search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரணாசி"

    பாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த வாரணாசி மக்களுக்கு இன்று நன்றி தெரிவித்து உரையாற்றிய பிரதமர் மோடி என்றென்றும் நான் உங்கள் சேவகனாக இருப்பேன் என்றார்.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் 303 இடங்களை பிடித்த பாஜக மத்தியில்  தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 30-ம் தேதி மாலை 7 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வாரணாசி தொகுதிக்கு வந்த பிரதமர் மோடி இங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    வெற்றி-தோல்வி கணக்குகளை தவிர தேர்தல்களில் தலைவர்கள் மற்றும் வாக்காளர்களிடையே இருக்கும் வேதியல் தொடர்புகளையும் இனி அரசியல் ஆய்வாளர்கள் கவனிக்கும் நிலைமையை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையில் உள்ள வேதியல் தொடர்புகள் பணிகளுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும்.

    வாரணாசி தொகுதியில் இந்தமுறை நான் வேட்புமனு தாக்கல் செய்ததும் உங்களால் இன்னும் ஒரு மாதத்துக்கு இங்கு வர இயலாது. நீங்கள் நாடு முழுவதும் பிரசாரத்துக்கு செல்லுங்கள். உங்கள் தொகுதியை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எனக்கு நீங்கள் உத்தரவிட்டீர்கள். அதேபோல் சென்ற முறையைவிட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்.



    தேர்தல் பிரசாரம் எல்லாம் நிறைவடைந்த பின்னர்கூட இங்கு வரலாமா? என்று நான் சிந்தித்ததுண்டு, ஆனால், நீங்கள் எனக்கிட்ட உத்தரவை நினைவுகூர்ந்து நான் வரவில்லை. தனது தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும்போதும் வாக்கு எண்ணப்படும்போதும் என்னைப்போல் ஆசுவாசமாக இருந்த வேட்பாளர் யாருமே இருக்க முடியாது.

    இதற்கெல்லாம் காரணம் உங்களுடைய உழைப்பு. உங்களை நம்பி, உங்களது உழைப்பின்மேல் இருந்த நம்பிக்கையால்தான் நான் கேதர்நாத்துக்கு சென்று விட்டேன்.

    இந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், என்றென்றும் நான் உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவகனாகவும் இருப்பேன். உங்கள் பணியே எனக்கு முதன்மையானது. என்னை எதிர்த்து இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிட்டவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    பாஜக, இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அதிகமான இடங்களை பிடித்துள்ள எங்களை இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்?

    கோவாவில் நான்காண்டுகளாக எங்கள் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், லடாக் எல்லா இடங்களிலும் எங்கள் ஆட்சி உண்டு. அதிகமாக வெற்றிபெற்றும் வந்திருக்கிறோம். இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்?

    பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து  வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.



    கடந்த தேர்தலில் இங்கு சுமார் 10.28 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில் பிரதமர் மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 793 வாக்குகளை பெற்றார்.

    மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
    உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நடத்தும் ரோடு-ஷோவிற்கு சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தடவை அதை விட 2 மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வாரணாசி தொகுதியில் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மோடி கடந்த மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது சுமார் 3 லட்சம் பேர் ரோடு ஷோவில் கலந்து கொண்டனர். மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசி தொகுதிக்கு வந்து தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    17-ந்தேதி வாரணாசி தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது. எனவே 17-ந்தேதி பிற்பகல் அவர் வாரணாசி தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தடவை அவரை 2-வது இடத்துக்கு கொண்டு வர பிரியங்கா விரும்புகிறார். இதற்காக அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரியங்கா வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பிரமாண்டமான ரோடு-ஷோ நடத்துகிறார். இந்த ரோடு-ஷோவில் சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்து வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்தி பிரசாரம் செய்ய உள்ளனர். மறுநாள் மோடி பிரசாரம் செய்கிறார்.



    16-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்கிறார். அன்றிரவு அவர் வாரணாசி வந்து தங்கி இருந்து மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார்.
    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தேர்தலின்போது தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். #PMModi #AddressingWorkers
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் . நாம் நேர்மையான  கூட்டணி அமைத்துள்ளோம்.  நாட்டுக்காக எவ்வித சூழலிலும்  ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.



    நாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில்  ஆட்சி நடைபெறுகிறது.  நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

    மக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #AddressingWorkers 
    உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் மோடி கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இதையொட்டி, பாஜக சார்பில் வாரணாசியில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துடன் இதில் பங்கேற்றார்.



