search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவன்"

    சைலன்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, மாதவனுக்கு அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    அனுஷ்கா சைலன்ஸ் என்ற புதிய படத்தில் மாதவனுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மாதவனுடன் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் இணைந்து நடிக்கிறார். 

    இவர்களுடன் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படக்குழுவில் இணைந்துள்ளார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு அங்கு தொடங்கியது. 



    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு நிசப்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அனுஷ்கா - மாதவன் அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    மாதவன் தற்போது நடித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்ல இருக்கிறார்.
    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி நம்பி விளைவு படம் தயாராகி வருகிறது. நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மேலும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை படக்குழு நிறைவு செய்துள்ளது.



    இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பாரீஸ், பெல்கிரேடு செல்ல உள்ளது. மாதவன் தற்போது இளவயது நம்பி நாராயணனின் தோற்றத்தில் நடித்துள்ளார். சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
    அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் கடைசியாக வெளியான நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
    நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார்.

    ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கடைசியாக அவரது நடிப்பில் ‘பாகமதி’ படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை.

    இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது ஏற்றிய தனது உடல் எடையை வெளிநாடு சென்று குறைத்துவிட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் தான் ஒல்லியாக இருக்கும் தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார்.



    ஹேமந்த் மதுகர் இயக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் பிசியாகி இருந்த மாதவன், தனது புதிய தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    இதுதவிர அனுஷ்கா சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு வருடங்களாக தாடி, முடியுடன் சுற்றி வந்த நடிகர் மாதவன், தற்போது அதற்கு விடை கொடுத்து புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
    நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். 'மாதவனா இது?' என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன்.

    ஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். 



    ஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. புதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார்.
    நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் மூலம் விக்ரம் வேதா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
    முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் இயக்கும் இந்த படத்தில் அவரே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    இதுகுறித்த அறிவிப்பை சாம்.சி.எஸ்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி போன்ற ஒரு படத்திற்கு இசையமைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படம் எனக்கு நெருக்கமானது. இந்த படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரம்மாண்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த மாதவனுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரியும் ஆவலோடு இருக்கிறேன் இவ்வாறு கூறியிருக்கிறார்.

    நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். 

    தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan #SamCS

    தாதா 87 படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, மாதவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். #Madhavan #DhaDha87 #VijaySriG
    கலை சினிமாஸ் தயாரிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த படம் தாதா 87. இதில் சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 

    இப்படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையையும், வலியையும் திரைக்கதையாக அமைத்திருந்தார் இயக்குனர். மேலும் திருநங்கைகளை பெண்கள் என்றே அழைக்கலாம் என்பதை பதிவு செய்திருந்தார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நாயகியாக நடித்த ஸ்ரீபல்லவி இதில் திருநங்கையாக நடித்திருந்தார். ஒரு பெண் திருநங்கையாக நடித்தது இதுவே முதல் முறை. இப்படம் தற்போது தெலுங்கில் ‘பவுடர்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.



    அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்டரு படத்தை தற்போது இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார். அதன்பின் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, பிரைன் எனும் புதுவித சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை கலை சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக மாதவனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நடிக்க ஒப்பந்தம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார். #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
    மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா - மாதவன் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

    மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாகி வருகிறது.



    இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறிது நேரம் வருவதுபோல் அவரது கதாபாத்திரம் இருந்தாலும் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் சிம்ரன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan

    ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். #Madhavan #AnushkaShetty
    இரண்டு படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது.

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சைலண்ட் திரில்லராக உருவாகும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோபி மோகன், கோனா வெங்கட் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றவிருக்கும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.



    ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்ய, யனா ருசனோவா கலை பணிகளை கவனிக்கிறார். காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #Madhavan #AnushkaShetty #Anjali #ShaliniPandey

    நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகும் ராக்கெட்ரி படத்தை இயக்கவிருந்த ஆனந்த் மகாதேவன் விலகியதையடுத்து நடிகர் மாதவனே இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
    திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. 2001-ல் ஓய்வு பெற்றார். பொய் வழக்கில் தன்னை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நம்பிநாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.



    இந்த நிலையில், நம்பிநாராயணன் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது. ராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார்.

    ஆனந்த் மகாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஆனந்த் மகாதேவன் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக மாதவன் அறிவித்துள்ளார். இதன்மூலம் மாதவனே தனது முதல் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கு தெரியாத நம்பி நாராயணின் கதையை இந்த படத்தின் மூலம் சொல்லப்போவதாக கூறியுள்ளார்.



    நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். 

    தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. 

    இந்த நிலையில், நம்பி நாராயணன் வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan

    திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது ரவுண்டில் பல படங்களில் நடித்து வரும் சிம்ரன், தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். #Simran
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார்.

    நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.



    இந்தப் படத்தை அவருடன் இணைந்து ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பாலசந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் மாதவனும் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் படத்தில் மீண்டும் இணைய உள்ளனர்.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்கள், பலரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். #Madhavan #Anushka #HappyPongal2019
    பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். 

    நடிகர்கள் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

    திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பளர்கள் டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.



    கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. #Madhavan #Anushka #HappyPongal2019
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கும் மாதவனின் தோற்றம் வெளியாகி இருக்கிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
    திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. 2001-ல் ஓய்வு பெற்றார். பொய் வழக்கில் தன்னை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நம்பிநாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், நம்பிநாராயணன் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது. ராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார்.


    நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். 

    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ஆனந்த் மகாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. 

    இந்த நிலையில், நம்பி நாராயணன் வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan

    ×