search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் தாழ்வாக தொங்கிய உயரழுத்த மின்சார கம்பியில் சிக்கிய 7 யானைகள் உயிரிழந்தன. #Sevenelephants #Dead
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் உள்ள காமலங்கா கிராமம் வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக 11 கிலோவாட் திறன் கொண்ட மின்சார கம்பிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறன்றன. மிகவும் உயரம் குறைந்த கம்பங்கள் வழியாக மின்சார கம்பிகளை ஊழியர்கள் பொருத்தியுள்ளதாக கூறிய கிராம மக்கள் உயரமான கம்பங்களை பொருத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்றிரவு இங்குள்ள நெல் வயல் வழியாக இரைதேடிச் சென்ற ஒரு யானை கூட்டத்தை சேர்ந்த 7 யானைகள் தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.  #Sevenelephants #Dead

    ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. #Odishafloods #CycloneTitli
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 
     
    சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 19 பேரின் உடல்களை தேடி வருகிறோம். கஜபதி மாவட்டத்தில் அதிகமாக 42 பேரு, கஞ்சம் மாவட்டத்தில் 10 பேரும் பலியாகி உள்ளனர்.

    மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,770 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Odishafloods #CycloneTitli 
    நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDieselPrices #DieselCostlier
    புவனேஸ்வர்:

    சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த முடியாதபடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில நாட்கள் ஏறுவதும், இடையில் ஒருசில நாட்கள் இறங்குவதுமாக உள்ளது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியைப் பொருத்து விலை மாறுபடுகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை சற்று குறைவாக உள்ளது. 



    இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, அதாவது ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ரூ.74.92க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.86.91க்கும், டீசல் ரூ.78.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தா மற்றும் சென்னையில் பெட்ரோல் ரூ.83.29-க்கும்,டீசல் ரூ.84.64-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolDieselPrices #DieselCostlier
    ஒடிசா மாநிலத்தை தாக்கிய டிட்லி புயலின் எதிரொலியாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. #Odishafloods #CycloneTitli
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

    சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

    இங்குள்ள 17 மாவட்டங்களை பெருமளவு பாதித்த வெள்ளத்தால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் நாசமடைந்துள்ளன. பல லட்சம் ஹெக்டர்களில் பயிர்கள் அழிந்துப்போயின. பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 61 ஆக உயர்ந்துள்ளது.  #Odishafloods  #CycloneTitli  
    ஒடிசாவில் டிட்லி புயலில் சிக்கி பலியான 7 வயது மகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தந்தை 8 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TitliCyclone
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 11-ந்தேதி டிட்லி புயல் கடுமையாக தாக்கியது. கஜபதி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. லட்சுமிபூர் பஞ்சாயத்தில் உள்ள கதாங்பூர் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் அதாங்பூர் கிராமத்தை சேர்ந்த முகுந்த் டோரா என்பவரது 7 வயது மகள் பபிதாவை காணவில்லை. எனவே அவளை அவர் தேடி வந்தார். இந்த நிலையில் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அவளது உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது.

    அவளது உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்சை போலீசார் ஏற்பாடு செய்யவில்லை. புயல் மற்றும் நிலச்சரிவினால் சாலை சேதமடைந்துள்ளது. அதை காரணம் காட்டி பிரேத பரிசோதனைக்காக இறந்த பபிதாவின் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரும்படி தெரிவித்தனர்.

    ஏழையான முகுந்த் டோராவினால் ஆம்புலன்சோ, வேறு வாகனமோ ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே மகளின் பிணத்தை ஒரு சாக்குப் பையில் போட்டு கட்டி தோளில் சுமந்தபடி 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

    வழியில் லட்சமிபூரில் அவரை வழிமறித்து நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது இந்த தகவலை அவர் தெரிவித்தார். அதன் பின்னர் போலீசார் ஒரு ஆட்டோவை பிடித்து அதன் மூலம் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    இந்த தகவல் கஜபதி மாவட்ட கலெக்டர் அனுபம் ஷாவுக்கு தெரிய வந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த அவர் இது குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக கூறினார். மேலும் புயல் மழையால் உயிரிழந்த பபிதாவுக்காக அவரது தந்தை டோராவிடம் ரூ.10 லட்சம் காசோலையையும் அவர் வழங்கினார்.

    மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் ஒடிசாவில் புயல் பாதித்த கஜபதி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, அவரிடம் தனது மகள் உடலை 8 கி.மீ. தூரம் சுமந்து சென்ற தந்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இச்சம்பவம் வேனை அளிக்கிறது என்றார்.

    கடந்த 2016-ம் ஆண்டு ஒடிசா அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தரவில்லை. எனவே ஏழை மலைவாழ் மனிதர் தனமாஜி தனது மனைவியின் உடலை 10 கி.மீ. தூரம் சுமந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். #TitliCyclone
    ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. #Odishafloods #CycloneTitli
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 
     
    சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,765 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Odishafloods #CycloneTitli 
    ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மீண்டும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. #TitliCyclone
    புதுடெல்லி:

    வங்க கடலில் அந்தமான் அருகே உருவான டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.

    நேற்று அதிகாலை வடக்கு ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. காற்றும் மழையும் 4 மாவட்டங்களையும் துவம்சம் செய்தது.

    அதன்பிறகு அதி தீவிர புயலாக இருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி சுழன்று நகர்கிறது.

