search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ்புக்"

    ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக அறிவித்துள்ள நிலையில், பயனர் தகவல்களை சேகரிக்கவுமில்லை, சேமிக்கவுமில்லை என ஹூவாய் அறிவித்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரிக்கவும் இல்லை அவற்றை சேமிக்கவும் இல்லை என அறிவித்துள்ளது.

    முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை ஹூவாய் உள்பட நான்கு சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதை ஒப்புக் கொண்டிருந்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அறிவிக்கப்பட்ட ஹூவாய் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் செய்தது, ஃபேஸ்புக் மீது மீண்டும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

    சீனாவை சேர்ந்த ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம், தனது பயனர் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தமிட்டிருக்கிறது. எனினும் இந்த ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் கட்டுப்பாடுகளுடன் ஃபேஸ்புக் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டன என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்த பிரிவுக்கான துணை தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கை, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்திரிக்கை செய்தியில் ஃபேஸ்புக் எவ்வாறு அதன் பயனர்களின் தகவல்களை மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கியது என்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தது.


    கோப்பு படம்

    ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.

    "ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.

    ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வரெலா தெரிவித்தார்.

    ஹூவாய் சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பயனர் சேவையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது என ஹூவாய் தெரிவித்துள்ளது. “மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ஹூவாய் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தளத்தின் சேவைகளை பயனர்களுக்கு மிக எளிமையாக வழங்கப்பட்டன,” என ஹூவாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜோ கெல்லி தெரிவித்துள்ளார். 

    “ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை கேகரித்து, சேமிக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
    கேம்ப்ர்டிஜ் அனாலிடிகாவை தொடர்ந்து சீன நிறுவனங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் புதிய பதில் அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    "அமெரிக்காவில் இயங்கி வரும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை போன்றே ஃபேஸ்புக் நிறுவனமும் சீன நிறுவனங்களுடன் இணைந்து தங்களது சேவைகளை சீன நிறுவன சாதனங்களில் இயங்க வைக்க ஒன்றிணைந்து பணியாற்றியது," என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்தங்கள் பிரிவு தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஃபேஸ்புக் சார்பில் ஹூவாய் மட்டுமின்றி லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    பிளாக்பெரி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை போன்ற உரிமையை மட்டுமே சீன நிறுவனங்களுக்கும் வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக்பெரி மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒப்பந்தத்தில் ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் மதம், அரசியல் விருப்பம், பணி, கல்வி மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள வழி செய்கிறது. 

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் தகவல்களை செல்போன் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்தி வந்தது எங்களுக்கு தெரியாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் ஆப் சேவைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் நிறுவனங்களுடனான இன்டர்ஃபேஸ் ஏற்பாடுகளை ஃபேஸ்புக் நிறுவனம் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.


    கோப்பு படம்
    ஹூவாய் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்து 2010-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, இவற்றின் காலக்கெடு இந்த வார இறுதியில் நிறைவுறுகிறது. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.

    சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் சார்பில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


    கோப்பு படம்

    "ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.

    ஏபிஐ அல்லது அப்ளிகேஷன் ப்ரோகிராம் இன்டர்ஃபேஸ் என்பது மென்பொருள்களின் பாகங்கள் எவ்வாறு இயங்கும் என்பதை குறிக்கும். சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மிக கவனமாக கையாளப்பட்டதாக ஃபேஸ்புக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சீன அரசுடனான தொடர்பு குறித்து ஹூவாய் பலமுறை மறுத்திருக்கிறது. மேலும், ஹூவாய் உள்கட்டமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டிங் சாதனங்கள் உலகம் முழுக்க 170 நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக ஹூவாய் நீண்ட காலமாக அறிவிக்கத்து வருகிறது.
    ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களுக்கு வாடிக்கையார்களின் தகவல்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் பதில் அளித்துள்ளது. #Facebook #databreach
    வாஷிங்டன்:

    ஸ்மார்ட்போன் தயாரிக்கும் 60 நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் ஒப்பந்தமிட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், சாம்சங், பிளாக்பெரி, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் ஒப்பந்தமிட்டிருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, இதுவரை பலகட்ட விசாரணைகளில் ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் அந்நிறுவன உயர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். 

