search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிப்பு"

    குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
    குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

    1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.

    2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.

    3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்

    4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்

    5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.

    6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.  

    7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்  

    8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.

    9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.
    ஊழியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது ‘பிராவிடண்ட் பண்ட்’ (சுருக்கமாக பி.எப்.) எனப்படும் வருங்கால வைப்புநிதித் திட்டம்.

    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

    பல்வேறு காரணங்களுக்காக, இடையில் நாம் பி.எப். பணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ பெற்றுக்கொள்ள முடியும். அவை எவை எவை என்று இங்கே பார்ப்போம்...

    மகன் அல்லது மகளின் கல்விச் செலவுக்காக, வருங்கால வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஊழியரின் பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டும்தான் விடுவிக்கப்படும்.

    திருமணமாகாத ஒருவர், தனது திருமணத் தேவைக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். மகன், மகள், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின் திருமணத்துக்காகவும் பணத்தைப் பெறலாம். ஆனால் தாம் செலுத்திய பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டுமே இந்தக் காரணங்களுக் காகத் திரும்பப் பெற முடியும்.

    தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காமல் இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.

    இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.

    ஓர் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது கோர்ட்டை அணுகும்போதோ, தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருங்கால நிதியில் 50 சதவீத பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத் தொகையை நூறு சதவீதம் வரை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவனம் வழங்காதபோதோ நூறு சதவீத வட்டியுடன் பங்களிப்புத் தொகை முழுவதையும் தொழிலாளர் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.

    காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம் பாதிப்பு மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால் 6 மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகையோ வட்டியுடன் வழங்கப்படும்.

    கலவரம், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் உறுப்பினர்களின் சொத்து சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத் தொகையில் 50 சதவீதமோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதைக் காரணம் காட்டி, பங்களிப்பாளர் ஒருவர் கடன் முதலீடாக வருங்கால வைப்பு நிதி கோர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக முதலாளி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது 6 மாதங்களுக்கான பரிவுத்தொகை அல்லது வட்டியுடன் பங்களிப்புத்தொகை அல்லது உபகரணங்களுக்கான செலவுத்தொகை இதில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.

    உறுப்பினர் ஒருவர் தனது 54-வது வயதில் 90 சதவீதம் வரை வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலும் இந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.

    55 வயதை எட்டிய ஓர் உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி அனுமதிக்கிறது. இதை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ அல்லது வரிஷ்த்த பென்சன் பீமா யோஜனாவிலோ முதலீடு செய்து கொள்ளும்வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

    வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டிடங்களில் முதலீடு செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும். ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ, மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின் பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி விடுவிக்கப்படும். 
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதற்கு போதுமான ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.

    ஏற்கனவே கட்டிய கட்டிடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் வரும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். அதற்கு கட்டிட என்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    ஜன்னல் கண்ணாடிகளின் மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசி படலம் தடுக்கும். அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ண கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும்.

    சுவர்களில் பூசும் பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மை. அழுத்தமான வண்ணங்களை சுவர்களுக்கு பூசினால், அதன் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்புகள் போதுமானது.



    மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தை குறைத்தால், மின்சாரம் குறைவாக செலவாகுமா? என்பதுதான். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மின்விசிறியை சுற்றவிடலாம்.

    எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தை செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

    வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் சி.எப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தை தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தை செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
    உண்மையிலேயே தேவையா இல்லையா என்பதை சற்றும் யோசிக்காமல் கண் மூடித்தனமாக பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிப்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.
    சம்பளம் வாங்கியவுடன் அந்த மாதத்திற்கான தேவைகள் மற்றும் செலவுகள் என்னென்ன என்று பட்டியலிட்டு அளவோடு வாங்கி வளமோடு வாழ்ந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பொருளின் பின்னே அலையும் பொருளற்ற வாழ்க்கையை தேடி போய்க் கொண்டிருக்கிறது இன்றைய சமூகம். உண்மையிலேயே தேவையா இல்லையா என்பதை சற்றும் யோசிக்காமல் கண் மூடித்தனமாக பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிப்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

