search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    2019 இந்திய பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் பரவி வருகிறது.



    இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    இதே தகவலை ஃபேஸ்புக்கில் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ரமேஷ் ஷர்மா சங்கேனர் என்ற பெயர் கொண்ட நபர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி வயநாட்டில் 8,54,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும், இதன் மூலம் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக ராகுல் காந்தி இருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.



    ஐ.டி. & சோஷியல் மீடியா செல் காங்கிரஸ் எனும் ஃபேஸ்புக் பக்கம் இதே பதிவினை பகிர்ந்து இருக்கிறது. எனினும், இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது.

    உண்மையில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டில் அவர் மொத்தம் 7,06,367 வாக்குகளையே பெற்றார். வயநாட்டில் இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளர் மொத்தம் 2,74,597 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் ராகுல் காந்தி 4,37,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



    இதுதவிர 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராகுல் காந்தி கிடையாது. 2019 பொது தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளர்களே இருக்கின்றனர். 



    இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தின் படி பா.ஜ.க.-வின் சி.ஆர். பாட்டீல் சுமார் 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை தொடர்ந்து ஹரியானாவின் கர்னல் தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் பாட்டியா 6.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஹரியானாவின் ஃபாரிதாபாத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணன் பால் 6.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    ராகுல் காந்தி சுமார் எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
    கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு தொண்டர்கள் பாகிஸ்தான் கொடியசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
    சமூக வலைதளமான ட்விட்டரில் விகாஸ் பான்டே என்பவர் பதிவிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவர் பகிர்ந்து இருக்கும் வீடியோவில் ஒரு குழுவினர் கைகளில் பச்சை நிற கொடிகளை அசைத்தப்படி ராகுல் காந்தி சிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

    வீடியோவுடன் “இல்லை, இது பாகிஸ்தான் கிடையாது, ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் காங்கிரஸ் சாக வேண்டும்!” என எழுதப்பட்டுள்ளது. இதே வீடியோ ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.



    இதே பதிவு ஃபேஸ்புக்கில் “தேர்தல் முடிவுகளுக்கு வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றி இடம். ஒவ்வொரு இந்துவும் இதனை பார்க்க வேண்டும்” என்ற தலைப்பில் பகிரப்படுகிறது. ஒவ்வொரு தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ சமூக வலைதள வாசிகள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    இது உண்மை தானா?

    வீடியோ தலைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இது போலி தகவல் ஆகும். முதலில் இந்த வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தான் நாட்டின் கொடி கிடையாது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி ஆகும். இந்த கட்சி கேரளாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதுதவிர இந்த வீடியோ வயநாட்டில் எடுக்கப்படவில்லை. இது கேரளாவின் காசர்கோட் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

    புகைப்படம்: இடதுபுறம்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி வலதுபுறம் - பாகிஸ்தான் கொடி


    உண்மையில் போலி தலைப்பில் வேகமாக பரவி வரும் வீடியோவில் ரமேஷ் உன்னித்தனுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது. இவர் காசர்கோட் பகுதியின் வேட்பாளர் ஆவார். இந்த வீடியோ காசர்கோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு சேகரிப்பின் போது படமாக்கப்பட்டது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காசர்கோட் பகுதி பொது செயலாளர் எம்.சி. கமருதீன் தெரிவித்தார்.

    சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை போன்று இந்த வீடியோ ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. மேலும் வீடியோவில் இருந்தது பாகிஸ்தான் நாட்டு கொடியும் கிடையாது.

    வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்..,




    கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.
    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தாலும், கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.



    இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் செய்தியில், “தன்னை வெற்றி பெற செய்த வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற உதவிய கேரள மக்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டு உள்ளார். 
    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் 15 மாநிலங்களில் உள்ள 117 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்



    கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலின் மிகவும் முக்கியமான வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உ.பி.யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களமிறங்குகிறார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது அந்த மாநில காங்கிரசார் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா (22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், கேரளாவில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார்.

    வயநாட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஸ்ரீதன்யா குடும்பத்தினரை வரவழைத்த ராகுல் காந்தி, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.  அப்போது அவர் ஸ்ரீதன்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியானது.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகியது. #LSpolls #Congress #RahulGandhi #Wayanad 
    கேரள மாநிலத்தில் 15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஓ.என். ஜார்ஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். #KerelaCongressleader #ONGeorge #POCSO
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான ஓ.என்.ஜார்ஜ் சுல்தான் பத்தேரி பஞ்சாயத்து முன்னாள் தலைவராக பதவி வகித்தார்.

    இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சுல்தான் பத்தேரி பகுதிக்குட்பட்ட 15 வயது பழங்குடியின சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.



    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றபோது இவ்விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர்  ஜார்ஜை சந்தித்து நியாயம் கேட்டபோது பணத்தை தந்து சமரசம் செய்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

    இதை ஏற்றுக்கொள்ளாத சிறுமியின் பெற்றோர் ஜார்ஜ் மீது போலீசில் புகார் அளித்தனர். சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜார்ஜை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையில்,  காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓ.என். ஜார்ஜை நீக்கியுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைமை இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது. #KerelaCongressleader #ONGeorge #POCSO
    ×