search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பிதுரை"

    பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி? என்று காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி ‘மாலை மலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

    கே: முதன் முதலாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.

    ஆனால் தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.

    கே: அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத நீங்கள் எப்படி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டீர்கள்?

    ப: என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக்குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டார்.

    தி.மு.க-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.

    கே: பாராளுமன்றத்தில் முதன் முதலாக என்ன பேசப்போகிறீர்கள்?


    ப: என்ன பேசுவது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்றவற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பேன்.

    கே: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதே?

    ப: காங்கிரஸ் கட்சியின் தோல்வி வலி நிரம்பியது. இந்த தோல்வியானது கட்சியை பாதிக்கப்போவதில்லை. தனி மொழி, தனி கலாச்சாரம் போன்றவற்றை விரும்பும் மாநில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரசாரத்தின்போது ராகுல் காந்தி ஒற்றுமையையும், அன்பையும் விதைத்தார். ஆனால் அதற்கு பதிலாக மோடி பிரிவினையையும், வெறுப்பையும் விதைத்தார். இந்த தேசத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி மோடி வாய் திறக்கவில்லை. 2014-ல் மோடி வெற்றி பெற்றபோது அதை செய்வார், இதை செய்வார் என ஒரு கொண்டாட்டம் இருந்தது. ஆனால் இப்போது அதை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித இறுக்கமே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. அது சீட்டுகளாக மாறவில்லை. பிரதமர் மோடி கடந்த கால தவறுகளை திருத்தி கொள்வார் என எதிர்பார்க் கிறோம்.

    கே: தமிழகத்தில் மட்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எப்படி அமோக வெற்றியை பெற்றது?

    ப: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கடுமையாக உழைத்தார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டனர். மோடியின் அடக்குமுறையையும், எடப்பாடி பழனிசாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள். மோடியின் அடக்குமுறை கேரளாவிலும் எடுபடவில்லை.

    கே: 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தீர்களா?

    ப: நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தம்பி வி.செந்தில்பாலாஜி (தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) யும், நானும் அமர்ந்து பேசினோம். குழுக்கள் அமைத்து கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தனித்தேர்தல் அறிக்கை தயாரித்தோம். எதிர் வேட்பாளர் மூத்த அரசியல்வாதி பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரத்தை முன்னெடுத்தோம். அவர்கள் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம்.

    முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கணித்தோம். பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்தபோது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்.

    கே: ராகுல் காந்தியுடன் பேசினீர்களா?

    ப: பேசினேன், வாழ்த்து தெரிவித்தார். விரைவில் அவரை சந்திக்க உள்ளேன். பதவி ஏற்பு தேதி உறுதியாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இதில் பலர் பெயர் அடிபட்டாலும் ஜோதிமணி பெயர் பலமாக உச்சரிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உறுதியாக இருந்து அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். அவரின் நம்பிக்கை வீணாகாமல் காங்கிரஸ் வெற்றிக் கொடியை நிலைநாட்டியுள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்றது. கடைசியாக 1980-ல் காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் காங்கிரசை சேர்ந்த துரை செபாஸ்டியன் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 38 ஆண்டுகளாக காங்கிரசின் குரல் கரூரில் ஒலிக்கவில்லை. போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை.

    1980-களுக்கு பின்னர் நடந்த தேர்தல்களில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. கட்சிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி இருந்தது. இதற்கிடையே 1996-ல் நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனார்) சார்பில் நாட்ராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க.வுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

    பின்னர் 1998-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். இதில் நாட்ராயனுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 2009-ல் நடந்த தேர்தலில் மு.தம்பிதுரை வென்றார். பின்னர் 2014- தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெறும் 30,459 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார். இதிலும் மு. தம்பிதுரை கரூர் தொகுதியில் மீண்டும் 2-வது முறையாக வென்றார்.

    இந்த நிலையில் தற்போது 39 ஆண்டுகளுக்கு பின்னர் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.

    இதன் மூலம் தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஜோதிமணி முட்டுக்கட்டை போட்டுள்ளார். மேலும் கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
    கரூர் தொகுதியில் துணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருக்கிறது.
    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர். கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 401 வாக்குகள் பெற்றுள்ளார்.



