என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல்"
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து 2-வது கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆளுங் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முனியாண்டி வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் பிரச்சினைகள் தீரும். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் எந்த பலனும் கிடைக்காது.
இந்த இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நிறைய வாக்குறுதிகளை தருகிறார். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அவரால் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நன்மை செய்வேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். நான் சொல்கிறேன் ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதிகளிலும் நடைபெற உள்ள 4 சட்ட சபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.அமோக வெற்றி பெறும். தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.
கருணாநிதி நாட்டு மக்களுக்காக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. தி.மு.க. கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி.
தனது தந்தைக்கு மெரினா கடற்கரையில் 6 அடி நிலம் கூட தரவில்லை என ஸ்டாலின் மக்களிடம் அனுதாபம் மற்றும் இரக்கத்தை பெறுவதாக நினைத்து பேசி வருகிறார்.
நீதிமன்ற வழக்கு காரணமாகவே மெரினாவில் கருணாநிதியின் சமாதிக்கு இடம் ஒதுக்கவில்லை. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காந்தி மண்டபம் அருகே ரூ.300 கோடி மதிப்பிலான இடத்தை கொடுத்தோம். அதனை ஏற்க மறுத்து விட்டனர்.
காமராஜர் இறந்தபோது மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி. அதேபோல் ஜானகி அம்மாள் இறந்த போதும் இடம் தர மறுத்தார். அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை இடைத்தேர்தல் மூலம் கவிழ்ப்பேன் என்று டி.டி.வி. தினகரன் பேசி வருகிறார். இதன் மூலம் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் உள்ள ரகசிய உறவு வெளி வந்துள்ளது.
சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. என்ற முறையில் கூட தினகரன் கலந்து கொள்ளவில்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் தினகரன். அதனால் தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை உடைக்கவும், அரசை கவிழ்க்கவும் நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை பற்றி சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கடந்த 2½ வருடமாக பல்வேறு காரணங்களை சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறது. இப்போது வாக்காளர் பட்டியலை சரிப்படுத்த அரசாணை போடுவது எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு விசயமாகும்.
ஏனென்றால் வாக்காளர் பட்டியல் தயார் நிலையில்தான் உள்ளது. தேர்தலை தள்ளிப்போட சுப்ரீம்கோர்ட்டில் காரணம் சொல்வதற்காக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளனர்.
2½ வருடமாக தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டு தற்போது மீண்டும் முதலில் இருந்து வாக்காளர்பட்டியல் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்று சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார். இந்த அறிவிப்பு வருகிற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால், எந்தெந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்ற விபரம் முழுமையாக வெளியிடப்படவில்லை.
வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு அனைத்து பணிகளும் தயாராகத்தான் உள்ளன. ஆனாலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு தோல்விபயம்தான் காரணம்.
தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதுதான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை:
பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று அமித் ஷாவும், அருண்ஜெட்லியும் கூறி வருகிறார்கள்.
பிரதமர் மோடியோ, இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, “பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை” என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் முக்கிய இடம்பிடித்துள்ள சிவசேனா கட்சியும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை கூற தொடங்கியுள்ளது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தடவை அதில் 40 இடங்கள் வரை குறையலாம். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது.
இத்தகைய நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவும் ஆதரவும் நிச்சயம் தேவைப்படும். இந்த விஷயத்தில் பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறிய கருத்துக்கள் முழுக்க, முழுக்க சரியானது. அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெறாவிட்டாலும் கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சி அமைக்கும். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் சிவசேனா கட்சி மிகவும் மகிழ்ச்சி அடையும்.
ராம் மாதவ் கருத்துப்படி பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி செய்யும். அந்த கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகிக்கும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார். #shivsena #BJP
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் காங்கிரஸ் 5 தொகுதியில் கூடுதல் பெற்று அட்சியை பிடித்தது. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பா.ஜனதாவே சற்று முன்னிலை பெற்றது. பா.ஜனதாவுக்கு 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.9 சதவீதமும் கிடைத்தன.
