search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதியுதவி"

    வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிர் இழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதியன்று தனது வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது, விஷ வாயு தாக்கி உயிர் இழந்தார். அவரை காப்பாற்றச் சென்ற அவருடைய மகன்கள் கார்த்தி மற்றும் கண்ணன், திருநெல்வேலியை சேர்ந்த பரமசிவம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரதாபிசி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகிய 5 பேரும் உயிர் இழந்தனர்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா மன்னை நகரில் தனியார் வெடிபொருள் உற்பத்தி கூடத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மன்னார்குடியை சேர்ந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, சுரேஷ் மற்றும் அறிவுநிதி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

    அவர்கள் மரணமடைந்த செய்தியை அறிந்து மார்ச் 27-ந் தேதியன்றே இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன். வெடிவிபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிர் இழந்த 12 பேரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram
    புதுடெல்லி:

    சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். தேர்தல் நேரத்தில் இந்த நிதியுதவியை வழங்குவதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விவசாயிகளின் நிதியுதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மேலும் அனுமதிக்கப்படுமா? என்று அனைவரின் பார்வையும் தேர்தல் கமிஷன் மீதே இருக்கிறது. தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது நிதியுதவி அளிப்பது, ஓட்டுக்கு அளிக்கும் லஞ்சம் என்பது வெளிப்படையாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பணமதிப்பு நீக்கத்தை அனுமதித்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை சீரழிந்ததாக கூறியுள்ள ப.சிதம்பரம், அதைப்போல விவசாய நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    நியூயார்க்:

    சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்தப் போரினால் கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 24 லட்சம் பேர் அகதிகளாக பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.355 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இந்த தாராள நிதி உதவியை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

    இதுபற்றி அவர் சார்பில் ஐ.நா. சபை துணை செய்தி தொடர்பாளர் பர்கான் ஹக் கூறும்போது, “இந்த நிதி உதவிக்காக கத்தார் நாட்டு மன்னருக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்” என குறிப்பிட்டார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    காட்டு யானை தாக்கி உயிர் இழந்த வனக்காவலர் மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டூர் தரப்பு, கண்டகானப்பள்ளி கிராமத்தின் அருகே 6.1.2019 அன்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பச்சபனட்டி தரப்பு, கோட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த வனக்காவலர் மாரப்பன் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, வீர தீர செயல் மற்றும் அசம்பாவித சூழ்நிலையில் உயிர் இழந்தால், அவர்களின் குடும்ப நலன் கருதி, வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை நான்கு லட்சத்திலிருந்து, பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க 6.10.2017 அன்று ஆணையிட்டிருந்தேன். இந்த ஆணையின்படி, இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    1953-ம் ஆண்டு ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதானவருக்கு முக ஸ்டாலின் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். #Karunanidhi #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவுக்காக திருச்சி சென்றபோது, 1953-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கல்லக்குடி பெயர் மாற்றம் கோரி நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதான பூவாளூரை சேர்ந்த செபஸ்தியன் என்ற ராசுவின் ஏழ்மை நிலைமை அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.



    இதைத்தொடர்ந்து அவரை அழைத்த மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #MKStalin
    நிதி நெருக்கடியில் தள்ளாட்டம் போடும் பாகிஸ்தான் அரசுக்கு 600 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. #SaudioffersPakistan
    ரியாத்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    பாகிஸ்தானின் நிதி நிலவரங்களை ஆய்வு செய்ய சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் குழு நவம்பர் 7-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறது. இதுதவிர, அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றுள்ளார். அவருடன் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. சவுதி மன்னர் சல்மான் மற்றும் அந்நாட்டின் மந்திரிகளை இந்த குழுவினர் சந்தித்துப் பேசினர்.



    சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. இதில் 300 கோடி டாலர்கள் ஓராண்டுக்குள் ரொக்கப்பணமாக அளிக்கப்படும்.

    மீதி 300 கோடி டாலர்கள் அளவுக்கு சவுதியில் இருந்து கடனுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளலாம். அந்த தொகையை அடுத்த ஆண்டில் செலுத்தலாம். இப்படி, 3 ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இருநாட்டு நிதி மந்திரிகளும் கையொப்பமிட்டுள்ளனர். #SaudioffersPakistan

    பஞ்சாப்பின் அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகே சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

    இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
     
    அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.



    இந்த கோர விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்  என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப்பில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    உத்தர பிரதேச மாநிலத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #UPTrainDerailed #YogiAdityanath #TrainAccident
    ரேபரேலி:

    உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் ரெயில் நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #UPTrainDerailed #YogiAdityanath #TrainAccident

    ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். #JammukashmirAccident #PMModi
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.

    கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து, கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 10 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதேபோல், உத்தரகாண்டில் உள்ள உத்தர காசியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளது. #JammuKashmirAccident #PMModi
    பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க தவறவிட்டதாக கூறி பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்த அமெரிக்க ராணுவம் இறுதி முடிவு எடுத்துள்ளது. #US #Pakistan
    வாஷிங்டன்:

    பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    மிகச்சமீபத்தில் பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    கருணாநிதி மறைவையடுத்து துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralCouncilMeet
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.



    இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. #DMK #DMKGeneralCouncilMeet

    கேரள வெள்ள பாதிப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். #KeralaFloods #ViduthalaiChiruthaigalKatchi
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

    கேரள மக்களின் துயரத்தில் பங்கேற்கும் விதமாக ரூபாய் 25 லட்சம் உதவி வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 10 லட்சம் நிதியாகவும் ரூபாய் 15 லட்சம் பொருட்களாகவும் வழங்கப்படும்.



    மழைவெள்ள பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு மொழி, இனம், மதம் கடந்து பல்வேறு தரப்பினரும் உதவ முன் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. கேரள மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று மிகத்தீவிரமான இயற்கைப் பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். எனினும், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள உதவி போதுமானதல்ல. குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கோடி ரூபாயாவது நிதியுதவி அளிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    கர்நாடகாவிலும் கேரளாவிலும் பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பொழிந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு பருவ மழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaFloods #ViduthalaiChiruthaigalKatchi
    ×