search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பிதுரை"

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை வரும் 10-ந்தேதி அறிவிப்போம் என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thiruvarurByelection
    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள வாஞ்சிநாத சுவாமி கோவிலில் தம்பிதுரை எம்.பி. தனது மனைவி, மகளுடன் வந்து இன்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திப்பதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. அதில் எந்த கருத்து வேறுபாடுகளும் கிடையாது. தேர்தல் வைப்பதும், தள்ளி வைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு.

    ஆனால் இன்று என்னுடைய சொந்தக் கருத்தாக சொல்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கும் பென்னாகரம் இடைத்தேர்தல் வந்தபோது அப்போது திமுக ஆட்சி. அந்த சமயத்தில் ஜெயலலிதா, பொங்கல் நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது. தேர்தல் வைத்தால் சரியாக இருக்காது என்று கூறியதால் தேர்தலை தள்ளி வைத்தார்கள். இது ஒரு முன்னுதாரணம்.

    தேர்தல் ஆணையம் தமிழகத்தின் நிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் அறிவித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. தேர்தல் என்பது ஜனவரி மாதத்தில் நடத்துவது சரியாக இருக்காது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நிவாரண பணிகளை அரசு செய்து வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலையும் நடத்தலாம் நிவாரணத்தையும் வழங்கலாம் என கூறுவது சில பிரச்சனைகளை உருவாக்கும்.

    அதிமுக வேட்புமனு தாக்கல் முன்புதான் தேர்தலில் வேட்பாளரை அறிவிக்கும். தற்போது 10-ந்தேதி அதிமுக வேட்பாளரை அறிவிப்பார்கள். அதிமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால்தான் 52 வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். திருவாரூரில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.

    இவ்வாறு தம்பிதுரை எம்பி கூறினார.
    பாராளுமன்ற மக்களவையில் இருந்து எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என தம்பிதுரை கேட்டு கொண்டார். #Thambidurai #revokedecision #AIADMK #TDP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த இரண்டாம் தேதி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
     
    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். 

    இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகர் இருக்கையின் அருகே ஒன்றுகூடி அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து, அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடையும். எனவே இந்த எம்பிக்கள் அனைவரும் வரும் 8-ம் தேதியுடன் முடைவடியும் இந்த குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க இயலாத நிலை நீடிக்கின்றது.

    இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். 

    நீங்கள் ஏற்கனவே அவர்களை தண்டித்து விட்டீர்கள். இரண்டு நாட்களாக அவர்கள் அவைக்கு வரவில்லை. எனவே, தாயுள்ளத்துடன் இந்த உத்தரவை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மிகவும் கனத்த உள்ளத்துடன்தான் இந்த நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் செய்த அமளியை இந்த நாடும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக மற்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்கள் இடையூறு செய்தனர்.

    இந்த அவையை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களை இடைநீக்கம் செய்ய நேர்ந்தது. இதுதொடர்பாக, நீங்கள் (தம்பிதுரை) எனது அறைக்கு வந்து பேசலாம். இதர கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி உங்கள் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார். #Thambidurai  #revokedecision #AIADMK #TDP 
    மேகதாது விவகாரத்தை மறைக்கும் விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் இணக்கமாக இருப்பதாக தம்பிதுரை குற்றம்சாட்டினார். #MakedatuIssue #Thambidurai
    புதுடெல்லி:

    கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பிய அதிமுக எம்பிக்கள் 31 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.



    தமிழகத்தின் உரிமை காக்கப்படவேண்டுமானால், மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. மேகதாது அணைத் திட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய நீர்வள ஆணையம் தந்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும்.

    இதற்காக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய எம்பிக்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. அவைக்கு வராவிட்டால்கூட பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்

    காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பாராளுமன்றத்தில் இணக்கம் உள்ளது. இதைத் தான் கேம் பிக்சிங் என்பார்கள். மேகதாது விவகாரத்தை மறைக்கவே ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. ரபேல் விவகாரத்திற்குப் பதிலளிப்பதுபோல் மேகதாது விவகாரத்தை பாஜக மறைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MakedatuIssue #Thambidurai

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க.வுடன் அதிமுக, பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #parliamentelection
    கரூர்:

    கரூரில் இன்று உலக  முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தெருமுனை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான்,சீனா நாடுகள் இந்திய ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள். அந்த பணம் தான் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய அரசு தீவிரமாக கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை நான் பாராட்டுகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கையை தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.

