search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிசுலா"

    வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
    கரகஸ்:

    வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
     
    இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.

    இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

    மாஸ்கோ:

    வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

    அதேநேரத்தில் அதிபர் மதுரோவுக்கு ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு அளித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் 2 ராணுவ விமானங்கள் கராகஸ் விமானநிலையத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுத தள வாடங்களுடன் ஒருவாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனே ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு ரஷியா-வெனிசுலா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது.

     


    வெனிசுலாவுக்கு ரஷியா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது ரஷியா ‘எஸ்-300’ என்ற ஏவுகணையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இங்கு விமான ராணுவங்களும், வீரர்களும் முகாமிட்டுள்ளதாக தெரிவித்தது.

    இந்தநிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வெனிசுலாவில் இருந்து வெளிநாட்டு படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் மரியா ‌ஷகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், மிரட்டுவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தி உள்நாட்டு போர் உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

    வெனிசுலாவில் அரசின் தடையை மீறி உதவிப் பொருட்களை கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident
    கராகஸ்:

    வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

    ஜூவான் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்ததால், அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஆட்சியைக் கவிழ்க்க அந்த நாடுகள் முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்க முன்வந்தன. ஆனால் இந்த உதவிகளை மதுரோ ஏற்க மறுத்துவருகிறார். உதவிப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பிரேசில் எல்லையை மூடினார். ஐநா மூலம் வரக்கூடிய உதவிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

    இதற்கிடையே மதுரோ தலைமையிலான அரசின் தடையை மீறி, நேற்று அண்டை நாடான கொலம்பியா சென்ற குவைடோ, அங்கு நிதி மற்றும் உதவிப்பொருட்கள் சேகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கொலம்பிய அதிபர் இவான் டக்கும் கலந்துகொண்டார். அங்கிருந்து இன்று உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.



    தடையை மீறி கொலம்பியாவுக்கு சென்றதால் அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் கொலம்பியாவையும் வெனிசுலாவையும் இணைக்கும் மூன்று பாலங்களையும் தற்காலிகமாக மூட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்தார். கொலம்பியா அரசிடம் இருந்து, வெனிசுலாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருவதால் மூன்று பாலங்களையும் மூடுவதாக அவர் கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சியால் திரட்டப்பட்ட உதவிப்பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர உள்ள நிலையில், பாலங்கள் மூடப்படுவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உதவிப் பொருட்கள் மக்களை சென்று சேருவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

    வெனிசுலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜான் போல்டன், தனது தென் கொரிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.  #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident
    வெனிசுலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்காலிக அதிபராக அறிவித்துள்ள குவைடோவை ஆதரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற உள்ளார். #Trump #VenezuelaJuanGuaido #NickolasMaduro
    வாஷிங்டன்:

    எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பதவியேற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் குவைடோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்படி, நிகோலஸ் மதுரோவை அவர் வலியுறுத்தி வருகிறார். இதேபோல் கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளும் ஜூவாய் குவைடோவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிபராக அங்கீரித்துள்ளன.

    ஆனால், ஜூவான் கெய்டோவின் நியமனத்தை அதிபர் மதுரோ ஏற்க மறுத்துள்ளார். அத்துடன் குவைடோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்து, வெனிசூலா எல்லை பகுதிகளை மூடிவிட்டார். இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த உதவி பொருட்களை பெற முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், விரைவில் புளோரிடா சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், வெனிசுலாவின் தற்காலிக அதிபராக அறிவித்துள்ள குவைடோவை ஆதரித்து உரையாற்ற உள்ளதாக மியாமி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் வெனிசுலா மக்கள் அதிகம் வசிக்கும் தோரல் நகருக்கு அருகில் உள்ள சுவீட்வாட்டர் நகரில், புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ‘சோசலிச ஆபத்துகள்’ என்ற தலைப்பில் டிரம்ப் உரையாற்ற உள்ளதாகவும், வெனிசுலா நெருக்கடி மற்றும் குவைடோவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசுவார் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #Trump #VenezuelaJuanGuaido #NickolasMaduro
    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #VenezuelaProtests #NicolasMaduro
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.



    நேற்று மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #VenezuelaProtests #NicolasMaduro

    வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #Venezuela #AssemblyPresident #JuanGuaido
    கராக்கஸ்:

    வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் நாடாளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ, தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில், தலைநகர் கராக்கசில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக ஜூவான் கெய்டோ நேற்று முன்தினம் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாதுகாப்புபடை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

    இது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயல் எனக் கூறி அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #Venezuela #AssemblyPresident #JuanGuaido
    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.#Earthquake
    காரகாஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த 
    நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். #Earthquake
    வெனிசுலா அதிபர் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Maduro #Venezuela
    கராகஸ் :

    வெனிசுலா தேசிய படைகளின் 81-வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற அதிபர் மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.   


    வெனிசுலா தொலைத்தொடர்பு துறை மந்திரி ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களிடம் கூறுகையில், மதுரோ உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதிபர் மதுரோ உயிர்பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த, தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ராணுவ உயரதிகாரிகள் புடைசூழ நின்றிருக்க, மனைவியுடன் மதுரோ உரையாற்றிய போது குண்டுவெடிப்பு சத்தம் கேட்கிறது. பின்னர் படை வீரர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிப்பது போல் பதிவாகியுள்ளது. #Maduro #Venezuela
    வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டின் துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் என்பவரை தேர்வு செய்துள்ளார். #Venezuelavicepresident #DelcyRodriguez

    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

    இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது. மேலும், மதுரோவின் வெற்றியைத் தொடர்ந்து வெனிசுலா மீது புதிய பொருளாதார தடையையும் அமெரிக்கா விதித்தது.

    இருப்பினும், அந்நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். இந்நிலையில், மந்திரி சபையில் மதுரோ சில மாற்றங்கள் செய்துள்ளார். அதன்படி அந்நாட்டின் துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் என்பவரை நிக்கோலஸ் மதுரோ தேர்வு செய்துள்ளார். டெல்சி அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்துள்ளார். #Venezuelavicepresident #DelcyRodriguez
    சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றிய நிக்கோலஸ் மதுரோ இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #Madurosworn #Venezuelapresident
    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

    இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது.

    மேலும், மதுரோவின் வெற்றியைத் தொடர்ந்து வெனிசுலா மீது புதிய பொருளாதார தடையையும் அமெரிக்கா விதித்தது.

    இந்நிலையில், இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், அரசியலமைப்புச் சட்டத்தினை பாதுகாப்பேன் என்றும், புரட்சிகர வழிமுறைகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று சத்திய பிரமாணம் செய்தபடி, அடுத்த 6 ஆண்டுகளுக்கான அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார்.

    மீண்டும் அதிபராக மதுரோ பதவியேற்றாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே அவரது ஆட்சிக்காலம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது #Madurosworn #Venezuelapresident
    சமீபத்தில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்ற நிலையில், வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.#trumph #sanctionsagainstVenezuela
    வாஷிங்டன்:

    சமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் தில்லு முல்லு நடைபெற்றதாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

    முறைகேடான இந்த தேர்தலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை குலைப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார்.

    மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #trumph #sanctionsagainstVenezuela
    வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக்கிய எதிர்கட்சி புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.#Venezuela #NicolasMaduro
    கராகஸ்:

    வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது.

    இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதில் அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதிபர் தேர்தலில் மீண்டும் மதுரோ வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்து அவரது வெற்றியை கொண்டாடிவருகின்றனர். #Venezuela #NicolasMaduro
    ×