search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிப்ரான்"

    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். 

    ஜிப்ரான் இசையில் வெளியாகிய `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan

    விவேகம் படத்திற்கு பிறகு அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் நாசர் மகன் அபி மெக்தி ஜோடியாக அக்‌‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vikram #AksharaHaasan #AbiMehedhi
    கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்' படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.



    அக்‌ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். #Vikram #AksharaHaasan #AbiMehedhi

    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் இந்தி பதிப்பிற்கான உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேநேரத்தில் ஜிப்ரான் இசையில் `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் இந்தி பதிப்பை ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
    இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். 
    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

    முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தற்போது நடிக்க இருக்கும் நாயகிக்கு முக்கியத்தும் உள்ள படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். #Hansika
    ஹன்சிகா தற்போது நாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    இதுகுறித்து இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் கூறும்போது, ‘ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா? என்று சந்தேகித்தேன். பாடல்களை விட, படத்தின் பின்னணி இசை ஸ்கிரிப்டுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார். என் கதை அவருக்கு பிடித்து போனது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

    ஹன்சிகாவின் நேர்த்தி, வலுவான ஸ்கிரிப்ட் மற்றும் ஜிப்ரானின் பொக்கிஷமான இசை - நிச்சயமாக இந்த அணிக்கான ஒரு வினோதமான தருணம். ஜியோஸ்டார் எண்டர்பிரைஸ் தயாரிப்பாளர் எம்.கோடீஸ்வர ராஜு மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் ராஜேந்திர வர்மா இந்த படத்திற்காக சில முக்கிய தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 'நாயகி மையப்படுத்திய படம்' என்றவுடனேயே, ​​படத்தில் வணிக மதிப்புகள் அவ்வளவாக இருக்காது என்று கருதலாம். ஆனால் தயாரிப்பாளர்கள் உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்க சிறந்த கூறுகளை சேர்த்து வருகிறார்கள். 



    முன்னதாக மசாலா படம், ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் யூ.ஆர்.ஜமீல். ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் ஜமீல் செய்த வேலையால் ஈர்க்கப்பட்டார் ஹன்சிகா. இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து `நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. 

    ஜிப்ரான் இசையில், கமல்ஹாசன் எழுதி, பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கமலுடன் கவுசிகி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர் பாடியுள்ளனர். 

    அத்துடன் அந்த பாடலின் முடிவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நானாகிய நதிமூலமே பாடல்:


    முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூலையில் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

    இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

    இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு படத்தில் நடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வரும் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vadivelu #IA24P
    வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.

    இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது.

    சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்’ என்று கூறுகிறது படக்குழு.



    வடிவேலு மீது ரெட்கார்டு போடப்பட்டால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள். #IA24P #ImsaiArasan

    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற ஜுன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் கமலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

    இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #IA24P #ImsaiArasan
    ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.

    இந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.

    இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. 



    பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது. 

    இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #ImsaiArasan #Vadivelu
    கமல்ஹாசன் தயாரிப்பில் `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் படம் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். #Vikram #Ghibran
    விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 

    இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணியை துவங்கிவிட்டதாக ஜிப்ரான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `மஹாவீர் கர்ணா' என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vikram #Ghibran

    அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது, இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். #KamalHaasan #Viswaroopam2
    அரசியல் வேறு, சினிமா வேறு என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    இதற்கு முன்பு எனது சில படங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டு என் படங்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை.

    முன்பு விஸ்வரூபம் படத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அரசியல் கலந்திருந்தது. இப்போதும் அதே மாதிரி அரசியல் கலக்குமானால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன். இதற்காக நான் என்னை தயார்படுத்தியுள்ளேன்.

    விஸ்வரூபம் படத்தின் 2-வது பகுதி முதல் பகுதிக்கு தொடர்ச்சியாக உண்மையானதாக இருக்கும். வாசீம் முகம்மது காஷ்மீரி யார் என்பதை விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.



    இந்த படத்தை நான் எனது அரசியல் பயணத்துக்கு எந்த விதத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை. ஒரு வேளை நான் படம் தயாரித்திருந்தால் அதை செய்திருப்பேன். ஆனால் இதில் நான் அரசியல் செய்யவில்லை.

    என்னைப் பொறுத்தவரை அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது.

    இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #Viswaroopam2

    விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இடம்பெறவில்லை என்றும், அதிரடி சண்டை காட்சிகளும், உணர்வுப்பூர்வமான விஷயங்களும் அதிகம் இருக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது வரை டிரைலரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இந்த டிரைலரில் எந்த மதத்தையும் சார்ந்து இருக்கிறது பாவமல்ல பிரதர், ஆனால் தேசதுரோகியாக இருக்கிறது தப்பு என்று கமல் பேசிய வசனங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் ரிலீசுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் பேசியதாவது,

    “விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் எல்லோருக்கும் பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கவுதமிக்கும் நன்றி.



    விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்-2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும். இதில் நானும் பாடல் எழுதி இருக்கிறேன்.

    விஸ்வரூபம் படத்துக்கு வந்ததுபோல் இந்த படத்துக்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். முதல் பாகத்துக்கு வந்த எதிர்ப்பு கூட மாறுவேடத்தில் வந்ததுதான். அந்த எதிர்ப்பு அவர்கள்பால் இருந்து வரவில்லை என்று பிற்பாடு நிருபணம் ஆனது. அது அரசியல். இந்த படத்துக்கும் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்தால் நான் அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். எனது அரசியல் பிரவேசத்தை முன்வைத்து இந்த படம் வரவில்லை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் சில முன்கதைகளுடன் இரண்டாம் பாகம் வருகிறது.



    சாபாஷ் நாயுடு, இந்தியன்-2 படங்களும் அடுத்தடுத்து தயாராகி வெளிவரும். நான் அரசியலுக்கு வந்து விட்டதால் இனி படங்களில் நடிப்பது குறையும். இரண்டாம் பாகம் படத்தில் அதிகம் பேச்சுகள் இடம்பெறவில்லை. அதிரடி சண்டை காட்சிகளும், உணர்வுப்பூர்வமான விஷயங்களும் அதிகம் இருக்கும்” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #Vishwaroopam2 #KamalHaasan

    கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 



    கமல்ஹாசன் இந்த படத்தை இயக்கி, நடித்துள்ளதுடன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கிறார். ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தியில் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து வெளியடுகின்றனர். #Vishwaroopam2 #KamalHaasan

    ×