search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துபாய்"

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது உத்தரப்பிரதேசத்தில் பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என்று பெயர் சூட்டிய இஸ்லாமியர் தனது மகனை காண முடியாமல் துபாயில் தவித்து வருகிறார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோன்டா மாவட்டத்தை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத்(29). கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வேலைதேடி துபாய்க்கு சென்ற முஸ்தாக் அஹமத் துபாயில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹட்டா என்ற இடத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.

    முஸ்தாக் அஹமதின் மனைவி மைனாஸ் பேகம். இந்த தம்பதியருக்கு மன்ட்டாஸா(7), பாத்திமா(3) என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது துபாயில் உள்ள கணவருக்கு போன் செய்த மைனாஸ் பேகம், தங்களது குடும்பத்தில் புதிய வரவாக ஆண் குழந்தை பிறந்திருக்கும் இனிப்பான செய்தியை முஸ்தாக் அஹமதுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    அந்த நல்ல செய்தி அவரது காதில் தேனைப் பாய்ச்ச, இன்னொரு நல்ல செய்தியை அறிந்துகொள்ளும் ஆவலில் நமது நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? என்று மனைவியை விசாரித்தார் முஸ்தாக் அஹமத்.

    பல தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகும் மேலும் ஒரு நற்செய்தியை மைனாஸ் பேகம் தெரிவித்தார். நாட்டிலும் மோடி வந்து விட்டார். நம் வீட்டிலும் மோடி வந்து விட்டார் என்று ஆனந்தமிகுதியில் முஸ்தாக் அஹமத் கூறினார்.

    பிறந்த ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கணவனும் மனைவியும் ஆலோசித்தபோது தனது மகனுக்கு மோடியின் நினைவாக நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று பெயர்சூட்ட விரும்புவதாக மைனாஸ் பேகம் குறிப்பிட்டார்.



    இதை முதலில் முஸ்தாக் அஹமத் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இதில் மனைவி பிடிவாதமாக இருப்பதால் இறுதியாக அவர் சம்மதித்தார். ஆனால், இந்த தம்பதியினரின் முடிவுக்கு இருவரின் குடும்பத்தாரும் உற்றார், உறவினர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால், இந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்களது அன்பு மகனுக்கு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று பெயர்சூட்டிய பின்னர் மைனாஸ் பேகத்தின் சார்பில் அவரது குடும்பத்தார் கோன்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் அவனுக்கு பெயர் வைக்கப்பட்ட விபரத்தை பதிவு செய்தனர்.

    மோடி அரசால் நடைமுறைக்கு வந்த முத்தலாக முறை ஒழிப்பு சட்டம், இலவச எரிவாயு இணைப்பு திட்டம், கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களால் ஈர்க்கப்பட்டு தனது வாரிசுக்கு இந்த பெயரை சூட்டியுள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் மைனாஸ் பேகம் குறிப்பிட்டுள்ளனர்.



    இந்நிலையில், நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று பெயரிடப்பட்ட தனது மகனை பார்ப்பதற்கு அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் பலர் வந்து செல்வதாக கேள்விப்பட்ட முஸ்தாக் அஹமத், ’உடனடியாக தாய்நாட்டுக்கு செல்ல முடியவில்லையே’ என்ற ஏக்கத்துடன்  துபாயில் சோகத்துடன் நாட்களை நகர்த்தி வருகிறார்.

    ’விமான டிக்கெட் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான பணத்தை சேர்ப்பதற்காக நான் இன்னும் கொஞ்சம் நாள் வேலை செய்ய வேண்டியுள்ளது. என் மகனை பார்க்கச் செல்லும் அந்த நல்ல நாளுக்காக காத்திருக்கிறேன்.

    கடந்த ஐந்தாண்டுகளாக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிய நமது நாட்டின் பிரதமரைப்போல் என் மகனும் நல்ல காரியங்களை செய்து மக்களின் நன்மதிப்பை பெறுவான். சிறுவனாக இருக்கும்போது அவனை மற்றவர்கள் எல்லாம் ‘மோடி,மோடி’ என்று அழைத்து கேலி செய்யலாம்.

    ஆனால், அவன் வளர்ந்து ஆளான பின்னர் அவனிடம் வாலாட்ட யாருக்கும் துணிச்சல் வராது. ஏனென்றால், அவன் நரேந்திர மோடி. இந்தியா முழுவதற்கும் ஒரு மோடி. ஆனால், என்னிடம் இரண்டு மோடிகள் இருக்கிறார்கள்.

