search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ்புக்"

    ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேரிட்டி டூல்ஸ் அம்சம் மூலம் மூன்று ஆண்டுகளில் தொண்டு நிறுவனங்களுக்காக ரூ.7,224 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக்கில் உள்ள சேரிட்டி டூல்ஸ் (தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சேவை) மூலம் மக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் நிதி திரட்டல் மூலம் இரண்டு கோடி மக்கள் நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து நிதி திரட்டும் சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    “எங்களின் தனிப்பட்ட நிதி திரட்டும் டூல்கள் 20 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது,” என ஃபேஸ்புக்கின் சமூக நலன் அமைப்பின் துணை தலைவர் நவோமி கிளெயிட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

    மக்கள் ஃபேஸ்புக்கின் லாப நோக்கமற்ற மற்றும் தனிப்பட்ட தேவைக்காக நிதி திரட்டும் டூல்களை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் இந்த சேவை 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் இந்த சேவை இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.



    “எங்களின் லாப நோக்கமற்ற சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது, தற்சமயம் 19 நாடுகளில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமாக அவை அதிகரித்துள்ளது. இவை ஃபேஸ்புக் மூலம் நேரடியாக நிதியுதவிகளை பெற முடியும்,” என கிளெயிட் தெரிவித்தார்

    சிறு மற்றும் பெருந்தொகை என நிதி திரட்டும் சேவையை கொண்டு மக்கள் அவர்கள் வாழும் சமூகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

    உதாரணத்திற்கு குழந்தைகளை காப்பாற்றுவதற்கு மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.54.2 கோடி ரூபாய் ஃபேஸ்புக் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உலகம் முழுக்க சுமார் 60 நாடுகளில் கிட்டத்தடட் 65 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதே போன்று நோ கிட் ஹங்ரி (No Kid Hungry) திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.36.1 கோடி சேகரிக்கப்பட்டு அமெரிக்கா முழுக்க குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை உறுதி செய்திருந்த நிலையில், பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. #messengerupdate



    ஃபேஸ்புக் தளத்தில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இதற்கான அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை திரும்பப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    மெசன்ஜரில் அனுப்பிய குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட முதல் பத்து நிமிடங்களுக்குள் அவற்றை திரும்பப்பெற முடியும். இதன் மூலம் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை திருத்தவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ முடியும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் திரையில் தோன்றுகிறது. 

    ஃபேஸ்புக்கில் அன்சென்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கும், இதனால் மெசேஜ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டால் அவை மறுபரிசீலனை செய்யப்பட்டும். அனுப்பிய மெசேஜ்களை திரும்பப்பெறும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது.



    முதற்கட்டமாக இந்த வசதி போலாந்து, பொலிவியா, கொலம்பியா மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளில் விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படம், வீடியோக்கள், லின்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய பத்து நிமிடங்களுக்குள் அழிக்க முடியும்.

    மெசஞ்சர் உரையாடலில் அனுப்பப்படும் அனைத்தும் தகவல்களை அழிக்க முடியும், எனினும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே உங்களால் அழிக்க முடியும். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை உங்களால் அழிக்க முடியாது. 

    மெசஞ்சரில் அன்சென்ட் அம்சத்தை பயன்படுத்த, மெசேஜை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மெசேஜை திரும்பப் பெறச் செய்யும் ஆப்ஷன் திரையில் தெரியும். அதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். 

    இவ்வாறு செய்யும் போது “மெசேஜ் நிரந்தரமாக அழிக்கப்படும், நீங்கள் மெசேஜை அழித்த விவரம் அனைவருக்கும் தெரியவரும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்” என்ற எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். மேலும் பல்வேறு புதிய அன்சென்ட் வசதிகளை வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    டிக்டொக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #Facebook #Lasso



    டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய லேசோ ஆப் நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. புதிய செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகமாகி இருக்கிறது.

    லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வசிதயும் வழங்கப்படுகிறது. வைன்ஸ் போன்று செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்யலாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.



    லேசோ செயலியில் இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும்.

    விரைவில் லேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் வலைதளத்தில் இருந்து பயங்கரவாதத்தை பரப்பும் சுமார் 1.4 கோடி பதிவுகள் நீக்கப்பட்டப்பட்டுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் பயங்கரவாதத்தை பரப்பும் நோக்கம் கொண்ட சுமார் 1.4 கோடி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பதிவுகளில் ஐ.எஸ்., அல் கொய்தா அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2018 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் மட்டும் ஃபேஸ்புக் சுமார் 94 லட்சம் பயங்கரவாதம் சார்ந்த தரவுகளை நீக்கியிருக்கிறது. இதில் பெரும்பாலானவை விசேஷ வழிமுறைகள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டவை ஆகும். மூன்றாம் காலாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை சுமார் 30 லட்சம் பழைய பயங்கரவாதம் சார்ந்த தரவுகள் நீக்கப்பட்டுள்ளன.

    இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா தரவுகள், ஃபேஸ்புக் பயனர்கள் கண்டறியப்படும் முன்னரே 99 சதவிகித தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மோனிகா பிகெர்ட் வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    2018ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது அதற்கடுத்த இரண்டு காலாண்டுகளில் அதிகளவு பயங்கரவாதம் சார்ந்த தரவுகள் நீக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் தளத்தில் ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா சார்ந்த பதிவுகளை கண்டறிய மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    ஃபேஸ்புக் பதிவுகளில் அதிகளவு பயங்கரவாதம் சார்ந்த குறிப்புகள் இடம்பெற்று இருக்கும் நிலையில் மெஷின் லெர்னிங் கண்டறியும் பதிவுகள் தானாக நீக்கப்படும். இதுபோன்ற பதிவுகளை பயனர்கள் கண்டறியும் நேரத்தை மெஷின் லெர்னிங் பயன்பாடு குறைத்து இருக்கிறது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Messenger



    வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்சமயம் இதே அம்சம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாக குறிப்பட்டிருக்கிறது.



    அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும். #Messenger #Facebook
    ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தும் சுமார் 12 கோடி பேரின் விவரங்கள் களவாடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #databreach



    ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஓர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை, ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 12 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து பிபிசி வெளியிட்டிருக்கும் தகவல்களில், இம்முறை கிடைத்திருக்கும் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை ஹேக்கர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் அவர்களின் குறுந்தகவல்களும் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

    குறுந்தகவல் உள்ளிட்ட ஃபேஸ்புக் பயனர் விவரங்களை ஹேக்கர்கள் ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு 0.10 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7.28 பைசா எனும் கட்டணத்திற்கு விற்பனை செய்யப் போவதாக ஹேக்கர்கள் அச்சுறுத்தி இருப்பதோடு, அவற்றில் சில அக்கவுண்ட்களை வலைதளத்தில் விற்பனைக்கு பட்டியலிட்டனனர்.

    புதிய தகவல் திருட்டு சம்பவத்தை ஃபேஸ்புக் மறுத்திருக்கும் நிலையில் ஹேக்கர்கள் பயனர் விவரங்களை மால்வேர் எக்ஸ்டென்ஷன்கள் மூலம் திருடி இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இம்முறை நடந்திருக்கும் தகவல் திருட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பயனர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில அக்கவுண்ட்கள் லண்டன், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்தவை என கூறப்படுகிறது.



    பயனர் விவரங்களை வைத்திருக்கும் ஹேக்கர்கள் வலைதளம் ஒன்றில் வெளியிட்ட விளம்பரங்களில் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்கள் ஒரு அக்கவுண்ட்டுக்கு 0.10 டாலர்கள் கட்டணத்திற்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. ஹேக்கர்கள் பதிவிட்டிருக்கும் விளம்பரத்தில் உதாரணமாக 81,000 பயனர்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டன. எனினும் இந்த விளம்பரம் தற்சமயம் எடுக்கப்பட்டுவிட்டது.

    இதுகுறித்து டிஜிட்டல் ஷேடோஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சுமார் 12 கோடி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் திருடு போக அதிக வாய்ப்புகள் இல்லை என்றும் ஃபேஸ்புக் இத்தகைய தகவல்களை தவறவிட்டிருக்காது என தெரிவித்துள்ளது. மேலும் விளம்பரத்தில் பதிவிடப்பட்ட 81,000 ஃபேஸ்புக் அக்கவுண்ட்களில் தனிப்பட்ட குறுந்தகவல்கள் இடம்பெற்றிருந்ததை டிஜிட்டல் ஷேடோஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது.

    பிரவுசர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு மால்வேர் நிறைந்த எக்ஸ்டென்ஷன்களை தங்களது ஸ்டோர்களில் இருந்து எடுத்து விடுமாறு கேட்டு கொண்டிருக்கிறோம். மேலும் சட்டத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை பட்டியலிட்ட வலைதளத்தை முடக்கி இருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரோஷன் தெரிவித்தார்.

    பயனர்கள் எக்ஸ்டென்ஷன்களை டவுன்லோட் செய்யும் போது அதிக கவனமாக செயல்பட வேண்டும், இவ்வாறு செய்வோர் அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த நிறுவனங்களின் எக்ஸ்டென்ஷன்களை மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.
    ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய செயலி பயனர்கள் தங்களது லிப் சின்க் செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Lasso



    ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ என்ற பெயரில் உருவாகி வரும் புதிய செயலியில் பயனர்கள் பிரபல பாடல் அல்லது வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வீடியோக்களை படமாக்கி, அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஃபேஸ்புக்கின் புதிய லஸ்ஸோ செயலி டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக இருக்கும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிக்டொக் செயலி இளைஞர்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முற்றிலும் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை செய்யும் வகையில் இருக்கிறது.

