என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 101815"
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் தன்மை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாத் சதுர்வேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. 2 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. #SC
மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு வக்பு வாரிய கல்லூரியில் நியமனம் நடந்துள்ளதாகவும், இந்த லஞ்சப் பணம் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர், வக்பு வாரிய தலைவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChennaiWakfBoard #CBIRaids
கோவை:
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தர விட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு தொடர்பான வீடியோ வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளை சிலர் மீது பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார்.
அவர் ‘பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலும் 5 வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #pollachiissue #cbi
மதுரை:
பொள்ளாச்சியைச் சேர்ந்த சில பெண்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் திருச்சியைச் சேர்ந்த இளமுகில், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று (15-ந் தேதி) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதி பதிகள் பொள்ளாச்சி சம்பவம் பெண்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பலதரப்பட்டவர்களின் மனநிலையும் மாறும் என மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்.
இணையதளம் தொடர்பான நன்மை, தீமைகளை குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகங்களில் அரசு சேர்க்கலாம். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் அடங்கிய அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.
இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இனியும் நிகழாத வகையில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். #PollachiCase #PollachiAbuseCase #HCMaduraiBench
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
அதில் மாணவியின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
இந்த நிலையில் தமிழக அரசின் கெஜட்டில் மாணவியின் பெயர் இடம் பெற்றிருப்பது சரியா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. வழக்கு பதிவு செய்யும் போது முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்படுவதைப் போல அரசாணையில் பெயர் விவரங்கள் இடம் பெறுவதில் தவறு இல்லை என்றும் அது பத்திரிகைகளில் வெளியாகிவிடக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது.
இந்த நிலையில் அரசாரணையில் மாணவியின் பெயர் வெளியான சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டிருப்பது அப்பட்டமான விதி மீறலாகும். இதன் மூலம் குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் கட்சி கபட நாடகத்தை செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவியின் பெயரை கெஜட்டில் வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களை எடப்பாடி பழனிசாமி அரசு மிரட்டுகிறது என்று கூறியுள்ளார். #PollachiCase #PollachiAbuseCase
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து ஐ.ஜி. ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோரது தலைமையிலான போலீசார் நேற்று பொள்ளாச்சிக்கு சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். பாலியல் சம்பவம் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ள வீட்டுக்கு சென்றும் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து சிபிஐக்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. #PollachiAbuseCase #PollachiCase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்