என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 101922
நீங்கள் தேடியது "மாதவன்"
பாகுபலி 2, பாகமதி படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருக்கும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. #AnushaShetty
நடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அனுஷ்கா மாதவன் கூட்டணியில் 2006-ஆம் ஆண்டு ரெண்டு திரைப்படம் வெளியானது.
My best birthday wishes to the wonderful human being Anushka!! Happy to start our next project with her soon... Shooting begins in 2019 in U.S.A. @peoplemediafcy@ActorMadhavan@actorsubbaraju@KonaFilmCorp@hemantmadhukar@Gopimohanpic.twitter.com/N0H5fjdMPa
— kona venkat (@konavenkat99) November 7, 2018
12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். விக்ரம் வேதா திரைப்படத்தில் கலக்கிய பிறகு ஒரு இடைவெளி விட்ட மாதவன், தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்ற பிறகு ‘சைலன்ஸ்’ பட வேலைகள் ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வந்த வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #AnushkaShetty #Madhavan #Silence
நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன் மீது இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் வழக்கு தொடர இருப்பதாக அறிவித்திருக்கிறார். #Madhavan
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் படமாக்க கூடாது என்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் மனு கொடுத்தார்.
இவர் பூ, களவாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி ஆகிய படங்களை டைரக்டும் செய்துள்ளார். ஆனாலும் எதிர்ப்பை மீறி படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப போவதாக எஸ்.எஸ்.குமரன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
‘‘20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன். ஆனால் சில சட்ட பிரச்சினைகளால் அது வெளியாகவில்லை. இதனால் எனக்கு பெரிய அளிவில் நஷ்டம் ஏற்பட்டது. எனது நிலையை மாதவனிடம் தெரிவித்தபிறகும் அவர் பிடிவாதமாக படத்தின் தொடக்க விழாவை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
எனது அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்க கூடாது. எனவே மாதவன் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.’’
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeathProbe #Deepa #Madhavan
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
இருவரும் வருகிற 4-ந்தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இதேபோல டாக்டர்களிடம் 4,5 மற்றும் 6-ந்தேதிகளில் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜிடம் சசிகலா தரப்பு வக்கீல் வருகிற 6-ந்தேதி குறுக்கு விசாரணை செய்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.
மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகள் ராஜமாதங்கி, அவரது கணவர் பி.எஸ்.ஜெ.விக்ரம் ஆகியோரிடம் 6-ந்தேதி குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. #JayaDeathProbe #Deepa #Madhavan
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
இருவரும் வருகிற 4-ந்தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இதேபோல டாக்டர்களிடம் 4,5 மற்றும் 6-ந்தேதிகளில் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜிடம் சசிகலா தரப்பு வக்கீல் வருகிற 6-ந்தேதி குறுக்கு விசாரணை செய்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.
மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகள் ராஜமாதங்கி, அவரது கணவர் பி.எஸ்.ஜெ.விக்ரம் ஆகியோரிடம் 6-ந்தேதி குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. #JayaDeathProbe #Deepa #Madhavan
12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாதவன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஜோடியாக பிரபல நடிகை நடிக்க இருக்கிறார். #Madhavan
சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான படம் ‘ரெண்டு’. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இதில் இடம் பெற்ற ‘மொபைலா மொபைலா’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் அனுஷ்கா.
தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளது. சைலன்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹேமந்த் மதுகர் இயக்க இருக்கிறார். பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் திரைக்கதை எழுதுவதோடு பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார்.
சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் அமெரிக்காவில் செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம் சிஸ் இசையில் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கும் ஒரு பாடலை நடிகர் மாதவன் வெளியிட இருக்கிறார். #Madhavan
‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே, அந்த வரிசையில் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர்.
இவரது இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘வஞ்சகர் உலகம்’. இப்படம் வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.
யுவனும் அதற்கு ஓகே சொல்ல, அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். இந்த பாடலை நடிகர் மாதவன் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
மாதவன் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக முந்தைய படத்தில் நடித்த நடிகையே நடிக்க இருக்கிறார். #Madhavan #Maddy
‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது.
மாதவன் அடுத்ததாக ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருக்கிறார்.
தமிழ், இந்தியில் முன்னணி நடிகராக வலம் நடிகர் மாதவன், தனது பிறந்த நாளை பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கொண்டாடி இருக்கிறார். #Madhavan #ShahRukhKhan
‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால், தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை மற்றும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாதவன், சில மாதம் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜீரோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது பிறந்த நாளை ஜீரோ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
அப்போது நடிகர் ஷாருக்கான், நடிகை அனுஷ்கா சர்மா, ஜீரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் படக்குழுவினர் மாதவனுக்கு வாழ்த்து கூறினார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X