    தொண்டர்கள் சூழ பிரதமர் மோடி சாலையில் ஜீப்பில் நின்றபடி தசாஸ்வமேத நதி முகத்துவாரத்தை அடைந்தார். இதையடுத்து கங்கை நதியை வழிபட்ட பிரதமர் மோடி அங்கு கங்கா ஆரத்தி செய்து வழிபாடு நடத்தினார்.  
     
    முன்னதாக, வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனர் மதன் மோகன் மாளவியா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Modi
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்தினார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

    வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதால் அங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், உ.பி.யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று மாலை பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.
     


    வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.  #LokSabhaElections2019 #Modi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Varanasi #PriyankaGandhi #LSpolls2019 #PriyankaGandhicontest
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.



    இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக வயநாட்டில் இரண்டாவது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நீங்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி வருவது பற்றி? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, 'காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்’ என தெரிவித்தார்.  #Varanasi #PriyankaGandhi  #PriyankaGandhicontest #LSpolls2019
    வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 26-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். #LokSabhaElection #PMModi #Varanasi
    வாரணாசி:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் அந்த தொகுதியில் 26-ந் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந் தேதி வாரணாசி செல்கிறார். அன்று சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். 26-ந் தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு வேட்பு மனுவை தாக்கல் செய்ய செல்கிறார்.

    நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கலின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி மற்றும் மாநில மந்திரிகள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். வாரணாசிக்கு வருவதற்கு முன்பு பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.  #LokSabhaElection #PMModi #Varanasi 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரியங்கா காந்தி. #PriyankaGandhi #KashiVishwanathtemple
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக அவர் நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று வாரணாசியை சென்றடைகிறார்.



    பிரியங்கா காந்தி மேற்கொண்டுள்ள படகு பயணத்தின் இறுதி நாளான இன்று வாரணாசிக்கு சென்றார். அங்குள்ள ராம் நகரில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி  வீட்டுக்கு சென்றார். அங்குள்ள லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு காசி விஸ்வநாதரை வழிபட்டு தரிசனம் செய்தார்.  #PriyankaGandhi #KashiVishwanathtemple
    வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. #VandeBharatExpress #Delhi #Varanasi
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் அதிவேகமான ரெயிலை சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்தது. என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டமாக டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு சென்ற வந்தே பாரத் ரெயில், அங்கிருந்து டெல்லிக்கு திரும்பியபோது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில், ‘வந்தேபாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது. இது குறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. அடுத்த 2 வாரங்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. உங்களுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெறுங்கள்” என குறிப்பிட்டார். 
    உத்தர பிரதேசத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட புனித தலங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. #UPBudget2019 #UPAssembly
    லக்னோ:

    பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் ராம் நாயக் உரையாற்றினார். அவர் தனது உரையில், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அவர் உரையாற்றி முடிந்ததும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால், 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

    அயோத்தியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக பட்ஜெட்டில் 101 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கங்கை நதிக்கரையில் இருந்து வாரணாசியில் உள்ள விஸ்வநாத் கோவில் வரையிலான சாலையை விரிவாக்கம்  செய்து அழகுபடுத்தும் திட்டத்திற்கு ரூ.207 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாரணாசி, மதுரா, அலகாபாத் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலைகளை மேம்படுத்துவதற்கு ரூ.3522 கோடி, புதிய அதிவிரைவு சாலைகள் அமைக்க ரூ.3194 கோடி, பொதுப்பணித் துறையின் கீழ் சாலைகள் அமைக்க ரூ.13,135 கோடி, பாலங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.2100 கோடி என பல்வேறு திட்டப்பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #UPBudget2019 #UPAssembly
    உத்தர பிரதேசத்தின் கோவில் நகரமான வாரணாசியில், வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #PravasiBharatiyaDiwas #Modi
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வெளிநாடுவாழ் இந்தியர் தின (பிரவசி பாரதிய திவஸ்) மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடத்தப்படுகிறது. மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்கள் பிரவசி பாரதிய திவஸ் மாநாடு நேற்று நடைபெற்றது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

    இந்நிலையில் முக்கிய நிகழ்வான பிரவசி பாரதிய திவஸ் மாநாடு இன்று தொடங்கியது. ‘புதிய இந்தியாவை கட்டமைப்பதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜக்நாத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



    சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, மாநாட்டில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

    மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு பிறகு, மோடியும், மொரிஷியஸ் பிரதமரும் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நாளை நடைபெறும் நிறைவு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமான ஜனவரி 9ம் தேதி இந்த மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அலகாபாத் நகரில் நடைபெறும் கும்பமேளாவிலும் குடியரசு தின விழாவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க ஏதுவாக, மாநாடு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PravasiBharatiyaDiwas #Modi
    ×