என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 102587
நீங்கள் தேடியது "ஜனாதிபதி"
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். #president #presidentapproves #RamnathKovind #10pcreservation
புதுடெல்லி:
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் இன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது. #president #presidentapproves #RamnathKovind #10pcreservation
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர்கள் கேரள அரசு மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர். #BJP #Sabarimala #RamnathKovind
புதுடெல்லி:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களையும் மீறி 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி சபரிமலையில் தரிசனம் செய்தனர்.
இதை கண்டித்து மாநிலத்தில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்த தொடர் வன்முறையால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர்கள், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சபரிமலையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் மாநில அரசு அழித்து வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், வழக்கமான பஜனை பாடுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும், சபரிமலையை நிர்வகிக்கும் வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை விசாரித்து முடிக்கும்வரை கேரள அரசு காத்து இருந்திருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மிகுந்த அவசரம் காட்டுகிறது.
இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தவும், அவர்களது மத நிறுவனங்களை அழித்து, அவர்களது உணர்வுகளை புண்படுத்தவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததையே காட்டுகிறது. அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு குறிவைத்து இருக்கிறது.
பிற மதத்தை சேர்ந்த பெண்கள் நுழைவதற்கு உதவுவதன் மூலம் சபரிமலையின் புனிதத்தை கெடுப்பதில் அரசும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர். போலீசார் கூட, பெண்களுக்கு தங்கள் சீருடைகளை அணிவித்து சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். இது இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும்.
இவ்வாறு அந்த மனுவில் பா.ஜனதாவினர் குறிப்பிட்டு இருந்தனர்.
ஜனாதிபதியை சந்தித்த குழுவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான சரோஜ் பாண்டே, மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான எம்.பி.க்கள் இடம்பெற்று இருந்தனர். #BJP #Sabarimala #RamnathKovind
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களையும் மீறி 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி சபரிமலையில் தரிசனம் செய்தனர்.
இதை கண்டித்து மாநிலத்தில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்த தொடர் வன்முறையால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர்கள், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சபரிமலையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் மாநில அரசு அழித்து வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், வழக்கமான பஜனை பாடுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும், சபரிமலையை நிர்வகிக்கும் வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை விசாரித்து முடிக்கும்வரை கேரள அரசு காத்து இருந்திருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மிகுந்த அவசரம் காட்டுகிறது.
இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தவும், அவர்களது மத நிறுவனங்களை அழித்து, அவர்களது உணர்வுகளை புண்படுத்தவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததையே காட்டுகிறது. அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு குறிவைத்து இருக்கிறது.
பிற மதத்தை சேர்ந்த பெண்கள் நுழைவதற்கு உதவுவதன் மூலம் சபரிமலையின் புனிதத்தை கெடுப்பதில் அரசும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர். போலீசார் கூட, பெண்களுக்கு தங்கள் சீருடைகளை அணிவித்து சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். இது இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும்.
இவ்வாறு அந்த மனுவில் பா.ஜனதாவினர் குறிப்பிட்டு இருந்தனர்.
ஜனாதிபதியை சந்தித்த குழுவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான சரோஜ் பாண்டே, மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான எம்.பி.க்கள் இடம்பெற்று இருந்தனர். #BJP #Sabarimala #RamnathKovind
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute
புதுடெல்லி:
அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரான அவர் சுதந்திரத்திற்கு பிறகு முதல் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார். மறைவுக்கு பிறகு அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரான அவர் சுதந்திரத்திற்கு பிறகு முதல் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார். மறைவுக்கு பிறகு அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute
அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வியாழக்கிழமை) மலர் தூவி மரியாதை செய்கிறார். #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute
புதுடெல்லி:
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6-ந் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய மந்திரிகள் தாவர் சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பகல் 11 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் ஏற்பாடு செய்து உள்ளது.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரத மர் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசாரும், கமாண்டோ படையினரும் குவிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6-ந் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய மந்திரிகள் தாவர் சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பகல் 11 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் ஏற்பாடு செய்து உள்ளது.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரத மர் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசாரும், கமாண்டோ படையினரும் குவிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டு உள்ளார். #ArvindSaxena #UPSC #Chairman
புதுடெல்லி:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற உயர் பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மே 8-ந்தேதி யு.பி.எஸ்.சி.யின் உறுப்பினராக இணைந்த அரவிந்த் சக்சேனா, கடந்த ஜூன் 20-ந்தேதி முதல் யு.பி.எஸ்.சி.யின் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். தற்போது இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி வரை அந்த பதவியில் இருப்பார்.
