search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.ஆர்.முருகதாஸ்"

    எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். #Raangi #Trisha
    ‘எங்கேயும் எப்போதும்‘ பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

    ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்பதில் சந்தேகமில்லை.


    திரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷாவின் அக்காவாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. #Raangi #Trisha #MSaravanan #ARMurugadoss

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் பிரதிக் பாபர் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Darbar #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

    தர்பார் படத்தில் நடிக்கும் வில்லன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தி நடிகர் பிரதிக் பாபரை வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2015-ல் வெளியான ‘பாகி’ 2 படத்தில் வில்லனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன.



    அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து, தர்பார் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தர்பார் படத்தில் பிரதிக் பாபர் மும்பையை ஆட்டி வைக்கும் தாதாவின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடக்கிறது.

    மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொங்கல் பண்டிகையன்று படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல், வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Darbar #Rajinikanth
    பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

    ஆனால் அவர் இப்படத்தில் ரஜினியின் ஜோடி இல்லை, படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்றும் தகவல் வருகிறது. தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும், நயன்தாரா இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். ஏற்கனவே சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி-நயன்தாரா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதுவதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
    மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் - விக்னேஷ் சிவன் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இவர்களது கூட்டணியில் உருவாகிய பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடைசியாக அனிருத் இசையில் வெளியான பேட்ட படத்தில் விக்னேஷ் சிவன் வரியில் பாடல்கள் இல்லை என்ற குறை இருந்தது. அது தர்பார் படத்தின் மூலம் நினைவாகலாம்.



    தர்பார் படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ஒரு பாடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். டி.சந்தானம் கலை பணிகளையும், ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh #VigneshShivn

    ரஜினிகாந்த் நடிக்கும் `தர்பார்' படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படத்திற்கான கதையை எழுதுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Trisha #Saravanan
    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார். 

    இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படமொன்றை இயக்கவுள்ளார்.



    இதில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத, சரவணன் இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சரவணன், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Trisha #Saravanan #ARMurugadoss

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் துவங்கியது. #Darbar #Rajinikanth
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. மும்பையில் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. படத்தின் பூஜையில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 



    அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்குகிறது.

    போஸ்டரில், மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் இடம்பெற்றிருப்பதுடன், போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது மும்பை என்ற எழுத்தும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், படம் மும்பை பின்னணியில் உருவாகுவதும், இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதும் உறுதியாகியுள்ளது.



    மேலும், நான் நல்லவனா இருக்கனுமா, கெட்டவனா இருக்கனுமா, இல்ல கேடு கெட்டவனா இருக்கனுமா என்பதை நீயே முடிவு செய் என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

    படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 10-ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

    இதுவிர கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.


    இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கமாவது, ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. தற்போது வரை நயன்தாரா மட்டுமே ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். வதந்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Nayanthara

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் அவரது மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் 166-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.



    ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில், வருகிற 18-ந் தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

    இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #NivethaThomas

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.



    ரஜினிகாந்த் வழக்கமாக தேர்தல் நடக்கும் சமயத்தில் வெளியூரில் இருப்பார். பிரசாரத்துக்கு அழைப்பதற்காகவோ ஆதரவு கேட்டோ அரசியல் நண்பர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதற்காகவே தேர்தலுக்கு முன்பே தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் பிசியாகிவிடுவார்.

    அப்படி இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்தவர், தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பில் இருக்கப்போகிறார். #Rajinikanth166 #ARMurugadoss

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss
    ரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசும் இணைவது கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது ஒரு வழியாக இருவரும் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    ரஜினி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்கிறது. ஒரே கட்டமாக முழு படத்தையும் முடிக்க தெளிவாக திட்டமிட்டிருக்கிறார் முருகதாஸ். சந்தோஷ் சிவன் கால்ஷீட்டை முன்கூட்டியே மொத்தமாக வாங்கிவிட்டார். ரஜினி மொத்தமாக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.



    படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில் அவை வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. ரஜினி ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்தது. மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்குகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Rajinikanth166 #ARMurugadoss

    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh
    கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க இருக்கிறார்.

    ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அனிருத் அளித்த பேட்டியில், ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.



    விரைவில் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். பெரும்பாலான காட்சிகளை மும்பையில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh

    ×