search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில்"

    கேரளாவில் கோடை வெயில் காலம் தொடங்கும் முன்பே 2 விவசாயிகள் அடுத்தடுத்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கோடை காலம் தொடங்கும் முன்பு நாடு முழுவதும் வெயில் கொளுத்துகிறது.

    தென்மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் வெயில் சுட்டெரிக்கிறது. திருவனந்தபுரம், வெள்ளறடை, நெய்யாற்றின் கரை, பாலராமபுரம் பகுதிகளில் அனல் காற்று வீசுகிறது.

    பகல் நேரங்களில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது.

    கேரளாவில் உஷ்ணத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளறடை பகுதியில் சுலு (வயது 44) என்ற விவசாயி வயலில் களை பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

    திடீரென அவர், வயலுக்குள் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உஷ்ணத்தின் தாக்கத்தால் சுலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபோல திருவனந்தபுரம் மணக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கப்பன் (65) என்பவரும் வயலில் வேலை செய்தபோது சுருண்டு விழுந்து இறந்தார்.

    வெயிலின் தாக்கத்தால் இவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கேரளாவில் கோடை வெயில் காலம் தொடங்கும் முன்பே 2 விவசாயிகள் அடுத்தடுத்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம், கோழிக்கோடு பகுதிகளில் இனிவரும் நாட்களில் தற்போது அடிக்கும் வெயிலை காட்டிலும் கூடுதலாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உஷ்ணம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள், குழந்தைகள், பெண்கள் வெயிலில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
    நாமக்கல்லில் வாட்டி வதைக்கும் வெயிலால் கோழிகளின் இறப்பு அதிகரித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    இந்திய அளவில் கோழிப் பண்ணைகள் அதிகம் நிறைந்த மாவட்டமாக நாமக்கல் உள்ளது. தமிழக அளவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. 5 கோடி கோழிகள் வளர்க்கப் பட்டு, அவற்றின் மூலம் தினமும் 3.10 கோடி அளவில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்ளூர் தேவைக்கும், பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும், பள்ளிகளுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஆண்டு தோறும் மார்ச் மாதம் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இதனால் கோழிகள் வழக்கத்தை காட்டி லும் மிகவும் சோர்வான நிலையில் காணப்படும். இதனால் முட்டை உற்பத்தியும் குறையும்.

    தற்போது பிப்ரவரி மாதமே கோடை வெப்பத்தின் தாக்கம் தொடங்கி விட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் 100 டிகிரியை தொடும் அளவில் கொளுத்தி வருகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் 10 சதவீதம் அளவில் வயது முதிர்ந்த, நோய் தாக்கிய, சரியாக முட்டையிடாத கோழிகளின் இறப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கோழிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து கோழிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு பண்ணையிலும், வெப்பம் தாக்காதவாறு சிறப்பு ஏற்பாடாக படுதா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூண்டின் மேல்பகுதியில் சொட்டு நீர்ப்பாசனம் போல் நீர்த்தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோழியை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, இந்த நீர்த்தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கோழிகள் தீவனத்தை எடுப்பதிலும், முட்டையிடுவதிலும் பிரச்சினையில்லை. அவ்வாறு நீர்த்தெளிப்பான்கள் இல்லாத பண்ணைகளில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோழிகள் இறக்க நேரிடுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி மாநில தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தின் மாறாக முன்னதாகவே வந்து விட்டதால் கோழிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    கடும் வெப்பம் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் கோழிகளை காப்பாற்ற கோழிப்பண்ணையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே காவிரி ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்கினால், அதன் மூலம் கோழிகளை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக சேலத்தில் வெயில் சுட்டெரித்தது. மதிய நேரங்களில் வெயில் மேலும் அதிக அளவில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடந்த 23-ந் தேதி 100.1 டிகிரியாக இருந்த வெயில் 24-ந் தேதி 101.2 டிகிரியாகவும், 25-ந் தேதி 102.2 டிகிரியாகவும், 26-ந் தேதி 101.9 டிகிரியும் பதிவானது. நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 100 டிகிரியாக பதிவானது.

    இதனால் இனி வரும் நாட்களில் வெயிவின் தாக்கம் குறையுமா? அல்லது வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா? என்ற அச்சத்தில் பொது மக்கள் இருந்தனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழை சேலம் மாநகர், ஓமலூர், ஏற்காடு, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்பட பல பகுதிகளில் பரவலாக பெய்தது.

