search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு"

    பொலிவியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். #ArgentineWoman #PeopleTraffickers
    லா பாஸ்:

    பொலிவியாவில் 1980களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் தெற்கு பொலிவியான் பெர்மிஜோ பகுதியில் இருப்பதாக  இந்த ஆண்டின் துவக்கத்தில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொலிவியா மற்றும் அர்ஜென்டினா போலீசார் இணைந்து, அந்த பெண் குறித்த விவரங்கள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து தெற்கு பொலிவியாவில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்கடத்தல் கும்பலில் சிக்கியிருந்த அந்த பெண்ணையும், அவரது மகனையும் இந்த மாத துவக்கத்தில் மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணுக்கு 45 வயது ஆகிறது.

    கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, மார் டெல் பிளாட்டா பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதாக அர்ஜென்டினா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற நபர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. #ArgentineWoman #PeopleTraffickers

    மதுரை மற்றும் திருமங்கலத்தில் கல்லூரி மாணவி-மாணவர்கள் 6 பேர் திடீரென மாயமானார்கள். இதில் 4 பேர் சென்னையில் மீட்கப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள பரவை விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் நந்தினி (வயது 20). மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரியில் நந்தினி இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.

    இது குறித்து அவரது தாயார் காளீஸ்வரி சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் கக்கன் காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் ஆகாஷ் (14), அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் மகன் முகம்மது ஆரீப் (14), நாகூர்கனி மகன் முகம்மது ஆசிக் (13) ஆகியோர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    இவர்கள் 3 பேரும் பள்ளிக்குச் சென்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதே போல திருமங்கலம் ஜவகர் நகரைச் சேர்ந்த மணி மகன் மணி கூடலிங்கம் (13) பசுமலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரும் வீடு திரும்பவில்லை.

    அவர்கள் 4 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவர் களின் பெற்றோர்கள் திரு மங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவர்களை தீவிரமாக தேடி வந்தார்.

    மேலூர் கருத்த புளியம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகன் யோகேஸ்வரன் (15) மதுரையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    விடுதியில் தங்கி படித்து வந்த யோகேஸ்வரன் தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்குச் சென்றார். மீண்டும் பள்ளிக்கு வரவில்லை.

    பெற்றோரிடம் விசாரித்த போது கடந்த 7-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்று விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சென்னை அண்ணா சதுக்கம் பகுதியில் 4 சிறுவர்கள் சுற்றித்திரிவதை போலீசார் பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் 4 பேரும் திருமங்கலத்தில் மாயமானவர்கள் என்பது தெரியவந்தது.

    இது குறித்து திருமங்கலம் போலீ சாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மாணவர்களை அழைத்து வருவதற்காக போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

    நெதர்லாந்து நாட்டில் உள்ள மியூசியத்தில் இருந்து 2012ம் ஆண்டு திருட்டுபோன பிகாசோ ஓவியம் 6 ஆண்டுகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #PicassoPainting
    புசாரெஸ்ட்:

    உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பிகாசோவின் 7 ஓவியங்கள் , 2012-ம் ஆண்டு திருட்டு போனது. இதையடுத்து தனி குழு அமைக்கப்பட்டு ஓவியங்களை மீட்பதற்கான பணி நடைபெற்றது.

    ஓவியங்களை திருடிய வழக்கில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், திருட்டுபோன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.



    இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒரு ஓவியம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான மீரா பெட்டிகு என்பவர் இதனை கண்டுபிடித்து புசாரெஸ்டில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் ஆகும்.

    தற்போது ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியம், பிகாசோவின் ஓவியம்தானா? என உறுதிப்படுத்தப்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். #PicassoPainting

    மலேசியாவில் சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 48 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், மலையடிக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 48 தொழிலாளர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவிற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி என தெரிவிக்கப்பட்டது.

    அங்கு சென்றவர்களுக்கு நிறுவனத்தினர் தங்க இடம் கொடுத்து பணி கொடுத்துள்ளனர். முதல் ஒரு மாதம் அனைத்தும் நல்ல படியாக சென்றுள்ளது. முதல் மாதம் சம்பளம் மட்டும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் நிறுவனத்தினர் தமிழக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் பட்டினியால் வாடியுள்ளனர். ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த தொழிலாளர்களை சம்பவம் பற்றி வெளியே தகவல் தெரிவித்து விடக்கூடாது என அவர்களை கண்காணிக்க சிலரை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. இதன் காரணமாக வெளியில் தகவல் கூட தெரிவிக்க இயலாமல் தொழிலாளர்கள் மிகுந்த பயத்துடன் காணப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தில் கண்காணிப்பு கும்பல் இல்லாத நேரத்தில் அந்த வழியாக வந்த தமிழகத்தை சேர்ந்த மற்றொரு தொழிலாளி மூலம் பாதிக்கப்பட்ட 48 தொழிலாளர்களும், தங்கள் சோகத்தை செல்போனில் வீடியோ எடுத்து தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளனர். அதன்பேரில் அவரும் அனுப்பி வைத்துள்ளார்.

