search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்துஜா"

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கதிர் கூறினார். #Vijay63 #Thalapthy63 #Kathir
    விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அட்லி இயக்கும் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

    இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’ஒரு நடிகராக, விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட பழகிய பிறகு, அவருடைய கேரக்டரும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. சிறந்த மனிதர். நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கிறவர். அவரை எப்போதும் தூரத்திலிருந்து ரசிக்கும் ரசிகன் நான்.

    இதுவரை இப்படி இருந்த சூழலில், அவர்கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அது, எனக்குப் பெரிய சந்தோ‌ஷத்தைக் கொடுத்திருக்கு. இந்த வாய்ப்பை வாழ்க்கையில மறக்கவே முடியாது. இயக்குநர் அட்லி அண்ணா எனக்கு நல்ல நண்பர். என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. என் சினிமா வளர்ச்சியைப் பற்றி அடிக்கடி பேசும் நபர்.



    நல்ல படங்களில் நான் நடிக்கும்போது, கூப்பிட்டு பாராட்டுவார். விஜய் சார் படத்துல உனக்கும் ஒரு ரோல் இருக்கு’னு சொன்னபோது, அந்த அதிர்ச்சியில இருந்து நான் மீண்டு வருவதற்குள் மொத்தக் கதையையும், படத்துல என்னுடைய கேரக்டர் பற்றியும் பேசினார். எனக்கு ரொம்ப சந்தோ‌ஷமாகி விட்டது. ஏதோ வந்துட்டுப் போற மாதிரியான கேரக்டரை அவர் எனக்குக் கொடுக்கவில்லை, படத்துல முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். கதையைச் சொன்னதுமே, ஓகே சொல்லிட்டேன். #Vijay63 #Thalapthy63 #Kathir

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது. 

    படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Kathir

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் நயன்தாராவை தொடர்ந்து மேலும் இரு பிரபலங்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், படத்தில் விஜய்யுடன் இரண்டு இளம் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனிக்க வைத்த கதிரும், மேயாத மான், இந்துஜாவும் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது.



    விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகள் கதையில் வருகிறதாம். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்க இருக்கிறது. படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Kathir #Indhuja

    `இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. #Boomerang #Atharvaa
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பூமராங்'.

    படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தை முதலில் டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன.

    இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பூமராங் ஒரு வாரம் தள்ளிப்போய் வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தான், ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம் படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். #Boomerang #Atharvaa #MeghaAkash

    மெர்குரி படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்கப்பட்ட இந்துஜா, பிரபுதேவா எனது குரு போன்றவர் என்று கூறியுள்ளார். #Magamuni #Indhuja #Prabhudeva
    மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இந்துஜா தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகி வருகிறார். விக்ரம் பிரபுவை தொடர்ந்து தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாகி இருக்கிறார்.

    ‘மெளன குரு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சாந்தகுமார், ஆறு வருடங்கள் கழித்து தன் இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா, மஹிமா நம்பியார் நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். ‘மகாமுனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

    இந்துஜா மெர்குரி படத்தில் நடித்தபோது பிரபுதேவாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இதை இந்துஜா மறுத்துள்ளார். பிரபுதேவா தனது குரு போன்றவர் என்று தெரிவித்துள்ளார். #Magamuni #Indhuja #Prabhudeva

    ‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா பூஜையுடன் இன்று துவங்கியது. #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar
    ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘மகாமுனி’.

    ஆர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

    மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், க்ரைம் திரில்லர் பாணியில் ‘மகாமுனி’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


    அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.

    இந்த படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர்கள் எம்.ராஜேஷ், சந்தோஷ் பி.ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2டி என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சக்திவேலன்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar

    ஆர்.கே.சுரேஷ், சாந்தினி, இந்துஜா நடிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ விமர்சனம். #BillaPandi #BillaPandiReview
    மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

    இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.

    ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.



    இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.

    தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.

    கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வில்லன் வேடங்களில் பார்த்த ஆர்.கே.சுரேஷ் பில்லா பாண்டி மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கேற்ற ஒரு கதாபாத்திரத்தையும், கதையையும் தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதியில் கலகலக்கவும் இரண்டாம் பாதியில் கலங்கவும் வைக்கிறார். நடிப்பில் பக்குவம் தெரிகிறது.



    வழக்கமான கதாநாயகியாக அறிமுகமாகும் இந்துஜா விபத்துக்கு பின் குழந்தையாகவே மாறி நம்மை உருக வைக்கிறார். சாந்தினி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். தம்பி ராமய்யா, அமுதவாணன் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

    மதுரைப்பகுதியை பின்புலமாக கொண்டு நகைச்சுவை, காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌‌ஷன் எல்லாம் கலந்த ஒரு படத்தை ராஜ்சேதுபதி இயக்கி இருக்கிறார். எம்.எம்.எஸ்.மூர்த்தியின் எழுத்தில் மதுரை மண்மணம் இருக்கிறது.

    இளையவனின் இசையும் ஜீவனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைக்கின்றன.

    மொத்தத்தில் `பில்லா பாண்டி' பார்க்கலாம் சீண்டி. 
    `இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்திற்காக நடிகர் அதர்வா மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். #Boomerang #Atharvaa
    கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பூமராங்'.

    படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகர் அதர்வா மொட்டை அடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் கண்ணன் பேசும்போது,

    அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா விரைவில் அறியும். சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர். படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்தை பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றிவிட்டார். 



    உடனடியாக படத்தின் முக்கிய காட்சிகக்காக தனது தலையை மொட்டையடிக்க தயாரானார். இந்த காட்சிகளை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது. எங்கள் படத்துக்காக அவர் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இமைக்கா நொடிகள் போலவே இந்த படத்துக்காகவும் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார். 

    பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். #Boomerang #Atharvaa #MeghaAkash

    ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, இந்துஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தின் விமர்சனம். #60VayaduMaaniram #60VayaduMaaniramReview
    சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ். பேராசிரியரான இவர், தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ தந்தை மீது அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

    வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருக்கும் பிரகாஷ் ராஜ்க்கு, ஞாபக மறதி ஏற்படுகிறது. மேலும் தனது மகனை சிறு பையனாக நினைத்து வருகிறார். இதனால், பிரகாஷ் ராஜ்க்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்கிறார் விக்ரம்பிரபு.

    இதே நேரத்தில் விக்ரம் பிரபுவுக்கு மும்பையில் வேலை கிடைக்கிறது. இதற்காக பிரகாஷ் ராஜை சிகிச்சை அளிக்க கூடிய ஒரு ஆசிரமத்தில் விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜை அங்கு டாக்டராக பணிபுரியும் இந்துஜா கவனித்து வருகிறார்.

    விக்ரம் பிரபுவு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக தந்தை பிரகாஷ் ராஜ்க்கு துணிகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு செல்ல முடிவு செய்கிறார்.



    அப்போது கடையில் பிரகாஷ் ராஜால் சிறு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கோபமடையும் விக்ரம்பிரபு, பிரகாஷ் ராஜை அப்படியே விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜ் ஆசிரமத்திற்கு செல்லாமல் கொலைகாரன் சமுத்திரகனி பிடியில் சிக்குகிறார்.

    இறுதியில், சமுத்திரகனி பிடியில் இருந்து பிரகாஷ் ராஜ் தப்பித்தாரா? காணாமல் போன தந்தையை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. தந்தை பிரகாஷ் ராஜ் மீது அக்கறை இல்லாமல் இருப்பது. பின்னர் அவரைப் பற்றி தெரிந்த பிறகு பாசம் காட்டுவது, தேடுவது என நடிப்பில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தான் ஒரு அனுபவ நடிகன் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். பல காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். படம் பார்க்கும் நமக்கே அவர் மீது ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

    அதுபோல் தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமுத்திரகனி. டாக்டராக வரும் இந்துஜா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    தந்தை மகனுக்கும் இடையேயான பாசத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து, ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குழந்தைகளை சிறுவயதில் இருந்து நல்லது, கெட்டது எது என்று பார்த்து பார்த்து வளர்த்தால், பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி இருக்கிறார்கள். பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் ராதாமோகன். 

