search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிப்பு"

    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரியுமா? நாம் நமது தேவைக்கு ஏற்ற தனிநபர் கடனைப் பெற்று பயனடையலாம். அது பற்றி...

    திருவிழாக் கடன்:

    விழாக்கால செலவுகளைச் சமாளிக்கும் வகையில் குறுகியகாலக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. ஆனாலும் பெரும்பாலான திருவிழாக்களுக்கு அதிகபட்சத் தொகை தேவைப்படாது என்பதால் இக்கடன் அளவு, ஒப்பீட்டு அளவில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இதற்கான வட்டிவிகிதமும் குறைவுதான்.

    இதற்கான கால அளவு ஓராண்டு ஆகும். வட்டி விகிதம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இக்கடனில் குறைந்தபட்சத் தொகை ரூ. 5 ஆயிரமும், அதிகபட்சத் தொகை ரூ. 50 ஆயிரமும் ஆகும். 2 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமும், 3 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

    வீடு புதுப்பிப்பதற்கான கடன்:

    வீட்டைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவைச் சமாளிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. இதிலுள்ள முக்கியமான அனுகூலம், இக்கடனுக்குச் செலுத்தும் வட்டிக்கு ரூ. 30 ஆயிரம் வரை வரிவிலக்கு வழங்கப்படுவதாகும்.

    வீட்டைப் புதுப்பிக்கப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 20 முதல் 30 ஆண்டுகள், இதற்கான வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரை. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம். கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். முன்தவணைக் கட்டணம் கிடையாது.

    நிரந்தர விகிதக் கடன்:

    பெயருக்கு ஏற்ப, இந்த நிரந்தர விகிதக் கடனுக்கு இதன் முழுக் கால அளவுக்கும் ஒரே அளவிலான வட்டிவிகிதம்தான் விதிக்கப்படும். இதில் உள்ள முக்கிய அனுகூலம், கடன் பெறுபவர் தான் எதிர்காலத்தில் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை எளிதில் கணிக்கலாம். இவ்வகைக் கடனில் கால அளவு அதிகரிக்கும்போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும் அபாயம் இல்லை.

    இக்கடனின் கால அளவு 5 முதல் 10 ஆண்டுகள். வட்டி விகிதம் 9.95 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை. கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். மீதமிருக்கும் அசலில் 2 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.



    நுகர்வோர் நீடிப்பு கடன்:

    வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவதற்கு உதவுவது தான், நுகர்வோர் நீடிப்பு கடன்.

    இதன் கால அளவு 2 ஆண்டுகள். குறைந்தபட்சமாக ரூ. 8 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 5 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாகப் பெறப்படும்.

    திருமணக் கடன்:

    ஒவ்வொருவர் வாழ்விலும் பெரிய செலவுகளில் ஒன்று, திருமணச் செலவு. திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு திருமணக் கடன் கைகொடுக்கிறது.

    இக்கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு, ஒன்று முதல் 5 ஆண்டுகள். வட்டிவிகிதம் 10.5 சதவீதம் முதல். குறைந்தபட்சமாக ரூ. 5 லட்சமும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். கடன் தொகையில் 2 முதல் 5 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாக இருக்கும்.

    விடுமுறை காலக் கடன்:

    விடுமுறை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறையச் செலவாகும். அதற்கு விடுமுறை காலக் கடன் உதவும். இக்கடன் வட்டி விகிதம் அதிகம் என்றபோதும், சம்பள உயர்வு அல்லது போனஸை பயன்படுத்தி கடனை விரைவில் அடைத்துவிடலாம். இக்கடனின் மொத்த தொகை, நீங்கள் பயணம் செல்லவிருக்கும் இடம் மற்றும் உங்கள் கடன் வரலாற்றைப் பொறுத்து மாறுபடும்.

    விடுமுறை காலக் கடனின் கால அளவு 2 முதல் 3 ஆண்டுகள். வட்டி விகிதம் 12.95 முதல் 14.20 சதவீதம் வரை. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ. 10 ஆயிரமும், அதிகபட்ச தொகையாக ரூ. 10 லட்சமும் பெறலாம். பரிசீலனைக்கட்டணம் கடன் தொகையில் 2 சதவீதமாக இருக்கும்.

