search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேடிஎஸ்"

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்தது தான் காங்கிரசின் சமீபத்திய தோல்விக்கு முக்கிய காரணம் என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். தோல்விக்கான காரணம் குறித்து கட்சி தலைமை ஆராய்ந்து வருகிறது. தோல்வி குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது:-


    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததுதான், பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்ததற்கு முக்கிய காரணம். 

    பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, இத்தகைய தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது இல்லை. இந்த கூட்டணிக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. இரண்டு கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வாக்காளர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதற்கு இந்த தேர்தல் முடிவுகள்தான் சான்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட மொய்லி, பாஜக வேட்பாளர் பச்சேகவுடாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஆட்சியைக் காப்பாற்ற தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.  அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக  தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்யலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதையடுத்து  முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் திட்டத்தை முறியடிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    மேலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அதிருப்தி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, பாஜக பக்கம் போக வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இடம் தருவதாகவும் கூறி சமாதானம் செய்துள்ளனர்.



    மேலும், நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் சித்தராமையா கூட்டி உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், பாஜகவின் பகட்டு வார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.

    தேவைப்பட்டால் எம்எல்ஏக்களை சொகுசு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
    தெலுங்கானா தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. #TTDPelectionmanifesto #TelanganaAssemblypoll
    ஐதராபாத்:

    113 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் இன்று மாலை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    ஐதராபாத் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் எல்.ரமணா இந்த அறிக்கையை வெளியிட்டார்.

    2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் மற்றும் குத்தகை விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி. தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த சுமார் 1200 தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 ஏக்கர் நிலம் ஆகியவை அளிக்கப்படும்.

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக 10 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சுழல்நிதி மற்றும் 10 லட்சம் ரூபாய்வரை வங்கிக் கடன், முதியோர், விதவையர், ஆதரவற்றோருக்கு  2  ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், வீடு கட்ட 5 லட்சம் ரூபாய் நிதியுதவி ஆகியவை வழங்கப்படும்.

    மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, மேல்நிலை கல்வி, பட்டக்கல்வி, பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு இலவச லேப்டாப், 8-ம் வகுப்பில் இருந்து மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் என பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. #TTDPelectionmanifesto #TelanganaAssemblypoll
    ஆபரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah #bjp

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் உடனடியாக பா.ஜனதா ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த வி‌ஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கர்நாடக தலைவர்களுக்கு அமித் ஷா உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர்களிடம், கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் பா.ஜனதா தாமதம் செய்யாமல் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதாவுக்கு மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படாதவாறு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் படியும், குறிப்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகளால் தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாக இருக்க வேண்டும், ஆப்ரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் என்றும், பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து ஆதரவு தருவதாக இருக்கவேண்டும். இதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


    ஏனெனில் பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டும் தேவை என்பதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது. அமித்ஷாவிடம் இருந்து வந்த உத்தரவால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாகவும், ஆட்சியை பிடிக்க அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதே நேரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க் களின் கூட்டத்தை எடியூரப்பா திடீரென்று கூட்டி இருப்பதாகவும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #AmitShah #bjp

    கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    இந்த தேர்தல் முடிவு குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:-

    வழக்கமாக நகர் பகுதிகளில் பாரதிய ஜனதா தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2013-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 1960 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 905 இடங்களில் வெற்றி பெற்றன.

    தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களையும், பாரதிய ஜனதா 929 இடங்களையும், ஜே.டி.எஸ். கட்சி 373 இடங்களையும் பிடித்துள்ளன.

    சுயேட்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி ஒட்டுமொத்தமாக 1357 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கர்நாடகாவில் மைசூரு, தும்கூரு ஆகிய 2 மாநகராட்சிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மேயர் பதவிகளை கைப்பற்றுகிறது. #KarnatakaLocalBodyElections
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    மைசூரு, தும்கூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியை பாரதிய ஜனதா பிடித்துள்ளது. இந்த மாநகராட்சியில் பாரதிய ஜனதா 23 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும், ஜே.டி.எஸ். 4 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.

    பாரதிய ஜனதா கவுன்சிலர் மேயராக உள்ளார். சிவமொக்கா மாநகராட்சியான பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது.

    மைசூரு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாரதிய ஜனதா 22 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 19 இடங்களையும், ஜே.டி.எஸ். 18 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும் பிடித்துள்ளன.

    இந்த மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க 33 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கட்சிகள் 37 இடங்களை பிடித்துள்ளன. இதனால் இந்த மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூட்டணியில் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சிக்கு தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ்- ஜே.டி.எஸ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி மைசூரு மாநகராட்சியில் காங்கிரஸ் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    இதேபோல தும்கூரு மாநகராட்சியிலும் காங்கிரசை சேர்ந்தவர் மேயராகிறார். இந்த மாநகராட்சியில் மொத்தம் உள்ள 35 இடங்களில் பாரதிய ஜனதா 12 இடங்களையும், காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 10 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களை பிடித்துள்ளன. இந்த மாநகராட்சியில் தங்களுக்கு மேயர் பதவியை ஜே.டி.எஸ். விட்டுத்தர வேண்டும் என்று காங்கிரசார் கோரிக்கை விடுத்தனர். இதை ஜே.டி.எஸ். கட்சி ஏற்றுக்கொண்டது. #KarnatakaLocalBodyElections
    கர்நாடக மாநிலத்தில் தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    உச்ச நீதிமன்ற பதிவாளரை சந்திக்க அவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பதிவாளரை சந்திக்க அனுமதி கிடைத்தது. பதிவாளிடம் மனுவை அளித்து, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நாளை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker 
    முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா இன்று காலை குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
    திருமலை:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களையும் மத சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க. 104 இடங்களை பிடித்தது.

    காங்கிரஸ் , ஜே.டி.எஸ். கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

    ஆனால் கவர்னர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தார். நேற்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

    முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஜனதாதள தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எம்.எல்.ஏக்களை இழுக்க குதிரை பேரம் நடக்கலாம் என்பதால் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு ஏழுமலையானை தரிசிக்க தேவகவுடா திருப்பதிக்கு வந்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்றிரவு சாமி தரிசனம் செய்த தேவகவுடா பின்னர் பத்மாவதி தாயார் கெஸ்ட் அவுசில் தங்கினார்.

    இன்று காலை 4 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு சென்று நிஜபாத தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் தனது 86-வது பிறந்த நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். மற்ற அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.  #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
    கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #CongressAlliance
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்ததால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பா.ஜ.க.வின் முன்னணி நிலவரம் சரியத் தொடங்கியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், மதியம் 2.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

    தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்.) ஆதரவுடன் ஆட்சியமைக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. ஆனால், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க வியூகம் வகுத்துள்ளது. இது தொடர்பாக ஜே.டி.எஸ். தலைவர் தேவே கவுடாவுடன் சோனியா காந்தி பேசியிருக்கிறார். குலாம் நபி ஆசாத்தும் பேசியுள்ளார்.

    இந்நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் முதலமைச்சர் சித்தராமையா வீட்டில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி ஆட்சிக்கான புதிய வியூகம் வகுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் சம்மதித்திருப்பதாகவும், இதனை ஏற்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ஜே.டி.எஸ். தலைவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.

    இதற்கிடையே முதல்வர் சித்தராமையா இன்று மாலை 4 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #CongressAlliance

    ×