    அந்த வகையில் ஃபேஸ்புக் சார்பில் உருவாகி வரும் புதிய செயலியை ஃபேஸ்புக்கின் வீடியோ மற்றும் வாட்ச் குழுவினரால் உருவாக்கப்படுவதாகவும், இதற்கு தலைமை மூத்த வடிவமைப்பாளர் பிராடி வொஸ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வொஸ் முன்னதாக ஃபேஸ்புக்கின் டி.வி. செயலியில் பணியாற்றி வந்தார்.



    ஃபேஸ்புக் நிறுவனம் இளைஞர்களுக்கான புதிய செயலியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே வருடத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு இசை நிறுவனங்களிடம் உரிமையை கைப்பற்றும் பணிகளில் ஈடுபடத் துவங்கியது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயனர்கள் இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க முடியும், பின் இந்த அம்சம் ஃபேஸ்புக்கிலும் சேர்க்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப் சின்க் அம்சத்தை நேரலை செய்யும் வசதியை சோதனை செய்ய துவங்கியிருக்கிறது. 

    மேலும் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களுக்கு விரும்பிய பாடல்களை பின் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படும் என்றும் இதனை நண்பர்கள் கேட்க முடியும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் மைஸ்பேஸ் மியூசிக் போன்று இருக்கிறது.
    ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டோரிக்களில் மியூசிக் சேர்க்கும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக் ஸ்டோரிக்களில் மியூசிக் சேர்க்கும் வசதி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஸ்டோரிக்களில் சேர்க்கப்படும் இந்த வசதி, விரைவில் ப்ரோஃபைலிலும் சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் சேர்ப்பதை போன்றே ஃபேஸ்புக் தளத்திலும் புகைப்படம் மற்றும் வீடியோவில் பாடலை சேர்க்க முடியும். இதை செயல்படுத்த போட்டோ அல்லது வீடியோ எடுத்து, மியூசிக் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பயனர் விரும்பிய பாடலை சேர்த்ததும், பாடலில் உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேர்க்கலாம். 

    பயனர்கள் ஸ்டிக்கரை விரும்பும் இடத்தில் வைத்துக் கொண்டு அவற்றில் எஃபெக்ட்களை சேர்த்து ஸ்டோரியை கஸ்டமைஸ் செய்யலாம். இத்துடன் ஃபேஸ்புக் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்த லிப் சின்க் லைவ் அம்சத்தை விரைவில் வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பாடல்களுக்கு லிப் சின்க் செய்ய முடியும். இந்த வசதி உலகம் முழுக்க அனைத்து ப்ரோஃபைல்களுக்கும் வழங்கப்படுகிறது. 

    புதிய அம்சம் அதிக ஆர்டிஸ்ட் மற்றும் கிரியேட்டர்களுக்கு வழங்கும் நோக்கில், பக்கங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிரபலங்கள் தங்களது நலம்விரும்பிகளுடன் இணைப்பில் இருக்க முடியும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபிரெட் பெடைல் தெரிவித்தார்.
    மெசன்ஜர் செயலியின் எளிய பதிப்பினை மெசன்ஜர் 4 என்ற பெயரில் வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Messenger #Facebook



    மெசன்ஜர் செயலியின் எளிய பதிப்பை மெசன்ஜர் 4 என்ற வடிவில் வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் 10ல் 7 பேர் தங்களது மெசேஜிங் ஆப் எளிமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதன்படி புதிய மெசன்ஜரில் மூன்று டேப்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 

    மெசன்ஜர் 4ல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு இருப்பதால், மிக எளிமையாக செல்ஃபி எடுத்து அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். மெசன்ஜர் 4ன் பீப்பிள் டேப் கிளிக் செய்து நண்பர்களை தேடவோ, ஸ்டோரிக்களை பார்க்கவோ அல்லது யார் யார் ஆன்லைனில் உள்ளனர் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.



    இத்துடன் டிஸ்கவர் டேப் இருப்பதால், வியாபார நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு சமீபத்திய சலுகைகள், இன்ஸ்டன்ட் கேம்கள், செய்திகள் மற்றும் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். உரையாடல்களை தனித்துவப்படுத்தும் வகையில் கலர் கிரேடியன்ட்ஸ் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சம் கொண்டு உரையாடல்களை வெவ்வேறு நிறங்களில் பிரித்துக் கொள்ளலாம். சிவப்பு முதல் நீலம் வரையிலான நிறங்களை பார்க்க முடியும். உங்களது உரையாடல்களை உங்களது மனநிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். மெசன்ஜர் 4 படிப்படியாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

    மெசன்ஜர் 4ல் டார்க் மோட், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ஃபேஸ்புக் மேலும் அறிவித்துள்ளது.
    பயனர் விவரங்களை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் மீது நம்பிக்கையற்ற சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CyberSecurity



    ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை கைப்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து வலை வீசியிருப்பதாக கூறப்படுகிறது. 

