search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    ஒடிசா மாநிலம் ஜார்படா சிறப்பு சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஸ்வரர்:

    ஒடிசா மாநிலம் ஜார்படா சிறப்பு சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், பாலியல் வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் இருந்த ஜிடேந்திர பிஸ்வால், இன்று காலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் நடத்தப்படும் என டிஜிபி ஷர்மா தெரிவித்துள்ளார். #undertrialprisonerdead #Jharpadajail 
    ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் 12 லட்சம் ரூபாயை அள்ளிச் சென்றனர். #IOBATM #loot
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்துக்குட்பட்ட முலிசிங் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது.

    நேற்று பின்னிரவு இந்த மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த 12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். #IOBATM #loot 
    ×