search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகள்"

    குமரி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை - பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விவசாயிகள் அணை நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது.

    குமரி மாவட்ட விவசாயிகள் கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடியில் மட்டுமே ஈடுபடுவார்கள். இதற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீரை நம்பியே விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இது தவிர குமரி மாவட்டத்தில் குளங்களை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். குமரி மாவட்ட அணைகளுக்கு தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை மற்றும் கோடை மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் கிடைக்கும். இவற்றை சேமித்து வைத்தே விவசாயம் நடைபெறும்.

    விவசாயத்திற்காக குமரி மாவட்ட அணைகள் ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அங்கு தண்ணீர் தேக்கப்படவில்லை.

    பெருஞ்சாணி அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 23.95அடி தண்ணீரே உள்ளது. இது போல சிற்றார் 1 அணையில்5.28 அடி தண்ணீரும், சிற்றார் 2 அணையில் 5.38அடி தண்ணீரும் உள்ளது.

    இவை தவிர மாம்பழத்துறையாறு அணையில் 42.24அடி தண்ணீரும், பொய்கை அணையில் 8.90 அடி தண்ணீரும் மட்டுமே உள்ளது.

    பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு தொடங்கிய பராமரிப்புபணி இன்னும் முடிவடையவில்லை. தற்போது அணையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் அணையில் தண்ணீர் தேக்கப்படவில்லை. வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் போதுதான் இங்கு தண்ணீர் தேக்க இயலும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதுபற்றி குமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள் சேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட வேண்டும். அதற்கு குமரி மாவட்ட அணைகளில் 1500 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்க வேண்டும்.

    பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளின் மொத்த நீர் இருப்பு 500 மில்லியன் கன அடியே உள்ளது. இந்த அளவுக்கு நீர் இருந்தால் அணைகளை திறக்க முடியாது. எனவே வருகிற ஜூன் 1-ந் தேதி அணைகளை திறக்க வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் 11 அணைகள் உள்ளன. இதில் அதிக கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய அணையாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி, மொத்த கொள்ளளவு 5511 மில்லியன் கன அடி ஆகும்.



    அதற்கு அடுத்ததாக பாபநாசம் அணை மிகப் பெரிய அணையாக உள்ளது. இதன் மொத்த அடி 143, கொள்ளளவு 5500 மில்லியன் கன அடி ஆகும். இது போக சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.

    இந்த 11 அணைகளில் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பு இருக்கும். இந்த அணைகளில் தண்ணீர் இல்லாவிடில், குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விடும். தற்போது பாபநாசம் அணையில் சகதியும், தண்ணீரும் சேர்ந்து நீர்மட்டம் 9 அடி மட்டுமே உள்ளது.

    குடிநீருக்காக குறைந்தது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியே செல்கிறது.

    இதனால் குடிநீருக்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது. மணி முத்தாறு அணையில் தற்போது 64.31 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் பச்சையாறு வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் இப்போது பச்சையாறு பகுதியில் உள்ள ஆகாய தாமரைகள் தாமிரபரணி ஆறு வரை பரவி உள்ளது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையிலும் தற்போது 47.41 அடியாக நீர்மட்டம் உள்ளது.

    பாபநாசம் அணையும் சகதி தண்ணீர் மட்டும் உள்ளதால் அந்த அணையில் மற்ற பகுதிகள் வறண்டு விட்டது. அணையின் அடிப்பகுதியில் உள்ள மரங்களின் வேர் பகுதி மட்டும் காய்ந்து வெளியே தெரிகிறது.

    இதுபோல கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இங்கு பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் மணல் நிரம்பி சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது. இந்த அணைகளின் ஒரு ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் போல் லேசாக தண்ணீர் கசிந்து செல்கிறது.

