search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உசிலம்பட்டி"

    உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

    உசிலம்பட்டி:

    தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் முருகபாண்டி. இவருடைய மகன் பால்பாண்டி (வயது 25). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி-தேனி சாலையில் வந்தார்.

    நக்கலம்பட்டி பகுதியில் வந்த போது எதிரே மதுரையில் இருந்து தேனி நோக்கி தனியார் பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பால்பாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே நேற்று இடி- மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டை அடுத்துள்ள டி.பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29).

    ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை வீட்டின்மாடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உசிலம்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது அன்னபாரிபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி தனலட்சுமி.

    சம்பவத்தன்று தனலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரது வீட்டுக்குள் புகுந்து அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து சந்திரசேகரன் உசிலம்பட்டி டவுன் போலீ ல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    ×