    அதிமுக வேட்பாளரான துணை சபாநாயகர் எம். தம்பிதுரை 55491 வாக்குகளே பெற்றுள்ளார். ஜோதிமணி 79910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் 7724 வாக்குகள் பெற்றுள்ளது.
    தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாக தம்பிதுரை எச்சரித்துள்ளார். #LokSabhaElections2019 #Thambidurai
    புதுக்கோட்டை:

    கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனக் கணைகளை வீசி வருவதால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

    அவ்வகையில், சமீபத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு சொந்தமான 45 கல்லூரிகள் இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரும் தங்கள் பிரசாரத்தில் இதனை குறிப்பிட்டனர்.

    இந்நிலையில் கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதுக்கோட்டை மாவட்டம் நவம்பட்டியில் அளித்த பேட்டி வருமாறு:-



    எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு தொடருவேன். எனக்கு சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார். எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஸ்டாலின் விலக தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Thambidurai
    ஏழை-எளியோருக்கு ரூ.2,000 வழங்குவதை தி.மு.க. வழக்கு போட்டு தடுக்கிறது. ஆகவே கொடுப்பது அ.தி.மு.க. என்பதையும், தடுப்பது தி.மு.க. என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று தம்பிதுரை பேசினார். #thambidurai #admk #dmk
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரும், பாராளு மன்ற துணை சபாநாய கருமான தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சென்று கரூர் தொழிற்பேட்டை, பசுபதிபாளையம், வடக்கு காந்திகிராமம், ராமானூர், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, தொழிற்பேட்டை, மூலக் காட்டானூர், நரிகட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். 

    அப்போது பிரசார வாகனத்தில் நின்றபடியே தம்பிதுரை பேசியதாவது:-

    பல்வேறு தரப்பிலிருந்தும் மோடிக்கு ஆதரவு பெருகி வருவதால் காங்கிரஸ்- தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதன் காரணமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதிலும் 45 கல்லூரிகளை நான் வைத்திருப்பதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். 45 கல்லூரிகள் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். அந்த குற்றச்சாட்டு பொய் என்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவாரா?. ஏழை-எளியோருக்கு ரூ.2,000 வழங்குவதை தி.மு.க. வழக்கு போட்டு தடுத்தது. ஆகவே கொடுப்பது அ.தி.மு.க. என்பதையும், தடுப்பது தி.மு.க. என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். 

    அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசும்போது, ஜெயலலிதாவின் உன்னத திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். கஜானாவை காலி செய்த காங்கிரஸ்-தி.மு.க.வால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது என்றார். இதில் கீதா எம்.எல்.ஏ., நகர செயலாளர் நெடுஞ்செழியன், பசுவை சிவசாமி, தானேஷ் என்கிற முத்துக்குமார் மற்றும் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். #thambidurai #admk #dmk
    தம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார். #SenthilBalaji
    சென்னை:

    கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கலின்போது, 100 மீட்டருக்கு வெளியே இல்லாமல் கலெக்டர் அலுவலகம் வாயில் முன்பாகவே 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களுடன் மைக்கில் பிரசாரம் மேற்கொண்டார்.

    காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகின்றபோது வேண்டுமென்றே அ.தி.மு.க. தொண்டர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து பிரச்சினையை ஏற்படுத்தினார். இது சம்பந்தமாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவிடம் தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக நான் நேரடியாக முறையீடு செய்தேன்.

    அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் தம்பி துரையின் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு துணையாகவே செயல்பட்டார். இவர் கரூர் மாவட்டத்திலேயே உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களுடனும் தொடர்பு உள்ளது.

    இவர் கரூர் மாவட்டத்தில் பணியில் இருந்தால் நியாயமான தேர்தலை நடத்த இயலாது. எனவே விதி மீறல்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவை பாராளுமன்றம் தேர்தல் முடியும் வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் நகல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கரூர் தேர்தல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. #SenthilBalaji
    கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா எங்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லலாமே தவிர, அவர்கள் தயவில்தான் அ.தி.மு.க. ஆட்சி செய்கிறது என்று சொல்லக்கூடாது. சட்டமன்றம்தான் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தருகிறது. அங்கு அ.தி. மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு நல்ல ஆட்சியை அமைத்து தந்தார். அந்த ஆட்சியை இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி ஜெயலலிதாவையும், எம்.ஜி. ஆரையும் பாராட்டி சென்றார்.