    அந்த வீடியோவை பார்த்த சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரவியது. அவர்களது உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் இந்த முறை தீபாவளி பண்டிகை கூட கொண்டாடப்படவில்லை.

    தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜ்

    இந்நிலையில் அந்த வீடியோ மலேசியாவிலும் பரவ தொடங்கியது. இது அங்குள்ள தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜிற்கும் சென்றது. அவர் உடனே தமிழக தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் வீடியோ மூலம் அவர்களது உறவினர்கள் அனைவரும் பயப்பட வேண்டாம். இந்த தொழிலாளர்கள் அனைவரையும் மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தாருடன் பேசி அவர்களின் ஊதியத்தை பெற்று தந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #tamilnews
    சென்னை மடிப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிந்த ஒரிசா வாலிபரை போலீசார் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #Facebook
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநில வாலிபர் ஒருவர் அலைந்து திரிவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மடிப்பாக்கம் பஸ்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த மடிப்பாக்கம் போலீசார், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் தேவேந்திர பியான் (21). ஒரிசா மாநிலம் பலேசோர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    தொடர்ந்து விசாரித்த போது ஒரு போன் நம்பரை சொன்னார். அதன்மூலம் அந்த வாலிபரின் ‘பேஸ்புக்’ தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். ஐ.டி.ஐ. படித்த இவர் 20-நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு பிட்டர் வேலைக்காக சென்றதும், அங்கு ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் கேரளாவில் ரெயில் ஏறி சென்னை வந்த அவர் மடிப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த தேவேந்திரபியான் உறவினரும், நண்பர்களும் ஒரிசாவில் இருந்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் வாலிபர் தேவேந்திரபியான் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும், உறவினர்கள் வரும் வரை வாலிபருக்கு பாதுகாப்பு கொடுத்த தொண்டு நிறுவன பிரமுகர் நாராயணனுக்கும் வாலிபரின் உறவினரும் நண்பர்களும் நன்றி தெரிவித்தனர். #Facebook
    தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை உடனே மீட்க வேண்டும் என ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 400 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்பதால் மீனவக் குடும்பங்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர்.

    காணாமல் போன மீனவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கத்துடன் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் நவீன தொழில் நுட்பத்துடன் 24 மணி நேர தீவிர தேடுதல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, அவர்களின் படகுகளையும் கண்டுபிடித்து கொண்டுவர வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் இன்னும் அதிக அக்கறை கொண்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

    மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு 24 மணி நேர பணிகளை துரிதமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan
    தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கப்பரிசை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மீட்கப்பட்டு தற்போது எஸ்.எஸ்.எல்.சி படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும், பிளஸ்-2 படித்து வரும் 25 மாணவ-மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, எஸ்.எஸ்.எல்.சி மாணவ-மாணவிகளுக்கு அகராதியும், பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கால்குலேட்டரும் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒரு குடும்பத்தின் ஏழ்மை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறு வயதிலேயே குழந்தைகள் தொழிலுக்கு அனுப்பப்படுவதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுத்து சிறப்பான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக, அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 30 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். குழந்தை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

    எனவே, உங்களது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது என்பதை மனதில் வைத்து, உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருப்பதோடு, குழந்தை தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் உயர்கல்வி கற்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆதிநாராயணன், திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கிறிஸ்டி, லைலாம்பிகா, குழந்தைகள் பாதுகாப்பு உதவி இயக்குனர் சுடலைசெல்வம் மற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரியில் உள்ள மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெரு வீதிகளில் 25 அடி அகலம் கொண்ட கால்வாய் வழியாக கூடுவாஞ்சேரி ஏரியில் மழை நீர் சென்றடையும்.

    மழைக் காலங்களில் மீனாட்சி நகர், இந்திராநகர், நேரு தெருவில் குடியிருக்கும் மக்கள் மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதையடுத்து மழைநீர் தங்கு தடையின்றி ஏரி, குளங்களை சென்றடையும் வகையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் மழை நீர் கால்வாய், வருவாய் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி, கால்வாய்களை அகலப்படுத்தி வருகின்றனர்.

    நேரு தெருவில் மழை நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து தனியார் பள்ளி சுற்றுசுவர் அமைத்து இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு வட்டாட்சியர் பாக்கிய லட்சுமி, வருவாய் துறை நில அளவையர் நாகராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிருஷ்சா பிரபு மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், பொதுப் பணித்துறை ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுற்று சுவர், பள்ளியால் அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்றவற்றை அகற்றினர். 30 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மீட்டெடுத்ததாகவும் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
    உலகை சுற்றும் சர்வதேச படகுப் போட்டியின்போது புயலில் சிக்கி காயமடைந்த இந்திய கடற்படை அதிகாரி மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். #GoldenGlobeRace2018 #IndianSailorRescued
    கொச்சி:

    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி புயலில் சிக்கினார். கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை அவரது படகை ராட்சத அலைகள் தாக்கியது. முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் டோமியால் படகை விட்டு  நகர முடியவில்லை. மேலும் 130 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியதால் படகையும் செலுத்த முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் அவர் தகவல் அனுப்பினார். அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் மற்றும் ஒரு பிரான்ஸ் மீன்பிடி கப்பல் ஆகியவை டோமியை மீட்க விரைந்தன.