    ஃபேஸ்புக் சார்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் அறியப்படாத நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்ற இருக்கும் நிறுவனம் பயனர் அக்கவுன்ட்களை பாதுகாப்பது, ஹேக்கிங் முயற்சிகளை கண்டறிந்து தெரிவிப்பது என பல்வேறு சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய நிறுவனத்தை கைப்பற்றும் பணிகள் எந்தளவு நிறைவுற்று இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2018-ம் ஆண்டின் இறுதியில் நிறுவனத்தை கைப்பற்றலாம் என தெரிகிறது. புதிய தகவல்கள் குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.



    சமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் நிலையில், புதிய நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் ஃபேஸ்புக் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும். சமீபத்திய ஹேக்கிங், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சர்ச்சை உள்ளிட்டவை சேர்த்து ஃபேஸ்புக் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதால், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Facebook #CyberSecurity
    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக மார்க் சூக்கர்பர்க்கிற்கு அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சூக்கர்ப்ர்க் விலக வேண்டும் என அந்நிறுவன பங்குதாரர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

    பங்குதாரர்களாக பொருளாலர்கள், மூத்த முதலீட்டு அலுவலர்கள், டிரில்லியம் அசெட் மேனேஜ்மென்ட் எனும் தனியார் நிறுவனம் உள்ளிட்டவை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பதவிகள் பிரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

    ஃபேஸ்புக் நிறுவன துணை நிறுவனரான மார்க் சூக்கர்பர்க் தற்சமயம் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட இரண்டு பொறுப்புகளை வகிக்கிறார்.

    "ஃபேஸ்புக்கின் நிர்வாக அமைப்பு முதலீட்டாளர்களுக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. முதலீட்டாளர் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பங்குதாரர் மதிப்பை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என இல்லினியோஸ் மாநில பொருளாலர் மைக்கேல் ஃபிரெரிக்ஸ் தெரிவித்துள்ளார். 



    தொடர் சர்ச்சைகளை ஃபேஸ்புக் கையாண்ட விதம் தான் பங்குதாரர்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கிறது.

    ஃபேஸ்புக் தொடர் சர்ச்சைகளின் துவக்கம் கேம்பிரிட்ஜ் அனாலடிகா விவகாரமாக அமைந்தது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 8.7 கோடி பேரின் விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது அம்பலமானது. இதைத் தொடர்ந்து ஹேக்கர்கள் கைவரிசையால் சுமார் மூன்று கோடி பேரின் விவரங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து திருடப்பட்டது.

    தற்சமயம் எழுந்து இருக்கும் கோரிக்கைக்கான வாக்கெடுப்பு மே 2019 இல் நடைபெற இருக்கும் ஃபேஸ்புக் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் நடைபெறலாம், எனினும் இந்த கோரிக்கை நிறைவேறும் வாய்ப்புகள் குறைவே. சூக்கர்பர்க் மற்றும் சிறு நிறுவனங்கள் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளில் சுமார் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளனர்.

    முன்னதாக இதேபோன்ற சூழல் கடந்த ஆண்டு ஏற்பட்ட போது சுமார் 51 சதவிகித பங்குதாரர்கள் ஆதரவளித்தனர்.
    ஃபேஸ்புக் தளத்தில் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், உங்களின் விவரம் பறிபோனதா என்பதை அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். #FacebookHack



    ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

    அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது. சமீபத்தில் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்தது. அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டன. 

    இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.



    இவ்வாறு உங்களது தகவலும் திருடப்பட்டு இருப்பின், அதை எவ்வாறு கண்டறிய ஃபேஸ்புக் உதவி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் கீழ் உங்களது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். உங்களது விவரங்கள் திருடப்பட்டது உண்மையெனில் அதை அறிந்து கொள்ளலாம். மேலும் திருடப்படவில்லை எனில், அந்த விவரமும் அறிந்து கொள்ளலாம்.

    வல்லுநர்களின் படி தகவல் பறிகொடுத்த பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஹேக்கர்கள் திருடியிருக்கும் தகவல் கொண்டு போலி அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும் என்பதால், பயனரின் அக்கவுன்ட் விவரங்களை இயக்க முடியும்.

    ஹேக்கர்கள் திருடிய தகவல்களின் விவரங்களை ஃபேஸ்புக் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தும். 

    மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ×