search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமதிப்பிழப்பு"

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் இயக்குனர்களில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் ஒருவர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது ரூ.745.59 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இந்த வங்கி முறைகேடு செய்து சட்டப்பூர்வமானதாக மாற்றியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரண்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதை மறுத்த மாவட்ட கூட்டுறவு வங்கி ராகுல்காந்தி பொய் குற்றச்சாட்டை முன் வைத்ததாக கூறி அவருக்கு எதிராக அகமதாபாத் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல்காந்தி இம்மாதம் 27-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கடந்த திங்கட்கிழமை ராகுல்காந்தி தரப்பில் அவரது வக்கீல் ஆஜரானார்.

    அப்போது வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க மேலும் சில காலம் தேவைப்படுகிறது. மேலும் கடந்த திங்கட்கிழமை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். எனவே ராகுல்காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி ஜூலை 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    அன்றைய தினமே ரண்தீப் சிங் சுர்ஜேவாலாவும் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் இருந்திருந்தால் நிச்சயம் மோடியை பாராட்டியிருப்பார் என்று தமிழிசை பேசியுள்ளார். #tamilisai #pmmodi #demonetization

    நாசரேத்:

    தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுமார் 30 வருடத்திற்கு முன்பாக எனது தந்தை குமரி அனந்தன் இந்த தொகுதியில் நிற்கும்போது நான் 3ம் வருட மருத்துவ கல்லூரி மாணவியாக இந்த தொகுதிக்கு வந்திருக்கிறேன். இந்த பகுதி எப்போதுமே தேசிய எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும் பக்கம். அனைத்து மக்களுக்கும் மோடி பாதுகாப்பாக இருந்து வருகிறார். பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவாகும்.

    பாமர மக்களின் வரி பணம் வீணாகாமல் அவர்களிடமே சேருவதற்காகத்தான் இதனை செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு குடும்பம், பிள்ளைகள் என யாருமே கிடையாது. உண்மையான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உயிரோடிருந்திருந்தால் இந்த செயலை பாராட்டியிருப்பார். நான் உங்கள் வீட்டு சகோதரியாக பெண்ணாக உங்களில் ஒருத்தியாக இருந்து உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். தற்போது கூட மோடி ஐயாவை சந்தித்து தூத்துக்குடி தொகுதிக்குரிய தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளேன்.

    இந்த தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புல்லட் ரெயில் விடுவதற்கும், ஐடி பார்க் கட்டுவதற்கு மற்றும் சிறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் இந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளேன். இத்தொகுதியில் நிற்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #pmmodi #demonetization  

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் கூட்டுறவு வங்கி 750 கோடி ரூபாயை மாற்றியதாக பேசிய ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு குஜராத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #Rahultoappear #defamationcase #ADCB
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டில் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பாஜக தலைவர் அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கி முறைகேடாக சுமார் 750 கோடி ரூபாயை மாற்றியதாக ராகுல் காந்தி முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

    இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீது கிரிமினல் சட்டப்பிரிவின்கீழ் அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கியின் சார்பிலும் அதன் தலைவர் சார்பிலும் கடந்த ஆண்டு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    எனவே, இந்த வழக்கு தொடர்பாக மே 27-ம் தேதி நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் எஸ்.கே. காத்வி இன்று சம்மன் அனுப்பியுள்ளார். #Rahultoappear #defamationcase #ADCB
    திரிணாமுல் காங்கிரஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளமும் இருமடங்காக உயர்த்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. #TMCmanifesto #100dayswork
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பாராளுமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை கொல்கத்தா நகரில் இன்று வெளியிட்டார்.

    இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    எதிர்க்கட்சிகள் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் 100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளமும் இருமடங்காக உயர்த்தப்படும். பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

    மோடி அரசால் ஒழிக்கப்பட்ட மத்திய திட்ட கமிஷனுக்கு புத்துயிர் அளிக்கப்படும். உபயோகமற்ற நிதி ஆயோக் ஒழிக்கப்படும். தற்போதைய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை சீராய்வு செய்யப்படும். மக்களுக்கு பயனளிப்பதாக இருந்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. #TMCmanifesto #100dayswork
    ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்திய வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் கட்சியினர் இழிப்படுத்தி வருவதாக பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். #AmitShah #soildersmartyrdom
    புதுடெல்லி:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

    இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலை சந்தேகிக்கும் வகையில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த அமித் ஷா, தேர்தல் காலங்களில் இதுபோன்ற ஓட்டுவங்கி அரசியலில் காங்கிரசார் ஈடுபடுவது வாடிக்கைதான் என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

    ஆனால், ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர்கள் நமது இந்திய வீரர்களின் தியாகத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை அனுமதிப்பது சரியல்ல எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான  சாம் பிட்ரோடா சமீபத்தில் இந்த தாக்குதல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, நமது நாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டின் ராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறதா? என்று ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    பயங்கரவாதத்துக்கும் தேசியவாதத்துக்கும் இடையில் முடிவெடுக்க இயலாமல் தவிக்கும் காங்கிரசார் தேர்தல் காலங்களில் சமரச அரசியல் மற்றும் ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடுவது வாடிக்கைதான். ஆனால், இத்தகைய அரசியல் தேசநலனை விட்டுக்கொடுத்து, இந்திய வீரர்களின் தியாகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அவர்களின் ரத்தத்தின்மீது நடத்தப்பட வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நாட்டை முன்னர் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது பயங்கரவாதத்துக்கு எதிராக திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சோனியா, மன்மோகன் சிங் தலைமையிலான பத்தாண்டு ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான துணிச்சல் அவர்களுக்கு இல்லாமல் போனதுதான் காரணம்.

    ஆனால், மோடி தலைமையிலான இந்த ஆட்சியில் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்ற தீர்மானத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தானின் சதிச்செயல்களுக்கும் சரியான பதிலடி கொடுத்து நாட்டை பாதுகாக்க பாஜக அரசால்தான் முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் கூறினார். #AmitShah #soildersmartyrdom 
    பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
    பாட்னா:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? என்று உங்களுக்கு அவர் எப்போதாவது விளக்கம் அளித்திருக்கிறாரா?

    தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது செய்திருக்கிறாரா? 

    நான் உங்கள் காவலாளி என்று கூறும் மோடி இந்த நாட்டின் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார். பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரபல தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரை சகோதரர்களே என்று அழைத்து சகோதரர்களைப்போல் நடத்தும் மோடி, உங்களைப்போன்ற சாமான்ய மக்களை நண்பர்களே என்று அழைக்கிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பலகாலமாக கஷ்டப்பட்டு பெண்கள் சேமித்து வைத்திருந்த பணம்கூட பறிக்கப்பட்டது. வசதி படைத்தவர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய முடிந்த மோடி அரசால் ஏழை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் போனது ஏன்?

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தோம். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.

    அதேபோல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நிதியுதவி திட்டத்தை நிச்சயமாக நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார். #Mayawati #bjp #parliamentelection
    லக்னோ:

    பகுஜன் சமாஜ்  கட்சியின் தலைவர் மாயாவதி இன்று தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடினார்.  பிறந்த நாள் பரிசாக  கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என தொண்டர்களை மாயாவதி கேட்டு கொண்டார்.

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம்.  சமீபத்தில் முடிவடைந்த  5 மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பாடக் புகட்டபட்டது. இது காங்கிரசுக்கும் ஒரு பாடம் ஆகும்.. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அரசு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர், ஆனால் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

    நாங்கள் எப்பொழுதும் ஏழைகளுக்கும், மிதமிஞ்சி வேலை செய்து வருகிறோம். தொடரும் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க  100% விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு வலுவான விவசாய கடன் தள்ளுபடி கொள்கை திட்டம் கொண்டு வரவேண்டும்.

    பயிர் விலைகளை உயர்த்துவதற்காக சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் கடன் வாங்கியுள்ளனர், ஆனால் அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான கொள்கை திட்டம் இல்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவையும் அவர்களது துயரத்தை அதிகரித்து உள்ளது என கூறினார். #Mayawati #bjp #parliamentelection
    கருப்பு பணமாக பதுக்குவதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். #BlackMoney #RBI #Demonetisation
    புதுடெல்லி:

    2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த நோட்டுகள் கணிசமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.2000 நோட்டுகளை கருப்பு பணமாக பதுக்குவது அதிகரித்து வருகிறது.

    எனவே அதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை அச்சடிப்பதை மிகவும் குறைப்பது என மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுகளாகும். இது மொத்த பணத்தில் 37 சதவீதம் ஆகும்.

