search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். #Pakistan #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சை பெறுவதற்காக செல்வதாக கூறி துபாய் போனார். ஆனால் அவர் அங்கு இருந்து இன்னும் திரும்பவில்லை.

    ஆனால் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியது.

    அந்த நிபந்தனையின்படி அவர் தன்மீது உள்ள வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு லாகூர் கோர்ட்டில் கடந்த 13-ந் தேதி ஆஜராக தவறினார்.

    இதற்கு இடையே தன் மீதான தகுதி நீக்க வழக்கில் பெஷாவர் ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று 2 மணிக்குள் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதிகள் கெடு விதித்தனர். ஆனால் அதன்படி அவர் ஆஜராகவில்லை.

    ஆனால் அவரது வக்கீல் கமர் அப்சல், முஷரப் நாடு திரும்ப கூடுதல் அவகாசம் கோரினார். அதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    அதே நேரம் முஷரப், சிட்ரால் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அளித்த அனுமதியை நீதிபதிகள் அதிரடியாக திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முஷரப்பின் கனவு பலிக்காமல் போய் விடும் சூழல் உருவாகி உள்ளது.  #Pakistan #PervezMusharraf  #tamilnews
    எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #Thangatamilselvan #ADMK #BJP

    கோவை:

    கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க .ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லாதது. இதற்காக எதற்கு ரு. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.


    இந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழி சாலை அமைக்க வேண்டியது தானே?.

    18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை நீதிமன்றம் உடனே வழங்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மன்றத்தை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி டெல்டா முக்கியமா? அல்லது சென்னை - சேலம் 8 வழிச்சாலை முக்கியமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #ADMK #BJP

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாது சிவசேனா தனித்து போட்டியிடும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். #shivsena #BJP
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க - சிவசேனா இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட துவங்கியது. இதையடுத்து, சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்ரே பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், இனி வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.

    இந்த அறிவிப்பினால் பா.ஜ.க தலைமை சற்றே நிலைகுலைந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனாவின் இந்த அறிவிப்பு பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். நேற்று பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்து பேசினார்.



    இந்த சந்திப்பு சமாதானத்துக்கான தூதாகவும், கூட்டணியை உறுதி படுத்துவதற்காகவும் நடைபெற்றதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தால் பா.ஜ.க தலைமை மேலும் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. #shivsena #BJP
    முறைகேடுகளை தடுப்பதற்காக ஓட்டு சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இப்போது இதே போன்ற கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து ஓட்டுகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ரஷியா மறுத்துள்ளது. ஆனாலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

    அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அங்கு நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தல் நடத்தப்படுவது இல்லை. தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி சில மாகாணங்களில் ஓட்டு சீட்டு முறை உள்ளது. சில மாகாணங்களில் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மாகாணங்களில் கம்ப்யூட்டர் மூலம் இணையதளம் வழியாக ஓட்டு பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு 30 மாகாணங்களில் கம்ப்யூட்டர் ஓட்டுப்பதிவு முறை நடைபெற்றது. இதில் தான் 21 மாகாணங்களில் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அனுப்பி ஹேக்கிங் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த மோசடி நடக்காமல் இருக்க மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னாள் அதிபர் பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

    எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் ஓட்டுப்பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதில் தவறு நடப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஓட்டு சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு அனைத்து மாகாணங்களும் மாற வேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ஏற்கனவே எலக்ட்ரானிக் ஓட்டு முறைக்கு மாறி இருந்த விர்ஜினியா மாகாணம் இனி ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் சர்ச்சையில் சிக்கிய மராட்டியத்தை சேர்ந்த கலெக்டருக்கு தேர்தல் பணியாற்ற 5 ஆண்டு தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #ElectionCommission #AbhimanyuKale
    மும்பை:

    மராட்டியத்தில் பண்டாரா-கோண்டியா தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. நானா பட்டோலே அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார்.

    இதனால் காலியான பண்டாரா-கோண்டியா தொகுதிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மதுக்கர் குகடே(காங்கிரஸ் ஆதரவு), பா.ஜனதா வேட்பாளர் ஹேமந்த் பட்லேயை வீழ்த்தி வெற்றி பெற்றார்.



    இதற்கிடையே தேர்தலின்போது பண்டாரா-கோண்டியா தொகுதியில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாகின. இதனால் 49 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

    இதுதவிர பூச்சி தாக்குதலால் விளைபயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விடுமுறை நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்குமாறு கோண்டியா மாவட்ட கலெக்டர் அபிமன்யு காலே தேர்தல் சமயத்தில் உத்தரவிட்டார்.