    தொழில் கடன்:

    புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவாக்கவும் தொழில் கடன் உதவும். நமது தகுதி மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து தொழில் கடன் நிர்ணயிக்கப்படும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 1 முதல் 6 ஆண்டுகள். வட்டி விகிதம் 17 முதல் 22 சதவீதம் வரை. குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 75 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும்.

    இக்கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
    பெற்றோர் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை சேமிப்பு பழக்கமாக மாற்றுவது எப்படி என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு பாக்கெட் மணி குடுக்கும் வழக்கம் என்பது இயல்பாகிவிட்டது. ஸ்நாக்ஸ் வகைகளுக்கு, வேண்டியவற்றை வாங்குவதற்கு என்று பல காரணங்கள் சொல்லப்படும் பாக்கெட் மணியை குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கமாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

    * பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுத்தனுப்பும் பெற்றோர்கள், ஒருநாளைக்கு 10 ரூபாய் என்று தீர்மானித்தால் தினமும் பத்து ரூபாய் மட்டுமே கொடுக்கவேண்டும். அதுக்கு மேல் ஒரு பைசாக்கூடா தரக்கூடாது என்பதில் பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

    * குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களே.. கேட்ட பணத்தை கொடுத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். ஒரு தடவை அதிக பணம் கொடுத்துவிட்டால், கேட்டதும் தந்துவிடுவார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடும். வரம்புக்கு மீறி செலவு செய்யக்கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் தருணமே இதுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.



    * விலை உயர்ந்த பொருளை கேட்கிறார்கள் எனும் நேரத்தில் 'நீ சமத்தா நடந்துகிட்டா நான் பாக்கெட் மணி தருவேன். அதை சேர்த்து வைத்து உனக்கான பொருளை நீ வாங்கிக்கோ' என்று சொல்லுங்கள். இதனால் சேமிப்பு பழக்கமும் கைகூடும்.

    * பாக்கெட் மணியைச் சேமிக்க பெரியது, சிறியது என இரண்டு உண்டியல்களை குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுங்கள், சிறிய உண்டியலில் சேமிக்கும் பணத்தை அன்றாட தேவைக்காக பயண்படுத்திக்கொள்ளவும்... பெரிய உண்டியலில் சேமிக்கும் பணத்தைக் கொண்டு (ஒன்று அல்லது இரன்டு மாதங்கள் கழித்து) பிடித்த விளையாட்டுப் பொருட்களை வாங்கவும் பழக்கப்படுத்துங்கள்.

    இதனால் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு விரும்பிய பொருளுக்காக சேமிக்கத் துவங்குவார்கள். பணத்தின் அருமையை புரிந்துகொள்வதோடு, திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமையும் வளர காரணமாகிவிடும். சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஒரு பொருள் வாங்கும்போது குழந்தைகளுக்கு தாங்களே சம்பாதித்து வாங்கியதுபோல ஃபீல் கிடைக்கும்.

    * சிறு வயதில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் பெரியவர்களாகும் போது பணத்தின் அருமை புரியும். அதை புரிய வைக்க வேண்டியது நம் கடமை.
    நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஆர்வம். ஆனால் நீண்டகால முதலீடுகளை எவ்வளவு காலம் தொடாமல் இருந்தால் நல்லது என்பது குறித்து நமக்குக் குழப்பமும் இருக்கிறது.
    நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஆர்வம். ஆனால் நீண்டகால முதலீடுகளை எவ்வளவு காலம் தொடாமல் இருந்தால் நல்லது என்பது குறித்து நமக்குக் குழப்பமும் இருக்கிறது.

    பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள், ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையே ஒரு நல்ல முதலீட்டு உத்தியாக கருதுகிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பிடலிட்டி முதலீட்டு நிறுவனம் எத்தகைய முதலீட்டாளருக்கு அதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வை நடத்தியது.

    தான் செய்த முதலீட்டை பல ஆண்டுகளுக்கு மறந்துவிட்ட அல்லது கண்டுகொள்ளாமல்விட்ட முதலீட்டாளர்களே மிக உயர்ந்த வருமானத்தை நிதிச் சந்தையில் இருந்து பெற்றனர் என அந்த ஆய்வு தெரிவித்தது. அது மட்டுமல்ல, இந்த முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் நீண்ட காலத்துக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவு கூறியது.

