search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டாய்னிஸ்"

    யார்க்கர் பந்துடன் தனது ‘ஸ்லோ பால்’ பந்து வீச்சு முறையுடன் எதிரணியை அச்சுறுத்தும் மலிங்கா, அதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சின் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். அத்துடன் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவிற்கு ‘ஸ்லோ பால்’-களை அற்புதமாக வீசக்கூடியவர்.

    140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மலிங்கா, திடீரென 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வீசுவார். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறிவிடுவார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் ‘ஸ்லோ பால்’கள்தான் முன்னணி பேட்ஸ்மேன்களை வெளியேற்றும். யார்க்கருக்குப் பிறகு இதுதான் மலிங்காவின் பிரம்மாஸ்திரமாகும்.

    தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது. இதில் இலங்கை 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 44.5 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்த போட்டி முடிந்த பின்னர் லசித் மலிங்காவிடம் சென்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். தன்னுடைய மிகப்பெரிய பலமாக கருதப்படுவதின் ரகசியத்தை பற்றி கேட்கிறாரே? என்று நினைக்காமல் உடனடியாக அதுபற்றி கற்றுக் கொடுத்தார்.

    மிகப்பெரிய தொடரில் மோதும் நிலையில் இப்படி கற்றுக் கொடுத்துள்ளீர்களே? என்று மலிங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மலிங்கா கூறுகையில் ‘‘ஸ்டாய்னிஸ் என்னிடம் வந்து ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். ஷார்ட் பார்மட் போட்டியில் விதவிதமான பந்துகளை (variation) வீசுவது முக்கியமானது. எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ‘ஸ்லோ பால்’கள் வீசுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தேன். அவருடன் இதை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்.
    சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வேகபந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.

    8.3 ஓவரில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ஆர்கி ஷார்ட்டை 33 ரன்னிலம், மேக்ஸ்வெல்லை 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட்டை டக்அவுட்டிலும் குருணால் பாண்டியா வெளியேற்றினார்.

    இதனால் 90 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஆஸ்திரேலியா. இறுதியில் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. பும்ரா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.



    இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 25 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் 7 பந்தில் 13 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பும்ரா 38 ரன்களும், புவி 33 ரன்களும், கலீல் அகமது 35 ரன்களும் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
    தவான், தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இக்கட்டான நிலையில் விக்கெட் இழந்ததால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    102 பந்தில் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோகித் சர்மா சற்று தடுமாறினார்.

    5-வது ஓவரை பெரென்டோர்ப் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 13 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னில் அடுத்தடுத்து ஆடம் ஜம்பா சுழற்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    மறுமுனையில் தவான் 28 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 32 பந்தில் 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அண்ட்ரிவ் டை 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.



    ரிஷப் பந்த் ஆட்டமிழ்ந்ததும் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் அபாரமான வகையில் பவுண்டரிக்கு விரட்டினார்.

    இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். குருணால் பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தில் குருணால் பாண்டியா இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    இதனால் கடைசி மூன்று பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக் 13 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மெல்போர்னில் 23-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 25-ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. ஆடம் ஜம்பா, ஸ்டாய்னிஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
    மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கு 174 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.



    மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    வீரர்கள் விவரம்:-

    இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், டி'ஆர்கி ஷார்ட், அலெக்ஸ் கேரி, பென்மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரிவ் டை, ஆடம் ஜம்பா, பெரென்டோர்ப், ஸ்டேன்லேக்.



    டி ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் 7 ரன் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 24 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் லின் 20 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 37 ரன்கள் விளாசினார். இரண்டு பேரையும் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.

    4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக குருணால் பாண்டியா பந்தில் சிக்சராக விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    10 ஓவரில் 75 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலியா 15 ஓவரில் 135 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் குவித்தது. குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்களும்,
    டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவிக்கவும் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.



    321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் லின் டக்அவுட்டிலும், ஆரோன் பிஞ்ச் 11 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் சிறப்பாக விளையாடி 102 பந்தில் 106 ரன்கள் சேர்த்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 63 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும், மேக்ஸ்வெல் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.



    இதனால் தென்ஆப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
    ×