search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதாவரி"

    கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய மந்திரி நிதின் கட்கரி டுவிட்டர் செய்தியில், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று பதிவிட்டு இருந்தார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் இந்த திட்டம் மிகவும் முக்கியமானது. கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
    ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari #Godavari #Cauvery
    அமராவதி:

    ஆந்திராவின் அமராவதியில் நடந்த பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இது விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கியில் இருந்து நிதியுதவி கோரப்படும்.

    இந்த திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தில் கால்வாய்களை உருவாக்காமல், சிறப்பு தொழில்நுட்பத்துடன் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.  #NitinGadkari #Godavari #Cauvery
    ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    ஐதராபாத்:

    வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இரு நாட்களில் அது வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது.

    அந்த புயல் சின்னத்துக்கு தாய்லாந்து நாடு தேர்வு செய்து வழங்கிய ‘‘பெய்ட்டி’’ எனும் பெயர் சூட்டப்பட்டது. அந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது. அந்த புயல் சின்னம் கடந்த வார மத்தியில் புயலாக உருவெடுத்தது.

    அதன் நகர்வை கணித்த போது முதலில் அது சென்னை அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கணிசமான அளவுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் திசை ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்காமல் போய் விட்டது.

    என்றாலும் பெய்ட்டி புயலின் கடும் சீற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேல் எழுந்து ஆர்ப்பரித்தன.

    இதனால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெய்ட்டி புயலின் நகர்வு மணிக்கு 11 கி.மீ வேகத்திலேயே இருந்ததால் கடல் கொந்தளிப்பு நீடித்தது. சில இடங்களில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    இந்த நிலையில் நேற்று பெய்ட்டி புயல் தீவிரமான நிலையில் இருந்து அதிதீவிர புயலாக மாறியது. நேற்று காலை அந்த புயல் சென்னைக்கு கிழக்கு, தென், கிழக்கு திசையில் சுமார் 430 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

    நேற்று மாலை அது 380 கி.மீ. தொலைவுக்கு வந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இதனால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யாமல் குளிர்ந்த காற்று மட்டும் மிக அதிகமாக வீசியது.

    இன்று அதிகாலை சென்னையை நோக்கிய திசையில் இருந்து பெய்ட்டி புயல் விலகிச் சென்றது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து வடக்கு, வடகிழக்கு திசையில் சுமார் 300 கி.மீட்டர் தொலைவில் பெய்ட்டி புயல் மையம் கொண்டிருந்தது. 8 மணிக்கு பிறகு பெய்ட்டி புயலில் வேகம் அதிகரித்தது.

    16 கி.மீ வேகத்தில் இருந்து 23 கி.மீ. வேகமாக புயலில் சீற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் அதிதீவிர நிலையில் ஆந்திரா கடலோரத்தை பெய்ட்டி புயல் நெருங்கியது. இதனால் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்தது.

    காலை 10 மணியளவில் பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இருந்தது. காக்கிநாடாவில் இருந்து சுமார் 193 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை நெருங்கும் போது புயல் சற்று வலு குறையும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் பலத்த சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் இன்று மதியம் பெய்ட்டி புயல் பலத்த காற்றுடன் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கரையை கடந்தது. பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல் காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இன்று வடக்கு ஆந்திரா, ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    புயல் ஆபத்தைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்கள், குடிநீரையும் அதிக அளவில் ஆந்திர மாநில அரசு கை இருப்பு வைத்துள்ளது.

    விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங் களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை விசாகப்பட்டினத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார். #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    எடப்பாடி பழனிசாமி அறிவித்த கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss #CMEdappadiPalaniswami #cauveryissue

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்தின் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமது கோரிக்கையை ஏற்றே கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் ஒப்புக்கொண்டதாக பெருமிதம் பேசியிருக்கிறார்.

    கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் குறித்து தம்மைப் போலவே தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அத்திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்-அமைச்சர் பழனிச்சாமி முயன்றிருக்கிறார்.

    கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் புதியத் திட்டம் அல்ல; அத்திட்டம் குறித்து பேசப்படுவது இது முதல் முறையும் அல்ல; இதற்கெல்லாம் மேலாக கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் அரசியல் காரணங்களுக்காக சாத்தியமாகாத திட்டம் என்பது தான் உண்மை என்பதை முதல்வர் உணர வேண்டும்.


    கோதாவரி - காவிரி இணைப்பது பற்றி 1970-ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதே திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அப்போதே அந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. அப்போதும், அதற்குப் பிறகும் எப்போதெல்லாம் காவிரிப் பிரச்சனையில் துரோகம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தை ஆசை காட்டி ஏமாற்றுவதற்கான கருவியாக மட்டுமே இத்திட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஒருமுறை கூட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு வந்ததில்லை.

    இப்போதும் கூட, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வரும் நிலையில், கொந்தளித்துள்ள தமிழ் நாட்டு மக்களையும், உழவர்களையும் சமாதானம் செய்வதற்காகத் தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்வைக்கிறது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்திற்கு வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியிடம் அது தொடர்பாக அடுக்கடுக்காக வினாக்கள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்க முடியாத நிதின்கட்கரி, பிரச்சினையை திசை திருப்பும் வகையில் கோதாவரி ஆற்றைக் காவிரியுடன் இணைத்து தமிழகத்திற்கு 150 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    தமிழகத்தை ஏமாற்றுவதற்காக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கையிலெடுத்த அதே ஆயுதத்தை, இப்போது சொந்த மாநில மக்களை ஏமாற்றுவதற்காக முதல்- அமைச்சர் பழனிச்சாமி கையிலெடுத்திருக்கிறார். முதல்வர் பழனிச்சாமி தமிழக மக்களின் பிரதி நிதியா... மத்திய ஆட்சியாளர்களின் பிரதிநிதியா? தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுகிறாரா... மத்திய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற அவர் பாடுபடுகிறாரா? என்ற வினாக்களுக்கு அவரது இந்த நிலைப்பாடே பதிலளிக்கும்.

    கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் பலரும் எதிர்பார்ப்பதைப் போல அவ்வளவு எளிதானது அல்ல. இது 5 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட திட்டம் ஆகும்.

    மராட்டிய-சத்தீஸ்கர் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் அணை கட்டி, அதில் தேங்கும் தண்ணீரை தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லவேண்டும். அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, நாகர்ஜூனா சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வது தான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் ஆகும்.

    கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதே சாத்தியமாகாத நிலையில், கேட்பதற்கே தலைசுற்றும் இந்தத் திட்டத்தை தமிழகம் தவிர்த்த 4 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது சாத்தியமா? என்பதை தமிழ்நாட்டு மக்களும், வேளாண் பெருமக்களும் முடிவு செய்து கொள்ளலாம். இதற்கு மாற்றாக குழாய் வழியாக கோதாவரி நீரை கொண்டு வரும் திட்டமும் உள்ளது. ஆனால், அதுவும் சாத்தியமாகாது.


    கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்து பேச்சு எழுந்ததுமே, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 45 கிராமங்கள் மூழ்கி விடும்; 70 ஆயிரம் பேர் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறி தெலுங்கானா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் கூட கோதாவரி நீர் 3 மாநிலங்களைக் கடந்து தான் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதால், இப்போது கர்நாடகத்துடன் மட்டும் போராடும் தமிழகம், இனி 3 மாநிலங்களுடன் போராட வேண்டியிருக்கும்.

    தென்னிந்திய நதிகள் அனைத்தும் இணைக்கப்படும் போது வேண்டுமானால் கோதாவரி-காவிரி இணைப்பால் தமிழகத்திற்கு பயன்கிடைக்கலாம். அதற்கு முன்பாக இந்த திட்டம் குறித்து பேசுவதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவதைப் போன்றதே. இது தமிழகத்தின் நீர் தேவையை நிறைவேற்றாது.

    குறுவைப் பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பாசன மாவட்டங்களில் பேரழிவு காத்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான்.

    இதை செய்யாமல் மத்திய ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக மாறி தமிழக மக்களை ஏமாற்றும் சதியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடக்கூடாது. மாறாக மத்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #CMEdappadiPalaniswami #cauveryissue

    ×