டெல்லி என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த சக்சேனா பின்னர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். முடித்தார். 1978-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கேபினட் செயலாளராக இவர் பணியை தொடங்கினார். காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் பல்வேறு பணிகளில் இவர் திறம்பட செயல்பட்டவர் ஆவார். #ArvindSaxena #UPSC #Chairman
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற உயர் பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மே 8-ந்தேதி யு.பி.எஸ்.சி.யின் உறுப்பினராக இணைந்த அரவிந்த் சக்சேனா, கடந்த ஜூன் 20-ந்தேதி முதல் யு.பி.எஸ்.சி.யின் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். தற்போது இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி வரை அந்த பதவியில் இருப்பார்.
டெல்லி என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த சக்சேனா பின்னர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக். முடித்தார். 1978-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கேபினட் செயலாளராக இவர் பணியை தொடங்கினார். காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் பல்வேறு பணிகளில் இவர் திறம்பட செயல்பட்டவர் ஆவார். #ArvindSaxena #UPSC #Chairman
ஆஸ்திரேலியா, வியட்நாம் நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டா நாங் விமான நிலையத்தில் இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. #PresidentRamNathKovind #RamNathKovindinVietnam
ஹனோய்:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
21-ம் தேதிவரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், ஆஸ்திரேலியா செல்லும் அவர் அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துவதுடன் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #PresidentRamNathKovind #RamNathKovindinVietnam
நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாளான இன்று அவரின் சிறப்புக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். #JawaharlalNehru #ChildrensDay
புதுடெல்லி:
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
நமது முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்”. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீது பிரியம் கொண்ட நேரு, குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரது நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். #JawaharlalNehru #ChildrensDay
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
நேருவின் 129-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-
நமது முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்”. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீது பிரியம் கொண்ட நேரு, குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரது நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். #JawaharlalNehru #ChildrensDay
மத்திய மந்திரி அனந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AnanthKumar #RamNathKovind #Modi
புதுடெல்லி:
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அனந்தகுமார் மிகச்சிறந்த நிர்வாகி, அமைச்சரவையில் பல்வேறு துறைகளை சிறப்பாக கையாண்டுள்ள அவர், பாஜகவின் மிகப்பெரிய சொத்தாக விளங்கினார். கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர் அனந்தகுமார். தனது தொகுதியினர் எப்போது அணுக கூடியவராக அனந்தகுமார் இருந்து வந்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார். அனந்தகுமார் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சகாவும், எனது நண்பருமான அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி சதனாந்த கவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் அனந்த குமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட பலர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் தேசியச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். 2014 பாராளுமன்ற தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார். #AnanthKumar #RamNathKovind #Modi
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது முக்கிய சகாவும், நண்பருமான அனந்த குமார் மறைந்ததால் மிகவும் துயருற்றேன். மிகச்சிறந்த தலைவர் அவர். இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, சமூகத்திற்காக விடா முயற்சியுடனும் தயவுடனும் பணியாற்றியவர். தனது நல்ல செயல்களுக்காக அனந்தகுமார் எப்போது நினைவு கூறப்படுவார்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சகாவும், எனது நண்பருமான அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி சதனாந்த கவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் அனந்த குமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட பலர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் தேசியச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். 2014 பாராளுமன்ற தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார். #AnanthKumar #RamNathKovind #Modi
ஜெயின் துறவி தருண் சாகர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #TarunSagar #JainMonk
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘துறவி தருண் சாகர் மறைவு குறித்து அறிந்து கவலை அடைந்தேன். அவர் சமுதாயத்தில் அமைதி மற்றும் அஹிம்சை பற்றிய செய்தியை பரப்பியவர். நன்கு மதிக்கப்படும் ஆன்மீக தலைவரை நாடு இழந்துவிட்டது. அவரது ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘முனி தருண் சாகர் ஜி மகராஜ்-ன் மறைவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயர்ந்த சிந்தனைகளுக்கும், சமூகத்திற்கான பங்களிப்பும் என்றென்றும் நினைவில் இருக்கும். அவரது உன்னத போதனைகள் மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். எனது எண்ணங்கள் ஜெயின் சமூகம் மற்றும் அவரது எண்ணற்ற சீடர்களுடன் என்றும் இருக்கும்’ என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
துறவி தருண் சாகர் மறைவுக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுரேஷ் பிரபு, முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்காரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார், ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரா ராஜே, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #TarunSagar #JainMonk
