search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பெண்"

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    சென்னை:

    உயர்கல்வியை நிர்ணயிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஒரு மதிப்பெண்ணால் சிறந்த கல்லூரியையும், படிப்பையும் கூட கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் தலைவிதியை ஒவ்வொரு மதிப்பெண்களும் நிர்ணயிப்பதால் எதிர்பார்த்த மார்க் கிடைக்காத மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக ஆசிரியர்கள் செயல்படுவதால் மாணவர்களின் வாழ்க்கை திசை திரும்பி போய் விடுகிறது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண் அளித்ததை ஒவ்வொரு பக்கம் வாரியாக கூட்டல் செய்யும்போது தவறு ஏற்படுகிறது.

    இந்த வருடமும் நிறைய மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

    ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 பேர் ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

    விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குனர்கள் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    500 ஆசிரியர்களுக்கும் மேலாக தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-

    மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம்.

    தலைமை கண்காணிப்பாளர், எஸ்.ஒ, வி.ஒ உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள். அவர்களை மீறி தவறு நடந்திருக்காது என்றால் அதற்கு அவர்களும் பொறுப்பாவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் மதிப்பெண் தவறுக்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
    காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் ரேஷ்மா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் ரேஷ்மா குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தார். எனவே பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ரேஷ்மா எலி மருந்து குடித்து விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரேஷ்மா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதிப்பெண்களை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். #JaggiVasudev
    சென்னை:

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.

    கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JaggiVasudev
    தேனி அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
    தேனி:

    தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் சங்கீதா (வயது 22). அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டு மாலை நேர கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மனமுடைந்த சங்கீதா வி‌ஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிழந்தார்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் கபிலன் (வயது 17). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே அல்லி நகரம் கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரது மனைவி கிருஷ்ணவேனி. இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    எம்.எஸ்சி. படிப்பில் காலி இடங்கள் இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் தாண்டேக் ரோகிணி என்பவர் சென்னை பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்தார். மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததால் அவருக்கு இடம் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாண்டேக் ரோகிணி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘இளங்கலை படிப்பில் 71 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, முதுகலை படிப்பில் இடம் வழங்க முடியும். மனுதாரர் 61 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பதால் அவருக்கு இடம் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.

    அதற்கு மனுதாரர் வக்கீல், ‘கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்பில் பல இடங்கள் காலியாக உள்ளன. எனவே மனுதாரருக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘எம்.எஸ்சி. படிப்பில் பல இடங்கள் காலியாக இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை அனுமதித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
    நீட் வினாத்தாள் குளறுப்படியால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க மதுரை கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். #NEET2018
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவு தேர்வை (நீட்) 24,000 மாணவர்கள் எழுதினர். இதில் தமிழ் வினாத்தாளில் மொழி பெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் பொதுநலன் மனுதாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமத் ஆகியோர் விசாரித்தனர். தமிழ் வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், புதிதாக நீட் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் வேண்டும் என்று மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.க்கு கடந்த 10-ந்தேதி உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

    இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது. தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.


    இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை மாணவர் சத்யாதேவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    மாணவர் சத்யாதேவர் ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதினார். இவருக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவால் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீடு பெற்ற தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே கல்லூரியில் ஒதுக்கீடு நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருக்கிறார்.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் நாளை அவரது மேல்முறையீடு மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 24,000 மாணவர்கள் தமிழில் நீட் தேர்வு எழுதியுள்ளனர். மாநில ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,328 இடங்கள் உள்ளன. இதில் 516 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகிறது. தற்போது முதல் சுற்றில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2447 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #NEET2018
    நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. #NEET #NEET2018
    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவி கீர்த்தனா 720க்கு 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 12-வது இடம் வகித்தார். சென்னை கே.கே.நகரை சேர்ந்த அந்த மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியில் பின் தங்கிய பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பீகார், ராஜஸ்தான், அரியானா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை விட தமிழகம் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது.

    நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாளாகும் தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2900 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடான 455 இடங்கள் போக மீதமுள்ள 2445 எம்.பி.பி.எஸ் இடங்கள் நீட் தேர்வு கட்-ஆப் மார்க் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதுதவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 இடங்கள் என மொத்தம் 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


    இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

    அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

    ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளன.

    மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 இடங்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைத்தால் இந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும்.

    கடந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களால் பிரச்சனை எழுந்து. இந்த ஆண்டு அதுபோன்ற நிலை உருவாகாது. மருத்துவ படிப்பிற்கான வழிகாட்டுதல் கையேட்டில் அதுபற்றி தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதையும் மீறி முறைகேடாக மாணவர் சேர்க்கை பெற முயன்றால் கடும் நடவடிககை எடுக்கப்படும்.

    மருத்துவ படிப்பில் சேரக்கக்கூடிய மாணவர்கள் 2 மாநிலத்தில் கூட விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் புலம் பெயர்ந்து இருந்தால் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

    ஆனால் கர்நாடகவில் மட்டும் தான் குடியுரிமை சான்றிதழை விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் குடியுரிமை சான்று முறைகேடாக பெற்று விண்ணப்பித்து இருந்தால் அது தவறாகும்.

    இதுபோன்ற தவறுகளை கடந்த வருடம் விண்ணப்பித்தவர்கள் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   #NEET #NEET2018
    10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர்.
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த 23-ந்தேதி வெளியானது. தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போனது. பொதுவாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் எளிதாக 100-க்கு 100 பெறுவார்கள்.

    ஆனால் இந்த வருடம் எத்தனை மணவர்கள் பாட வாரியாக தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை தேர்வுத்துறை வெளியிடவில்லை. அதற்கு பதிலாக சதவிகிதம் அடிப்படையில் தேர்ச்சியை குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த வருடம் கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால் ‘சென்டம்’ பெறக்கூடிய மாணவர்கள் வாய்ப்பை இழந்தனர்.

    அதேபோல பெரும்பாலான மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. மேலும் 200 முதல் 300 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர். தாங்கள் படித்த அதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பை தொடர்வதற்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    தாங்கள் படித்த பள்ளியில் இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள். கணிதப் பாடப்பரிவு, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் சேர போதிய மார்க் இல்லாததால் ஒவ்வொரு பள்ளிகளாக ஏறி இறங்குகிறார்கள்.

    தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தாங்கள் கேட்கிற பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்று மாணவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அரசு பள்ளிகளிலும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. #Tamilnews
    பட்டுக்கோட்டையில் மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #NEETexam #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் சுமார் 25,000 மாணவா்கள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவா்களுக்கு 196 மதிப்பெண்கள் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்படுமானால் தமிழ் மொழியில் படித்த அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவ கல்லூாியில் சேருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறைவு.

    எனவே தமிழக அரசு, மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பிரதமரை சந்தித்து இந்த தவறான கேள்விகளுக்கான முழுமதிப்பெண்கள் தமிழகத்து மாணவா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #NEETexam #TTVDinakaran 
    ×