    சென்னை மத்திய ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. வலிமையான மக்கள் இயக்கம். தமிழக மக்களின் உரிமைக்காகவும், மாநில சுய ஆட்சிக்காகவும், மொழியை காப்பதற்காகவும், பெரியார்,அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கினார்.

    வருகிற சட்டமன்ற இடைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஜெயலலிதா தந்த 123 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 124ஆக மாறும் நிலை ஏற்படும்.

    ரகசியங்களை எப்போதும் வெளியிடுவது தி.மு.க.வின் வாடிக்கை. துரைமுருகன் கூட்டணி பேசிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போர் நடந்த போது சந்திரசேகர் பிரதமராகவும் அவருக்கு ராஜூவ்காந்தி ஆதரவாகவும் இருந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை இலங்கைக்கு தந்ததால் அன்றே ஆட்சி கலைக்கப்பட்டது. கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.


    மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரி தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று கூறியிருக்கிறார். அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. துரோகத்தை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.

    2014 தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஜெயலலிதா அப்போது தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பா.ஜனதா கூட்டணி 3 தொகுதிகளில் வென்றது. ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. இரு முனை போட்டி நிலவுகிறது. அதனால்தான் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வேதனை தெரிவித்துள்ளார். #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறது. பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது.



    மோடி அரசு தைரியமாக ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

    இது நம் நாட்டின் நலனுக்காக செய்யப்பட்ட ஒன்று. இதில் ராணுவத்தின் வலிமையும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஒரு வலிமையான நாடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் எல்லாம் இனி இந்தியாவை எப்போதும் தாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால், இனிமேல் அதையெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் ராணுவம் வலிமை வாய்ந்ததாக இந்தியாவில் இருக்கிறது. அதற்கான முழு பெருமையும் மோடியையே சாரும்.

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு எப்போதும் பதற்றமாகவே இருப்பதால் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் ஆதரவை பெற்று ராணுவத்தையும் வலிமைப்படுத்தி எந்த நாடும் தாக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.

    எப்போது போர் மூண்டாலும் இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. நம்முடைய ராணுவம் வலிமையாக உள்ளது. யாரும் ஊடுருவ முடியாது. போர் வந்தால் சந்திக்கின்ற தெம்பும் திராணியும் ராணுவத்திற்கு உள்ளது. அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆகவேதான் மோடி கன்னியாகுமரி உள்ளிட்ட எங்கு வேண்டும் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ThambiDurai
    அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே, பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #ThambiDurai #BJP
    கரூர்:

    கரூர் ஏமூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழித்து கட்டிய இந்திய ராணுவ வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது. நாட்டின் மரியாதையை காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதனை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.

    தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக போர் செய்ய முனைந்தால் அதனை எதிர்கொள்ளும் வலிமை இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ள பா.ஜ.க. எங்களுக்கு துணை நிற்கிறது. இது தேர்தலுக்கான கூட்டணி. கொள்கைக்கான கூட்டணி அல்ல.



    கூட்டணிக்காக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம். மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம். அந்த கொள்கையில் பின் வாங்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #BJP
    புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமான படையின் பதிலடியால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது என்று வைகோ கவலை தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    திருச்சி:

    திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்.

    அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த செயலுக்கும் துணிவார்கள். பாசிச கொள்கை அடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் நாளை நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும். அவரை யாராவது சிறைப்பிடித்தால் உடனே விடுவிக்க வேண்டும். காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறிய நிலையில் அவர் மாயமாகி இருப்பதால் காவல் துறையினர் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தான் பொறுப்பு.



    பிரதமர் நரேந்திர மோடி 1-ந்தேதி கன்னியாகுமரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வருகை தந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க நரேந்திர மோடி வரவில்லை. முல்லை பெரியாறு, மேகதாது அணைக்கு அனுமதி அளித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அவர் மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதே?

    ப : அது குறித்த முழு தகவல் எனக்கு தெரியவில்லை. தகவல் தெரிந்த பிறகுதான் அது பற்றி கருத்து கூற முடியும். இருப்பினும் எந்த நிலையிலும் யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது. இதனால் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்படும்.