    எனவே, உங்கள் முதலீட்டுப் பிரிவுகளை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, ஒரு செயலும் செய்யாமல் இருப்பது மிகவும் லாபகரமான உத்தி ஆகும். இது மிகவும் எளிதான, சிறந்த உபாயம்தான்.

    ஆனால் முதலீட்டில் நீண்டகாலம் என்பதற்கு பலரும் பலவித வரையறையைக் கூறுகிறார்கள்.

    உங்களுடைய வரியை கணக்கிடும் நோக்கத்துக்காக, நீங்கள் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் செய்த முதலீட்டுக் காலம் ஒரு வருடத்துக்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நீண்ட கால முதலீடாக கருதப்படும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளுக்கு, இந்தக் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும்.

    இது இந்திய வரி விதிப்பு சட்டப்படி இருக்கலாம். ஆனால் அதிக வருமானம் தரும் முதலீடு என வரும்பொழுது இந்தக் கால வரம்பு அதற்குப் பொருந்தாது. அப்போது ஒரு வருடம் என்பது ஒரு குறுகிய காலம் ஆகும்.

    பங்குகளில் நீண்ட காலத்திற்கு மட்டுமே ஏன் முதலீடு செய்யப்பட வேண்டும்? இதற்கான பதில், பங்குச்சந்தையில் நிச்சயமாக, ஏற்றத்தாழ்வு இருக்கும். தற்போது, மும்பை பங்குச்சந்தை சென்செக்சின் ஐந்து வருட வருவாய் வருடத்துக்கு தோராயமாக 12.77 சதவீதம் அல்லது ஒட்டுமொத்தமாக 79 சதவீதம் ஆக உள்ளது.

    எது எவ்வாறாயினும், ஐந்து வருட காலத்தை ஒவ்வொரு வருடமாக அலசி ஆராய்ந்தால், இதன் வருவாய் 8.9 முதல் 41.8 சதவீதம் வரை உள்ளது. இது நீண்ட கால முதலீட்டுக்கு ஆதரவாக உள்ள ஒரு வலுவான வாதம் ஆகும்.

    வருமானம் பெரியது, ஆனால் மாறுபாடு அதிகமாக உள்ளது. எந்த குறிப்பிட்ட குறுகிய காலத்தை எடுத்துக்கொண்டாலும் உங்களுக்கு வருவாய் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்படலாம். இவை அனைத்தும் நீண்டகால அளவில் மட்டுமே ஈடு செய்யப்படும்.

    பங்குச் சந்தையானது சுழற்சிகளில் நகரும் ஒரு சக்கரம் போன்றது. இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு முழு சுழற்சியை சந்திக்கிறது. இதன் சுழற்சி சக்கரத்தில் ஓர் உச்சபட்ச உயர்வு, அதன் பின் சறுக்கல், அதன் பின்னர் நிலைபெறுதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கு சரியான அளவு வருவாய் வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முழு சுழற்சி முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கண்டிப்பாக நடக்காது.

    பங்கு முதலீட்டில், ‘நீண்ட காலம்’ என்பது ஒரு தெளிவான வார்த்தை ஆகும். எனினும் வல்லுனர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி காலத்தை வரையறுப்பார்கள். ஆனால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை நீண்டகாலம் எனக் கூறலாம்.
    நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.
    நீண்ட கால முதலீடுகளை நமது திடீர்ப் பணத்தேவைக்குப் பயன்படுத்த முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.

    நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.

    ஆனால் நீண்ட கால முதலீட்டில் உள்ள சில அம்சங்களால் நமது குறுகிய காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும். அதுகுறித்துப் பார்க்கலாம்...

    பொது வருங்கால வைப்புநிதி: ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்’ எனப்படும் பொது வருங்கால வைப்புநிதியில் முதிர்ச்சிக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற முடியும். பொது வருங்கால வைப்புநிதிக்கான கால அளவு 15 ஆண்டுகள். ஏழாவது நிதியாண்டில் பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவது அனுமதிக்கப்படுகிறது. நான்காவது ஆண்டின் இறுதியில் இருக்கும் மொத்த பணத்தில் 50 சதவீதம் அல்லது பணம் எடுப்பதற்கு முந்தைய ஆண்டில் உள்ள மொத்த பணத்தில் 50 சதவீதம் இவ்விரண்டில் எது குறைவோ அந்த அளவு பணத்தை எடுக்கலாம்.

