search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பிதுரை"

    திமுக ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என முக ஸ்டாலின் விளக்க வேண்டும் என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Thamidurai #DMK #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட் அரவக்குறிச்சி பகுதிகளில் பொது மக்களை நேரடியாக சந்தித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மனு பெற்றார்.

    அப்போது அவர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் 40 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இதுவரை 10 ஆயிரம் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்றுள்ளேன். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராம மங்களுக்கும் செல்வேன்.

    இந்த ஆட்சி நல்லாட்சி என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இன்னும் 3 ஆண்டு காலம் ஆட்சி சிறப்பாக செயல்படும். இதில் பல்வேறு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படும் என மக்கள் நம்புகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக முறைப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என அவர் விளக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தி.மு.க. ஆட்சியின்போது நிலம் வழங்கப்பட்டது. மக்கள் ஒப்புதலுடன் தான் அவர்கள் நிலத்தை வழங்கினார்களா? குறை சொல்ல வேண்டும் என்பதற்காக புழுதிவாரி தூற்றுவது ஏற்புடையது அல்ல.



    கவர்னர் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்தான் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல் அமைப்பு தலைமை அங்கீகாரம் படைத்தவர் கவர்னர். அவரைப் பற்றி கருத்து கூறவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை.

    ஆனால் அதே நேரத்தில் கவர்னர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் முழுமையாக இருக்கிறது. அதற்காக அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தகூடாது.

    இந்த ஆட்சி யாருடைய குரல் வளையையும் நசுக்கவில்லை. இந்த அரசை செயல்படாத அரசு என்று கூறி வருபவர்கள் இப்போதாவது நாங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ரபேல் விமான ஒப்பந்தத்தை பொறுத்தவரை பிரான்ஸ் மற்றும் இந்திய நிறுவனங்கள் புரிந்துணர்வு செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில்தான் வாங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    தற்போது வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் தி.மு.க. அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இதுவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று கூறவில்லை. பிரதமர் வேட்பாளராக நிறுத்துவோம் என்று கூட தெரிவிக்கவில்லை. ஏனென்றால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. மறைமுக தொடர்பு வைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #MKStalin
    நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ThambiDurai #NakkeeranGopal
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தேவை ஏற்பட்டால் கூட்டணி அமைப்போம். அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், அமைச்சர் விஜயபாஸ்கரும் வாக்கிங் சென்றபோது பேசிக்கொண்டது பற்றி எனக்கு தெரியாது. இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து அரசு சார்ந்த வி‌ஷயங்களை மட்டுமே பேசினார். அரசியல் சார்ந்த வி‌ஷயங்களை பேசவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதி உடனடியாக தர வேண்டும்.

    தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அதனால்தான் முதல்வருடன் நான் செல்லவில்லை. இப்பிரச்சனையில் அரசியல் வேண்டாம்.

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திரிகையாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் அரசுக்கு கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #NakkeeranGopal
    அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல என்றும் எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று வருகிறார். இன்று அவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகித ஆலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் கைக்குள் சென்று விட்டது. ஜி.எஸ்.டி. வரிக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    அதனால் வியாபாரிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல்- டீசல் விலையை ரூ.10 வரை மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும்.


    அ.தி.மு.க.வை பார்த்து அணையும் விளக்கு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல. எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கு கவலையில்லை. 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
    தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #tngovt ##methaneproject
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மக்களிடம் நேரில் சென்று குறைகள் கேட்டு மனுக்கள் பெற்று வருகின்றனர். இன்று கரூர் மூக்கினாங்குறிச்சி பகுதியில் மனுக்கள் பெற்ற போது மு.தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்வது அவர்களாக இருந்தாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டியது தமிழக அரசு தான். தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் கவர்னர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றார். 