    உயர் வர்க்கத்தினர் மட்டுமின்றி நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களும் போலி கவுரவத்திற்காக பொருட்களை வாங்கி விட்டு பின்பு பெருங்கடனில் சிக்கிக் கொண்டு நிம்மதியை தொலைக்கின்றனர். நுகர்வோரின் இந்த தீராப் பசிக்கு தீனி போடுவதற்காகவே நகரின் மைய பகுதிகளில் புதிதாக பல பேரங்காடிகள் முளைத்து பண்டத்தை மொய்க்கும் ஈக்களாய் மக்களை மாற்றி இருக்கின்றன. வார இறுதி நாட்களில் இவ்விடங்களுக்கு சென்று பொழுதுபோக்கிற்காக பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கும் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கும் கேடு விளைவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது.

    இதில் என்ன தவறு இருக்கிறது? நன்றாக பொருளட்டுகிறோம், மகிழ்ச்சியாய் செலவு செய்கிறோம் என்பதே பெரும்பாலானோரின் வாதமாய் இருக்கிறது. ஆனால் இப்படி தேவைக்கு அதிகமாய் பொருட்களை வாங்கி குவிப்பது சிகிச்சை எடுக்க வேண்டிய அளவுக்கு பெரிய உளவியல் சிக்கல் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போதை பழக்கத்தை போன்றே அடிமையான பின்னர் மீள்வது கடினம் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

    இப்படி சமீப காலங்களில் அதிகரித்து விட்ட இந்த நுகர்வு கலாசாரத்திற்கு, மக்களை இலக்காகி குறிவைக்கும் வணிக நிறுவனங்களே காரணம். கடைகள், அங்காடிகள் மட்டுமின்றி ஆன்லைன் வர்த்தகத்தின் மீதான மோகமும் மக்களிடேயே அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் நாம் எதை பார்க்கிறோம், எதன் மீது ஆர்வம் காட்டுகிறோம், கூகுளில் எதை தேடுகிறோம் என்று ஒரு தனி நபர் பற்றிய அத்தனை, தகவல்களையும் அறிந்து அது தொடர்பான பொருட்களை அடிக்கடி கண்ணில் படும்படி கவர்ச்சியாக விளம்பரப்படுத்தி நம்மை வாங்க வைத்து விடுகின்றனர்.

    இந்த யுக்திகள் எதையும் அறியாமல் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததாய் எண்ணிக் கொண்டு நாமும் அறியாமையில் பொருள் வாங்குகிறோம். முன்பெல்லாம் வீட்டிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கினால் அவை முற்றிலும் பழுதாகும் வரையில் உபயோகிப்பது வழக்கம். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களுடன் கூடிய நவீன கருவிகளை அடிக்கடி மாற்றுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏற்படும் பொருட்செலவை பற்றியோ நஷ்டத்தைப் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை.

    அதுவும் குறிப்பாக செல்போன் விஷயத்தில் இளைஞர்கள் அவ்வப்போது வெளியாகும் புது மாடல் போன் வைத்து கொள்வதே கவுரவம் என்று நினைக்கின்றனர். மாறி வரும் மக்களின் இந்த மனோபாவத்தை அறிந்த வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை வாரி வழங்குகின்றன. அதை உபயோகித்து செலவு செய்யும் போது இருக்கும் மகிழ்ச்சி, மாதத் தவணை கழுத்தை நெரிக்கும் போது காணாமல் போய் விடுகிறது. தனியார் துறை ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் போது , பணவரத்து நின்று போகும் போது தாராளமாய் செலவு செய்து பழக்கப்பட்டவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

    சேமிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.பணத்தை ஈட்டுதல் எவ்வளவு முக்கியமோ, பாதுகாப்பது அதனினும் இன்றியமையாதது. திடீரென ஏற்படும் மருத்துவ மற்றும் அவசரத் தேவைகளுக்கு அடுத்தவரை எதிர்பார்க்காமல் நாமே சமாளிக்கும் சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடுபட்டு சேர்த்த பணத்தை தேவையற்ற முறையில் விரயமாக்காமல் முதலீடும் காப்பீடும் செய்து வைத்து கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். அனாவசியமாக செலவழிக்காமல் அத்தியாவசியமாக பொருள் வாங்குவதே புத்திசாலித்தனம்.