    பொது வருங்கால வைப்புநிதியில் மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுக்கு மத்தியில் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடன் கேட்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இருப்பில் 25 சதவீதப் பணத்தை அதிகபட்சக் கடனாகப் பெறலாம்.

    பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்ச்சி காலத்துக்கு முன்பு கணக்கை முடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டுகள் கழிந்தநிலையில் குழந்தைகளின் கல்வி அல்லது பெற்றோர், குழந்தைகள் அல்லது கணக்குதாரரின் உயிர் காக்கும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடிக்கலாம். ஆனால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைவாக இருக்கும்.

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி: எம்பிளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில், பதிவுசெய்யப்பட்ட சங்கங்களில் இருந்து வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ, பகுதி பணத்தை மத்தியில் திரும்ப எடுக்கவோ பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சந்தாதாரர்களாக இருத்தல் அவசியம், குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட வீட்டுவசதி சங்கத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். அதிகபட்சம் 90 சதவீதமும், குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும் அனுமதிக்கப்படும்.

    மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ‘சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டுகள் என்றபோதும், முதல் அல்லது இரண்டாம் ஆண்டின் இறுதியில் முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு வைப்புநிதியில் 1.5 சதவீதமும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில் 1 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படும்.

    நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்): நிரந்தர மற்றும் தொடர் வைப்பு நிதித் திட்டங்கள் மிகவும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியவை, முன்கூட்டியே திரும்பப்பெறக் கூடியவை. வைப்புநிதி காலத்தைப் பொறுத்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.

    எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி: நாம் பண நெருக்கடியைச் சந்திக்கும்போது எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி நிறுத்தத்தை மேற்கொள்ளலாம். இதைத் தற்காலிமாக நிறுத்துவதால் நமது நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படாது. கால அளவு: 1 முதல் 3 மாதங்கள். இந்தக் காலத்திற்குப் பிறகு மீண்டும் திட்டம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும். இதை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

    மானிய காப்பீட்டுத் திட்டம்: ‘எண்டோமென்ட் பாலிசி’ எனப்படும் மானிய காப்பீட்டுத் திட்டம் அல்லது இதர காப்பீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பேரில் கடன் பெற முடியும். இந்தக் கடனை காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கியில் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெறலாம். இத்திட்டத்தில் மொத்த மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் கடனாகப் பெறலாம். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும். 
    ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, பிளாட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பட்ஜெட், அது அமைந்துள்ள இடம், அளிக்கப்பட்டுள்ள வசதிகளான குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் ஹால், பாதுகாப்பு வசதிகள், தோட்டம், லிப்ட் வசதி மற்றும் குடிநீர் ஆகிய நிலைகளை பொறுத்து அமைந்திருக்கும். பட்ஜெட் தவிரவும், ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டதாவது ;

    1. வீடுகளை சுற்றிலும் மற்றும் முன்பக்கம் ஆகிய இடங்களில் சரியான அளவில் காலி இடம் இருக்கவேண்டும்.

    2. கட்டுமான திட்டத்தில் உள்ள அனைத்து பிளாட்-களுக்கும் UDS என்ற பிரிக்கப்படாத மனையின் பங்கு சரியான முறையில் பிரித்து தரப்பட்டிருக்கவேண்டும்.

    3. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தக்க பார்க்கிங் வசதி இருப்பதோடு, கார்களை பார்க்கிங் செய்ய சுமாராக 300 சதுர அடி அளவுள்ள இடமாவது இருக்க வேண்டும்.

    4. பிளாட்டுகளின் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வழக்கமாக அளவுக்குள் இருக்கவேண்டும்.

    5. பெரும் மழை, அதிகப்படியான வெள்ளம் ஆகியவற்றால் பிளாட் மற்றும் அதற்கு செல்லும் பாதைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருப்பது அவசியம். 
    போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...
    போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் அப்படி இருக்காமல், கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால், நமது பொருளாதார அஸ்திவாரம் பலம் பெறும். கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...

    அவசரகால நிதி:

    எந்த ஒரு நிதித் திட்டமிடலிலும் அடிப்படையான விஷயம், ஓர் அவசரகால நிதியை உருவாக்குவது. ஆனால் நம்மில் பலர் இதுகுறித்து அலட்டிக்கொள்வதில்லை. அதாவது, அவசர கால நிதியின் அவசியத்தை உணர்ந்து அப்படி ஒரு தொகையைப் பாதுகாப்பதில்லை அல்லது அது போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் நாம் திடீர் செலவுகள் ஏற்படும்போது தடுமாறிப் போய்கிறோம்.