    ஏற்காட்டில் அதிகாலை தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் காலை 9 மணியளவில் மழை பெய்தது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் குடை பிடித்த படி சென்றனர்.

    இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியாக இருந்தது. மேலும் இந்த மழை தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
    திருப்பூரில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 3 மணி வரை இந்த மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது.

    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த 2 நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திருப்பூரில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 3 மணி வரை இந்த மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அவினாசி சாலை, ஊத்துக்குளி சாலை, ஈஸ்வரன் கோவில் பாலம், எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதேபோல் தாராபுரம், பல்லடம், மூலனூர், காங்கயம், உடுமலை, அவினாசி, ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

    திருப்பூரில் 33 மி.மீ, காங்கயத்தில் 33 மி.மீ., தாராபுரம் 5.2 மி.மீ., மூலனூர் 8 மி.மீ., உடுமலை 3.20 மி.மீ., அவினாசி 28 மி.மீ., பல்லடத்தில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    திருப்பூரில் இன்று காலை வெயில் அடிக்க தொடங்கியது.

    கோடை காலம் முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் திருத்தணியில் 103 டிகிரி வெயில் மீண்டும் கொளுத்த தொடங்கி இருக்கிறது. #summer

    சென்னை:

    கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்த தொடங்கியது.

    100 டிகிரி வெயில் அடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    அக்னி தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. 100 டிகிரிக்கு மேல் சென்றதால் மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சினர். அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

    அதன் பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் குமரி, நெல்லை, கோவை, நீலகரி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது.

    இதனால் வெப்பம் குறைந்து அம்மாவட்டங்களில் குளிர்ச்சியான சீதோ‌ஷன நிலை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னையில் மாலை வேளையில் பெய்தது.

    கோடை காலம் முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையில் சென்னை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெயில் மீண்டும் கொளுத்த தொடங்கி இருக்கிறது.

    திருத்தணியில் நேற்று 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. நாகையில் 101 டிகிரியும், கடலூர், மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 100 டிகிரியும், சென்னை, வேலூர், திருச்சியில் தலா 99 டிகிரியும் பதிவானது.

    தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளதால் மக்கள் மழையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.  #summer

    ஜப்பான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலியாகினர். #JappanHeatWave
    டோக்கியோ:

    உலக நாடுகளுடன் தனது வணிக ரீதியிலான போட்டியில் முதன்மையாக விளங்கும் ஜப்பான் நாட்டில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும், பலர் தங்கள் வீடு, உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஜப்பான் ராணுவத்துடன் மக்களும் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது ஜப்பானின் பல்வேறு நகரங்களில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. #JappanHeatWave
    வேலூரில் பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    வேலூர்:

    வேலூரில் ‘அக்னி நட்சத்திரம்’ முடிந்த பின்னரும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

    அதன்பின் சில மணி நேரம் ஓய்ந்திருந்த மழை இரவு 10.30 மணி முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12.30 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது. பல்வேறு பகுதியில் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    புதிய பஸ் நிலையம் கிரீன் சிக்னல் பகுதி, சர்வீஸ்ரோடு, ஆரணி ரோடு, நேதாஜி மைதானம், கோட்டை மைதானம், ஆற்காடு ரோடு கோடையிடி குப்புசாமி பள்ளி மைதானம் போன்ற இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வேலூரில் 89.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அதேபோல் மாவட்டத்தில் ஆற்காடு குடியாத்தம், மேல் ஆலத்தூர், வாலாஜா, அரக்கோணம் காவேரிப்பாக்கம், சோளிங்கர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டியது.

    கோடை மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெப்ப தாக்கம் கூந்தலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கோடைகாலத்துக்கு அவசியமான கூந்தல்

    பராமரிப்பு வழிமுறைகள்:

    * கோடையில் சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலைத்தாக்கும். அதனால், குளித்ததும் கூந்தலை உலர வைப்பதற்கான டிரையரை கோடைகாலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுவும் வெப்பத்தை உமிழ்வதால் கூந்தலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுவிடும்.

    * கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தலையில் தொப்பி அணிந்துகொள்ளலாம். அல்லது துணியால் தலையை மூடிக்கொள்ளலாம். அதன் மூலம் உச்சந்தலையில் கூந்தலுக்குரிய இயல்பான ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். வெப்பக்காற்றினால் கூந்தல் சேதம் அடைவதையும் தவிர்க்கலாம்.



    * இறுக்கமான சிகை அலங்காரம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூந்தலை தளர்வாக பின்னிக்கொள்வதே நல்லது. இறுக்கமாக இருந்தால் கூந்தலில் வியர்வை படிந்து சூரிய கதிர்களின் தாக்கத்தால் முடி சேதமடைந்துவிடும்.

    * கடற்கரை, நீச்சல் குளம் போன்ற இடங் களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினால் உடனே கூந்தலை கழுவ வேண்டும்.

    * கூந்தலை சீவுவதற்கு பரந்த பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்த வேண்டும். பிரஷ் வைத்து கூந்தலை அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. மயிர்கால்கள் வரை ஆழமாக ஊடுருவும்படி எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். குளியலுக்கு தரமான ஷாம்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
    கோடை காலம் நமது சக்தியை இழக்கச் செய்யும் காலம். வியர்வை காரணமாகவும் நீர்சத்து மிகவும் குறைந்துவிடும், நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
    கோடை காலம் நமது சக்தியை இழக்கச் செய்யும் காலம். வியர்வை காரணமாகவும் நீர்சத்து மிகவும் குறைந்துவிடும், நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். நீர்ச்சத்தை அதிகம் இழந்தால் சிறுநீரகம் செயல்படுவது பாதிக்கப்படும்.

    கோடையில், காலையில், மயங்கி விழுந்தனர் என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். கடுமையான வெயில் நேரத்தில் வெளியே நேரடியாகச் சூரிய வெப்பம் தாக்குமாறு போகாமல் இருப்பது நல்லது-. கண்களின் பாதுகாப்புக்காக கண்ணாடி அணிவது நல்லது-. மண்பானைகளில் நீர் ஊற்றி வைத்து அருந்துவது நல்லது.
    மோர், தர்பூசணி, நுங்கு, இளநீர் ஆகியன உடலைக் குளிர்விக்கும். சாதத்தில் நீர் ஊற்றி வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பது உஷ்ணத்தைத் தணிக்கும். அத்துடன் மோர் கலந்து கொள்ளலாம். மோர் மற்றும் நீராகாரத்துடன் இஞ்சி, கறிவேப்பிலை, துளி பெருங்காயம், உப்புக் கலந்து குடித்தால் சுவை கூடும்.

    கம்பு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ஆகவே கம்பு சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மோர் சேர்த்து சாப்பிடலாம். கம்பங் கூழ் செய்து, அத்துடன் மோர் கலந்து குடிப்பது நல்லது.

    உடல்சூடு அதிகம் ஆவதால்தான் தோல் நோய்கள், கோடையில் அதிகரிக்கின்றன. ஆகவே உடல் சூட்டைக் குறைப்பது முதல்படி. திட ஆகாரத்தை நிறுத்தி விட்டு, அல்லது குறைத்து விட்டு திரவ உணவுகளை உட்கொள்வது மிக நல்லது. இதையெல்லாம் மறந்து -விட்ட நிலை இன்று!

    36000 நோய்களை தண்ணீர் மட்டுமே குணப்படுத்துவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆகவே அடிக்கடி குளிர்ந்த நீர்அருந்த வேண்டும். அதனால்தான் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும்.

    அதுவே உடலைச் சுத்தமாக்கும். 36000 நோயைக் குணமாக்கும் தண்ணீர் சத்தியே! என் உடல் நோயையும் குணப்படுத்து என்று வேண்டி காலையில் தண்ணீர் வெறும் வயிற்றில் அருந்துமாறு சொல்கிறார்கள். தாயைப் பழிந்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று ஒரு பழமொழி இருக்கிறது-.

    கங்காமாதா என்று நீரைத் தெய்வமாகக் கொண்டாடும், ஆடிப் பெருக்கின்போது வழிபாடு நடத்தும், நமது மரபு தண்ணீரை வழிபாட்டுப் பொருளாகக் (பஞ்சபூத வழிபாடு) கொண்டாடியதில் வியப்பில்லை.