    இதில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும் பிரான்ஸ் மீன்பிடி கப்பலும் இன்று டோமி இருக்கும் பகுதியை நெருங்கின. பின்னர் பிற்பகல் 1 மணியளவில் அதிகாரி டோமியை பத்திரமாக மீட்கப்பட்டு பிரான்ஸ் மீன்பிடி கப்பலில் ஏற்றப்பட்டார். இத்தகவலை இந்திய கடற்படை டுவிட்டர் மூலம் வெளியிட்டது.

    அதிகாரி டோமி மீட்கப்பட்டதை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனும் உறுதி செய்துள்ளார். டோமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று மாலை ஆம்ஸ்டர்டாம் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் மொரிஷியஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  #GoldenGlobeRace2018 #IndianSailorRescued 
    கோடம்பாக்கத்தில் காணாமல் போன மாணவியை கொடைக்கானலில் மீட்ட காவல்துறையினர் இது தொடர்பாக வாலிபரை கைது செய்துள்ளனர்.
    போரூர்:

    கோடம்பாக்கம் வெள்ளார் தெருவை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் கல்லூரி மாணவியை வடபழனி திருகுமரபுரத்தை சேர்ந்த முஸ்தபா என்பவர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கொடைக்கானலுக்கு சென்று கல்லூரி மாணவியை மீட்டனர். இது தொடர்பாக முஸ்தபா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். #tamilnews
    தண்டையார்பேட்டையில் 9-ம் வகுப்பு மாணவனை கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஞானபிரகாசம். அவருடைய மனைவி ஜெனிபர். இவர்கள் மகன் சிம்சோன் (14). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மதியம் 2 மணியளவில் 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது டிப்டாப் வாலிபர் ஒருவர் அங்கு வந்தார்.

    குறைந்த விலையில் எண்ணை விற்பதாகவும், ஒரு கிலோ பாமாயில் விலை 30 ரூபாய்தான் என்று கூறினார். அவருடைய பேச்சை நம்பி ஞானபிரகாசமும், அந்த பகுதியில் உள்ள சிலரும் எண்ணை வாங்குவதற்காக பணம் கொடுத்தனர்.

    எண்ணை வாங்குவதற்காக வாலிபரிடம் மொத்தம் ரூ.1200 கொடுக்கப்பட்டது. உடனே அந்த வாலிபர் தன்னுடன் மாணவன் வந்தால் எண்ணை பாக்கெட்டுகளை எடுத்து வரலாம் என்று கூறி சிம்சோனை ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

    2 மணிக்கு சென்ற மாணவன் மாலை 6 மணி வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் தங்கள் மகன் கடத்தப்பட்டதாக தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இரவு 7 மணியளவில் கடத்தப்பட்ட மாணவனை போன்ற ஒருவர் ராயபுரம் பகுதியில் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்றனர்.

    அப்போது மாணவன் சிம்சோன் அங்கு சுய நினைவை இழந்த நிலையில் நின்று கொண்டு இருந்தார். அவனை போலீசார் மீட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகே மாணவனுக்கு நினைவு திரும்பியது.

    விசாரணையில் ஆட்டோவில் மாணவனை அழைத்துச் சென்றவர் தனது சட்டையை மாணவனுக்கு அணிவித்து விட்டு மாணவன் சட்டையை வாங்கிக் கொண்டார். போலீசார் தேடுதல் வேட்டையை தீவிப் படுத்தியதால் கடத்திய மாணவனை ராயபுரத்தில் விட்டுச் சென்றார் என்பது தெரியவந்தது. எண்ணை வியாபாரி போல வந்தவர் யார்? மாணவனை கடத்தியது ஏன்? என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவனை கடத்தியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பாலக்காடு அருகே மாயமான போலீஸ்காரரை தீயணைப்பு வீரர்கள் யக்கிரை ஆற்றுப்பகுதியில் பிணமாக மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணாடி பகுதியை சேர்ந்தவர் ரினில் (வயது 42). கசபா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தார். இவரது மனைவி பேபி பிரியா.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரினில் வெகுநேரமாகியும் வரவில்லை. சந்தேகம் அடைந்த அவரது மனைவி போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து விபரம் கேட்டார். பணி முடிந்து ரினில் சென்று விட்டதாக கூறினர்.

    கணவர் வீடு திருப்பாததால் அவரது மனைவி அதே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் ரினிலின் செல்போன் சிக்னலை சோதனை செய்தபோது அது யக்கிரை ஆற்றுப்பகுதியில் இருப்பதை காட்டியது.

    அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவரது செல்போன், காலணி மற்றும் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். ஆற்றில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக நம்பிய போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று மாலை முதல் காலை வரை ஆற்றில் இறங்கி தேடினர்.

    வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் பெரும் சவாலாக இருந்தது. இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கப்பட்டது. அங்குள்ள தடுப்பணை அருகே ரினிலை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.

    இது குறித்து கசபா சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×