search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101545"

    தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக இருக்கிறார். இதற்காக, தி.மு.க.விடம் இருந்து ஒரு இடத்தை வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

    காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

    எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.

    தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், தமிழகத்தில் தான் 6 மேல்-சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, அ.தி.மு.க.வை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.



    தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
    அமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். #JohnDingellDies #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் எம்பியாக பணியாற்றினார். குறிப்பிடத்தக்க  சுகாதார திட்டங்கள் மற்றும் பல முக்கிய தாராளவாத சட்டங்கள் கொண்டு வருவதற்கு உந்துசக்தியாக இருந்தார்.

    2015ம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகும், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.



    இந்நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் டிங்கெல் (வயது 92), நேற்று முன்தினம் காலமானார். மிச்சிகனின் டியர்பார்ன் நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

    அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசுத்துறை கட்டிடங்கள், ராணுவ கட்டிடங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

    ஜான் டிங்கெல் அரசியலில் இருந்து ஓய்வு  பெற்ற பிறகு, அவரது மனைவி டெப்பி டிங்கெல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் டிங்கெல் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், சமீபத்தில் பாராளுமன்ற கூட்டு அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, டெப்பி டிங்கெல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #JohnDingellDies #Trump
    எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆலத்தூர் ஒன்றியம் அடைக்கம்பட்டி எம்.ஜி.ஆர் திடலில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனரும், தமிழக முதல்வரும்மான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செய லாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

    அனைவரையும் வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் துரை, மாவட்ட இணைசெயலாளர் ராணி, துணை செயலாளர் லட்சுமி, முன்னாள் தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும்மான ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளரும் சிதம்பரம் எம்.பி.யும்.மான சந்திரகாசி, பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாரும் எம்.பி.யும்மான மருதராஜா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் சிவகாசி சின்னதம்பி,திட்டை மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அடைக்கம்பட்டி குருசாமி, ரமேஷ், ராஜ், மாரிமுத்து,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற செயலாளர் ராஜராம், ஜெ.பேரவை செயலாளர் உதயம் ரமேஷ், ராமலிங்கம், முத்தமிழ், ராஜேஸ்வரி, வீரபாண்டியன், முத்துசாமி, லேட்டஸ்ட் செல்வராஜ், மதுபாலன், செட்டிகுளம் தங்கராசு, மார்கண்டன், திருநாவுகரசு, தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் செய்திருந்தார். #ADMK
    மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது. #Kanimozhi
    சென்னை:

    2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனி மொழிக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து லோக் மால்ட் செய்தி நிறுவன தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் தர்தா கூறியதாவது:-

    லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ 2 வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாநிலங்கள் அவையின் 2018-ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    வருகிற டிசம்பர் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு டெல்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்குகிறார்.

    நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த 10 ஆண்டுகளாக மகத்தான வகையில் பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலுசேர்த்ததற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    அவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்ற குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட இந்த குழுவில், டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் சவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இநத்க்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
    பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி தண்டனை அளிப்பதில் நீண்டகால இழுத்தடிப்பு நடந்து வருவதால் கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர். எனவே, இவர்கள் மீதான வழக்குகளில் விசாரணையை விரைவுப்படுத்தி, தண்டித்து அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ‘அமிகஸ் கியூரி’யாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமான வழக்குகள் பீகார் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தேவை ஏற்படும் மாவட்டங்களில் எத்தனை சிறப்பு நீதிமன்றங்களை வேண்டுமானாலும் அமைத்து கொள்ளலாம்.

    தற்போது, மாநில ஐகோர்ட் மற்றும் சில சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படும் மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்புள்ள குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வகையில், பீகார் மற்றும் கேரளாவில் மாவட்டங்கள்தோறும் அமைக்கப்படும் புதிய சிறப்பு நீதிமன்றங்களின் பட்டியலை பாட்னா மற்றும் கேரளா ஐகோர்ட்டுகள் வரும் 14-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts #Biharpecialcourts #Keralapecialcourts
    எம்எபி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PendingCases #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை அமிகஸ் கியூரியாக நியமித்தது.

    அஸ்வினி உபாத்யாய்

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக மொத்தம் 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் உள்ளதாகவும், மற்ற வழக்குகள் தற்போதுவரை விசாரணை நிலைக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    264 வழக்குகள் மீது உயர்நீதிமன்றங்களால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PendingCases #SupremeCourt
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகிய செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi
    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 113 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி  கட்சியில் இருந்து  செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி நேற்று ராஜினாமா செய்தார்.

    அவரை தொடர்ந்து மேலும் சில எம்.பி.க்கள் விலகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விலகிய கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.



    அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டாரா? அல்லது, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi  

    நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி

    எம்பி-க்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். 542 எம்பி-க்கள் மற்றும் 4086 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் தங்களது பான் கார்டு தகவலை தெரிவித்திருக்கிறார்களா? என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்ததது.

    இந்த ஆய்வறிக்கையில் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு தகவலை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களே. காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் வெளியிடவில்லை.

