search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101907"

    ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் ஆலன் டொனால்டை பின்னுக்குத் தள்ளினார் அஸ்வின். #INDvWI #Ashwin
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆக அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். அவர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த டெஸ்டிற்கு முன் அஸ்வின் 327 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இதில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 331 விக்கெட்டுக்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டெனால்டை முந்தியுள்ளார்.

    ஆலன் டொனால்டு 72 டெஸ்டில் 330 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 24-வது இடத்தில் இருந்தார். அஸ்வின் தற்போது 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் அஸ்வின் தற்போது 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 333 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    சர்வதேச அளவில் 24-வது இடத்தை பிடித்துள்ள அஸ்வின், இந்திய அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    சர்வதேச சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வெட்டோரி ஆகியோர் முறையே ஒன்று முதல் ஆறு இடங்களை பிடித்துள்ளனர்.
    இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா, அஸ்வின் உடல் தகுதி பரிசோதனைக்கு பின்னர் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தேர்வு பெறுவார்கள். #INDvWI #IshantSharma #Ashwin #BCCI
    புதுடெல்லி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் அக்டோபர் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் நேற்று கூடியது. அவருடன் தேவங் கார்வி மட்டுமே வந்து இருந்தார்.

    மற்ற தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சரண்தீப்சிங் துபாயில் உள்ளார். ஜதின் பரஞ்செ, கதன்கோடா ஆகிய இருவரும் விஜய் ஹசாரே போட்டியை பார்ப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த 3 தேர்வு குழு உறுப்பினர்களும் வராததால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேகப்பந்து வீரர் இஷாந்த்சர்மா, அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர்கள் தேர்வாக உடல் தகுதி பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இருவருக்கும் வருகிற 29-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    அஸ்வின் ஏற்கனவே காயத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமில் புனர்வு பெற்று வருகிறார். அவருடன் இஷாந்த்சர்மா இணைவார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் இயக்க நிபுணர் அளிக்கும் உடல் தகுதி அறிக்கை அடிப்படையில் இருவரது தேர்வு இருக்கும்.

    உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடிய பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அதை மனதில் கொண்டு 15 வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்கிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தவானின் பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்ற நிலை இருக்கிறது. #INDvWI #IshantSharma #Ashwin #BCCI #TeamIndia
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று 33-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். #Ashwin
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த வீரராக அஸ்வின் திகழ்ந்து வருகிறார். தனது மாயாஜால ஆஃப் ஸ்பின்னால் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் வல்லமையும் படைத்தவர்.

    இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. 2016-ல் ஐசிசியின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் விருதுகளையும்,  300 விக்கெட்டுக்களை விரைவாக வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற புகழையும் பெற்றுள்ள அஸ்வின் இன்று தனது 33-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.



    இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அஸ்வின், 2011-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

    இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 முறை ஐந்து விக்கெட்டுக்கள், 7 முறை 10 விக்கெட்டுக்களுடன் 327 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 4 சதங்கள், 11 அரைசதங்களுடன் 2289 ரன்கள் அடித்துள்ளார்.

    111 ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டுக்களும், 46 டி20 போட்டியில் 52 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.
    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் காரணமாக இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது.

    ஆனால் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் விளையாடினார். அஸ்வின் காயம் முழுமையாக குணமடையாமலே விளையாடினார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் கடைசி டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை.



    இதற்கிடையே கவுன்ட்டி கிரிக்கெட்டில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி முடிவு செய்திருந்தார். தற்போது காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அஸ்வின் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லண்டன் ஓவல் டெஸ்டில் அலஸ்டைர் குக், மொயீன் அலி நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து தேனீர் இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இஷாந்த் ஷர்மா பந்தில் குக் கொடுத்த கேட்சை ரகானே பிடிக்க தவறினார். அடுத்த 2-வது பந்தில் பும்ரா வீசிய பந்தில் மொயீன் அலி அடித்த பந்தை விராட் கோலி பிடிக்க தவறினார்.



    கண்டத்தில் இருந்து தப்பிய இருவரும் அதன்பின் நிலைத்து விளையாட தொடங்கினார்கள். அலஸ்டைர் குக் 139 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இங்கிலாந்து அணி முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 59 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. அலஸ்டைர் குக் 66 ரன்னுடனும், மொயீன் அலி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    லண்டன் ஓவல் டெஸ்டில் இந்தியா பேட்டிங் செய்கிறது. 292-வது வீரராக ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லை #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார்.



    ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அஸ்வின் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
    அஸ்வின் விக்கெட் வீழ்த்த இயலாமல் போனதே தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்த இந்த ஆடுகளத்தில் மொயீன் அலி 9 விக்கெட்டுக்கள் அறுவடை செய்தார். ஆனால் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்.

    ஆஃப் ஸ்பின்னருக்கு ஆடுகளம் ஒத்துழைத்த நிலையில், அஸ்வினின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமைதான் தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘சவுத்தாம்ப்டன் ஆடுகளம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. குறிப்பிட்ட கரடு முரடான பகுதியில் பந்தை பிட்ச் செய்தால் ஏராளமான விக்கெட்டுக்களை அறுவடை செய்திருக்க முடியும். அதை மொயீன் அலி சரியாக செய்தார். அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

    4-வது டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணம் அஸ்வினை விட மொயீன் அலி சிறப்பாக பந்து வீசியதுதான். முதல் முறையாக இந்திய சுழற்பந்து வீச்சாளரை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசியதை நான் பார்த்தேன். அஸ்வினால் விக்கெட் வீழ்த்த இயலாததே இந்தியா 1-3 எனத் தொடரை இழக்க முக்கிய காரணம்.



    அஸ்வினின் காயம் எவ்வளவு சீரிஸானது என்று எனக்குத் தெரியாது. அது எவ்வளவு முக்கியமானது என்று அணி நிர்வாகத்திற்கு கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் உடற்தகுதி பெற்றிருந்தால், அவரிடம் எதிர்பார்த்ததை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-1 என இழக்க இந்தியாவின் 6,7 மற்றம் 8-ம் நிலை வீரர்களின் பேட்டிங் சொதப்பலே முக்கிய காரணமாக அமைந்தது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் 1-3 என பின்தங்கி பரிதாப நிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் லண்டனில் வரும் 7-ந்தேதி தொடங்குகிறது.

    மூன்று டெஸ்டில் லார்ட்ஸை தவிர மற்ற இரண்டு டெஸ்டிலும் இந்தியா மோசமான வகையில் தோற்கவில்லை. முதல் டெஸ்டில் 31 ரன்னிலும், 4-வது டெஸ்டில் 60 ரன்னிலும் தோல்வியடைந்தது.



    முடிந்துள்ள நான்கு டெஸ்டிலும் இரு அணி தொடக்க பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சாதிக்கவிலலை. 2, 3, 4 மற்றும் 5-ம் வரிசையில் இறங்கும் பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்தை விட இந்தியா பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள்.

    ஆனால் ஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் என 6, 7 மற்றும் 8-ம் வரிசையில் களம் இறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அசத்தினார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்தியா தோல்வியை சந்தித்தது.



    இங்கிலாந்து மண்ணில் முதல் 40 ஓவர் வரை விளையாடுவது சற்று கடினம். 40 ஓவர்கள் தாண்டி விட்டால், அதன்பின் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகாது. இதனால் 40 முதல் 80 வரை, அதாவது 2-வது புதுப்பந்து பயன்படுத்தும் வரை ரன்கள் சேர்ப்பது கடினம்.

    40 ஓவர்களுக்குள் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் 120 முதல் 150 ரன்கள் சேர்த்து விடுவார்கள். அதன்பின் வருபவர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் முதல் இன்னிங்சில் 300 ரன்களை தாண்டி விடலாம்.



    இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த முறையை சரியாக பயன்படுத்தினார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தொடர் இந்தியாவை விட்டு கைநழுவியது.

    முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணியின் ஜோ ரூட் 80 ரன்களில் ரன்அவுட் ஆனார். அதன்பின் 6, 7 மற்றும் 8-ம் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இங்கிலாந்து 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஐந்து விக்கெட்டிற்குப் பிறகு 64 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.



    இதை இந்தியா சரியாக பயன்படுத்தவில்லை. 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 6, 7 மற்றும் 8-ம் நிலை வீரர்களான தினேஷ் கார்த்திக் (0), ஹர்திக் பாண்டியா (22), அஸ்வின் (10) ஆகியோர் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

    முகமது ஷமி, இஷந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரை நம்ப முடியாது என்றாலும், விராட் கோலி அவர்களை வைத்துக் கொண்டு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா 274 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியிருந்தால் இந்தியா 300 ரன்களை தாண்டியிருக்கும். அத்துடன் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.



    2-வது இன்னிங்சில் இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 8-ம் வரிசை வீரரான சாம் குர்ரான் 63 ரன்களும், 9-ம் வரிசை வீரர் ரஷித் 16 ரன்களும், அடுத்து வந்த பிராட் 11 ரன்களும் என 90 ரன்கள் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தனர்.