பாராளுமன்ற தேர்தலிலும் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று முதல்கட்டமாக 6 தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது.
100 யூனிட்டுக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் ரூ.200 ஆக இருந்தது. இதே போல் விவசாயிகளுக்கு பென்சனும் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் கொண்டுவந்த இந்த திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலில் எது பிரச்சினை என்று மக்களுக்கு நன்கு தெரியும். பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து அரசியல் செய்வதை மக்கள் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள்.
புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானது தொடர்பாக மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பில் குளறுபடு ஏற்பட்டது எப்படி என்று பற்றி அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும். மோடி அரசின் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.
பாராளுமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வரும். தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரும்.
பெரும்பாலான கட்சிகள் பா.ஜனதாவை எதிர்க்கின்றன. இதனால் தேர்தலுக்கு பிறகு அவை அனைத்தும் ஒன்றிணைக்கப்படும். பா.ஜனதாவை வெளியேற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருக்கும்.
திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா, ராஷ்டிரிய சமிதி, ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் அவைகள் பா.ஜனதாவை கடுமையாக எதிர்க்கின்றன. இதுமாதிரியான கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற ஒன்றிணைக்கப்படும்.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும்.
இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார். #KamalNath
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தான் 3 தொகுதி எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு. அந்த மாதிரியான நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் பேரவை தலைவரின் அதிகாரத்துக்குள் யாரும் செல்ல முடியாது. அது குறித்து நானும் எந்த கருத்தும் கூற முடியாது.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி ஜெயலலிதாவின் அரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும், இந்த கட்சியை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.வும், அதனுடைய ‘பி’ டீம் தினகரனும் கைகோர்த்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரங்கேற்றினார்கள். அது அனைத்தும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. வருகிற 23-ந் தேதிக்குப் பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் பூஜ்ஜியமாகி விடுவார்.
ஜூன் 30-ந்தேதி நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம் என்று துரை முருகன் கூறுகிறார். திண்டுக்கல் பெரியசாமி 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வந்ததும் ஆட்சி அமைத்து விடுவோம் என்று கூறுகிறார். இரண்டுமே நடைபெறப்போவதில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கும் போதே அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியவில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. அதனை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம். வருகிற 23-ந்தேதி அனைவருக்கும் இது தெரியும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. - அ.ம.மு.க. இடையே தான் போட்டி என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்ட போது ஆட்டத்தில் இல்லாதவர்களை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? பந்தயத்தில் இல்லாதவர்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்றார். #LSPolls #MinisterJayakumar
இந்திய பாராளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர்.
இன்று தேர்தலை சந்திக்கிற பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்திய பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்காளத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
4-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ள நடிகை ஊர்மிளாவுக்கும், பா.ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வட மத்தி மும்பையில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனுக்கும்(பா.ஜனதா), மற்றொரு மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுனில் தத்தின் மகள் பிரியா தத்துக்கும் (காங்கிரஸ்) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவில் போட்டி அமைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், முதல்-மந்திரி கமல்நாத் 9 முறை வென்ற சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் நகுல் காத் (காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.
முதல்-மந்திரி பதவியை தக்கவைப்பதற்காக கமல்நாத், சிந்த்வாரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தையும், மகனும் ஒரே நாளில் ஒரே தொகுதியில் தேர்தலை சந்திக்கின்றனர் என்பது முக்கிய அம்சம்.
பீகாரில் பெகுசாராய் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி கிரிராஜ்சிங்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரும் மோதுகின்றனர். இதே மாநிலத்தின் தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவும் (பாரதீய ஜனதா கட்சி), நடிகை மூன்மூன்சென்னும் (திரிணாமுல் காங்கிரஸ்) அசன்சோல் தொகுதியில் கடும் போட்டியில் உள்ளனர்.
இந்த 4-வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது.
இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.
பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல் மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது. #LokSabhaElection #4thPhase #BJP #Congress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்