    2016 சட்டமன்ற தேர்தலின் போது அரவக்குறிச்சியில் தேர்தலை நிறுத்த நீங்கள் (மு.தம்பித்துரை) தான் காரணம் என முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளாரே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தேர்தல் கமிஷன் எனக்கு தனி அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை. ஒருவேளை அப்படி இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த தேர்தலை பொறுத்தவரை தேர்தல் கமிஷன்தான் தேர்தலை நிறுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #tngovt ##methaneproject
    சசிகலாவை பார்க்க தம்பிதுரை , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார் என்று செந்தில்பாலாஜி கூறினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி க.பரமத்தியில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நான் வாக்கு சேகரிக்க சென்ற போது தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறை செயலர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது கரூர் மாவட்டத்திற்கு 5ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கு மேல் பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் முதல்வராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது சசிகலா, டி.டி.வி.தினகரன் வழி காட்டுதல்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முடிவு செய்தோம். அவரை முதல்வராக தேர்வு செய்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை மாற்றி விட்டு டி.டி.வி. தினகரனை முதல்வர் ஆக்குவோம். அதன்பின்னர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.


    அ.தி.மு.க. ஆட்சியின் போது க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மாநில அரசு மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர முயற்சித்த போது, தற்போதைய துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி நிதி பெற்று தருவதாக கூறினார். இதனால் நான் மாநில அரசு மூலம் கொண்டு வருவதற்கான முயற்சியை கைவிட்டேன். ஆனால் இப்போது வரை அந்த நிதியை அவர் பெற்றுத்தரவில்லை.

    எவ்வளவோ இடைஞ்சல்களுக்கு மத்தியில் 2 முறை நீதிமன்றம் சென்று இந்த உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது. இது அறவழி போராட்டம். இந்த உண்ணாவிரதம் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் உண்ணாவிரத த்தில் அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் தேர்தலில் முதன் முதலில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்ட போது தேர்தலை நிறுத்த எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சதி செய்தனர். ஏனென்றால் தினகரன் வெற்றி பெற்று முதல்வராகி விடுவாரோ? என்று எண்ணி அவர்கள் இந்த சதி செயலை செய்துள்ளனர்.

    இதற்காக ஆர்.கே. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக அவர்களாகவே ஒரு துண்டு சீட்டை தயார் செய்து தேர்தலை நிறுத்தி விட்டனர். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் சூழ்ச்சிகளை முறியடித்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எத்தனையோ பைல்கள் இருக்கும். ஆனால் பணப் பட்டுவாடா செய்ததற்கான துண்டு சீட்டு மட்டும் கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. எனவே இதில் சதி நடந்துள்ளது.

    தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்று அதனை நிறைவேற்றினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரவக்குறிச்சி தொகுதியை புறக்கணித்து வருகிறது.


    சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க பாராளுமன்ற துணை சபாநாயகர் , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து தினகரனிடம் பேசிய தம்பிதுரை, இரவில் வந்து சந்திக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காலையில் என்னை சந்திக்க வாருங்கள். சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தினகரன் அ.தி.மு.க. வையும், சின்னத்தையும் கைப்பற்றி விடுவார் என்பதால், இப்போதே தம்பிதுரை துண்டு போட்டு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார். இனி அவர் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் பெற முடியாது.

    தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய மக்களை உயிர்பலி வாங்கிய துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறேன். இதற்காக என் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் தொடரட்டும். அதனை சந்திக்க தயாராக உள்ளேன். 

    இவ்வாறு அவர் பேசினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளு மன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது என்று தம்பிதுரை கூறினார். #thambidurai #aimshospital

    கோவை:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழர்களின் மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். என்றென்றும் மக்கள் மனதில் எம்.ஜி.ஆர் நிலைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக நூற்றாண்டு நிறைவு விழா அமையும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது.

    விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழக நலனையும், தமிழக விவசாயிகள் நலனையும் பாதுகாக்கும் இயக்கமாக அ.தி.மு.க. இருக்கும். 2014 நாடாளுமன்ற தேர்தலை போல, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது என்ற முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கருத்தில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வலிமை அ.தி.மு.க.வுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு, அது எனக்கு தெரியாது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து, தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்றார். #thambidurai #aimshospital

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தம் அளிப்பதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #MGRCenturyFestival #ADMK #ThambiDurai #MKStalin
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை கரூர் விஸ்வநாதபுரி பகுதியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை தி.மு.க. புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. இது அரசு விழா என்பதால் அவர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அறிஞர் அண்ணா, தேர்தலின்போது எம்.ஜி.ஆர். இல்லாமல் தி.மு.க. வெற்றி கொள்ளாது என கூறினார்.

    மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்றியதை பார்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. அதேபோல் கலைஞரும் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.

    எம்.ஜி.ஆர். தனியாக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து இருக்காவிட்டால் தேசிய கட்சிகள் வலுவாக காலூன்றி இருக்கும். தமிழகத்தில் என்றும் திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதற்கான ஒரு சூழலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.


    அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்- அமைச்சராக்க பணியாற்றியவர் எம்.ஜி.ஆர். அந்த நன்றியை மு.க.ஸ்டாலின் மறந்து விடக்கூடாது.

    எனவே கட்சி ரீதியாக பார்க்காமல் இதை அரசு விழாவாக கருதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். காங்கிரசோடு அ.தி.மு.க. தொடர்பில் உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினால் தி.மு.க-காங்கிரசை விட்டு விலகி செல்கிறது என்றுதான் பொருள்.

    இதனைத்தான் நான் பலமுறை கூறியுள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MGRCenturyFestival #ADMK #ThambiDurai #MKStalin
    பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராடினாலே விலை குறைய வாய்ப்புள்ளது என்று தம்பிதுரை எம்.பி. கூறினார். #thambidurai #parliament #rajivkillers

    கரூர்:

    கரூர் சேங்கலில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகள் அதிகம் கிடையாது என்பது எனது கருத்து.

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. முந்தைய காங்கிரசின் தவறான கொள்கையால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே கொள்கையைத்தான் இப்போதைய மத்திய அரசும் கடைபிடிக்கிறது.


    தனியார் வசமிருக்கும் விலை நிர்ணய உரிமையை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக பாராளு மன்றத்தில் குரல் கொடுப்போம். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள். என்னை பொருத்த மட்டில் 50 எம்.பி.க்கள் இருக்கிறோம். பாராளுமன்றத்தில் போராடினாலே விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவே போதும்.

    மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது, இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னர், இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். தற்போது போருக்கு இந்தியா உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு காரணமான காங்கிரஸ்-தி.மு.க. கட்சியினர் மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

    ராஜீவ்காந்தி மாபெரும் தலைவர். அவர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இருப்பினும் குற்றவாளிகள் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார்கள். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரின் வழியில் தற்போதைய அரசும் , குற்றவாளிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #parliament #rajivkillers

    பாஜக - திமுக அரசியல் சந்திப்புகளை வைத்துதான் கூட்டணி என கூறினேன், திமுக உடன் கூட்டணி என்ற கேள்விக்கு முக ஸ்டாலினிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #DMK #MKStalin
    மணப்பாறை:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, திருச்சி மாவட்டம் மணப்பாறை சூளியாப்பட்டியில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தார்.

    கே: பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதையொட்டியே தொகுதி மக்களை நீங்கள் சந்தித்து வருவதாகவும், பதவிக்காக பா.ஜ.க. வேட்பாளராக கூட போட்டியிடக் கூடும் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?

    ப: அந்த கருத்து சரியல்ல. நான் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதிதல்ல. தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறேன். எனவே ஒரு தனி நபரின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


    கே: பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததை ரகசிய கூட்டணி என்று அ.தி.மு.க.வினர் விமர்சித்து வரும் நிலையில், விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க.வை சேர்ந்த நீங்கள் சந்தித்தது கூட்டணியா? என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளாரே?.

    ப: நான் தனி விமானத்தில் செல்ல முடியாது. விமான நிலையத்திற்கு செல்லும் போது சந்திப்பது வேறு. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. தலைவர்களை அழைப்பது என்பது வேறு.

    அதாவது அரசியல் நிகழ்வுகளும், சாதாரண சந்திப்புகளும் வெவ்வேறானவை. அந்த இரு கட்சிகளின் அரசியல் சந்திப்புகளை வைத்துத்தான் தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்று கூறினேன். ஆனால் நானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டோம் என்பதற்காக எங்களுக்கும் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பதை மு.க.ஸ்டாலின் தான் விளக்க வேண்டும். அல்லது அது தொடர்பாக கே. என்.நேரு தான் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #DMK #MKStalin
    இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #BJP
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. போதுமான நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக நானும் மத்திய அரசிடம் பேசி நிலக்கரியை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளேன்.

    பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் 2 ரூபாய் மட்டும் குறைப்பதால் எந்தவித பயனும் இல்லை. 65 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இன்று 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதன் விலையை குறைக்கும் அதிகாரம் முழுமையாக மத்திய அரசின் கையில்தான் உள்ளது, அது மத்திய அரசின் கடமையும் கூட.

    புதிய செஸ் வரி மூலம் மத்திய அரசுக்குத்தான் பலன் கிடைக்கும். மாநில அரசுக்கு எந்த பலனும் இல்லை. ஜி.எஸ்.டி.யை அ.தி.மு.க. முழுமையாக எதிர்த்து வந்துள்ளது. ஜி.எஸ்.டி.யால் மாநில சுயாட்சி, மாநில அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி. வரியை கடுமையாக எதிர்த்தார். நாங்களும் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.யை ஆதரித்து வாக்களிக்கவில்லை. இதுபோன்ற மாநில அரசின் சுயாட்சியை பறிக்கும் வகையில் தான் காங்கிரசும் ஆட்சி செய்தது. ஆனால் 18 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுத்த தி.மு.க. எதையும் கண்டு கொள்ளவில்லை.


    2016 பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38-ல் வெற்றி பெற்றார். அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.தான் நாடகமாடுகிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வின் துணையின்றி தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இனியும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும். அதற்கான வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு.

    பா.ஜ.க.வுடன் கூட்டணிக்காக அமித்ஷா வீட்டு கதவை நாங்கள் தட்டவில்லை, அதேபோல் எங்களுடன் கூட்டணி வைக்க எங்கள் கதவையும் யாரும் தட்டவில்லை. மத்திய அரசுடன் நட்புடன் இருக்கிறோம். அதற்காக மத்திய அரசை கண் மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. எங்களை விமர்சிப்பதால் நாங்களும் அவர்களை விமர்சிக்கிறோம். இதைத்தான் எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #BJP
    பா.ஜ.க.வுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு எருதுபட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து இருந்தால் ஜி.எஸ்.டி. முத்தலாக் ஆகிய சட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டோம்.

    ஆனால் தி.மு.க.தான் எப்படியாவது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க துடிக்கிறது. அதற்காகத்தான் அமித் ஷாவை அழைத்து வர திட்டமிட்டனர்.

    அ.தி.மு.க.வில் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் பேசுவது என்னுடைய சொந்த கருத்து. அ.தி.மு.க. 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டது, கூட்டணி வைத்து அல்ல. ஜெயலலிதா வழியை தான் பின்பற்றி உள்ளோம். கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல.


    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக எந்த சட்டச்சிக்கலும் இல்லை. ஆகையால் ஆளுனர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.

    துமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்பது இல்லை. நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மக்களவை துணை சபாநாயகர்என்ற முறையில் நானும் மத்திய அரசிடம் பேசியுள்ளேன்.

    அ.தி.மு.க. சட்ட விதிகள் திருத்தம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இரட்டை இலை சின்னம், கொடி மற்றும் அ.தி.மு.க. ஆகியவை எங்களிடம் உள்ளது. அந்த நிலை எப்போதும் தொடரும். தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk

    ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்பால் மாநில வருவாய் பாதிக்கப்படுகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ADMK #ThambiDurai #GST
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் பொதுமக்களிடம் குறை கேட்டு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மனுக்களை பெற்றார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஆட்சி காலத்தில் தனியார் எண்ணை நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ், தி.மு.க. இடம்பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி எடுத்த முடிவுதான். அதே கொள்கை முடிவினை தற்போதைய பா.ஜ.க. அரசும் பின்பற்றி வருகிறது.

    எனவே அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துவோம்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே ஜி.எஸ்.டி.க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பிற மாநிலங்கள் ஜி.எஸ்.டி.யை ஆதரித்தன. தற்போது அந்த மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

    தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு வாட் வரி நீங்கலாக பிற வரி வசூலிக்கப்படுவதில்லை. எனவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. சுங்கவரி என பல்வேறு வரிகளை விதிக்கிறது. இதனால் மாநில வருவாய் பாதிக்கப்படுகிறது.


    18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் தற்போதைய அ.தி.மு.க. அரசை பாதிக்காது. அதனை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #GST  #PetrolPriceHike
    ×