    நேற்று இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கேங்டிக் பகுதியை டிட்லி புயல் தாக்கியது. தற்போது வடக்கு ஒடிசாவின் பவானி பாட்னா நகரில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 50 கி.மீ தொலைவிலும், புல்பானி நகருக்கு மேற்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


    இன்று காலை டிட்லி புயல் வலுவிழந்து ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. இதன்காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திராவில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள லூபன் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி மெதுவாக நகர்வதால் இன்னும் 4 நாட்களில் ஏமன்-ஓமன் கடற்கரை பகுதியை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TitliCyclone
    டிட்லி புயல் இன்று அதிகாலை ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரை கடந்ததால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. #TitliCyclone
    புவனேசுவரம்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது.

    நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். பெயர்தான் வண்ணத்துப் பூச்சியே தவிர இந்த புயலின் சீற்றம் தொடக்கத்தில் இருந்தே அதிக ஆற்றலுடன் இருந்தது. இதனால் வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    சென்னைக்கு அருகே வங்கக் கடலில் உருவான இந்த புயல் முதலில் தமிழகத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்ககைள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி மேலும் நகர்ந்தது. இதனால் தமிழகம் மிகப்பெரிய புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் வகையில் வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    மணிக்கு சுமார் 19 கி.மீ. வேகத்தில் நகர்ந்த டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசா வின் கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபதா, நயகர், பத்ரக், ஜெகத்சிங்பூர், ஜஜ்பூர், கோர்தா, கட்டாக், பலா சோர், மயூர்பஞ்ச், கலஹந்தி, பவுத் மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடப்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா எனும் இடம் அருகே டிட்லி புயல் கரையை கடந்ததாக வானிலை இலாகா கூறியது.

    டிட்லி புயல் கரையை கடந்தபோது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.

    காலை 7 மணிக்கு பிறகு புயலின் தாக்கம் முழுமையாக ஒடிசா கடலோரப் பகுதிக்கு மாறியது. ஒடிசாவில் புயல் கரையை கடந்தபோது மிக, மிக பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியது. இதனால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    டிட்லி புயல் சுமார் 15 மாவட்டங்களை பாதிக்கும் என்றும் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த நிலையில் 6 மாவட்டங்களை துவம்சம் செய்து விட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்து விட்டது. இந்த 6 மாவட்டங்களிலும் மழை பெய்தபடி உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டிட்லி புயல் தாக்கத்துக்குப் பிறகு மேலும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்குவதற்கு 836 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ஒடிசாவை உலுக்கியுள்ள டிட்லி புயலின் தாக்கம் இன்று மாலை வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிட்லி புயல் கோரத்தாண்டவத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒடிசா கடலோர பகுதி ரெயில் போக்குவரத்தை கிழக்கு கடலோர ரெயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமானம் தனது விமான சேவையில் 5 விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    மிக பலத்த மழை பெய்து மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்க நேரிட்டால் மக்களை உடனுக்குடன் மீட்க வேண்டும் என்பதற்காக 300 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 120 படகுகள் டிட்லி புயல் தாக்கியதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

    ஒடிசாவுக்கு உதவ விமான படையும், கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் டிட்லி புயலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

    சென்னை - அவுரா வழித்தடத்தில் ரெயில்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மீட்பு பணிகளை விரைந்து செய்ய ஒடிசா முதல்- மந்திரி நவீன்பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்தபடி உள்ளார். #TitliCyclone
    டிட்லி புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே, கோபால்பூரில் 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. #TitliCyclone
    வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிசா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக புயல் எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.



    மேலும், ஒடிசா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    வங்க கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் நாளை கரையை கடப்பதால் ஒடிசா மாநிலத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    புவனேஸ்வர்:

    வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது.

    ‘டிட்லி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது ஒடிசாவின் கோபால்பூர் நகருக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 270கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது இன்று மதியம் மேலும் அதி தீவிர புயலாக மாறியது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை ஒடிசாவின் கோபால்பூருக்கு வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒடிசாவை தாக்கியதும் அந்த புயல் மீண்டும் வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காளம் நோக்கிச் செல்லும். அதன் பிறகு ஒடிசா கடற்கரை பகுதியில் படிப்படியாக வலு இழக்கும்.

    புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 100 முதல் 125 கி.மீ வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

    வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் அடுத்த 48 மணிநேரத்துக்கு மிக பலத்த மழை மற்றும் மிதமிஞ்சிய மழை கொட்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து ஒடிசா முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து மக்களை உஷார் படுத்தி உள்ளனர்.


    இன்று இரவு முதலே மழை கொட்டத் தொடங்கும் என்பதால் ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜபதி, கன்ஜம், பீரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநில தலைமைச் செயலாளர் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    வெள்ள மீட்பு பணிக்காக 300 மோட்டார் படகுகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா மாநில அதிவிரைவு படை மற்றும் தீயணைப்பு படையினர், காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்லி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. #RedAlert #Odisha #AP #IMD #Titli
    புவனேஸ்வர்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை டிட்லி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிசா நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், இரு மாநிலங்களிலும் அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இன்று இரவு முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு இந்த கனமழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திர மாநில கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படியும், மீனவர்கள் இன்றுமுதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல், தனியார் வானிலை ஆய்வுமையம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த டிட்லி புயலானது ஒடிசாவின் கோபால்பூர் வழியாக கரையை கடக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்துக்கு தயார் நிலையில் இருக்கும்படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. #RedAlert #Odisha #AP #IMD #Titli
    அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். #PrithviMissile
    புவனேஷ்வர்:

    பிருத்வி - 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நேற்று இரவு நடத்தப்பட்டது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. #PrithviMissile
    ×