    கேம்ப்ரிடஜ் அனாலிடிகா விவகாரம் இன்றளவும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் நிலையில், நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் புதிய குற்றச்சாட்டுக்கள் ஃபேஸ்புக் நிறுவனம் மீது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

    இந்நிலையில் நி யார்க் டைம்ப்ஸ் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை ஃபேஸ்புக் மறுத்திருக்கிறது. நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்து இருப்பது போன்று ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் அதிகபட்ச தகவல்களை பயன்படுத்த எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் மிக கடுமையாக பாதுகாக்கப்படுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கும் மென்பொருள் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த மென்பொருளின் தகவல்களை அமேசான், ஆப்பிள், பிளாக்பெரி, ஹெச்டிசி, மைக்ரோசாஃப்ட் மற்றும் சாம்சங் போன்ற 60 நிறுவனங்கள் பயன்படுத்தி வந்ததாக ஃபேஸ்புக் சேவை பிரிவு துணை தலைவர் ஐம் ஆர்கிபாங் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் வாடிக்கையாளர் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்ததற்கு மாற்றாக ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் நண்பர்கள் தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி பகிர்ந்து கொள்கிறது என குறிப்பிடப்பட்டது. 

    மேலும், சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்களது நண்பர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாமென கேட்டு கொண்ட பின்பும் ரகசியமாக பயன்படுத்தியதாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களை முற்றிலும் மறுக்கும் வகையில், நண்பர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட பயனர்கள் தங்களது சாதனங்களில் அதற்கான அனுமதி அளித்திருந்தால் மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக ஐம் ஆர்கிபாங் தெரிவித்துள்ளார். #Facebook #databreach #SocialMedia
    ஃபேஸ்புக் தளத்தில் டிரென்டிங் செக்ஷன் பகுதியை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஃபேஸ்புக் தளத்தில் இருக்கும் டிரென்டிங் செக்ஷனை அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபேஸ்புக்கில் அதிக டிரென்டிங் ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 2014-ம் ஆண்டு வாக்கில்  டிரென்டிங் செக்ஷன் சேர்க்கப்பட்டது.

    ஐந்து நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டிரென்டிங் செக்ஷன் வெறும் 1.5% க்ளிக்களை மட்டுமே பெற்று வருவதால் இந்த அம்சம் நீக்கப்படுகிறது. இதே காரணத்திற்காக அடுத்த வாரம் முதல் ஃபேஸ்புக்கில் டிரென்டிங் பகுதி நீக்கப்பட்டு அதன் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்பு இன்டகிரேஷன்களும் நீக்கப்படுகிறது.



    ஃபேஸ்புக்கில் வரும் செய்திகள் உண்மையானதாகவும், நம்பத்தகுந்த நிறுவனங்கள் தான் செய்திகளை வழங்குகின்றன என்பதை உறுதி செய்ய புதிய வழிமுறைகளை ஃபேஸ்புக் கண்டறிந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 80 செய்தி நிறுவனங்களை கொண்டு பிரேக்கிங் நியூஸ் லேபெல் ஆப்ஷனை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. இவை செய்தி நிறுவனங்கள் தங்களது நியூஸ் ஃபீட்களில் பிரேக்கிங் நியூஸ் இன்டிகேட்டரை பதிவிட வழி செய்யும்.

    ஃபேஸ்புக் செயலியின் ஈவென்ட்ஸ் பகுதியில் டுடே இன் லோக்கல் நியூஸ் (Today In local news) எனும் அம்சம் பிரத்யேகமாக வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்திலும் இதேபோன்ற அம்சத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் நேரலை மற்றும் தினசரி செய்திகளை தெரிந்து கொள்ள முடியும்.
    உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் சேவைகளாக இருக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்க ஒரு நாடு திட்டமிட்டுள்ளது.
    லண்டன்:

    உகாண்டா நாட்டு வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற குறுந்தகவல் செயலி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

    ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக இருக்கும் புதிய வரிச் சட்டம், குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளை பயன்படுத்துவோர் தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என பிபிசி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் மாத வாக்கில் அந்நாட்டு குடியரசு தலைவர் யோவெரி முஸ்வேனி சமூக வலைத்தளங்கள் போலி செய்திகள் மற்றும் கிசுகிசுக்களை ஊக்குவிப்பதாக தெரிவித்திருந்தார். 

    உகான்டா பாராளுமன்றத்தில் புதிய சட்டத்திற்கான ஒப்பதல் வழங்கப்பட்டதும், சட்ட குறிப்பில் கையொப்பமிடுவதாக முஸ்வேனி தெரிவித்துள்ளார். இதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்து இருக்கிறார். 


    கோப்பு படம்

    "அன்புமிக்க உகான்டா, சமூக வலைத்தள சட்டம் என் மேஜைக்கு வந்தால், கையெழுத்திட தயங்க மாட்டேன். சமூக வலைத்தள மசோதா ஒவ்வொரு உகான்டா குடிமகனும் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தினசரி அடிப்படையில் வரி செலுத்தக் கோரும்," என முஸ்வேனி ட்விட் மூலம் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற செய்தி தொடர்பாளர் க்ரிஸ் ஒபோர், இந்த சட்ட மசோதா ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். உகான்டா மக்கள் அதிகளவு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது நாட்டின் வருவாய்க்கு இந்த மசோதா முக்கிய பங்களிக்கும் என தெரிவித்துள்ளார்.