    என் மகனைப் பற்றி கேள்விப்பட்டு பிரதமர் மோடி என்றாவது ஒருநாள் எங்கள் கிராமத்துக்கு வந்து அவனை பார்த்து ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். அவர் அவ்வாறு செய்தால் எனது மகனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக அமைந்துவிடும்’ என்று தனது ஆவலையும்  வெளிப்படையாக தெரிவித்தார்.
    கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை பெற்றுள்ளார். #GlobalTeacherPrize2019 #Kenyateacher
    துபாய்:

    துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5வது முறையாக வருடாந்திர சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் நடைபெற்றது. இதனை ஹாலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து வழங்கினார். சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.  

     

    அவ்வகையில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி(36) வென்றார். இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஆவார். இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.

    சர்வதேச அளவில் விருது வென்றது குறித்து பீட்டர் கூறியிருப்பதாவது:

    ஆப்பிரிக்காவில் தினந்தோறும் புதிய பக்கத்தையும், புதிய அத்தியாயத்தையும் சந்திக்கிறோம். இப்போது நான் பெற்ற விருது எனக்கானது அல்ல. எனது நாட்டின் மாணவர்களுக்கானது. என் மாணவர்களின் சாதனைகளாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த விருது அவர்கள் மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பாக அமையும். சர்வதேச அளவில் 10 இறுதிப்போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் நான் இவ்விருதினை பெற்றுள்ளேன். இதுவே மிகப்பெரும் உத்வேகம் தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருது பெற்ற ஆசிரியரை கென்யா பிரதமர் உகுரு கென்யட்டா பாராட்டியுள்ளார். 'உங்கள் சாதனை சரித்திரம், ஆப்பிரிக்காவின் சரித்திரமாகும். இளம் சாதனையாளர்களால் இந்த நாடு முன்னேறும்' என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #GlobalTeacherPrize #Kenyateacherwon

    நியூசிலாந்து மசூதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலை கொண்டாடிய துபாய் நிறுவனத்தின் ஊழியர் பணிநீக்கம் செய்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
    துபாய்:

    நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் 15ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    துப்பாக்கி சூடு குற்றவாளி  "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி,  73 பக்கத்தில் தனது நோக்கங்களை  தெரிவித்திருந்தான்.



    இந்த மனித தன்மையற்ற செயலுக்கு பல்வேறு நாட்டினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில், நியூசிலாந்து தாக்குதல் குறித்து கொண்டாடும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

    முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் இதனை அறிந்த அந்த நிறுவனத்தின் தலைவர் அவரை பணியில் இருந்து நீக்கினார்.  மேலும் அந்த ஊழியர் துபாயை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
    துபாயில் சைக்கிள் சாகச வீரர் ஒருவர், ஹெலிகாப்டரில் இருந்து ஹோட்டலின் மேல்தளத்தில் குதித்து சாகசம் செய்துள்ளார். #Dubaicyclestunt
    துபாய்:

    ஸ்காட்லாண்டை சேர்ந்த சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி. இவர் பல சாகசங்களை சைக்கிள் பயணம் மூலம் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது புதிய சாகசம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    துபாயில் ஜுமைரா பகுதியில் மிகப்பெரிய கட்டுமான வசதி கொண்ட கண்கவர் மற்றும் உயரமான ஹோட்டல்களில் புர்ஜ் அல் அரேபியா ஹோட்டலும் ஒன்றாகும். சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி, ஹெலிகாப்டரில் இருந்து முதலில் 14 அடி உயரத்தில் இருந்து சைக்கிளோடு இந்த ஹோட்டலின் மேல்பகுதியில் குதித்தார்.

    அதன் பின் ஹோட்டலின் மேல்பரப்பில் உள்ள சரிவான பலகை ஒன்றில் துவங்கி, பின் ஹோட்டலின் லிஃப்ட் வழியாக சைக்கிளில் வந்தபடி சுமார் 700 அடி உயரத்தை சுலபமாக கடந்தார்.

    இந்நிலையில் வழியில் தென்படும் கட்டிடங்கள், மேல்தளங்கள்  என அனைத்தின் மீதும், தரையில் ஓட்டுவது போல் மிக சாதாரணமாக ஓட்டி சாகசம் புரிந்துள்ளார். இவ்வாறு எவ்வித அச்சமும் இல்லாமல்  சைக்கிளில் அவர் செய்த  சாகசங்கள்  பார்ப்போரை பிரமிப்படைய செய்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. #Dubaicyclestunt

    இலங்கையில் தமிழ் வாசகர்களை சென்றடையும் வகையில் கொழும்பு நகரில் ‘தினத்தந்தி’ இன்று (வியாழக் கிழமை) முதல் வெளியாகிறது. இது ‘தினத்தந்தி’யின் 18-வது பதிப்பு ஆகும். #DailyThanthi #NewsPaper #SriLanka
    கொழும்பு:

    தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்து இருக்கிறது.

    ‘தினத்தந்தி’ ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வெளியாகிறது.