    அதேபோல 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43 சதவீதம் ஆகும்.

    2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். #BlackMoney #RBI #Demonetisation
    500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த விவரங்களை வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவிட்டுள்ளது. #rbi #cic #2000banknotes
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்து எவ்வளவு 500,  2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்பது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

    நாட்டில் கறுப்பு பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது. மாறாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இவ்வாறு புதியதாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் விபரத்தை சமூக ஆர்வலர் ஹரிந்தர் திங்ரா என்பவர் ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் அச்சடிக்கப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகளின் விபரங்களை கேட்டார்.  எவ்வளவு 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. 

    ரூபாயின் மொத்த மதிப்பு, மொத்த செலவு, போக்குவரத்து செலவு போன்ற விபரங்களை கேட்டார். இதற்கு ரிசர்வ் வங்கி வழங்கிய பதில் திருப்தியளிக்காத நிலையில் மத்திய தலைமை தகவல் ஆணையத்தை நாடினார்.  பதிலளிக்க தகவல் ஆணையம் உத்தரவிட்டது.  ஆனால் 500, 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த ரிசர்வ் வங்கியின்,  தி பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் (பிரைவேட் லிமிடெட்) நிறுவனம்  விவரங்களை வெளியிட மறுத்து விட்டது.

    நவம்பர் 9 முதல் 30 வரையில் அச்சடிக்கப்பட்ட 500, 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவது என்பது தேசத்தின் இறையாண்மை, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிசர்வ் வங்கியின் பதிலில், ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல் மற்றும் அதுதொடர்பான நடவடிக்கை மிகவும் பாதுகாக்க வேண்டியது, ரகசியம் காக்க வேண்டியது. மூலப்பொருட்கள், போக்குவரத்து, இருப்பு, அச்சடித்தல் விவரங்களை வெளிப்படையாக வெளியிட முடியாது. வெளியிடுவது கள்ளநோட்டு புழக்கம், பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தும். விவரங்களை அளிப்பது தேசத்தின் இறையாண்மை, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு விரோதமானது. விவரங்களை வெளியிடுவது ஆர்.டி.ஐ. சட்டம் பிரிவு  8(1)விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மத்திய தகவல் ஆணையம் மறுத்து விட்டது. 

    இதனையடுத்து தகவல் ஆணையர் பார்கவா, 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த விவரங்களை வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவிட்டுள்ளது என்றார்.  “500, 2000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு அச்சடிக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது, பாதிப்பும் ஏற்படாது. ஆர்.டி.ஐ. சட்டத்தில் விலக்க வரம்புக்குள்ளும் இந்த விஷயங்கள் வராது.  ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு விபரம், போக்குவரத்து செலவு, மூலப்பொருட்கள் செலவு உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும் என கூற முடியாது. எனவே, மனுதாரர்  கேட்ட விவரங்களை வெளியிட வேண்டும்,” என்று ரிசர்வ் வங்கிக்கு பார்கவா உத்தரவிட்டுள்ளார்.  #rbi #cic #2000banknotes
    சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #OldBankNotes #Demonetisation
    சென்னை:

    பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன.

    பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு,  அதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டது. பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. மொத்தமாக கையிருப்பு வைத்திருந்தவர்கள், வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்தவர்களால் வங்கிகளில் நேரடியாக செலுத்தி பணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் பலர் ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசினர்.


    இந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே இன்று 25 மூட்டைகளில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. அந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. இது அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுக்களை வெட்டி வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மத்திய அரசு அறிவித்த காலக்கெடு முடிந்தபிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #OldBankNotes #Demonetisation
    சுதந்திர இந்திய வரலாற்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் என்று ம.பி. தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசினார். #rahulgandhi #pmmodi #demonetisation

    போபால்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் தியோரி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் உள்ள ஊழலை ஒழிக்கப் போவதாக பிரதமர் மோடி பேசி வந்தார். இப்போது தன்னை நாட்டின் காவலாளி என்றும், ஊழலை ஒழிக்க தான் பாடுபட்டு வருவதாகவும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இப்போது அப்படி கூறினால் நீங்கள் நாட்டின் காவலாளி இல்லை. திருடன் என்று மக்கள் கூறி விடுவார்கள்.