    அரசு அவசர வரிச்சட்டத்தை அதிகம் நம்பியிருக்கவில்லை. இது மறுவிநியோக வரி என்பதால் நிதி திட்டங்களுக்கான தொகையை மட்டுமே அரசு எதிர்பார்க்கிறது. என ஒபோர் தெரிவித்தார். தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் வரி மிகவும் குறுகிய தொகை என்பதால் மக்களுக்கு இது அதிக சிரமமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
    இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் டிஜிட்டல் பேமென்ட்ஸ் வசதியின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.



    2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    தென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பப்புவா நியூகினியா:

    பப்புவா நியூகினியா அரசு ஃபேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்துக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை நிறுத்தும் வகையிலும், அந்நாட்டு மக்களின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்பு துறை மந்திரி சாம் பசில் கூறும் போது, தடை விதிக்கப்படும் போது தகவல் தொடர்பு துறை மற்றும் பப்புவா நியூகினியா தேசிய ஆய்வு மையம் சார்பில் சமூக வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ஃபேஸ்புக் தடை செய்யப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் போலி கணக்கு வைத்திருப்போர், ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், தவறான தகவல்களை பரப்புவோர் கண்டறியப்பட்டு, போலி தகவல்கள் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.


    கோப்புப்படம்

    இந்த நடவடிக்கை மூலம் உண்மையான கணக்குகளை வைத்திருப்போர் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்த வழி செய்யும். பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவை தடை செய்யப்படுவது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் பப்புவா நியூகினியாவில் சைபர் குற்றத்திற்கென சட்டம் இயற்றப்பட இருக்கிறது.

    “எங்கள் நாட்டில் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீங்குக்கு இடமளிக்க முடியாது. சைபர் குற்றத்திற்கான சட்டம் குறித்து முறையான பயிற்சி மற்றும் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வரை காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவேன்,” என பசில் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியனில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். மேலும் ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  

    ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ரகசியமாக திருடி அவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன நடவடிக்கை அம்பலமானதைத் தொடர்ந்து பப்புவா நியூகினியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் உளவியல் ஆய்வாளரான அலெக்சான்டர் கோகன் என்பவரால் உருவாக்கப்பட்ட செயலியை கொண்டு சேகரிக்கப்பட்டது.
    வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. #facebook #cambridgeanalitica #facebookcompensation
    பிரசல்ஸ்:

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

    இதுதொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய சட்ட வல்லுனர்கள் முன்னிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார். அவரது விளக்கத்தில் சட்டவல்லுனர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் சட்டவல்லுனர்களுக்கு இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான் என்றும், இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை என்றும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனவும் தனது அறிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. #facebook #cambridgeanalitica #facebookcompensation
    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து நகர்ப்புறகளில் அதிவேக வைபை வழங்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றன.
    கலிஃபோர்னியா:

    உலகம் முழுக்க இன்டர்நெட் வசதியை கட்டமைக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்த ஆய்வுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் சமீபத்தில் அறிமுகம் செய்தது. 

    ஃபேஸ்புக் அறிமுகம் செய்த டெராகிராஃப் தொழில்நுட்பம் மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் அமைப்பு ஆகும். இது வழக்கமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை பாய்ச்சும். இந்த தொழில்நுட்பம் நகர்ப்புற பகுதிகளில் கட்டிடங்களை கடந்தும் அதிவேக இணைய வசதியை சீராக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    டெராகிராஃப் ப்ரோடோடைப்

    அதிவேக இணைய வசதியை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் பொருத்த இருக்கிறது. இதன் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை 2019-ம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்களின் தொழில்நுட்பம் 802.11ay WLAN தரத்தில் 60 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வலையை பயன்படுத்தி அதிகபட்சம் 300 முதல் 500 மீட்டர் தூரம் வரை நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும். எனினும் பெரிய ஆன்டெனா, சேனல் பான்டிங் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இணைய பரப்பளவு மற்றும் வேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.


    டெராகிராஃப் நெட்வொர்க்

    புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் இருக்கும் இடையூறுகளை கடந்து அதிக பயனர்களுக்கு இணைய வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெராகிராஃப் சோதனை செய்யப்பட்ட இருக்கும் இடம் குறித்து இருநிறுவனங்கள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும் சான் ஜோஸ் நகரில் டெராகிராஃப் தொழில்நுட்பம் சோதனை செய்யப்படலாம் என ஃபேஸ்புக் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. ஃபைபர் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும்.