    கலெக்டரின் இந்த உத்தரவு பண்டாரா-கோண்டியா இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும் மாவட்ட கலெக்டர் ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இதைத்தொடர்ந்து கோண்டியா மாவட்ட கலெக்டர் அபிமன்யு காலே பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இந்தநிலையில் அபிமன்யு காலே 5 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தல் பணியிலும் ஈடுபடுவதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

    இது குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறுகையில், ‘பண்டாரா-கோண்டியா இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பொதுவாக தேர்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் அங்கு பின்பற்றப்படவில்லை. அபிமன்யு காலே மீதான நடவடிக்கைக்கு விவசாயிகள் நிவாரணம் தொடர்பான சர்ச்சையும் ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணம் கிடையாது’ என தெரிவித்தார்.  #ElectionCommission #AbhimanyuKale  #Tamilnews 
    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியாகும்.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம். என்.ஆர். காங்கிரசிடம் இருந்து புதுவை தொகுதியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், எங்கள் தொகுதியை ஏன் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும்?

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஷ்னிக் வருகிற 5-ந் தேதி புதுவை வருகிறார். அப்போது மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், மாநில பிரதிநிதிகள் பட்டியலை அறிவிக்கிறார்.

    உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வட்டார, மாவட்ட தலைவர்கள் பட்டியலுக்கு ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையாளரை நியமிக்க உள்ளோம். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த கோப்பு தற்போது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. மற்றும் பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக உள்ளார்.

    மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்துக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலியை அழைத்து வருவதாக கூறி அவரை போல உருவம் கொண்டவரை வேட்பாளர் அழைத்து வந்த சம்பவம் நடந்துள்ளது. #ViratKohli

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடந்த வருகிறது. இந்த நிலையில் சிரூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்க கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான வித்தல் கண்பத் கவடி என்பவர் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பிரபல கிரிக்கெட் வீரர் விராட்கோலி தன்னை ஆதரித்து 25-ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்ய கிராமத்துக்கு வருகிறார் என்று அறிவித்தார்.

    அதோடு விராட் கோலியும் அவரும் நிற்பது போன்ற நோட்டீசுகளை அச்சடித்து கிராமம் முழுக்க ஒட்டினார். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 25-ந்தேதி அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மக்கள் கூடினார்கள். கிரிக்கெட் வீரர் கோலியைப் பார்க்க பக்கத்து ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர்.

    அப்போது ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து வேட்பாளர் கண்பத் இறங்கினார்.

    அவரை தொடர்ந்து விராட் கோலி போலவே அச்சு அசலாக இருந்தவர் இறங்கினார். அவரை பார்க்க கிரிக்கெட் ரசிகர்களும் பொதுமக்களும் முண்டியடித்தனர்.

    சிறிது நேரம் கழித்துதான் அவர் விராட் கோலி அல்ல. அவர் போல இருக்கும் போலி நபர் என்று தெரிய வந்தது. வேட்பாளரின் தில்லுமுல்லு அம்பலமானதும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்தனர்.

    இந்த புதுமையான பிரசாரத்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று வேட்பாளர் கண்பத் நம்பிக்கையுடன் உள்ளார். #ViratKohli

    பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24 லட்சம் மின்னணு எந்திரங்கள் தேவை என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.#ElectionCommission
    புதுடெல்லி:

    தேர்தல் செலவுகளை குறைப்பதற்காகவும், அடிக்கடி தேர்தல் நடப்பதை தவிர்க்கும் விதத்திலும் நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

    தேர்தல் கமிஷனும் இது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. மேலும், மத்திய சட்ட கமிஷனுடன் அண்மையில் ஆலோசனையும் நடத்தியது.

    இதுபற்றி தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த இரு தேர்தல்களுக்கும் தனித்தனியே மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை வைக்கவேண்டும். நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு 10 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களும் இதே எண்ணிக்கையிலான ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவைப்படும்.

    மேலும் 20 சதவீத எந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்படவேண்டும். அதன்படி பார்த்தால் மேலும் 2 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும். எனவே ஒட்டு மொத்த கணக்கின்படி 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் போது மொத்தம் 24 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், இதே எண்ணிக்கையிலான ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவையாக இருக்கும்.

    எனவே தற்போதைய நிலையில் மேலும் 12 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங் களை வாங்குவதற்கு கூடுதலாக ரூ.4,500 கோடி தேவைப்படும். இது இப்போதைய கொள்முதல் விலை நிலவரம் ஆகும்.