    அந்த மாதிரி சமயங்களில் நாம், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பெற்றுச் சமாளிக்க முயல்கிறோம் அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்த விழைகிறோம். ஆனால், கூடுதல் வருவாயைப் பயன்படுத்தி ஓர் அவசரகால நிதியை உருவாக்கிக்கொண்டோம் என்றால், அவசரச் செலவுகள், எதிர்பாராத செலவுகளைச் சமாளித்துவிடலாம். கிடைத்த கூடுதல் தொகையை சேமிப்புக் கணக்கில் போட்டுவைப்பதைவிட, ‘லிக்விட் பண்ட்’களில் முதலீடு செய்யலாம். அவை, சேமிப்புக் கணக்கை விட அதிக ‘ரிட்டர்ன்’ அளிக்கும். தேவைப்படும்போது அவற்றில் 24 மணி நேரத்துக்குள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

    கடன்களை திரும்பச் செலுத்துங்கள்:

    கூடுதல் தொகை கைக்கு வரும்போது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை முடிப்பதற்குப் பார்க்க வேண்டும். காரணம், அவற்றுக்கான வட்டி அதிகம். இதுபோன்ற கடன்களை வைத்துக்கொண்டு முதலீடு செய்வதில் அர்த்தமில்லை.

    முதலீட்டில் இருந்து பெறும் வருவாயை விட, மேற்கண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை உணருங்கள். நீங்கள் வீட்டுக்கடன் செலுத்திக் கொண்டிருந்தால், கூடுதல் தொகை கிட்டும்போது அதில் ஒரு கணிசமான தொகையை முன்கூட்டிச் செலுத்தலாம். தற்போது பெரும்பாலான வங்கிகள் இப்படி முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு அபராதம் விதிப்பதில்லை. இவ்வாறு முன்கூட்டி கணிசமான தொகை செலுத்துவதால், நாம் கட்டும் வட்டி விகிதம் குறையும்.



    காப்பீட்டு அளவை அதிகரிக்கலாம்:

    நாம் நமக்கு போதுமான அளவு காப்பீடு பெற்றிருக்கிறோமா என்று அவ்வப்போது ஆராய்வதும், அந்த அளவைக் கூட்டிக்கொள்வதும் முக்கியம். போனஸ் போன்ற கூடுதல் தொகைகள் வரும்போது, நமது ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு அளவுகளை அதிகரித்துக்கொள்ளலாம். மருத்துவச் செலவுகள் கூடிக்கொண்டே செல்லும் தற்போதைய சூழலில், கூடுதல் பணம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி நமது மருத்துவக் காப்பீட்டு அளவை அதிகரித்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

    திறன்களை வளர்க்கலாம்:

    இன்று எல்லோருமே கூடுதல் வருவாயை விரும்புகின்றனர். ஏதாவது பகுதிநேர வேலை பார்த்துக்கூட குடும்பத்தின் வருவாயைக் கூட்ட எண்ணுகின்றனர். இது நல்ல விஷயம்தான். ஆனால், கூடுதல் வருவாய் வேண்டும் என்றால், கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, கணினி அறிவு. கணினி சார்ந்த, கூடுதல் வேலைவாய்ப்புக்கு உதவும் ஏதாவது கோர்ஸ் போன்றவற்றைப் பயில நமக்குக் கிடைத்த உபரித் தொகையை உபயோகிக்கலாம்.

    அடிப்படைத் தொகைக்கு உபயோகிக்கலாம்:

    நாம் வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றைப் பெற எண்ணியிருந்தால், அதற்கு, டவுன் பேமண்ட் எனப்படும் அடிப் படைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நமக்கு கூடுதல் வருவாய் வரும்போது, வழக்க மான அடிப்படைத் தொகையைவிட கூடுதலாகச் செலுத்தப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நமக்கு, ஈ.எம்.ஐ. எனப்படும் மாதாந்திர தவணைத் தொகையின் அளவு குறையும்.