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னதை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட்டால் அவதி நிச்சயம் என்பதே நிதர்சனமான உண்மை.

    எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    நிதி நெருக்கடியின்போது, திடீர் பொருளாதார நெருக்கடியின்போது நமக்கு உடனே நினைவில் வருபவை, கடன்கள். அதிலும் தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவை உடனடியாகக் கைகொடுப்பவை.

    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

    தனிநபர் கடன், தங்க நகை கடன் இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வட்டி விகிதம்தான். தங்க கடன் பொதுவாக 9.6 முதல் 24 சதவீதம் இடையிலான வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தனிநபர் கடன் 10.99 முதல் அதிகபட்சம் 18 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    தங்க கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில், தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும்போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்க கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயை கடனாகப் பெற வேண்டும்.

    தங்க கடன் வாங்கும்போது அடமானம் வைக்கும் தங்க நகையே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும்போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும்போது கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    மறுபக்கம், தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனைச் செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும்போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால், வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளபோது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவை தொடர்பாக எந்தப் பேரமும் செய்ய முடியாது.

    தங்க நகை கடனுக்கு அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை சமர்ப்பித்தால் போதும். உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாளச் சான்று, வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவைச் சமர்ப்பிக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனிநபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

    தங்க நகை கடனை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக்கூடிய திறனைப் பொறுத்து கடனைப் பெறலாம்.

    தங்க நகை அடமான கடன் பெறும்போது தங்கத்தை நேரடியாக வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பைக் கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். எனவே, நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

    ஆனால் இன்றைக்கு, வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டுக்கு வரவைத்து கடனைப் பெற முடியும்.

    இவையெல்லாம், தனிநபர் கடன், தங்க நகை கடன் குறித்த ஒப்பீட்டு விவரங்கள். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கடனைப் பெற விரும்பு பவர்கள்தான்.

    கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள, தங்கம் வைத்துள்ளவர்கள் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பதுடன், கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
    ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏ.டி.எம். மையங்களில் மோசடிக்கு உள்ளாகும் நபர்கள் குறித்த தகவல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு நாம் உஷாராக இருந்தால், மோசடிக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம். இது குறித்து வங்கிகளும் அவ்வப்போது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகின்றன.

    ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மின்னஞ்சல் வாயிலாக வங்கிகள் தெரிவித்து வருகின்றன.

    செய்ய வேண்டியவை

    உங்கள் ஏ.டி.எம். பணப் பரிவர்த்தனை முழுவதும் ரகசியமாக இருக்க வேண்டும். நீங்கள் ‘பின்’ எண்ணை உள்ளீடு செய்வதை பிறர் பார்க்க அனுமதிக்கக் கூடாது.

    பரிவர்த்தனைகளைச் செய்து முடித்த பின்னர், ஏ.டி.எம். திரையில், மீண்டும் வரவேற்புத் திரை உள்ளதா என உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

    உங்களின் தற்போதைய செல்போன் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் மூலம், உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் அறிவிக்கை (ஸ்டேட்மென்ட்), குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) பெறமுடியும்.

    ஏ.டி.எம்-.மில் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்துக் கவனமாக இருங்கள். அறிமுகமில்லாத நபர்கள் உரையாட முயற்சிக்கும்போது எச்சரிக்கை அவசியம்.

    சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏ.டி.எம்.-மில் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

    உங்களின் ஏ.டி.எம். கார்டு தொலைந்துபோனாலோ அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்திருப்பதாக அறிந்தாலோ, உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவியுங்கள்.

    வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்திகள், வங்கி அறிவிக்கைகளை தொடர்ந்து சரிபார்க்கவும்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாத நிலையிலும், பணம் இல்லை எனத் திரையில் தெரிவிக்கவில்லை எனில், அங்குள்ள தகவல் பலகையில் உள்ள எண்ணில் தொடர்புகொண்டு வங்கிக்குத் தகவல் தெரிவியுங்கள்.

    பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது எனக் குறுஞ்செய்தியை சரிபாருங்கள்.



    செய்யக்கூடாதவை

    ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை, ஏ.டி.எம். அட்டையின் பின்புறத்திலோ அல்லது மற்றவர் எளிதில் பார்க்கக்கூடிய இடத்திலோ எழுதி வைக்கக்கூடாது. அதை மனதில் பதிய வைத்துக்கொள்வதே நல்லது.

    வங்கியில் இருந்து புதிதாக ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை பெற்றவுடனும், குறிப்பிட்ட கால இடைவெளிகளிலும் அதை மாற்ற வேண்டும்.

    முன்பின் அறிமுகமில்லாதவர்கள் உங்கள் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தவோ, உங்களுக்கு உதவிபுரியவோ அனுமதிக்காதீர்கள்.

    வங்கி ஊழியர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட யாரிடமும், ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை தெரிவிக்கக் கூடாது. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறும் போலியான அழைப்புகளை பொருட்படுத்த வேண்டாம்.

    பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, ஏ.டி.எம். கார்டை மறவாமல் எடுத்துவந்து விடுங்கள்.

    ஏ.டி.எம். மையத்தில் அக்கார்டை பயன்படுத்தும்போது செல்போனில் பேசுவது, பிற கவனத்தை மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதைத் தவிருங்கள்.
    பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது. அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.

    சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?

    ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.

    இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.

    உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...

    முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.



    உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

    ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.

    கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.

    கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

    பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.
    பி.பி.எப். எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி குறித்த விவரங்களை பலர் அறிந்திருப்பதில்லை. எல்லோருக்கும் ஏற்ற திட்டம் இந்த பி.பி.எப். பணத்தைச் சேமிக்க விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஏற்றது இது.

    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை இங்கே காணலாம்...

    * பொது வருங்கால வைப்புநிதிக் கணக்குகளைக் கூட்டாக இருவர் பெயரில் துவங்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் பெற்றோர் தங்களின் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு துவங்க முடியும். பெற்றோர் இருவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது செயல்படமுடியாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், மைனர் குழந்தையின் சார்பாகக் கணக்கு துவங்க முடியும். ஆனால் மைனர் குழந்தையின் சார்பாகப் பெற்றோர் பி.பி.எப். கணக்கு துவங்கும்போது, ஒரே குழந்தைக்குப் பெற்றோர் இருவரும் தனித்தனி கணக்குத் துவக்க இயலாது. மைனர் குழந்தை மேஜராகும்போது, அவரே பி.பி.எப். கணக்குதாரராகக் கருதப்படுவார். சட்டப்பூர்வ பாதுகாவலர் பி.பி.எப். கணக்கை கையாள முடியாது.

    * நம்முடைய பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள பணம் நம்முடையது. நம்மைத் தவிர்த்து வேறு யாரும் அதை எடுக்க முடியாது. கடன் அல்லது ஏதேனும் சொத்துக்குப் பணம் செலுத்தும்போது வேறு தனிநபர் அல்லது நிறுவனத்தால் பி.பி.எப். கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது. இது உங்கள் சேமிப்புக்கு வழங்கப்படும் தரமான பாதுகாப்பு. வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால், தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் அபாயம் உள்ளது. அதுவே பி.பி.எப். பணம் என்றால், பி.பி.எப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கடனை அடைக்கும்படி சட்டப்படி உத்தரவிட முடியாது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு. அதேநேரம், வருமானவரி பாக்கியை பி.பி.எப். கணக்கிலிருந்து எடுக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    * உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்க பி.பி.எப். கணக்கில் அனுமதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமித்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத பங்கு என பி.பி.எப். கணக்குதாரர் குறிப்பிடவேண்டும். ஆனால் மைனர்களின் சார்பாகத் திறக்கப்படும் கணக்குகளுக்கு வாரிசு தாரர் நியமிக்கமுடியாது. பி.பி.எப். கணக்கு காலத்தில் உங்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாரிசுதாரரை மாற்ற முடியும். ஆனால் ஓர் அறக்கட் டளையை வாரிசுதாரராக நியமிக்க முடியாது. வாரிசுதாரர்களால் பி.பி.எப். கணக்கை தொடர்ந்து பராமரிக்க முடியாது. பி.பி.எப். கணக்குதாரரின் இறப்பின்போது கணக்கில் உள்ள பணத்தைப் பெற அனைத்து உரிமையும் பெற வாரிசுதாரர் தகுதியுடையவர் ஆவார். அப்பணத்தை அறங்காவலராக இருந்து சட்டத்துக்கு உட்பட்டுப் பெறமுடியும்.

