search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிருத்"

    பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும், படத்தில் நான் தான் வில்லன் என்று பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி தெரிவித்தார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது,

    எல்லாரும் கனவு காணுவாங்க, ஆனா நான் காணாத ஒரு கனவு நடந்தது, ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.



    கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதுல இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். இந்த படத்துலயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கு.

    எப்பையமே பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான். மறுபடியும் ஜானுவ இங்கே பார்க்கிறேன். 

    இவ்வாறு பேசினார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடித்துள்ள `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக துவங்கியது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகிறது.



    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவிருக்கும் நிலையில், இந்த படத்தின் மூலம் தனுஷ் - அனிருத் மீண்டும் இணைந்துள்ளனர். #PettaAudioLaunch #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகிறது.

    முன்னதாக படத்தில் இடம்பெறும் பாடல்களின் விவரத்தை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி படத்தில் 6 பாடல்களும், 5 தீம் மியூசிக்கும் இடம்பெறுகிறது. அதில் `இளமை திரும்புதே' என்ற பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார். இதன்மூலம் சிறய இடைவேளைக்கு பிறகு அனிருத் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர விவேக் மூன்று பாடல்களையும், கார்த்திக் சுப்புராஜ் ஒரு பாடலையும், கு.கார்த்திக் ஒரு பாடலையும் எழுதியிருக்கின்றனர்.



    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். #PettaAudioLaunch #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடித்துள்ள பேட்ட படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. 2019 பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

    மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் அனிருத்தின் இசை கச்சேரியும் இடம்பெறுகிறது.


    இந்த நிலையில், பேட்ட படத்தின் வடக்கு ஆற்காடு,தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு, மதுரை, சேலம் பகுதிகளின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது. 2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி வைத்ததில் மகிழ்ச்சி என்று உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்க இருக்கிறார்கள். #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. வரும் பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

    மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதுவரை இந்தப் படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுக காட்சியான மரண மாஸ் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த பாடல் ஊலலலா இன்று மாலை இணையத்தில் வெளியாக இருக்கிறது.



    பேட்ட படத்தின் முழு பாடல்கள் வெளியீடு வருகிற 9-ந் தேதி (ஞாயிறு) அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் இதை படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடக்க இருக்கும் தனியார் கல்லூரி தரப்பில் இருந்து இது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. #Petta #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினி காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் பல்வேறு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.

    அதில் விஜய் சேதுபதி தன் உடலை போர்வையால் மூடியபடி உட்கார்ந்து கொண்டு, கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கு பின்னால் ரஜினி நடந்து வருவது போன்று நிழலுருவமும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் அவரது பெயர் ஜித்து என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.

    முன்னதாக அனிருத் இசையில் `மரண மாஸ்' என்ற சிங்கிள் நேற்று 
    வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் 7-ஆம் தேதியும், படத்தின் முழு இசையும் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.

    பேட்ட படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Petta #PettaAlbumParaak #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Petta #PettaAlbumParaak #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்திக் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அனிருத் இசையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதியும், இரண்டாவது சிங்கிள் 7-ஆம் தேதியும் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். படத்தை பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிவைக்கும்படி தயாரிப்பாளர்கள் பலர் கேட்டுவந்ததாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், கார்த்திக் சுப்புராஜின் ட்விட் படத்தின் ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Petta #PettaAlbumParaak #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் ரோபா ரஜினியின் உருவ பொம்மை ஒன்றை அனிருத் தனது ஸ்டூடியோவில் வைத்துள்ளார். #Rajini #Anirudh
    ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 29-ம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘2.0’. எந்திரன் படத்தின் கதாபாத்திரங்களான டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி.

    சில கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஹீரோயினாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். ‌ஷங்கர் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 3டியில் வெளியாகும் இந்தப் படம், இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிட்டி ரோபோ கதாபாத்திரத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிட்டியின் அசாத்தியத் திறமைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கவரப்பட்டுள்ளனர்.



    எந்திரன் படம் வெளியானபோது, பெரும்பாலான தியேட்டர்களில் சிட்டியின் உருவ பொம்மைகளை வைத்து ரசிகர்களை கவர்ந்தனர். தற்போது 2.0 ரிலீசாக இருப்பதால், மறுபடியும் சிட்டி ரோபோ பிரபலமாக தொடங்கியுள்ளது. இசையமைப்பாளரான அனிருத், தன்னுடைய ஸ்டூடியோவில் சிட்டி ரோபோ ரஜினியின் உருவ பொம்மை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிருத்.
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பேட்ட'. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ரஜினியும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி காப்பாளர் தாதா வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். #Petta #Rajinikanth

    மீ டூ விவகாரம் இந்தியா முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். #MeToo #AnirudhRaviChander
    இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி, நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அமலாபால், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

    இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனிருத் தெரிவித்திருப்பதாவது,



    `பாலியல் தொல்லைகள் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசுவது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் சம்பந்தப்பட்டவர்களின் உண்மை முகம் வெளிவரும்' என்றார். #MeToo #AnirudhRaviChander

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் மலையாள நடிகை மாளவிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுகுறித்து மாளவிகா மோகனன் கூறும்போது,

    “ரஜினியுடன் நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்புக்கு காரணமான அனைவருக்கும் நன்றிகள். அவருடன் நடித்தது எனக்கு ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் பார்த்ததிலேயே அவர் தான் மிக எளிமையானவர்’ எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ் தெரியாததால் பக்கத்திலேயே ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 



    இப்படத்தில் மாளவிகா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு வில்லி என்பதால் வில்லனாக வரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள். பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #MalavikaMohanan

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினியை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தார். #Petta #Rajinikanth #NawazuddinSiddiqui
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோருடன் இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் முதல் முறையாகத் தமிழில் நடித்து வருகிறார்.

    நவாசுதீன் ரஜினியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ’ரஜினிகாந்த் செம ஆச்சரியத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன்.

    வட இந்தியாவின் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்தான், நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டார். அவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், இதை எதுவுமே பொருட்படுத்தாமல் அவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவரை முதன்முதலில் பார்த்தபோது மிகவும் யதார்த்தமாகப் பேசினார்.



    அவரும் நம்மைப் போன்றவர்தான் என்று நமக்கே உணர்த்துகிறார். ரஜினிக்கு வடக்கில் இருக்கும் மவுசு எங்கள் ஆட்களுக்குத் தெற்கில் இல்லை; இருந்தும் பாலிவுட் நடிகர்களான நாங்கள் 20, 25 பேரை கூட அழைத்துக்கொண்டு பெரும் பந்தாவுடன் சுற்றுகிறோம்“ என்று கூறியிருக்கிறார். #Petta #Rajinikanth #NawazuddinSiddiqui

    ×