    முதலீடு செய்யலாம்:

    நீங்கள் உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் உங்களின் ஓய்வுகாலத்தை மனதில் வைத்து முதலீடு மேற்கொண்டு வரக்கூடும். கையில் கணிசமாகப் பணம் கிடைக்கும்போது, அதை உங்கள் முதலீட்டை வலுப்படுத்த உபயோகிக்கலாம். நீங்கள் உங்களின் நீண்டகால இலக்குகளை எட்டுவதை நோக்கி ‘ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்’களில் ஒரு கணிசமான தொகையை இடும் அதேவேளையில், ‘லிக்விட் பண்ட்’களிலும் முதலீடு செய்யலாம்.

    நாம் எப்போதும் நமது செலவு விருப்பங்களுக்கும், நமது பொருளாதார பலத்தை வலுவாக்கும் விஷயங்களுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிப்பது முக்கியம்.

    இன்று நம்மை மகிழ்விக்கும் செலவுகளைவிட, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளே நன்மை பயக்கும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. 
    ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்.
    கிரெடிட் கார்டு எனப்படும் ‘கடன் அட்டை’, பலரை வசீகரிக்கும், பலரை பயமுறுத்தும் அட்டையாக உள்ளது.

    ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்.

    அந்தக் கட்டணங்கள் பற்றி...

    ஆண்டுக் கட்டணம்: கிரெடிட் கார்டு வழங்குவதற்கு பொதுவாக வங்கிகளும் நிதி அமைப்புகளும் எவ்விதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் கட்டணங்களுக்கு விலக்கு அளித்துவிட்டு இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணங்களை விதிக்கின்றன.

    வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள், கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் செலவுத் தொகையை வங்கிக்கணக்கில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும்.

    பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி .எம்.மில் பணம் எடுக்கலாம். ஆனால், இந்த வசதியை அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.

    அதிகப்படியான செலவுக் கட்டணம்: உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அபராத கட்டணம் விதிக்கப்படும்.

    கால தாமதக் கட்டணம்: கிரெடிட் கார்டு மீதான கால தாமதக்கட்டணம் நமக்குப் பலவகைகளில் பாதிப்பை ஏற் படுத்தும். இதனால் நம் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும், அபராதக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

    தொகை பரிமாற்றத்துக்கான கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் பொழுது அதற்கென தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். 
    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். உங்களுக்கும்கூட அந்த எண்ணம் இருக்கலாம். தனிநபர் கடன் பெறத் தயாராகிக்கொண்டிருக்கலாம். ஆனால்... அதற்கு முன் ஒரு நிமிடம்!

    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

    * கடன் கேட்டு வங்கிப் படியேறுவதற்கு முன்பாக உங்கள் பொருளாதாரத் தகுதியை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வங்கி நிபந்தனைகளின்படி நம்மால் முறையாக கடனை திரும்பச் செலுத்தமுடியுமா என்று பாருங்கள். அதற்காக, இலவசமாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

    * கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இல்லாதவரையோ, சரியான வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் வரவேற்பது இல்லை. கடன் பெறுவதற்கான நமது தகுதியான ‘கிரெடிட் ஸ்கோர்’, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஸ்கோர் திருப்திகரமாக இல்லாதபோது, கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * வட்டி விகிதமும், கால அளவும் உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனிநபர் கடன்களை வங்கிகள் கருதுவது கிடையாது. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. வங்கிக் கடன் புள்ளி விவரங்கள்படி தனிநபர் கடன்கள்தான் அதிக வாராக்கடன்களாக உயர்ந்துள்ளன. எனவே இக்கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

    * நீண்ட கால கடனா, குறுகிய காலக் கடனா என்பது உங்கள் தவணைத் தொகையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டியை பெற்றுத் தரும்.

    * கடன் தொகையைப் பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஒருமுறையும், அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். இல்லையென்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

    * தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அபராதம் செலுத்த நேரிடலாம். அது ஏற்கனவே நமக்கு உள்ள பண நெருக்கடியை மேலும் கூடுதலாக்கும். நம் வங்கிக் கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை தானாக பிடித்தம் செய்கிற மாதிரி அமைத்துக்கொள்ளலாம். தவணை நாளில் நம் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.

    இவையெல்லாம் தாண்டி, அவசரத் தேவைக்காகத் தனிநபர் கடனை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறீர்களா? வங்கி அதிகாரியை அணுகி முறையாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். கடன் பெற்றபின், தவணை தவறாமல் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் உறுதியாக இருங்கள். தப்பித்துவிடலாம்!
    ×