    கங்கையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பேக்டிரியாக்கள் இயல்பிலேயே இருக்கின்றன. கங்கையில் புனிதமாய என்ற சொலவடையே இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின் போது ஒவ்வொரு வீட்டுத் தண்ணீரிலும் கங்கை குடியிருப்பதாக ஐதீகம் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வர்.
    ஒவ்வொரு வீட்டிலும் கங்கா தீர்த்தம் பூஜையில் இருக்கும். வாழ்வின் இறுதியை எதிர்க்கொள்பவருக்கு அருந்தக் கொடுப்பர்.

    இவ்வளவு புனிதமாக நமது மரபுகள் போற்றிய தண்ணீரை எவ்வளவு மாசு படுத்த முடியுமோ அவ்வளவு மாசு படுத்தி விட்டோம். இனி இதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்குபவர்களோடு கை கோர்ப்போம். உற்சாக பானங்கள் அருந்துவதை விட்டு, சுத்தமான தண்ணீர் மட்டும் அருந்துவோம். நமக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் தண்ணீர் தேவை. ஆகவே தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவோம்.

    பழைய காலத்தில் வீடுகளில் தாமிரப் பானைகளில் (தவலை) குடி தண்ணீரைச் சேமிப்பர். தண்ணீர் அருந்தும் செம்பு, டம்ளர் ஆகியவை தாமிரத்தில் இருக்கும்.
    தாமிர பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் பிஎச் அளவு &7 ஆக இருக்கும். நமது உடலின் பிஎச் அளவும் அதுவே! இன்று மிகுந்த விலை கொடுத்து நாம் வாங்கிக் குடிக்கும் மினரல் வாட்டர் மற்றும் சுத்தப்படுத்தும் மெஷின்கள் வழியே எடுக்கும் தண்ணீர் ஆகியவற்றில் பிஎச் அளவு - 5 என்ற நிலையில் இருக்கும். அதனால், அதைக் குடிக்கும் போது, நமது உடலின்பிஎச்அளவுகுறையத் தொடங்கும். உடலில் அமிலச்சத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் அமிலத்தன்மை அதிகமாகும் போது நோய்கள் வரும் சூழல்உருவாகும். பிஎச் அளவு (ஆல்கலைன் அளவு) சரியாக இருக்கும் போது நோய்ச்சூழல் இருக்காது.

    ஆகவே தாமிரபாத்திரத்தில் வைத்து அருந்துவதும் நல்லதே! நமது உடலில் 80 சதவீத நீர்ச்சத்து என்பர். 100சதவீத தண்ணீரைப் பாதுகாப்போம். பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்துவோம்.

    காக்கை குருவி நமது ஜாதி என்று பாரதியார் பாடினார். ஒவ்வொரு வீட்டிலும் திறந்த வெளியில் தினமும் பறவைகளுக்கு உணவு வைப்பதுபோல, தண்ணீரும் வைப்போம்.

    வெறும் தேனீ மட்டும் அழிந்து விட்டால் உலகம் 4 வருடத்துக்கு மேல் இயங்காது என்பர். மற்ற உயிரினமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயற்கையோடு (பஞ்சபூதம் -  நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம்) இணைந்து வாழ்வோம்!

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422&2367200, 2313188, 2313194)

    கரூரில் நேற்று கோடை மழை கொட்டி தீர்த்தது. இரவில் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கோடை வெயில் 106,107 டிகிரி பதிவானது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமே என பயந்தனர். 

    இந்த நிலையில் வாட்டி வதக்கிய கோடை வெப்பத்தை கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை தணிய வைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு 4,5 தினங்கள் கனமழை பெய்தது. மேலும் சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கரூர் நகர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. 1 மணிநேரம் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக பட்சமாக கரூரில் 33 மி.மீட்டர் மழை பதிவானது. அதேபோன்று அரவக்குறிச்சியில் 1.2மி.மீ., அணைப்பாளையத்தில் 7மி.மீ., பாலவிடுதியில் 8.4மிமீ., க.பரமத்தியில் 24.2மி.மீ., மயிலம்பட்டியில் 16 மி.மீட்டர் மழை பதிவானது. 