    இதனால் இந்த அணைகளில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பா நதியிலும் பல ஆண்டுகளாக தூர்வாராமல் 23 அடி வரை மணல் நிரம்பி உள்ளது. அதன் மேல் 1½ அடி உயரத்துக்கு சிறிதளவு தண்ணீர் உள்ளது. மற்றபடி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

    இதுபோல குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளிலும் சிறி தளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நீரோட்டம் இல்லாததால் இந்த அணைகளும் வறண்டு விட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 அணைகளும் வறண்டு மழைக்காக காத்திருக்கிறது.

    எப்போதும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழும் அகத்தியர் அருவியில் தற்போது மிக குறைவாகவே தண்ணீர் விழுகிறது. குற்றால அருவிகளில் எந்த அருவியிலும் தண்ணீர் விழவில்லை. குற்றாலம் மெயினருவி முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது மணிமுத்தாறு அணை நீர்மட்டத்தை வைத்து குடிநீர் தேவை மட்டும் சமாளிக்கப்படுகிறது.

    வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வேண்டும். சில ஆண்டுகளில் முன்னதாக மே கடைசி வாரமே தென்மேற்கு பருவ மழை பெய்து விடும். எனவே தென் மாவட்ட மக்கள் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தென்மேற்கு பருவ மழை பெய்தால் தான் வறண்டு உள்ள 9 ஆணைகளுக்கும் தண்ணீர் வரும். இல்லாவிடில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #Nallathangalodai
    பழனி:

    தொடர் மழையால் பழனியில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகரில் உள்ள நீர் நிலைகள் மட்டுமின்றி பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது.

    முதலில் வரதமா நதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து பாலாறு-பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    மேலும் கோடை கால நீர் தேக்கம், குதிரையாறு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாய பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பழனியை அடுத்துள்ள கோம்பை பட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பெய்த மழையினால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    காட்டாற்று வெள்ளம் தரைபாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் வெள்ளம் வந்ததை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். பாலத்தை கடந்த செல்பவர்கள் எச்சரிக்கையுடன செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    இரவு முழுவதும் நீடித்த மழை காலையில் ஓய்ந்தது. அதன் பிறகே வெள்ளப்பெருக்கும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீண்டும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது.

    எனவே இப்பாலத்தை சீரமைத்து கரையை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Nallathangalodai
     


    தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு கூடுதல் நீர் வந்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி 104 அடியானது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவு நீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 827 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 134.74 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது.

    கடனாநதி-78.80, ராமநதி- 69.25, கருப்பாநதி-67.03, குண்டாறு-35.87, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு-18.66, கொடுமுடியாறு-35, அடவிநயினார்-93.25 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் 5-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்த அளவே பெய்து வருகிறது. நவம்பர் மாதம் சராசரி மழை அளவான 208.20 மில்லி மீட்டரை விட குறைவாக 186.11 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.

    இந்த மாதம் சராசரி மழை அளவான 111.60 மில்லி மீட்டர் பெய்தால் தான் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1841.55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 124.15 அடியாக உள்ளது. சேர்வ லாறு அணை நீர்மட்டமும் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 134.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 103.60 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி -78.20, ராமநதி-69.25, கருப்பாநதி-67.86, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு -19.61, கொடுமுடியாறு-37, அடவிநயினார்-94.75 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் மலை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், அம்பையில் 38.2 மில்லி மீட்டர் மழையும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 32.8 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பாறில் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநதி-54, பாபநாசம்-39, அம்பை-38.2, கன்னடியன் கால்வாய்-32.8, சேர்வ லாறு-30, ஆய்க்குடி-12.8, தென்காசி-8.4, கருப்பாநதி-7, குண்டாறு-7, களக்காடு-5.6, மணிமுத்தாறு-5.2, கடனாநதி-5, சேரன் மகாதேவி-2

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வைப்பாறு-13, கடம்பூர்-3, எட்டயபுரம்-3, கயத்தாறு-1. #ManimutharDam

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மலையோர பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 26.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சிற்றாறு-1 அணைக்கு 179 கனஅடி தண்ணீரும், மாம்பழத் துறையாறு அணைக்கு 26 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-18.2, சிற்றாறு 1-16, சிற்றாறு 2-11, நாகர்கோவில்-2.4, பூதப்பாண்டி-1, ஆரல்வாய் மொழி-6, பாலமோர்-10.8, திற்பரப்பு-12.6.திற்பரப்பு அருவியில் விடுமுறை தினமான நேற்று அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இந்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பல குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Rain
    தூத்துக்குடி:

    தமிழகம் அருகே மன்னார்வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. நேற்று காலை வரை விடிய விடிய மழை கொட்டியது.