    மேலும் ஒரு வாக்குச் சாவடியில் தற்போது 5 தேர்தல் பணியாளர்கள் என்ற எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கும்.

    2024-ம் ஆண்டு மீண்டும் ஒரே நேரத்தில் இதுபோல் நாடா ளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அதன் ஆயுட்காலம் முடிவடைவதையொட்டி அகற்ற வேண்டியும் இருக்கும். இதற்கும் ரூ.1,700 கோடி செலவு பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு எல்லைக்குள்ளும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் வராது என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 தேசிய கட்சிகள் வசூலித்த நன்கொடைகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க கோரி புனேவை சேர்ந்த விகார் துர்வே என்பவர் தேர்தல் கமிஷனிடம் கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் மேற்கண்டவாறு கூறி உள்ளது.

    இந்த 6 தேசிய கட்சிகளும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் 2017-18-ம் நிதி ஆண்டுக்கான நன்கொடை பத்திரங்கள் மூலம் பெற்ற விவரங்களை தெரிவிக்கும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

    மத்திய தகவல் கமிஷன், 6 தேசிய கட்சிகளும் பெற்ற நன்கொடையை வெளிப்படைத் தன்மை சட்டவிதிகளின்படி கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தேர்தல் கமிஷன் இதுபோல் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. #ElectionCommission
    பாகிஸ்தான் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் முதல்முறையாக 13 மாற்றுப்பாலினத்தவர்கள் போட்டியிடுகின்றனர். #transgender #PakistanElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற ஜூலை மாதம் பாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து மாகாண சட்ட சபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகளும், பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனும் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து பெண்ணாக இருந்து ஆணாகவும் மற்றும் ஆணாக இருந்து பெண்ணாகவும் மாறிய 13 பேர் போட்டியிடுகின்றனர்.

    அவர்களில் 2 பேர் பாராளுமன்ற தேர்தலிலும், 11 பேர் மாகாண சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். அதற்கான அறிவிப்பை உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தோருக்கான தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.



    உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தோர் தேர்தலில் போட்டியிட வேண்டிய முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு உரிய உத்தரவு கிடைக்காததால் 4 பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டனர்.#transgender #PakistanElection
    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.#Krishnamurthy #Prezrule
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத நிலையில் ஆளுனர் வஜுபாய் வாலா ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியிருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு, 3 மாதங்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க தவறினால் மீண்டும் சட்டசபை தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.

    ஜனாதிபதி ஆட்சியே அனைத்திற்கும் தீர்வு என நான் குறிப்பிடவில்லை ஆனால் இதன்மூலம் அதிகப்படியான பண விரயம், நேர விரயம், குதிரை பேரம் போன்றவை தவிர்க்கப்படும்.

    முதலில் தேர்தல் முறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் முறையை மாற்ற வேண்டும். 33.33 சதவிகித வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட வேண்டும். யாராலும் 33.33 சதவிகித வாக்குகள் பெற இயலவில்லை என்றால் மீண்டும் அந்த தொகுதியில் தேர்தல் வைக்க வேண்டும்.

    சில நாடுகளில் 50 சதவிகிதத்துக்கு கூடுதலாக 1 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகின்றனர். நாம் முதலில் 33.33 சதவிகிதம் என்ற முறைக்கு மாறுவோம் பின்னர் படிப்படியாக 50 சதவிகிதம் என்ற இலக்கை நிர்ணயிக்கலாம்.

    ஆட்சி அமைப்பதற்காக கட்சி மாற கூடாது என்ற கட்டுப்பாட்டு சட்டத்தினை அரசியல்வாதிகளுக்கு விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Krishnamurthy #Prezrule
    தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கடலூரில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
    கடலூர்:

    பா.ம.க. நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தல் முடிந்து விட்டது. ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. அதற்காக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய நீர் வள செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் அதை வரவேற்போம்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். அவர்தான் தமிழகத்தை ஆளப்போகிறார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss
    நேற்று நடைபெற்ற கர்நாடகா மாநில சட்டமன்றம் தேர்தல் தான் நான் சந்திக்கும் கடைசி தேர்தல் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #Karnatakaassemblyelection

    கர்நாடாகா மாநிலம் சட்டமன்றம் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றம் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, கார்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்தார்.

    கர்நாடகா மாநிலத்துக்கு தலித் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ’’தலித் ஒருவரை மாநில முதல்வராக கட்சி மேலிடம் தேர்வு செய்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை, தான் சந்திக்கும் கடைசி தேர்தல் இது தான்’’ என தெரிவித்துள்ளார். #Siddaramaiah #Karnatakaassemblyelection
    ×