    இந்தியா 194 ரன்கள் அடித்தால வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் திணறிய நிலையில் 6-வது வீரராக களம் இறங்கிய அஸ்வின் (13), தினேஷ் கா்த்திக் (20), ஹர்திக் பாண்டியா (31) என 64 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா (11), தினேஷ் கார்த்திக் (1), தினேஷ் கார்த்திக் (29) 41 ரன்களே சேர்த்தனர். அதேவேளையில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 131 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

    அதன்பின் வந்த 7-வது வீரராக களம் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும், சாம் 8 வீரராக களம் இறங்கிய சாம் குர்ரான் 40 ரன்கள் அடித்து போட்டியின் முடிவை மாற்றிவிட்டார்கள்.

    4-வது டெஸ்டில் இங்கிலாந்து 86 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்துக் கொண்டிருந்தது. அதன்பின் 7-வது வீரராக களம் இறங்கிய மொயீன் அலி 40 ரன்களும், 8-வது வீரராக களம் இறங்கிய சாம் குர்ரான் 78 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 246 ரன்கள் சேர்த்துவிட்டது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் என்ற வலுவான நிலையில்தான் இருந்தது. அதன்பின் வந்த ரிஷப் பந்த் (0), ஹர்திப் பாண்டியா (4), அஸ்வின் (1) அடுத்தடுத்து வெளியேறியதால் இந்தியா 273 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.



    2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள்தான் எடுத்திருந்தது. அதன்பின் 7-வது வீரராக களம் இறங்கிய பட்லர் 69 ரன்களும், 8-வது வீரராக களம் இறங்கிய சாம் குர்ரான் 46 ரன்களும், அடில் ரஷித் 11 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 271 ரன்கள் குவித்தது.

    இந்தியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா (0), ரிஷப் பந்த் (18), அஸ்வின் (25), இஷாந்த் சர்மா (0), ஷமி (8) ரன்னில் வெளியேற இந்தியா தோல்வியை தழுவியது. 
    உலகின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின்தான் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். #Ashwin
    டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்தியாவின் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இருவரும் ஆஃப்-ஸ்பின்னர்கள் ஆவார்கள். இருவரில் அஸ்வின்தான் சிறந்தவர் என்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்வான் கூறுகையில் ‘‘உலசின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் என்பதை எளிதாக கூறிவிடலாம். ஆசியக் கண்டத்தில் அஸ்வின் ரெகார்டு அபாரமானது. எட்ஜ்பாஸ்டனில் அஸ்வின் வீசிய பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.



    நாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக பந்து வீசிய போதிலும், இங்கிலாந்து மண்ணில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முடியவில்லை. அவரை விட அஸ்வின் சிறந்தவர், ஏனென்றால் அஸ்வின் மாறுபட்ட (variations) முறையில் பந்துகளை வீசுகிறார். மேலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    தற்போது முடிந்துள்ள 3 டெஸ்டில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளைமறுநாள் (30-ந்தேதி) சவுதாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா இரண்டு அஸ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான்காவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா அஸ்வின் உடன் இணைந்து விளையாட வேண்டும். தலைசிறந்த இவர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியும்.

    அஸ்வின் உடற்தகுதி பெறாவிடில், ஒரு சுழற்பந்து வீச்சுடன் விளையாடினால் அது இந்தியாவிற்கு சிக்கலானதாக இருக்கும். இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். அஸ்வின் உடற்தகுதி பெற வாழ்த்துகிறேன். இரண்டு பேருடன் களம் இறங்க வேண்டும். இரண்டு பேரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அது இந்தியாவிற்கு அதிக வலுவூட்டும்’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை லைவ் ஆக வைத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா நேற்று வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.



    இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆகவே இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
    விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் வார்னே உடன் இணைந்துள்ளார் அஸ்வின். #Ashwin #Viratkohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தை 287 ரன்னுக்குள் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

    2-வது இன்னிங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து திணற காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    ஒரு கேப்டன் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின், சர்வதேச அளவில் விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஷேன் வார்னே உடன் பகிர்ந்துள்ளார்.

    சனத் ஜெயசூர்யா தலைமையின் கீழ் முத்ததையா முரளீதரன் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் உள்ளார். வார்னே ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.



    மால்கம் மார்ஷல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையின் கீழ், ஆலன் டொனால்டு குரோஞ்ச் தலைமையின் கீழ், டேல் ஸ்டெயின் ஸ்மித் தலைமையின் கீழ் 40 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளனர்.
    ×