    குறிப்பாக திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவானது. திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்த தென்னை மரம் இடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்தது. ஆத்தூர் போலீஸ் நிலையம் அருகில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அங்கு மின்தடை ஏற்பட்டது. ஆறுமுகனேரியிலும் சிவன் கோயில் அருகிலும், பிரதான சாலை அருகிலும் மின்வயர் அறுந்து விழுந்தது. தகவலறிந்து மின் ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதியில் மழைநீர் அதிகளவு தேங்கியதால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் நிலவியது. இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 9 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

    தூத்துக்குடியில் பிரதான பகுதிகளான குரூஸ் பர்னாந்து சிலை, பழைய மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கழிவுநீர் லாரிகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை குறைந்தது. எனினும் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. உடன்குடி, குலசேகரன்பட்டினம், தண்டுப்பத்து, பரமன்குறிச்சி பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் மழை தூறிக்கொண்டிருந்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், அலுவலக பணிகளுக்கு செல்வோர் குடைபிடித்த படி சென்றனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அப்பகுதி முழுவதுமே குளிர்ந்த காலநிலை நிலவியது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லிமீட்டரில்) வருமாறு:-

    திருச்செந்தூர்-30, குலசேகரன்பட்டினம்-30, காடல்குடி-23, தூத்துக்குடி-8.1, ஸ்ரீவைகுண்டம்-4, விளாத்திகுளம்-2, சாத்தான்குளம்-1.2.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நாங்குநேரி, நெல்லை ஆகிய இடங்களில் லேசான மழையும், நம்பியாறு அணைப்பகுதியில் கன மழையும் பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 99.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 496.76 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.27 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.65 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 362 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கடனா அணை நீர்மட்டம் 65.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 61.75 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 20.50 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 109 அடியாகவும் உள்ளன. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுகிறது.

    மெயினருவி, ஐந்தருவியில் விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். எனினும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே தென்மேற்கு பருவ மழை காரணமாக சில பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பின. பெரும்பாலான குளங்களில் அதிகளவு தண்ணீர் நிரம்பியது.

    சமீபத்தில் பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கால்வரத்து குளங்களுக்கும், 50 க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளன. குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே வேளையில் சில பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதமானது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. சுரண்டை பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள இரட்டை குளம் 2-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து செண்பகம் கால்வாயில் தண்ணீர் செல்கிறது.

    இத்தண்ணீர் இலந்தை குளம் செல்லுவதால் இலந்தை குளத்தில் இருந்து மீன்கள் செண்பகம் கால்வாயில் ஏறிவருகின்றன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் வலைகளை கொண்டு வந்து மீன்களை பிடித்து திருவிழாவை போல கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் விரால், கெண்டை, கெளுறு உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கின தண்ணீர் வருவதையும் மீன் பிடிப்பதையும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். #Rain

    நாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது. அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ–மாணவிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் நடுவழியில் பழுதாகி நின்றதால் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஒரு சிலர் பள்ளி வரை நனைந்தவாறு சென்றனர். 3 மணி நேரத்தில் 26.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுபோல், குருந்தன்கோடு, குளச்சல், சிற்றார், பாலமோர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையோர பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:–