    * பி.பி.எப். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் பண முடக்கக் காலம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். பி.பி.எப். விதிகளின் படி, வைப்புநிதி செய்யப்பட்ட நிதியாண்டின் கடைசி நாளிலிருந்து முதிர்ச்சியடையும் தேதி கணக்கிடப்படும். எனவே எந்த மாதம், எந்தத் தேதி கணக்குத் துவங்கப்பட்டது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் பி.பி.எப். கணக்குக்கு முதல் முறை ஜூன் 1, 2018 அன்று பணம் செலுத்தினால், 15 ஆண்டுப் பணமுடக்கக் காலம் மார்ச் 31, 2019-ல் இருந்து கணக்கிடப்படும், முதிர்ச்சியடையும் தேதி ஏப்ரல் 1, 2034 ஆக இருக்கும். பணி ஓய்வு, வீடு வாங்குதல் அல்லது முக்கியக் கடனை திரும்பச் செலுத்துதல் போன்ற பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும் போது, பி.பி.எப். கணக்கின் முதிர்ச்சி காலத்தைக் கணக்கிடுகையில் இந்த வழிமுறையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * சில முதலீட்டாளர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை மறந்துவிடுவார்கள். குறைந்தபட்ச வைப்புநிதி இல்லையென்றால், பி.பி.எப். கணக்கு கைவிடப்படும் நிலை ஏற்படும். பி.பி.எப். கணக்கு கைவிடப்பட்டால், அதிலுள்ள பணத்துக்கான வட்டி, முதிர்ச்சியின்போது மட்டுமே கிடைக்கும். இதுபோன்ற கைவிடப்பட்ட கணக்குகளில், முதிர்ச்சி அடையும் வரை ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் இருக்கும் பணத்துக்கு வட்டி கணக்கிடப்படும். பணம் எடுத்தல் மற்றும் கடன் பெறும் வசதியும் கைவிடப்பட்ட கணக்குகளுக்குக் கிடையாது. இந்த இரு வசதியும் பெற வேண்டும் என்றால், கைவிடப்பட்ட காலத்துக்கு உண்டான குறைந்தபட்ச சந்தாவையும், குறிப்பிட்ட அளவு அபராதத்தையும் கட்ட வேண்டும். நாம் எப்போதும், எந்நிலை யிலும் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை கைவிடக்கூடாது என்பதை இந்த விதிகள் உணர்த்துகின்றன. எனவே, பி.பி.எப். கணக்கின் மீது உரிய கவனம் செலுத்தி, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்ச பணத்தையாவது முதலீடு செய்துவரவேண்டும். 
    சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம்.
    பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். அப்பழக்கம் தற்காலத்தில் சற்று வலிமையடைந்து இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள். சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது.

    செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். பணம் கொடுத்து தன் முன்னிலையிலேயே உண்டியலில் போடுமாறு பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். பின்னாளில் இந்நடத்தை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேமித்துப் பழகியவர்கள் பிற்காலத்தில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் தான் பெறும் சம்பளப் பணத்தை கண்ணும் கருத்துமாக செலவு செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமை வளர்ந்து விடுகிறது.

    கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்து வளரும் குழந்தைகள் பின்னாளில் மனதில் நினைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்து விடும் இயல்பினராக மாறிவிடுவர். மேலும் கடன் வாங்கியாவது செலவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பெரிய கடன் சுமையை தன் மீது இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்.



    பணம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது தான் உதாரித்தனமாக செலவு செய்வதை பிற்காலத்தில் தவிர்ப்பார்கள். குறைவான பணத்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று பணம் போதவில்லை என்பதற்காக வேண்டிய பொருளை வாங்காமல் திரும்பி வரலாம்.

    அப்படி வருவதை உணரும் குழந்தைகள் பணத்தின் அருமையை தானாகவே உணர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை கஞ்சத்தனம் உள்ளவர்களாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசியமான செலவுகளை செய்வதையும் அநாவசியமான செலவுகளை தவிர்ப்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சரியானது. 
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கி நடவடிக்கைகளில் வாடிக்கையாளரது நன்னடத்தைகளுக்கு வெகுமதி அளிக்க இருப்பதாக பல வங்கிகள் அறிவித்துள்ளன. அதாவது, வாடிக்கையாளரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ (Credit Score Report) நிலவரத்தை பொறுத்து வீட்டு கடன் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு அமைப்புகள்

    மத்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் அடிப்படையில் நான்கு விதமான வங்கி கடன் தகவல் அமைப்புகள் (Credit Rating Bureaus) செயல்பட்டு வருகின்றன. அவை, சிபில், ஈக்விபேக்ஸ், ஹை-மார்க் மற்றும் எக்ஸ்பீரியன் ஆகியவை ஆகும். இந்த அமைப்புகள் வாடிக்கையாளரது வங்கி கணக்குகளை அனைத்து அடிப்படையிலும் ஆராய்ந்து, சரியான நேரத்தில் தவணைகள் செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு என்ற விபரங்களை கவனித்து அதற்கேற்ப ‘கிரெடிட் ஸ்கோர்’ மதிப்பீட்டை அளிக்கின்றன.

    கடன் பெற்றவர் பற்றி தகவல்

    கடந்த வருடங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறு நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெற்றவர்களது தகவல்களை மேற்கண்ட வங்கி கடன் தகவல் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.



    ‘ஸ்கோர்’ மதிப்பிடும் விதம்

    பெற்ற கடனை திருப்பி செலுத்தும் முறையை பொறுத்து ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைந்தபட்சம் 300 என்ற அளவாகவும், அதிகபட்சம் 900 என்ற அளவாகவும் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்டு கூடுதலான ‘ஸ்கோர்’ பெற்ற வாடிக்கையாளர்களுக்கு புதிய வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    எச்சரிக்கை அவசியம்

    பொதுவாக, வங்கி வாடிக்கையாளர்களில் பலரும் முன்னர் ஒரு சமயத்தில் பெற்ற வங்கி கடனுக்கான நடவடிக்கைகளில் சரிவர செயல்படாமல் விட்ட காரணத்தால், பின்னர் கடன் பெறும் காலத்தில் அது பாதிப்பை அளிக்கக்கூடியதாக மாறும் என்பது பற்றி தெரியாமல் உள்ளதாக நிதியியல் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. அவர்கள் பெரும்பாலும் வீண் செலவு வழிகளை அடைக்காமல் இருப்பார்கள். சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...

    போக்குவரத்துச் செலவை கூடியமட்டும் குறைக்க முயலுங்கள். ஒரே பகுதியில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள், வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விஷயம்.

    தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி., மின்விசிறி போன்றவற்றை அணைப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

    சில பெரும் நிறுவனங்கள், கடைகள், குறிப்பிட்ட காலத்தில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதைக் கவனித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிறிய கடைகளில் என்றில்லை, ஆச்சரியப்படுத்தும்வகையில், பெரிய கடைகளிலும் பேரம் பேசுவது சில நேரங்களில் பலன் கொடுக்கும். பேரம் பேச கவுரவம் பார்க்க வேண்டாம்.