    எனக்கு தெரிந்தவரை பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க. வுடன் இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. மேலும் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்க வில்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #parliamentelection
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக லண்டனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜன 9-ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 150 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    சசிகலாவும், தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். தற்போது விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

    இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஜன 9-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



    டிச.18ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  விசாரணைக்கு வராததால் ஜன.7-ம் தேதி ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இதே போல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜன.8-ம் தேதியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜன.11-ம்தேதியும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.   #JayaDeathProbe 
    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? என்று தம்பிதுரைக்கு ஆர்எஸ் பாரதி சவால் விடுத்துள்ளார். #RSBharathi #ThambiDurai
    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழினத்தலைவர் கலைஞரின் மறைவின்போது, கழகத் தலைவர் தளபதி மெரீனாவில் நல்லடக்கம் செய்திட இடம் ஒதுக்கித்தருமாறு தமிழக முதலமைச்சரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வேண்டுகோள் வைத்தபோதும்; கொஞ்சமும் நெஞ்சில் ஈவுஇரக்கமின்றி, ‘இடம்தர முடியாது’ என்று மறுத்தார்.

    என்றாலும், எங்கள் தலைவர் தளபதியின் ஆலோசனையின்பேரில், நீதிமன்றம் சென்று, தமிழினத் தலைவர் கலைஞரை மெரீனாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டதிலிருந்து தொடர்ந்து, இதுவரையில் இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் நடைபெறாத வகையில் தலைவர் கலைஞருக்கு புகழஞ்சலிக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தலைவர் தளபதி.

    இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகமும் தலைவர் கலைஞரும், தமிழகத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை தமிழக மக்கள் திரும்பி பார்க்கச் செய்தது தலைவர் தளபதியின் பெரு முயற்சி.

    அதனைத் தொடர்ந்து, நூறே நாட்களில் தலைவர் கலைஞருடைய திருவுருவச் சிலையினை தத்ரூபமாக, தலைவர் கலைஞர் நேரில் நிற்பதைப் போன்ற வடிவத்துடன் அமைந்திட அவ்வப்போது சிலை உருவாவதை நேரில் பார்வையிட்டு, அனைவரும் பாராட்டிடும் வண்ணம் ஒரு அற்புதமான சிலையினை வடித்திட பெருமுயற்சி மேற்கொண்டவர் தலைவர் தளபதி.

    தமிழினத் தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகள் காரணமாக, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தமிழக மக்கள் மனதில் மாபெரும் எழுச்சியையும் வரவேற்பையும் பெற்று, அதன் காரணமாக கழகம் அடைந்து வரும் மாபெரும் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அ.தி.மு.க. முன்னணியினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உளறல்களை நித்தம் நித்தம் அறிக்கையாகவும், பேட்டியாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.


    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, “அம்மா” என்றும்; “தாயே” என்றும் நடித்து, அவரை ஏமாற்றி பிழைத்து வந்தவர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க சார்பில் அவருக்கு ஒரு சிலை அமைத்தனர். ஆனால், அச்சிலை ஜெயலலிதா உருவமாக இல்லாமல், முதல்வர் எடப்பாடியின் உறவினர் மாதிரி இருந்ததாக, ஊடகங்கள் பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் கேலி செய்தன.

    மேலும், ஒவ்வொரு நாளும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஒவ்வொரு விசித்திரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 75 நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டதாக செய்தி உலா வருகிறது. நிலைமை இப்படியிருக்க, தமிழினத் தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின்னர், தலைவர் தளபதி கலந்து கொள்ளுகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் மாநாடுகளில் கூடுவதைப் போல மக்கள் கூட்டம் கூடுகிறது.

    அண்மையில், திருச்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிலும் செஞ்சியில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவிலும் மாநாடுகளைப் போல மக்கள் திரண்ட கூட்டத்தை கண்டும் நாளை (27-12-2018) கரூரில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தலைவர் தளபதி வருகைபுரிவதை கண்டு, மிரண்டு, கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., தம்பிதுரை பித்தனைப் போல பிதற்ற ஆரம்பித்திருக்கிறார்.


    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விரிவான விசாரணையை நடத்தி வருகிறது. தம்பிதுரைக்கு தெம்பும் திராணியும் இருக்குமேயானால், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில், ‘ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம்’ என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? அவ்வாறு அவர் தாக்கல் செய்தால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் ஊடகத்தினருக்கு தம்பிதுரை அளித்த பேட்டி குறித்து தி.மு.க சார்பில் குறுக்கு விசாரணை செய்து, பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #RSBharathi #Jayalalithaa #ThambiDurai
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு காரணம் தி.மு.க.தான் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். #JayalalithaDeath #DMK #Thambidurai
    கரூர்:

    கரூரில் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்ற ஒன்று. இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்தது புதிராகவே உள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பி, தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவோம்.

    பெங்களூரு மக்களுக்கு தண்ணீர் வேண்டும் எனில், 2 மாநில எல்லையான ஒகேனக்கல்லில் அணை கட்டலாம். இதன் மூலம் மின்உற்பத்தியும் நடக்கும். ஆனால் அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கையாள்கிறது. தி.மு.க. அந்த கூட்டணியில் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் என தி.மு.க. கூறுவது வேடிக்கையாக உள்ளது.