    மாநில வாரியாக கேரளாவில் 33 எம்எல்ஏ-க்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்எல்ஏ-க்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    ஒடிசாவில் இரண்டு எம்பி-க்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்பி-க்களும் அசாம், மிசோரம், லட்சதீவு ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்பி-க்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்பி-க்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதியாக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். #SpecialCourt
    சென்னை:

    ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது.

    ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம் அனுப்பியது. முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும் தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.

    தமிழ்நாட்டில் சிறப்பு கோர்ட்டு அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதை பயன்படுத்தி சிறப்பு கோர்ட்டை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி, சிறப்பு கோர்ட்டை சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் திறக்க ஐகோர்ட்டு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு கோர்ட்டு அங்கு உருவாக்கப்பட்டது.

    சிறப்பு கோர்ட்டின் முதல் நீதிபதியாக ஜெ.சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.கண்ணப்பன் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த புதிய கோர்ட்டு திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது.


    விழாவுக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமை தாங்கி புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். விழாவில், ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு கோர்ட்டில் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகள் விசாரணை நடைபெறும்.

    தமிழகத்தை பொறுத்த வரையில் 178 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை அபகரித்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகளை பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதுதவிர தேர்தல் வழக்குகள் தனியாக உள்ளன என்று தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  #MP #MLA #Cases #SpecialCourt
    சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் இன்று திறந்து வைத்தார். #MLA #MP #HighCourt #SpecialCourt
    சென்னை:

    எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி குலுவாடி ரமேஷ் திறந்து வைத்தார். இந்த விழாவில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MLA #MP #HighCourt #SpecialCourt
    மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் எம்.பி.யும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தினேஷ் சந்திர ஜோர்டர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். #WestBengal #CPI #DineshChandraJoarder
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா பாராளுமன்ற தொகுதியில் 1971-1977 வரை எம்.பி.யாக இருந்தவர் தினேஷ் சந்திர ஜோர்டர். 91 வயதான இவர், வயது மூப்பு காரணமாக வரும் உடல்நலக்குறைபாடுகளால் அவதியுற்று வந்த நிலையில், இன்று அவர் வீட்டிலேயே மரணமடைந்தார்.

    இவர், 1977-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1987 முதல் 1992 வரை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவந்துள்ளார்.

    வழக்கறிஞராக தனது வாழ்வை துவக்கிய இவர், அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக தற்போது மரணம் அடைந்துள்ளார். #WestBengal #CPI #DineshChandraJoarder
    பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் 329 எம்.பி.க்கள் இன்று கூடிய பாராளுமன்றத்தின் 15-வது அவை கூட்டத்தின் முதல்நாளில் பதவி ஏற்றுகொண்டனர். #ImranKhan #Pakistan #ParliamentMembersTakeOath
    இஸ்லாமாபாத்:

    342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மையான 172 உறுப்பினர்களின் பலம் கிடைக்கவில்லை.

    116 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரி இ இன்சாப் கட்சிக்கு 9 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் அக்கட்சியின் பலம் 125 ஆக உயர்ந்தது.

    அடுத்தபடியாக தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளுக்கு விகிதாச்சார முறைப்படி பெண் வேட்பாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகள் மூலம் இம்ரான் கட்சிக்கு கூடுதலாக 28 உறுப்பினர்கள் கிடைத்தனர்.

    இதேபோல், சிறுபான்மையின இனத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன்  சேர்த்து மொத்தம் 158 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கானின் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 18-ம் தேதி அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.

    இந்த நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் 15-வது அவையின் முதல்நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர், புனித குர்ஆனின் சில வசனங்கள் ஓதியபிறகு அவை நடவடிக்கைகள் தொடங்கின.

    முன்னதாக, முதன்முறையாக எம்.பி.யாக வெற்றிபெற்று அவைக்கு வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இம்ரான் கான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.



    பின்னர், இம்ரான் கான், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அக்கட்சியின் முன்னாள் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரிப் உள்பட 329 உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர். விரைவில் பதவி விலகவுள்ள சபாநாயகர் அயாஸ் சாதிக் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய சபாநாயகர் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்புடன் பாராளுமன்றம் வரும் 15-ம் தேதி (14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் என்பதால்) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    15-ம் தேதி நடைபெறும் சபாநாயகர் தேர்தலில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பாக ஆசாத் கைஸர் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் சையத் குர்ஷித் ஷா ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் தற்போது இம்ரான் கட்சியின் பலம் 158 ஆக இருந்தாலும், அதற்கு சரிநிகர் பலத்துடன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு 82  உறுப்பினர்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் கட்சிக்கு 15 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த 3 கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து 151 உறுப்பினர்களுடன் பலமான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் ஓரணியாக செயல்பட தீர்மானித்துள்ளன.

    இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரிப்பை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

    எனினும், முத்தாஹிதா குவாமி இயக்கத்தை சேர்ந்த 7 உறுப்பினர்கள், பலுசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்கள், பலுசிஸ்தான் தேசிய கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள், மகா ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள், அவாமி முஸ்லிம் லீக் கட்சி மற்றும் ஜமோரி வட்டான் கட்சியை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 24 எம்.பி.க்கள் இம்ரான் கானை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகளின் பலப்பரீட்சை தோல்வியில் முடியும். இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானில் புதிய அரசு அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #ImranKhan #Pakistan #ParliamentMembersTakeOath
    ×