search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாப்சி"

    ஆடுகளம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை டாப்சியும் கேம் ஓவர் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ், நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    தனுஷும், டாப்சியும் இணைந்த நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்குப் பிறகு கேம் ஓவர் படத்தின் டிரைலரை வெளியிடுவதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டம்.
    ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் `கேம் ஓவர்'.

    பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தில் டாப்சிக்கு வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரம். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஏ.வசந்த், கலை இயக்குனர் - சிவா சங்கர், ஆடை வடிவமைப்பு - என்.கே.நந்தினி, சண்டைப்பயிற்சி - ரியல் சதிஷ், இசை - ரான் ஈதன் யோஹன், படத்தொகுப்பு - ரிச்சர்ட் கெவின், ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், ஹரிஹரன், ஸ்டில் போட்டோகிராபர் - எம்.எஸ்.ஆனந்தன், லைன் புரொடுயுசர் - முத்துராமலிங்கம், புரொடக்‌ஷன் எக்சிகியுடிவ் - ரங்கராஜ், இணை தயாரிப்பு - சக்ரவர்த்தி ராமசந்திரா, தயாரிப்பு - எஸ்.சசிகாந்த், எழுத்து - அஸ்வின் சரவணன், காவ்யா ராம்குமார், இயக்கம் - அஸ்வின் சரவணன்.



    படம் குறித்த இயக்குனர் அஸ்வின் சரவணன் பேசியதாவது, “மாயா படம் இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப்சி இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். கேம் ஓவர் வெளியீடு மற்றும் வரவேற்ப்பை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.

    தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    கேம் ஓவர் படத்தின் டிரைலர்:

    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சின்கம் உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும்,  விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்திலும் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் டூட்லி ஜெயம் ரவியின் 25-வது படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் விவசாயிகள் பிரச்சனையை பேசும் படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது.



    ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையைமக்கிறார்.

    ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் ஓவர் படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

    இந்த நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமணன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய 2 படங்களிலுமே ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

    ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். 



    இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    இந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேம் ஓவர் டீசர்:

    சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி கேவலமாக பேசியவரை நடிகை டாப்சி வறுத்தெடுத்து கோபமாக பேசியிருக்கிறார்.
    நடிகை டாப்சியை சமூக வலைத்தளத்தில் சிலர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். அவரது நடிப்பையும் தோற்றத்தையும் கேலி செய்கின்றனர். இதனால் டாப்சி கோபத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஒருவர் உங்கள் உடல் மீது எனக்கு விருப்பம் என்று பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த டாப்சி எனக்கு மூளையில் ஒரு பகுதியை பிடிக்கும் என்றார்.

    வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் இன்னொருவர் டாப்சி அணியும் ஆடைகளை பற்றி கேவலமாக பேசி வந்தார். இதுவும் அவரை ஆத்திரப்பட வைத்தது. டாப்சி கலந்து கொள்ளும் டி.வி நிகழ்ச்சியொன்றுக்கு சமூக விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி அந்த நபரை அழைத்து வந்தனர். டாப்சி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று அவரிடம் சொல்லவில்லை.



    நிகழ்ச்சி தொடங்கியதும் டாப்சி அரங்குக்குள் வந்தார். அவரை பார்த்ததும் அந்த நபர் அதிர்ச்சியானார். அவரை பார்த்து டாப்சி ஆவேசமாக பேசினார். நடிகைகள் என்றால் கேவலமாக நினைத்து விட்டீர்களா. அவர்களை பற்றி சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் பதிவிடுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் வாழ்க்கை என்று இருப்பது தெரியாதா? என்றெல்லாம் கேட்டு அந்த நபரை கடுமையாக சாடினார்.

    உடனே அவர் இனிமேல் உங்களை பற்றி கேவலமாக பேசமாட்டேன் என்று சொல்லி டாப்சியிடம் மன்னிப்பு கேட்டார். இது அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாலிவுட்டில் பிரபலமாகி இருக்கும் டாப்சி, தமிழ் சினிமாவில் கேம் ஓவர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார். #TaapseePannu #GameOver
    இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து `கேம் ஓவர்' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

    பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார்.


    தமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பையும், சிவா சங்கர் கலைப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். #TaapseePannu #GameOver

    மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் மதுகுடித்துவிட்டு வரமாட்டேன் என்று டாப்சி ரகளை செய்ததாக பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் தெரிவித்துள்ளார். #Taapsee #VickyKaushal
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்சி. தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான் உள்பட பல படங்களில் நடித்தவர்.

    இந்தியில் டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு மன்மர்ஜியான் என்ற படம் வெளியானது. அபிஷேக் பச்சன், விக்கி கவு‌ஷல் இருவரும் கதாநாயகர்களாக நடித்த இந்த படம் முக்கோண காதல் கதையை கொண்டது. விக்கி கவு‌ஷல் சமீபத்தில் வெளியான உரி படம் மூலம் முன்னணி நடிகராகி இருக்கிறார்.

    அவர் அளித்த பேட்டி ஒன்றில் டாப்சி குடித்துவிட்டு ரகளை செய்ததை பற்றி கூறி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-



    மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் தான் பார்ட்டியும் நடந்தது.

    நன்றாக குடித்த டாப்சி குடிபோதையில் தோட்டத்தில் படுத்து கொண்டு எழுந்து வர மாட்டேன் என்று மல்லுக்கட்டினார். நீங்கள் வராவிட்டால் நான் கிளம்பி விடுவேன் என்று கூறினேன். அப்படியாவது எழுந்து வருவார் என கூறினேன். ஆனால் அங்கேயே தூங்குவேன் என்று அடம் பிடித்தார்.

    இவ்வாறு விக்கி கவு‌ஷல் தெரிவித்தார். #Taapsee #VickyKaushal

    கல்யாண் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிக்க டாப்சி ஒப்பந்தமாகி இருக்கிறார். #JayamRavi #Taapsee
    இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் டாப்சி ஜெயம் ரவியின் 25-வது படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆடுகளம் படத்துக்கு பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப்சிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார்.

    அங்கு தனக்கென்று முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் டாப்சி, தமிழில் ரீ என்ட்ரியாக ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் நடிக்கிறார்.



    ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார். டி.இமான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். 

    இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். சுஜாதா விஜயகுமார் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தையும் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாக உள்ளது. #JayamRavi #Taapsee #Kalyan

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியின் வயதான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. #Taapsee #SaandKiAankhThisDiwali
    பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் அறுபது வயது பெண் தோற்றத்தில் நடிக்கிறார்.

    தற்போது அவரது கதாபாத்திரத்தை விளக்கும் வகையிலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரகாஷி, சந்திரோ ஆகிய இரு துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாகியுள்ளது.



    இந்த படத்திற்காக டாப்சி துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக்கொண்டார். டாப்சியின் தோற்றத்திற்காக ஹாலிவுட் படங்களுக்கு ஒப்பனைச் செய்யும் கலைஞர்கள் படத்தில் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் வறண்டக் கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.

    பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் தொடங்கிய நிலையில் படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்ய உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
    தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி, அடுத்ததாக வயதான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #TaapseePannu
    டாப்சி வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து விலகி மாறுபட்ட வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார். குறிப்பாக அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ இந்தி படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்றிருந்தார். இப்படம் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆகிறது. அஜித் ஹீரோவாக நடிக்கிறார்.

    இந்நிலையில் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் டாப்சி. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர். இருவருக்குமே 80 வயதுக்கு மேல் ஆகிறது. இருவரும் ரிவால்வர் துப்பாக்கியால் எந்த இலக்கையும் குறிதவறாமல் சுடுவதில் கில்லாடிகள். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சாந்த் கி ஆங்க்’ பெயரில் திரைப்படம் உருவாகிறது.



    இதில் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் பூமி பெடுன்கர் நடிக்கிறார். சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் டாப்சி நடிக்கிறார். நடிகைகள் இருவருக்குமே 30 வயதுதான் ஆகிறது. ஆனால் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதுபற்றி டாப்சி கூறும்போது,’60 வயது பெண்ணாக சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த வேடங்களிலேயே இது மிகவும் சவாலானது.

    கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தகுந்த பயிற்சி தேவைப்பட்டதால் சந்த்ரோ டோரை நேரில் சந்தித்து பயிற்சி பெற்றேன் என்றார். 
    ×