக்க இவர் போன்ற தலைவர்கள் தேவை எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Chidambaram
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. #Abbasi #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. அவர் மீது தேர்தல் தீர்ப்பாயம் பிறப்பித்த தடை ரத்து செய்யப்பட்டது.

    பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிற பாகிஸ்தானில் வரும் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி என 3 கட்சிகள் இடையேயும் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரத்தில் அனல் வீசுகிறது.

    இந்த நிலையில், ராவல்பிண்டி-1 (என்.ஏ. 57) தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமர் அப்பாசி (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் அவர் நேர்மையானவர் அல்ல, மதிநுட்பம் மிகுந்தவர் அல்ல என்று கூறி வாழ்நாள் தடை விதித்து, அவர் ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதித்து பஞ்சாப் மாகாண தேர்தல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பாசி, லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டின் மீது நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொகுதி தேர்தல் அதிகாரி தனது பதில் மனுவை நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வியிடம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் விசாரணையின்போது, அப்பாசி சார்பில் ஆஜரான வக்கீல், “வேட்பு மனுவில் கேட்கப்பட்டு உள்ள எல்லா கேள்விகளுக்கும் அப்பாசி பதில் அளித்து உள்ளார். அப்படி இருந்தும், சட்டத்துக்கு முரணாக அவருக்கு எதிராக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் அவர் தந்து உள்ளார்” என்று கூறினார்.

    மேலும், “தேர்தல் தீர்ப்பாயம் தனது வரம்பை மீறி உள்ளது, ஒன்று வேட்பு மனுவை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். அதற்குத்தான் தேர்தல் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கிறது. வாழ்நாள் தடை விதிக்க அதிகாரம் இல்லை” என்றும் அவர் வாதிட்டார். முடிவில் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து, அப்பாசி ராவல்பிண்டி-1 தொகுதியில் இருந்து போட்டியிட அனுமதி அளித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதே போன்று இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் ஜீலம் (என்.ஏ. 67) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த பவாத் சவுத்ரிக்கும் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாயம் வாழ்நாள் தடை விதித்து இருந்தது. அவரும் லாகூர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கும் நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இரு தரப்பு வாதத்துக்கு பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடையையும் நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். அவர் ஜீலம் தொகுதியில் போட்டியிட அனுமதியும் அளித்தனர்.  #Abbasi #Pakistan #tamilnews
    பாராளுமன்ற- சட்டமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து போட்டியிட போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். #NCP #SharadPawar
    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2004-ல் இருந்து 2014 வரை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து நாங்கள் போட்டியிட்டோம். ஆனால் மராட்டியத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்தனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இனிவரும் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் நாங்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம்.

    இது சம்பந்தமாக ராகுல்காந்தியும், நானும் 3 தடவை சந்தித்து பேசி இருக்கிறோம். கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மாநில தலைவர்களுக்கு நாங்கள் தகவல் சொல்லிவிட்டோம். தொகுதி பங்கீடு குறித்து மாநில தலைவர்கள் பேசுவார்கள்.

    தொகுதி பங்கீட்டை ஒரு வாரத்தில் இறுதி செய்ய முடியும். அதில், ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் நாங்கள் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வருவோம்.

    பாரதிய ஜனதாவையும், சிவசேனாவையும் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கம். பாரதிய ஜனதாவையும், சிவசேனாவும் ஒரே அணியில் நின்று தேர்தலில் போட்டியிடுமா? அல்லது தனித்து நிற்குமா? என்று தெரியாது.

    ஆனாலும், இப்போதும் சிவசேனா ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் நாங்கள் அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு சரத்பவார் கூறினார். #ParliamentElection #NCP #SharadPawar #NationalistCongressParty
    தேர்தலில் என்னை நிற்கவிடாமல் தமிழக அரசு சதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தங்க தமிழ்செல்வன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ThangaTamilSelvan #Elecetion

    ஆண்டிப்பட்டி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி வந்தார். அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி- எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரணை செய்ய 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர், உங்களை தவிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உங்கள் நிலைப்பாடு என்ன?

    நான் வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றதுதான் சரி. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த விசாரணை செய்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்புவராது. அதனால் தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற கேட்டு உள்ளனர். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சீக்கிரமாக தீர்ப்பை வழங்கினால் தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும். 17 பேர் செல்லும் பாதை சரி. அதேபோல நான் செல்லும் பாதையும் சரி.

    கேள்வி- மனுவை வாபஸ் பெறுவதில் பொறுமை காக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கூறியுள்ளீர்களே?

    மனுவை வாபஸ் வாங்குவதில் பொறுமை காக்க வேண்டும் என்று கூறவில்லை. அதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளது. 2 நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா? அல்லது 3 வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா? ஒருவேளை மனுவாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படுமா? அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது.

    பாராளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய கோர்ட்டு உத்தரவின்படி நான் தேர்தலில் நிற்க முடியும். ஆனால் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவை.


    இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.

    கேள்வி- தமிழகத்தில் ஆய்வு பணியில் ஈடுபடும் கவர்னரை தடுத்தால் 7 ஆண்டு சிறை அபராதம் விதிப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கை விடுத்துள்ளதே?

    இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால், இந்தியாவை ஆள்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? மத்தியில் இருப்பவர்களும், மாநிலத்தில் இருப்பவர்களும் மக்களை அடக்கி ஆள முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

    கவர்னர் ஆய்வு செய்யட்டும் அதில் எங்களுக்கு எந்த தவறும் இல்லை. ஆனால் அதேபோல பசுமை சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகள் நடைபெற்ற போது ஏன் மக்களை சந்திக்கவில்லை. ஆய்வு யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இதேபோல அடக்கு முறை தொடர்ந்தால் வரும் தேர்தலில் மக்கள் இந்த அரசுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    கேள்வி-கவர்னர் ஆய்வினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக எங்கள் பணியைதான் அவர் எளிதாக்குகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

    கவர்னர் ஆய்வு நடத்துவதால் எந்த பணி அரசு எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமாரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு அடிபணிந்த அரசு தான் இது என்பதை நிரூபித்து வருகின்றனர்.

    கேள்வி- சமீபகாலகமாக உங்களுக்கும், உங்கள் அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வருகிறதே?

    இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத்தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொது செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Elecetion

    ×