    வெளியிடங்களில் சாப்பிடு வதைக் குறைத்துக்கொள்வது, பர்சுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

    திரையரங்கில் படம் பார்ப்பது செலவு பிடிக்கும் விஷயமாகிவரு கிறது. சிறிது காலம் பொறுத்திருந்தால், முறைப்படி இணையத்திலேயே பணம் செலுத்திப் பார்க்க முடியும்.

    ‘ஜிம்’முக்கு பணம் கட்டிவிட்டு, போகாமல் இருப்பதைவிட, வீட்டி லேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    பழையதாகிவிட்டது என்பதாலேயே ஒரு பொருளை தூக்கிப் போட்டுவிடாமல், அதிகபட்சம் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

    வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தனித்தனி செல்போன், அவற்றுக்கான செலவு தேவையா என யோசியுங்கள்.

    பணமாக எடுத்துக் கொடுப்பதைவிட, கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது நாம் அதிகம் செலவழித்துவிடுகிறோம். எனவே கிரெடிட் கார்டை பர்சை விட்டு வெளியே எடுப்பதை கூடியவரை தவிருங்கள். 
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். வீட்டை கட்டி விட்டு அல்லது வாங்கிய வீட்டில் நிம்மதியாக அமர வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ள நிலையில் கடனுக்கான வட்டி விகிதம் பற்றிய வருங்கால கணக்கீடுகள் பலருக்கும் இருப்பதில்லை.

    காலப்போக்கில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் தவணை தவறும் சமயங்களில்தான் வட்டி விகிதம் பற்றி பலரும் யோசிப்பதாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நிலையில் மாதாந்திர தவணையை சற்று குறைவாக செலுத்த இயலுமா..? என்ற கேள்விக்கு அவர்கள் தரும் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ (Balance Transfer) என்ற வழிமுறை பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம்.

    வங்கி மாற்றம்

    10 வருடங்களுக்கும் மேலான காலகட்டம் கொண்ட நீண்ட கால கடன்களுக்கு பொருத்தமாக குறிப்பிடப்படும் இந்த வழிமுறையின் மூலம் மீதமுள்ள வீட்டுக் கடனை குறைவான வட்டி விகிதமுள்ள வங்கிக்கு மாற்றிக்கொண்டு அந்த விகிதத்தின்படி மாதாந்திர தவணையை செலுத்தி வரலாம்.

    அவசியமான ஆவனங்கள்


    வீட்டுக் கடன் பெறுவதற்கு தரப்பட்ட அனைத்து ஆவணங்களும் இதற்கும் அவசியம் என்ற நிலையில், முந்தைய வங்கியிலிருந்து ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் பெற்று புதிய வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

    மீதமுள்ள மதிப்புக்கு காசோலை

    ஆவணங்கள் தக்க சோதனைகளுக்கு பின் புதிய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கான மதிப்பு காசோலையாக முந்தைய வங்கிக்கு வழங்கப்படும். மேலும், முந்தைய வங்கி நடைமுறைகள் புதிய வங்கியிலும் பின்பற்றப்படும்.

    ஆவணம் பதிவு

    தவணை செலுத்தப்படும் சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடன் கொடுத்த புதிய வங்கியின் பெயர், மற்றும் கடனுக்கான விபரங்கள் ஆகியவை ஆவணமாக பதிவு செய்யப்படும்.

    நீண்ட கால ஆதாயம்

    மேற்கண்ட முறை எல்லா நேரங்களிலும், அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மீதியுள்ள கடன் தொகை, வங்கிகளில் வசூலிக்கப்படும் ‘போர்குளோசர் கட்டணம்’ என்ற அபராத கட்டணம், மற்றும் ‘பிராசஸிங் கட்டணம்’ போன்றவற்றையும், மாறக்கூடிய வட்டி விகித வேறுபாடுகளையும் கணக்கிட வேண்டும். சில நிலைகளில் வீட்டை மறு மதிப்பீடு செய்யவேண்டியதாக இருக்கலாம். அதன் பின்னர் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்பது மீதி செலுத்த வேண்டிய தவணைகளின் கணக்கீடு அடிப்படையில் ஆதாயம் தரக்கூடியது என்றால் இம்முறையை கடைப்பிடிக்கலாம்.
    ×