    புகைப்படங்கள்: நன்றி ஃபேஸ்புக், பிக்சாபே
    ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டோரீஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஃபேஸ்புக் தளத்தில் ஸ்டோரீஸ் அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஃபேஸ்புக் தளத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பின்னர் பார்க்க சேமித்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை ஆர்ச்சிவ் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதிகள் ஏற்கனவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    ஃபேஸ்புக் கேமரா கொண்டு படமாக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்க முடியும். இவற்றை குறிப்பிட்ட வாடிக்கையாளர் மட்டும் பார்க்க முடியும். இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் மெமரியை சேமிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கிளவுடில் சேமிக்கப்படுகிறது. இவற்றை சேமித்து வைத்து பின்னர் பகிர்ந்து கொள்ள முடியும்.


    ஃபேஸ்புக் கேமரா

    ஃபேஸ்புக் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை மட்டுமே தளத்தில் சேமிக்க முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டுள்ளது. என ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சத்திற்கான தலைவர் கானர் ஹேஸ் தெரிவித்துள்ளார். 

    வாய்ஸ் போஸ்ட் அம்சத்தில் வாடிக்கையாளர்கள் ஆடியோ நோட்களை ஸ்டோரீக்களாக பதிவு செய்ய முடியும். இத்துடன் புகைப்படங்களையும் சேர்க்க முடியும். “வாய்ஸ் போஸ்ட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்க அவர்கள் விரும்பும் வழிகளை பயன்படுத்த முடியும்.”  என்றும் ஹேஸ் மேலும் தெரிவித்தார்.

    இந்த அம்சம் குறைந்த டேட்டா அல்லது நெட்வொர்க் இருக்கும் பகுதிகளிலும் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது நியூஸ் ஃபீடில் மற்றவர்களும் வாய்ஸ் போஸ்ட்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் வாய்ஸ் போஸ்ட் செய்யும் கால அளவு 20 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


    ஃபேஸ்புக் வாய்ஸ் போஸ்ட்

    இந்த அம்சம் தற்சமயம் ஃபேஸ்புக் லைட் பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தாலும் விரைவில் ஆன்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஸ்டோரீ அம்சம் போன்றே இந்த போஸ்ட்களும் 24 மணி நேரத்திற்கு பின் மறைந்து விடும்.

    ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் அம்சம் வாடிக்கையாளர்களை தங்களது ஸ்டோரீக்களை பார்க்கவும், ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஸ்டோரீக்களை ஆர்ச்சிவ் செய்வதற்கான அனுமதி கோரப்படும், இங்கு உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். ஆர்ச்சிவ் செய்ய வேண்டாமெனில் மறுக்க கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். 

    இதனை எப்போது வேண்டுமானலும் பார்க்கவும், அவற்றை போஸ்ட் அல்லது ஸ்டோரியாக மீண்டும் ஷேர் செய்யும் வசதிகள் வழங்கப்படுகிறது. ஸ்டோரீஸ் அம்சத்தில் வாய்ஸ் போஸ்ட் பதிவு செய்தால் குறிப்பிட்ட ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்து விடும், எனினும் ஆர்ச்சிவ் அம்சத்தை செயல்படுத்தி இருந்தால், அவற்றை ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் பகுதியில் பார்க்க முடியும்.
    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா மற்றும் தினியுரிமை விதிகளை மீறியதால் இந்த செயலிகள் நீக்கப்படுவதாக ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயலிகள் அதிகளவு டேட்டாவை பயன்படுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில் 2014-ம் ஆண்டு விதிமுறைகளை மாற்றுவதற்கு முன் அதிகளவு டேட்டாவை இயக்க அனுமதி வைத்திருந்த செயலிகளை ஃபேஸ்புக் ஆய்வு செய்தது. ஏற்கனவே ஃபேஸ்புக் அறிவித்த படி ஆய்வுக்கு அனுமதியளிக்காத செயலிகள் ஃபேஸ்புக்கில் இருந்து முடக்கப்படும். 

    ஃபேஸ்புக்கில் இருக்கும் செயலிகள் தற்சமயம் இருவிதங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. ஒன்று அதிகளவு டேட்டா பயன்படுத்துபவை மற்றொன்று பிரச்சனைகள் இருப்பதாக தெரிந்தால், நேர்முக தேர்வு முறை அல்லது ஆன்-சைட் ஆய்வுகளின் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    செயலிகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை சுமார் 1000-க்கும் அதிகமான செயலிகள் ஆய்வு செய்யப்பட்டு 200 செயலிகள் இதுவரை நீக்கப்பட்டு இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் செயலிகள் நீக்கப்பட்டு, இதுகுறித்த தகவல் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2015-ம் ஆண்டுக்கு முன் பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் செயலிகள் டேட்டாக்களை தவறாக பயன்படுத்தி இருப்பந்தால் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும். தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இதுகுறித்த அப்டேட் தொடர்ந்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×