    வருகிற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் தான் முடிவு எடுக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்திய பிரதமரை தேர்வு செய்வதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை. பா.ஜ.க.வோ, காங்கிரசோ கனவில் கூட இனி தமிழகத்தினை ஆள முடியாது.

    கஜா புயல் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது கஜா பாதிப்பின் முழு விவரத்தையும் எடுத்து கூறி நிவாரணம் கேட்போம். கஜா புயல் சேதத்தை பார்வையிட பிரதமர் ஏன் வரவில்லை? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். ஆனால் தேசிய கட்சி என்று சொல்கிற காங்கிரசின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராகுல் காந்தி புயல் பாதிப்புகளை பார்வையிட வந்தாரா?.

    கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூரில் புயல் பாதிப்பு பணிகளை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் வந்தாரா?. தி.மு.க. தொடர்ந்த வழக்கே ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம். அதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ். பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருக்கும் போது அவதிப்பட்டார். பின்னர் வழக்கில் வெற்றி பெற்ற போதும் கூட, மேல்முறையீடு செய்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர். இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். #JayalalithaDeath #DMK #Thambidurai
    தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு எனவும் அவர்கள் கனவில் கூட தமிழகத்தை ஆள முடியாது எனவும் தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார். #Thambidurai #ADMK
    பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு.  அவர்கள் கனவில் கூட தமிழகத்தை ஆள முடியாது என கூறினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வருவார் என்பதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும்.  மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபொழுது அவதிப்பட்டார்.  அவருக்கு கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உரிய உதவிகளை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

    முன்னதாக, மேகதாது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திராவிட கட்சிகள் தான் காரணம் என்றும், இதுகுறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்திருந்தார்.



    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தம்பிதுரை, மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? என்னுடன் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா? என்று பதில் சவால் விடுத்துள்ளார். #Thambidurai #ADMK
    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு உதவினால் அது தேசத்தின் நலனை பாதிக்கும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #MekedatuDam #Thambidurai
    கரூர்:

    கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து தான்தோன்றிமலையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தனர்.

    பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே மேகதாதுவில் அணை கட்டுவதா? இல்லை ஒகேனக்கல்லில் அணை கட்டுவதா? என்ற பிரச்சனை இருந்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாதிக்கும்.


    அதே நேரம் மின் உற்பத்திக்காகத்தான் மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்று கர்நாடகா கூறினால் அதற்கு சிறந்த இடம் ஒகேனக்கல்தான். அவர்கள் அங்கு மின் உற்பத்தி செய்து கொள்ளலாம்.

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு உதவினால் அது தேசத்தின் நலனை பாதிக்கும். தமிழக மக்கள் என்றும் அதனை ஏற்று கொள்ள மாட்டார்கள். மத்திய அரசு தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #Thambidurai
    அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDuria #CentalGovt #GajaCyclone
    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று மக்களிடம் நேரில் குறை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய இடைக்கால நிவாரணம் போதாது. ஆகவே முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முதலில் கேட்ட ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க மீண்டும் வற்புறுத்துவார்கள்.

    விரைவில் பாராளுமன்றம் கூட இருக்கிறது. அங்கும் கஜா புயல் பாதிப்பு குறித்து குரல் கொடுப்போம். கர்நாடகத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வருவதால் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மேலோங்கியுள்ளது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. எனவேதான் புறக்கணிக்கிறார்கள்.

    ஒவ்வொரு மாநில மொழியையும், கலாசாரத்தையும் மதித்து மத்திய அரசு நடக்க வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உதவி செய்கிறார்கள். அதிகம் நிதி தருகிறார்கள். இது வருந்தத்தக்கது. இந்தியா ஒற்றுமையாகதான் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

    தேசிய கட்சிகள் அரசியல் விருப்பு வெறுப்புகளை காண்பிப்பதால் மாநில உணர்வுள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன.


    தேசிய கட்சியான காங்கிரஸ் இப்போது 2 மாநிலங்களில்தான் ஆளுகிறது. அது மாநில கட்சியாக மாறும் நிலைமை இருக்கிறது. பா. ஜ.க.வும் காலப்போக்கில் மாநில கட்சியாக மாறிவிடும். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

    காவிரியில் எந்த அணையும் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இதனை உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நிவாரணம் வழங்குவதில் அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும். காவிரி பிரச்சனையில் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது. காவிரி பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDuria #CentalGovt #GajaCyclone
    கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தால்தான் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #GajaCyclone #ThambiDurai
    கரூர்:

    கரூர் ஜெகதாபி ஊராட்சி பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் பழனிசாமி ஏற்கனவே புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டார். அதன் பின்னர் பிரதமரை சந்தித்து நிவாரண தொகை கேட்டார். பிரதமரும் அன்றே மத்திய குழுவை அனுப்பி வைத்தார்.

    கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். அப்போது தான் தேவையான உதவிகள் கிடைக்கும். அதை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நிவாரண உதவி தொகைக்கான உத்தரவினை பெற்றவர்களுக்கு நிச்சயம் பணம் வங்கி கணக்கிற்கு வரும். மு.க. ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தார்.

    இப்போது எதிர்கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சியை குறை சொல்கிறார். ஸ்டெர்லைட் வழக்கை எப்படி நடத்த வேண்டும் என அரசுக்கு தெரியும். வல்லுநர்கள் இருக்கிறார்கள். இதோடு எதுவும் முடிந்துவிடாது.

    மறு ஆய்வு மனு மீண்டும் தாக்கல் செய்ய முடியும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பது எடப்பாடி அரசின் முடிவான கொள்கை. எடப்பாடியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதற்கான முடிவினை எடுத்து செயல்படுகிறார்கள்.

    வைகோ மூத்த அரசியல் தலைவர், போராளி. எனக்கு அண்ணன் மாதிரி. தி.மு.க.வின் நிலைபாடு தொடர்பாக அவர்தான் விளக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டதாக வைகோ பாராட்டியுள்ளார். அது உண்மை தானே.

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 8 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இருக்கிறேன். இதற்கு முந்தை எம்.பி.க்கள் யாராவது இத்தனை கிராமங்களுக்கு சென்றார்களா? இது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. வாக்களித்த மக்களை சந்திப்பது என் கடமை.

    எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வெற்றி தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை. கஜா புயல் பாதிப்பை பார்த்து மத்திய குழுவினரே கண் கலங்கினார்கள். ஆகவே நிச்சயம் பிரதமர் தேவையான நிவாரண தொகையினை ஒதுக்குவார் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #ThambiDurai

    அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டி விடுவதாக மு.க.ஸ்டாலினை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மறைமுகமாக குற்றம்சாட்டினார். #ADMK #ThambiDurai #MKStalin
    கரூர்:

    கரூர் புலியூர் பகுதியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் எந்த அளவுக்கு பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடைய பாதிப்பை பற்றி அதிகமாக சொன்னால் தான் மத்திய அரசின் உதவி கிடைக்கும். அதை விடுத்து இதில் அரசியல் செய்தால் எப்படி உதவி கிடைக்கும்.

    இது இயற்கை சீற்றம். இந்த துயர நிகழ்வை சரி செய்ய வரும்போது எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். கஜாவால் என்னுடைய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா இடத்திற்கும் போய் வந்து கொண்டிருக்கிறேன். மக்கள் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை சொல்கிறார்கள்.

    கேரளாவில் சமீபத்தில் பெரும் மழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பாராளுமன்றத்தில் எதிர்கட்சியை சேர்ந்த எந்த காங்கிரஸ் எம்.பி.க்களும் கேரள கம்யூனிஸ்டு அரசை குறை சொல்லவில்லை. அதில் அரசியல் செய்யாமல் மத்திய அரசிடம் நிதியுதவி மட்டுமே கேட்டனர்.

    இங்கு நிவாரண பணிகள் துரிதமாக நடக்கிறது. என்ன செய்யவில்லை என்று சொல்லுங்கள். அதைவிடுத்து சரியாக செய்யவில்லை என பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. கஜா புயல் நிவாரண பணிகளை தேர்தல் களமாக பார்க்கக்கூடாது.

    மணப்பாறை பகுதியில் நான் செல்லும்போது அதற்கு முன்பாகவே எதிர் கட்சிக்காரரர்கள் திட்டமிட்டு மக்களை தூண்டிவிட்டு மறியல் செய்தார்கள். இந்த அரசு செயல்படவில்லை என கூறுவதற்கு வேண்டும் என்றே எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது வரலாறு காணாத பாதிப்பு. பாதிப்பை பற்றி எடுத்து சொல்லுங்கள். இல்லையெனில் மத்திய அரசு ஒன்றும் பாதிப்பு இல்லை என்று போய்விடும்.



    மு.க. ஸ்டாலின் முதலில் பாராட்டினார். இப்போது தூண்டி விடுகிறார். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். நாங்கள் யாரையும் கண்டிக்கும் நிலையில் இல்லை. நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து நிதி உதவி கேட்கிறார். நானும் உடன் செல்கிறேன். பெட்டிச்சாவி அவர்களிடம் உள்ளது. அவர்கள் தான் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்களுக்கு எதிராக யார் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்ற கேள்விக்கு, பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது யார்? என கேட்டு, மீண்டும் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். #ADMK #ThambiDurai #MKStalin
    ×