    இளையராஜாவின் இசை திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவரது பின்னணி இசை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறது. விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘60 வயது மாநிறம்’ தந்தை மகன் பாசப்பிணைப்பு.

    60 வயது மாநிறம் வீடியோ விமர்சனம் பார்க்க:


    60 வயது மாநிறம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், முக்கியமான ஒரு விஷயத்தை சிரிப்பின் மூலமே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்த வைப்பவர் ராதாமோகன் என்று கூறினார். #60VayaduMaaniram #Prakashraj
    ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘60 வயது மாநிறம்’. இந்த படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

    அதில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது,

    ஒரு அழகான விஷயம், ஒரு தேடல் பற்றிய ஒரு படம் இது. இந்த படத்தின் டிரைலரிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள், அது ஒரு தேடல் என்பதை. காணாமல் போனதை தேடுகிறோமா, தொலைத்ததை தேடுகிறோமா என்பது பற்றியது. இந்த கதையை கேட்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டேன். 

    ஈர்க்கக்கூடிய ஒரு விஷயத்தை காமெடியுடனும், தாக்கத்தை ஏற்டுத்தும்படியும் காட்டுவதற்கு ராதாமோகன் - விஜியால் மட்டுமே முடியும். ராதாமோகனை ஒரு இயக்குநராக இல்லாமல், ஒரு நண்பராக தான் அதிகமாக பார்க்கிறேன். அவர் உலகத்தை பார்க்கும் பார்வையே வேறுவிதமாக இருக்கிறது. 



    முதலில் இந்த படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும் என்றிருந்தேன். அரசியல் ரீதியாக நிறைய வேலைகள் இருந்தது. இந்த படத்தை தாணு சார் தயாரிக்க முன்வந்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தை அவர் தயாரித்ததால் படத்திற்கு ஒரு பெரிய பலம் வந்திருக்கிறது.

    நான் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்தால் இந்த படத்திற்கு நான் டப்பிங் பேசவில்லை. இளைராஜா சார் என்னை தொடர்புகொண்டு எனது குரல் வேண்டும் என்று மட்டும் தான் கேட்டார். மற்றபடி ராதாமோகன் எனக்காக டப்பிங் பேசினார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான, வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு சிறிய படம் என்பதால் அவரிடம் நானே நேரில் சென்று கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமல் படத்தில் நடிப்பதாக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அழகாக வந்திருக்கிறது. 

    விக்ரம் பிரபு அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல தீனியாக நடித்திருக்கிறார். ஒரு நடிகராக என்னை ரசிக்க வைத்துவிட்டார். அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது என்றார். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja #Prakashraj
    ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படக்குழுவை பாராட்டியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu
    இயக்குனர் ராதா மோகன் ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவர் இயக்கியுள்ள மற்றொரு படமான ‘60 வயது மாநிறம்’ வரும் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். 

    படத்தின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி, இயக்குநரைப் பாராட்டியுள்ளனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja
    ஆண்மை தவறேல் துருவாவும், மேயாத மான் இந்துஜாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சூப்பர் டூப்பர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். #SuperDuper
    ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. 

    இப்படத்தை இயக்கும் அருண் கார்த்திக் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது 'லேகா' பரவலான கவனம் பெற்ற படமாகும். படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் 'ஆண்மை தவறேல்' படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக மேயாத மான் புகழ் இந்துஜா நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குனர் அருண் கார்த்திக் கூறும்போது, "இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன், நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார். இவர் 'மீசையை முறுக்கு', 'இருட்டறையில் முரட்டுக்குத்து' , படங்களில் நடித்தவர். அது மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர். இப்படி சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற பலரும் இதில் நடிக்கிறார்கள்" என்றார். 



    சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு திவாகரா தியாகராஜன் இசையமைக்கிறார். இன்று தொடங்கி படப்பிடிப்பை தொடர்ந்து 45 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
    ×