    மழையின் காரணமாக கரூர் வெங்கமேடு, பாலம்மாள்புரம் போன்ற பகுதியில் வெள்ளம் ஆறாக ஓடியது. பாலம்மாள்புரம் ரெயில்வே பாலத்தின் அடியில் வெகுநேரம் வெள்ளம் தேங்கி கிடந்தது. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையின் காரணமாக இரவில் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவியது. குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
    வெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலாலும், அரிப்பாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளாவர். இதனைப் போக்க என்ன வழிகள் உள்ளது என்று பார்க்கலாம்.
    வெயில் தாக்கத்தால் அதிகம் வியர்வை வழிவதால் அல்லது சூரியனின் வெப்பத்தின் தாக்கத்தால் சருமத்தில் வியர்க்குரு வரும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும், முகத்தின் நெற்றி, முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தான் வியர்க்குரு உருவாகும். வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலாலும், அரிப்பாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளாவர். இதனைப் போக்க என்ன வழிகள் உள்ளது.

    மூலிகையின் நற்குணங்கள் கொண்ட சோப்புகளை உபயோகித்து தினமும் இரண்டு வேளைக் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியர்க்குரு வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.

    வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு அந்தத் துண்டுகளை வியர்க்குரு உள்ள இடங்களில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் நன்றாக தேய்த்தெடுத்தால் வியர்க்குரு இரண்டு நாட்களில் மறைந்துவிடும்.

    சோற்றுக் கற்றாழையை நடுவில் கீறி இரண்டாக வெட்டினால் உள்ளே ஜெல்லி போன்று இருக்கும். அந்த பசையை எடுத்து கழுத்து, முக, முதுகு ஆகிய பகுதிகளில் பூசி 15 நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், அதன் குளுமையை உடனே உணர முடியும். இதனால் அரிப்புகள் குறையும்.

    சாமந்திப் பூவின் சாறு சரும பிரச்சனைகளுக்கு உகந்தது. சாமந்திப் பூவை அம்மியில் அல்லது கைகளினால் நசுக்கிப் பிழிந்தால், அதிலிருந்து சாறு வெளிவரும். அந்தச் சாற்றை வியர்குருவின் மேல் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து நன்றாகக் கழுவினால் வந்த இடம் தெரியாமல் சரும பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து போகும். இதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.

    அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்வோர் வாடி வதங்குகின்றனர்.
    சென்னை:

    இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் கோடை மழை பெய்தால் வெப்பம் சற்று தணியும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தபோதும் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை மழை எட்டிப்பார்க்கவில்லை. இதன்காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் இந்த கோடையில் 102 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

    பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்த பின்பு மாலை நேரங்களில் அருகில் உள்ள திறந்தவெளி பூங்கா மற்றும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் குழந்தைகளுடன் படையெடுக்கின்றனர். இதனால் பூங்காக்களில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அதிக வெப்பம் காரணமாக பகல் மற்றும் இரவு முழுவதும் மின்விசிறி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க முடியாது என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    வெயிலின் உக்கிரம் காரணமாக மதிய நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே செல்கின்றன. பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பஸ், ரெயில்களிலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குளிர்சாதன வசதி(ஏ.சி.) இல்லாத பஸ்களில் பயணம் செய்வது சிரமமாக உள்ளது.

    இதன்காரணமாக கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று கூறி பலர் பகல், இரவு எந்த நேரமானாலும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களையே வெளியூர் பயணத்துக்கு தேர்வு செய்கின்றனர்.

    வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கரும்புச் சாறு, பழச்சாறு மற்றும் குளிர்பான கடைகள் திடீரென முளைத்துள்ளன. இதுதவிர மோர், இளநீர், பனை நுங்கு, வெள்ளரி பிஞ்சு வியாபாரமும் சூடுபிடித்துள்ளன.

    டாஸ்மாக் மதுபான கடைகளில் கூலிங் பீருக்கு கிராக்கி அதிகரித்து உள்ளது. கூலிங் பீர் குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது பீரை கூலிங் செய்து கொடுக்கமுடியாமல் பணியாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பல டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் கிடைப்பது இல்லை.

    வெயில் காலத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது. இதையொட்டி எழும்பூரில் உள்ள ஒரு கடைக்கு பல்வேறு ரக பாட்டில் மற்றும் டின் பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளதை படத்தில் காணலாம்.

    சென்னை நகரில் கடற்கரையை ஒட்டியுள்ள சில பகுதிகளில் மட்டும் பகல் நேரங்களில் கடற்காற்று வீசுவதால் வெப்பம் அதிகமாக தெரியவில்லை. #tamilnews
    ×