    நாகர்கோவில்–26.2, குருந்தன்கோடு–25.6, குளச்சல்–6.4, பேச்சிப்பாறை –1, சிற்றார்1–4, சிற்றார்2–7, மாம்பழத்துறையாறு –3, கன்னிமார்–4.6, பாலமோர் –2.8, ஆணைகிடங்கு –3, அடையாமடை –8, திற்பரப்பு–9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 482 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 27 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது.
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக பாபநாசம் அணை, குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    ராதாபுரம் கடற்கரை பகுதியிலும், பாளை நகர் பகுதிகளிலும் அதிகளவு மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக நாங்குநேரி பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சிவகிரி பகுதியில் 20 மில்லி மீட்டரும், பாளையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை இல்லாவிட்டாலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. சேர்வலாறு மலைப் பகுதியில் 8 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 285.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வரும் 604 கன அடி தண்ணீர் அப்படியே பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 13 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கும் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது. இன்று காலை அணைகளின் நீர்மட்டம் கடனாநதி-63.10, ராமநதி -47.25, கருப்பாநதி-57.66, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பி யாறு-19.94, கொடு முடியாறு-32.50, அடவிநயினார்-86 அடிகளாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மெயினருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் இதமாக கொட்டுகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாங்குநேரி-31, சிவகிரி-20, கருப்பாநதி-16, பாளையங்கோட்டை-12.4, அடவிநயினார்-11, சேர்வலாறு-8, செங்கோட்டை-6, சேரன்மகாதேவி-4.4, கடனாநதி-4, தென் காசி-3, சங்கரன் கோவில்-3, ஆய்க்குடி-2.8, நெல்லை-2.7, ராமநதி-2, மணிமுத்தாறு-1.2, குண்டாறு-1.
    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள குண்டாறு அணையில் 57 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. செங் கோட்டை நகர பகுதியில் 33 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 28 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    பாபநாசம், கொடுமுடியாறு அணை பகுதியிலும் அதிக மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 27 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 42 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதனால் அணைக்கு வினாடிக்கு 272 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இன்றைய நீர்மட்டம் 72.80 அடியாக உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 48.60 அடியாக இருந்தது. இன்று 1 அடி உயர்ந்து 49.50 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 57.50 அடியாக உள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் நேற்று 17.88 அடியாக இருந்தது. ஒரே நாளில் இங்கு 5 அடி உயர்ந்து இன்று 22.38 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 12 அடியாக உள்ளது. இது போல அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையில் கடந்த மார்ச் மாதம் முதல் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருவதால் அணையில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு விட்டது. தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே பழுது பார்க்கும் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 522.43 கன அடி தண்ணீர் செல்கிறது.

    ஆனால் அதிகாரிகள் அந்த தண்ணீர் முழுவதையும் ஆற்றில் திறந்து விட்டு விடுகிறார்கள். இதனால் அணையில் தண்ணீர் இல்லாமல் சகதி தண்ணீர் மட்டும் 19.68 அடிக்கு உள்ளது. உடனடியாக சேர்வலாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவை நிறுத்தி அணையில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    நெல்லை, பாளை உள்பட மாவட்டத்தில் பரவலாக இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு    - 57
    செங்கோட்டை - 33
    கொடுமுடியாறு - 30
    தென்காசி    - 28
    பாபநாசம்     - 27
    அடவிநயினார் - 20
    சேர்வலாறு - 19
    கடனா அணை - 15
    ராமநதி - 15
    கருப்பாநதி - 12
    ராதாபுரம்    - 11
    மணிமுத்தாறு - 9.2
    ஆய்க்குடி - 7.2
    அம்பை - 4.2
    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    ராமநதி அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 1 மில்லி மீட்டர், அம்பையில் 2.2. மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவியில் இன்று சற்று கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இது போல அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணையில் இருந்து அனைத்து தண்ணீரும் பாபநாசம் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 205 கனஅடி தண்ணீர் வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.86 அடியாக உள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 34.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் அங்கு 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையில் குறைந்தபட்ச அளவான 19.68 அடியில் சகதி மட்டும் உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை சற்று உயர்ந்து 72.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது போல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.


    காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:



    * காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

    * காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

    * அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

    * முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    ×