    கே: தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என்று தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளாரே?

    ப : அரசியல் தலைவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் பதில் கருத்துகளாக கூறப்படுகிறது.

    கே: தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

    ப: நான் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டேன்.

    கே: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி விட்டதா?

    ப: பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    அரசியலுக்காக அ.தி.மு.க. மீது அன்புமணி ஊழல் குற்றம் சாட்டியிருப்பார் என்று தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலி மையான கூட்டணி அமைந்து இருக்கிறது. கூட்டணி என்பது பொது திட்டங்களுக்காக அமைக்கப்படுவது. கட்சிகளின் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்காக அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் மொழிக்காக, தமிழர்களுக்காக, தமிழகத்தின் உரிமைகளுக்காக இந்த இயக்கத்தை எப்படி பயன்படுத்தி உரிமைகளை பெற்றாரோ? அதனடிப்படையில் எடப்பாடி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

    திராவிட கட்சிகளின் உயிர் மூச்சான சுயாட்சி கொள்கையில் தெளிவாக கொள்கை பிடிப்பாக இருப்போம். அ.தி.மு.க. போன்று பா.ஜ.க.வுக்கும் தனியாக கொள்கை இருக்கிறது. எங்களை பொறுத்த வரை பொது எதிரி காங்கிரஸ்- தி.மு.க.தான். அவர்களை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்.

    18 ஆண்டுகள் மத்தியிலும், 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில்தான் கச்சத்தீவு பிரச்சனை வந்தது. இலங்கையில் ஒன்றரை கோடி அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதற்கு இந்திய ராணுவம் துணை புரிந்ததாக ராஜபக்சே ஒப்புக்கொண்டார். தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க.வை மத்திய ஆட்சியில் பங்கேற்பதற்கோ, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கோ? எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    மத்தியில் அ.தி.மு.க. எதிர் கட்சியாக இருக்கிறது. மாநிலத்தின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் நானும் குரல் கொடுத்து இருக்கிறேன். பாராளுமன்றத்தின் அவையை முடக்கியதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதே போன்று மேகதாது அணை கட்ட அனுமதிக்ககூடாது என பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டோம்.

    தற்போது மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. கஜா புயல் நிவாரணத்துக்கு கேட்ட ரூ. 15 ஆயிரம் கோடியை மீண்டும் கேட்டு இருக்கிறோம். இப்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது.

    ஸ்பெக்ட்ரம், ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்குகளில் துரிதமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.



    தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் மட்டுமல்ல எல்லா கட்சிகளும் குற்றஞ்சாட்டின. அதில் உண்மை இல்லை என்பது எங்களுக்கு தெரியும். அ.தி.மு.க. மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. அரசியலுக்காக கொடுத்திருப்பார்கள். இது தான் எங்கள் கருத்து.

    நீட் தேர்வினை நடத்தி காண்பித்தது காங்கிரசும், தி.மு.வும் தான். ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார். தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்துக்கு துரோகமும், இடர்பாடுகளும் ஏற்பட்டன. இதை தி.மு.க. எங்கள் மீது திருப்பி விடுகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 2011-ல் தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள தி.மு.க-காங்கிரஸ்தான் சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணியை மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
    மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ThambiDurai #ADMK
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அரசு நிலைப்பாளையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது விவசாயிகளுக்கான திட்டம். இது குறித்து பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மோடி அரசானது விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அடிப்படையில் தான் இது தரப்பட்டிருக்கிறது.

    எந்த திட்டங்கள் ஆனாலும் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல திட்டங்களை அறிவிப்பார்கள். அதே போல் இந்த மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. திட்டங்களை குறை சொன்னால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றார்.



    பின்னர் அவரிடம் தமிழக அரசு சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ.2ஆயிரம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்ததாவது:-

    2006 ம் ஆண்டு வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பலரின் பெயர் விடுபட்டிருப்பது உண்மை தான். விடுபட்டவர்களை தான் மீண்டும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதிகாரிகள் ஆய்வு செய்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக ரூ.2000 கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்காகத்தான் மனுக்களை பெற்று வருகின்றோம் என்றார். #ThambiDurai #ADMK
    ×