    பிரான்சிடம் இருந்து தலா ரூ.526 கோடி வீதம் 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் விமானப் படையிடமோ அல்லது அப்போதைய பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரிடமோ ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தை மோடி ரத்து செய்தார்.

    அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தையும் இந்த ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ள அவர் பிரான்ஸ் நாட்டிடம் கோரிக்கை விடுத்ததாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.

    இதற்காக ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானிக்கு மோடி வழங்கியுள்ளார். நாட்டின் காவலாளி என்று தன்னை அறிவித்துக் கொண்ட மோடி இதன் மூலம் சில தொழில் அதிபர்களின் காவலாளியாக மாறி விட்டார்.


    சுதந்திர இந்திய வரலாற்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் ஆகும். அப்போது நேர்மையாக, வியர்வை சிந்தி உழைத்த மக்கள் அனைவரையும் மோடி வங்கிகளின் வாசலில் நிற்க வைத்தார். அப்போது அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்கள் யாரும் வங்கிகள் முன்பு நிற்கவில்லை.

    கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் என்றால் பொதுமக்கள் மட்டும் ஏன் வங்கிகளின் முன்பு நின்றார்கள். கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் வங்கிகளின் பின்வாசல் வழியாக சென்று அதனை மாற்றி விட்டார்கள்.

    மக்களின் பணத்தை மோடி திருடி விஜய் மல்லையா, நீரவ்மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழில் அதிபர்களிடம் கொடுத்து அவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல உதவி புரிந்துள்ளார்.

    விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யுமாறு மோடியிடம் நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் தொழில் அதிபர்களின் கடனை மட்டுமே தள்ளுபடி செய்து வருகிறார். அவரால் மேலும் பல தொழில் அதிபர்கள் பலன் அடைய உள்ளனர்.

    இந்தியாவில் தயாரிப்போம் என்பது போன்ற பல திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினாலும் 24 மணி நேரத்துக்கு 450 வேலை வாய்ப்புகளையே இந்தியா உருவாக்கி வருகிறது. ஆனால் சீனா 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #rahulgandhi #pmmodi #demonetisation

    சென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காவியா, பில்டியா ஆகிய 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததும் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போலீஸ் விசாரணையில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிபயங்கரமான கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களில் குடும்பத்தினரோடு ஈடுபடுவதை இக்கும்பல் வழக்கமாக வைத்துள்ளது.

    ரெயில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் குடும்பத்தினர், கடந்த 2006-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் உறவினரான கிரண் 2012-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு உறவினரான சங்காராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் மோஹர் சிங்கின் தந்தையின் சகோதரருக்கு பிறந்தவன் தான் கிரண். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு கிரண் இரையான பின்னரே மோஹர் சிங், கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகி உள்ளான்.

    தனது குற்றச்செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மோஹர்சிங், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கொலை வழக்கில் மோஹர் சிங்கின் மனைவி பன்வாரா, சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் பிடி இறுகியதால் மோஹர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் தென் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் வியாபாரிகள் போல் தங்கி இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு மோஹர் சிங் தனது கூட்டாளிகளுடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் இக்கொள்ளை கும்பல் தங்கியது. அப்போது தான் சேலம் செல்லும் ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவது இவர்களுக்கு தெரிய வந்தது.

    கோப்புப்படம்

    சென்னை ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதில் பயணம் செய்து ஒத்திகை பார்த்தனர்.

    கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் மற்றும் கூட்டாளிகள் காலியா ருசி, பில்டியா ஆகியோர் அயோத்தியா பட்டினம் மற்றும் விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் செய்து நோட்டமிட்டனர்.

    சின்ன சேலம்- விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 நிமிடங்கள் ரெயில் நிற்காமல் செல்வதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.

    இதன்படி சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் வைத்து 4 பேரும் பணம் இருந்த பெட்டியில் ஏறி கூரையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மரப் பெட்டியை உடைத்து 6 லுங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை கட்டி மேலே ஏறினார்கள்.

    பின்னர் வயலூர் மேம்பாலம் அருகே இந்த மூட்டைகளை வீசினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த மோஹர் சிங்கியின் கூட்டாளிகள் பணமூட்டைகளை பத்திரமாக எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கொள்ளையர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பணத்தை பங்கு போட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டம்போட்டு வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    ×