search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102685"

    முற்றிலும் பெசல்-லெஸ் ஸ்கிரீன் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ வெளியிட இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    விவோ நிறுவனத்தின் அபெக்ஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் முற்றிலும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது அமைந்தது. 

    அறிமுக நிகழ்வில் அபெக்ஸ் ஸ்மார்ட்போன் கான்செப்ட் நிலையில் இருப்பதாகவும், இதன் தயாரிப்பு பணிகள் இந்த  ஆண்டிலேயே துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவோ அபெக்ஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி கேமரா, ஸ்பீக்கர் மற்றும் சென்சர் அம்சங்களை வழங்குவதால் ஏற்படும் இட பிரச்சனையை கடந்தும் ஃபுல் வியூ தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருவதாக விவோ அறிவித்துள்ளது. மேலும் இது உலகின் முதல் பாதி-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் என்பதோடு உலகில் அதிகளவு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் தயாரிக்கப்படுவதும் இதுவே முதல் முறை ஆகும். 

    விவோ நிறுவனத்தின் X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விவோ X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 98% அளவு மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இதன் சவுன்கேஸ்டிங் தொழில்நுட்பம் ஃபுல்வியூ டிஸ்ப்ளேவை ஸ்பீக்கராக மாற்றுகிறது. இது வழக்கமான லவுட்ஸ்பீக்கருக்கான தேவையின்றி டிஸ்ப்ளேவில் அதிர்வலைகளை அனுப்பும். இதனால் மின்திறன் சேமிக்கப்பட்டு, சவுன்ட் லீக்கேஜ் தடுக்கப்படுகிறது. மேலும் ஆடியோவை சீராக வெளியிடவும் இந்த தொழில்நுட்பம் வழிவகை செய்யும். 

    செல்ஃபிக்களை எடுக்க புதிய விவோ ஸ்மார்ட்போனில் 8 எம்பி எலிவேட்டிங் கேமரா வழங்கப்படுகிறது. இந்த கேமரா 0.8 நொடிகளில் வெளியேவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இந்தியாவில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக விவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பிதழில் X என்ற வார்த்தை பெரிதாக இடம் பெற்றிருக்கிறது. 

    அந்த வகையில் இது அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் வெளியிட்ட X21 மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல் கடந்த வாரம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    இந்தியாவில் விவோ நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட விவோ X21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    விவோ X21 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 12 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ X21 6 ஜிபி ரேம் மாடல் 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் புதிய விவோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர விவரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும்.
    ×