    ‘தினத்தந்தி’யின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தொடங்கப்பட்டது. அங்குள்ள தமிழர்களின் பேராதரவை பெற்ற ‘தினத்தந்தி’, தனது 2-வது சர்வதேச பதிப்பை இலங்கையில் வெளியிடுகிறது.



    இது ‘தினத்தந்தி’யின் 18-வது பதிப்பு ஆகும்.

    இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இலங்கை அரசிலும் தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர். அங்கு தொழில், வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான உறவு நிலவுகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் நீண்ட கால கனவை பூர்த்தி செய்யும் வகையில் ‘தினத்தந்தி’ தனது புதிய பதிப்பை இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வெளியிடுகிறது.

    இலங்கையில் அதிசிறந்த ஊடக சேவையாற்றி வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான ‘வீரகேசரி’ தமிழ் நாளிதழுடன் இணைந்து ‘தினத்தந்தி’ வெளியாகிறது.

    பாரம்பரியம் மிக்க ‘வீர கேசரி’ 1930-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த சுப்பிர மணியம் செட்டியாரால் தொடங்கப்பட்டு, கடந்த 89 ஆண்டுகளாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நாள்தோறும் செய்திகளை வழங்கி வருகிறது. ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரால் 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’, தனது பவள விழாவை சிறப்பாக கொண்டாடி, 77 ஆண்டுகளாக தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கி வருகிறது. எல்லைகளை தாண்டி ‘தினத்தந்தி’ தனது இலங்கை பதிப்பை ‘வீரகேசரி’யுடன் இணைந்து வெளியிடுகிறது.

    ‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பின் இதழ் இன்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகிறது.

    ‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பின் மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள செய்திகள் இலங்கை மக்களுக்கு தாமதம் இன்றி உடனுக்குடன் கிடைக்கும். #DailyThanthi #NewsPaper #SriLanka
    துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். #RahulGandhi #Dubai
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 10-ந் தேதி இரவு ராகுல் காந்தி துபாய் வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    நேற்று ராகுல்காந்தி தனது 2-வது நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். சுமார் 50 நிமிடம் அவர்களுடன் உரையாடினார். 
    துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    துபாய்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    அதில் ஒருகட்டமாக துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் கூறியதாவது:-

    20-ம் நூற்றாண்டு காலகட்டம் மூளை வறட்சியான நாட்களாக கழிந்தது. ஆனால், 21-ம் நூற்றாண்டில் மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கும், தங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களுக்கும் தற்போது செல்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களின் தாய்நாடு உருவாக்கித்தர வேண்டும்.



    இந்தியா பல சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. அதேபோல், பல சிந்தனைகள் ஒன்றிணைந்துதான் இந்தியா உருவாகியுள்ளது. மற்றவர்களின் சிந்தனைகளை கேட்பதும் இந்தியாவின் சிந்தனையாக உள்ளது.

    சகிப்புத்தன்மை என்பது நமது கலாசாரத்தோடு ஒன்றர கலந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தியாவில் சமுதாய பிரிவினையும், அளவுக்கதிகமான ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் தலையெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களின் மனப்போக்கில் இருந்துதான் இவை உருவாகின்றன.

    தங்கள் கருத்துகளை தெரிவிப்பவர்கள் கொல்லப்படும் இந்தியாவையும், பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுடப்படும் இந்தியாவையும் நாங்கள் விரும்பவில்லை. இது மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த சவாலை முன்வைத்துதான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நாங்கள் சந்திக்கப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங். தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    துபாய் :

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை துபாய் சென்றடைந்தார். துபாய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    துபாய் சென்றுள்ள ராகுல் அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் சிந்தும் வியர்வை, ரத்தத்தினால் இந்த நாட்டை வளப்படுத்தி வருகிறீர்கள். உங்களால் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் அடைகிறோம்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    பிரதமர் மோடியின் பிரசார வியூகங்களை பின்பற்றத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். #RahulGandhi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் சென்று ஆதரவு திரட்டினார்.

    அவரது வெளிநாட்டுப் பயணங்கள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தின மோடி அலை உருவாகவும், சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பு ஏற்படுத்தவும் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மிகவும் உதவின.

    மோடியின் பிரசார வியூகங்களை அப்படியே பின்பற்றத் தொடங்கி உள்ள ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளார். இதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரஸ் கிளை அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பு ஏற்பாடு செய்த திட்டத்தின்படி கடந்த ஆகஸ்டு மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேசினார்.

    5 மாநில தேர்தல் வந்ததால் தனது வெளிநாட்டு கட்சிப் பயணங்களை ஒத்திவைத்து இருந்த ராகுல் மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அதைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக துபாய், அபுதாபிக்கு ராகுல் செல்ல இருக்கிறார்.

    ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் ஜனவரி 12-ந்தேதி அபுதாபிக்கு சென்று பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சாம் பிட்ரோடா செய்து வருகிறார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக தென் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் தென் இந்தியாவில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று ராகுல் கருதுகிறார். எனவே துபாய், அபுதாபி கூட்டங்களுக்கு ராகுல் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

    துபாய் அல்லது அபுதாபியில் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியத்தில் அதிக இந்தியர்களை சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆன்லைன் முன்பதிவை கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ராகுல் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பக்ரைன், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அடுத்த மாதம் அவர் செல்வது 5-வதுகட்ட வெளிநாட்டு பயணமாகும். துபாய், அபுதாபி பயணத்தை முடித்த பிறகு கனடா நாட்டுக்கு செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார். #RahulGandhi #Congress

    இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறான். #MondayMotivaton #softwaredevelopment
    துபாய் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் 13 வயது சிறுவன் தான். ஆனால் இவரது வயதிற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் இப்போதே தனக்கென மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறான். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டு இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் தற்சமயம் மூன்றுபேர் பணியாற்றி வருகின்றனர்.

    மூன்று பணியாளர்களும் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலும் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். தற்சமயம் நிறுவனங்களுக்கு வலைத்தளம் உருவாக்கி தரும் டிரைநெட் சொல்யூஷன்ஸ் அவர்கள் செய்யும் எந்த பணிக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை.

    ஆதித்யன் ராஜேஷ் தனது ஐந்து வயதில் கம்ப்யூட்டர் பயன்படுத்த துவங்கியதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு பயிலும் வயதிலேயே கணினி மீது ஆர்வம் அதிகரிக்க தனது ஒன்பதாவது வயதில் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டான்.

    வீட்டில் போரடிக்கும் நேரத்தில் தனது முதல் செயலியை உருவாக்கிய ஆதித்யன், அதன் பின் நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வலைத்தளங்களை உருவாக்கி கொடுக்க ஆரம்பித்தார். கேரளாவின் திருவில்லாவில் பிறந்த ஆதித்யன் தனது ஐந்து வயதில் துபாய் நாட்டிற்கு இடம்பெயர்ந்தான்.

    புகைப்படம் நன்றி: Aadi Media

    நிறுவனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய ஆதித்யன் 18 வயது வரை காத்திருக்க வேண்டும். எனினும், ஏற்கனவே டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று இயங்கி வருகிறது. இதுவரை 12 நிறுவனங்களுக்கு டிரைநெட் சொல்யூஷன்ஸ் சார்பில் வடிவமைப்பு மற்றும் குறியீடு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    டிசம்பர் 7, 2017ம் ஆண்டில் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்சமயம் ஏழாம் வகுப்பு பயிலும் ஆதித்யனுடன் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தற்சமயம் ஆதித்யன் தனது பள்ளி ஆசிரியர்களுக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான். இந்த செயலி ஆசிரியர்களின் பணியை பாதியாக குறைக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என ஆதித்யன் தெரிவித்திருக்கிறான். மென்பொருள் நிறுவனம் தவிர யூடியூப் சேனல் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களை ஆதித்யன் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.  #MondayMotivaton #softwaredevelopment
    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #PAKvNZ #Pakistan #NewZealand
    துபாய்:
     
    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.

    அதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, யாசிர் ஷா பந்து வீச்சில் சிக்கி 90 ரன்னில் சுருண்டது. யாசிர் ஷா 8 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

    பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்று 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாம் லாதம் அரை சதமடித்து வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹென்றி நிகோலஸ் டெய்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ராஸ் டெய்லர் 82 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 77 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 



    இறுதியில், நியூசிலாந்து அணி 112.5 ஓவரில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளும், ஹசன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய யாசிர் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் இரு அணிகளும் தலாஒரு வெற்றியை பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. #PAKvNZ #Pakistan #NewZealand
    பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் கலக்கி வரும் துபாய் போலீசார், தற்போது பறக்கும் மோட்டார்சைக்கிள்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்து வருகின்றனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
    அபுதாபி: 

    உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையில் துபாய் முதன்மை வகிக்கிறது. மேலும், உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாகவும் துபாய் பார்க்கப்படுகிறது.

    பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் போலீசார் பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன்மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

    இந்த ஹோவர் பைக்கை ரோந்து பணிகளுக்காகவும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதத்திலும் பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனை ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் ஆள் இல்லாமலும் இயக்கலாம்.



    ஸ்கார்பியன் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் கலிபோர்னியாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

    ஹோவர்சர்ஃப் மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடத்துக்கு வானத்தில் பறக்கும் என்றும், மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2020-ம் ஆண்டில் இந்த பறக்கும் மோட்டார்சைக்கிள்களின் பயன்பாடு வரவுள்ளது என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
    ×