search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101545"

    ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக எழுப்பப்பட்ட சர்ச்சை குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #RafaleDeal
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து  36 டஸ்ஸால்ட் ரஃபேல் என்ற போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னர் பேசுகையில், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வெவ்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். முதலில் ஒப்பந்தம் வெளிப்படையானது என்றார், பிறகு அது மிகப்பெரிய் ரகசியம் என்கிறார். எனவே இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது’ என குற்றம் சாட்டினார்.

    அதேபோல், மத்திய அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசியபோதும், ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடியின் நெருங்கிய நண்பர் பயனடைந்திருப்பதாகவும், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நிர்மலா சீதாராமன் உரிய பதிலளிக்க வேண்டும்  எனவும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் மகாத்மா காந்தியின் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ் பாப்பர், குலாம் நபி ஆசாத், அனந்த் ஷர்மா, அம்பிகா சோனி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி சுசில் குப்தா உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்குபெற்ற இந்த போராட்டத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய பதிலளிக்குமாறு கோஷம் எழுப்பினர்.

    மேலும், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக, இன்று நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் எம்.பி, காகிதத்தால் செய்யப்பட்ட விமானத்தை காட்டி, பிரான்ஸை விட தாம் சிறப்பாக விமானம் செய்வதாகவும், தமக்கும் இதுபோன்ற புதுவாய்ப்பு ஒன்றை வழங்குமாறும் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். #RafaleDeal
    ஓரினச் சேர்க்கை குற்றமாக கருதப்படும் நிலையில் திருமணம் முடிந்தவராக இருந்தால் ராகுல் காந்தியை கட்டி அணைக்க நாங்கள் தயார் என பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தனது காரசாரமான விவாதத்தை நிறைவு செய்த பின்னர், பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டியணைத்தார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மோடியின் பாணியிலேயே அவருக்கு பதிலடி கொடுக்க விரும்பியதால் தான் கட்டி அணைத்ததாக ராகுல் காந்தி தனி விளக்கமும் அளித்திருந்தார்.

    இதையடுத்து, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நான் கட்டிப்பிடித்துவிடுவேன் என அஞ்சி பா.ஜ.க எம்.பி.க்கள் என்னைக் கண்டால் 2 அடி பின்னால் செல்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியை கட்டி அணைத்தால் எங்கள் மனைவிகள் எங்களை விவாகரத்து  செய்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    மேலும், ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377-வது சட்டப் பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை எனவும், முதலில் ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ளட்டும், பிறகு தங்களை கட்டி அணைக்கலாம் எனவும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் மீதான இந்த விமர்சனம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. #BJP #RahulGandhi
    திருப்பதி ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ரமண தீட்சிதர். இவர் திருப்பதி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் நியமனம் நடக்கவில்லை, பூஜைகள் சரியாக செய்யவில்லை என்றும் ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் காணவில்லை என்றும் பல்வேறு புகார்கள் கூறினார்.

    இதற்கிடையே திருப்பதி கோவிலில் அர்ச்சகருக்கு ஓய்வு வயதை 65 ஆக தேவஸ்தானம் நிர்ணயித்தது. அதன்படி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரருக்கு கட்டாய ஓய்வு அளித்தது திருப்பதி தேவஸ்தானம் மீது புகார்கள் கூறியதால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக ரமண தீட்சிதர் கூறினார்.

    இவ்விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டியும் புகார் ஒன்றை கூறினார்.

    அவர் கூறும் போது, திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை தேவஸ்தானத்தினர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார்.

    இந்த நிலையில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பக்தர்களை குழப்பும் விதமாக புண்படும் படியும் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    ×