ஜெயின் துறவியான தருண் சாகர் (வயது 51) இன்று காலை டெல்லியில் காலமானார். கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ராதாபுரி ஜெயின் கோவிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் துறவி தருண் சாகரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘துறவி தருண் சாகர் மறைவு குறித்து அறிந்து கவலை அடைந்தேன். அவர் சமுதாயத்தில் அமைதி மற்றும் அஹிம்சை பற்றிய செய்தியை பரப்பியவர். நன்கு மதிக்கப்படும் ஆன்மீக தலைவரை நாடு இழந்துவிட்டது. அவரது ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘முனி தருண் சாகர் ஜி மகராஜ்-ன் மறைவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயர்ந்த சிந்தனைகளுக்கும், சமூகத்திற்கான பங்களிப்பும் என்றென்றும் நினைவில் இருக்கும். அவரது உன்னத போதனைகள் மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். எனது எண்ணங்கள் ஜெயின் சமூகம் மற்றும் அவரது எண்ணற்ற சீடர்களுடன் என்றும் இருக்கும்’ என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
துறவி தருண் சாகர் மறைவுக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுரேஷ் பிரபு, முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்காரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார், ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரா ராஜே, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #TarunSagar #JainMonk
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பா.ஜ.க. எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை தடுக்கும் வகையில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஆந்திரா, குஜராத், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஓரளவு தீவிரமாக திட்டங்கள் அமலில் உள்ளன.
மற்ற மாநிலங்கள் எதுவும் இதை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஒரு சில சமூகத்தினர் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடைபிடிப்பதை விரும்பவில்லை. இந்த திட்டத்தை பற்றி விமர்சனமும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்சிங் தலைமையில் 4 எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 125 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.
2 குழந்தைகள் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதில், இருகுழந்தைகள் திட்டத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா எம்.பி. ராகவ்லக்கன்பால் சர்மா இது சம்பந்தமாக தனி நபர் தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு அங்கு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால் குழந்தை பிறப்பு விகிதம் ஆண்டுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைந்தது. எனவே, கடந்த ஆண்டு இந்த திட்டத்தை விலக்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை தடுக்கும் வகையில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஆந்திரா, குஜராத், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஓரளவு தீவிரமாக திட்டங்கள் அமலில் உள்ளன.
மற்ற மாநிலங்கள் எதுவும் இதை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஒரு சில சமூகத்தினர் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடைபிடிப்பதை விரும்பவில்லை. இந்த திட்டத்தை பற்றி விமர்சனமும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்சிங் தலைமையில் 4 எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 125 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.
2 குழந்தைகள் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதில், இருகுழந்தைகள் திட்டத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா எம்.பி. ராகவ்லக்கன்பால் சர்மா இது சம்பந்தமாக தனி நபர் தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு அங்கு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால் குழந்தை பிறப்பு விகிதம் ஆண்டுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைந்தது. எனவே, கடந்த ஆண்டு இந்த திட்டத்தை விலக்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றுநாள் அரசுமுறை பயணமாக கேரளா வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் அன்புடன் வரவேற்றனர். #ramnathkovind #pinarayivijayan
திருவனந்தபுரம்:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ராணுவ விமானத்தில் இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் அன்புடன் வரவேற்றனர்.
சட்டமன்ற சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் மலர்செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர். அங்கிருந்து விடைபெற்று கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி இன்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை நடைபெற உள்ள கேரள மாநில சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவை குறிக்கும் வகையில் ‘ஜனநாயக திருவிழா’வை தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
பின்னர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்று தலைமையுரை ஆற்றுகிறார். ‘சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான அதிகாரங்களை பெறுவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 7-ம் தேதி திரிச்சூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யும் ஜனாதிபதி அன்றிரவு டெல்லி திரும்புகிறார். #ramnathkovind #pinarayivijayan
தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் நோக்கத்தில் இன்றிரவு ஐதராபாத் நகரை வந்தடைந்த ராம்நாத் கோவிந்துக்கு தெலுங்கானா கவர்னர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #ramnathkovind
ஐதராபாத்:
தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதில் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் இன்றிரவு ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பேட் விமான நிலையம் வந்துசேர்ந்த ஜனாதிபதியை தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், துணை முதல் மந்திரிகள் கடியம் ஸ்ரீஹரி, முஹம்மது மஹ்மூத் அலி மற்றும் அம்மாநில மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள் பூங்கொத்துகள், மலர் செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர். #ramnathkovind
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X