search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிருத்"

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்தவரும், பிரபல இயக்குநருமான மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் பேட்ட. ரஜினியுடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி - திரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கியதாகவும், சசிகுமார் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்த பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    சமீபத்தில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Petta #Rajinikanth #Mahendran

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ரஜினியோடு விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்தின் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது.

    இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

    நேற்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றினார். #Petta #Rajinikanth #Sasikumar

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth
    ‘காலா’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட’.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

    நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘பேட்ட’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கிராமத்து தோற்றத்தில் இருக்கிறார்.

    ரஜினியின் பிளாஷ்பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் தான் இது என்கிறார்கள். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரஜினி சமீபகாலமாக இளமையாக நடிப்பதை தவிர்த்து தனது வயதுக்கேற்ற தோற்றங்களில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த கபாலி, காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.
    ‘பேட்ட’ படத்தின் இந்த போஸ்டரில் இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறார். ரஜினியின் 1980-90 காலகட்ட தோற்றத்தை இது நினைவுபடுத்துவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

    ரஜினியின் இந்த தோற்றம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. வேட்டி சட்டை தோற்றம் தேவர் மகன், வீரம் உள்ளிட்ட சில படங்களை நினைவுபடுத்துவதாகவும், மீசை சிங்கம் படத்தில் வரும் சூர்யாவை நினைவுபடுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ரஜினியின் பின்புறம் சூரியன் இருப்பது போல் அமைந்துள்ளதால் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் சண்டைக்காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன. அடுத்து இருவருக்கும் சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது.

    இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.



    ரஜினியோடு ஒரு ஹீரோ பாபிசிம்ஹா, இன்னொரு ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், தற்போது இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார்.

    இதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. நடிகர் சசிகுமார் தான் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிக்கிறார். இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. #Petta #Rajinikanth #Sasikumar

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த், மிசா கைதியாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Petta #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.

    ரஜினிகாந்த் தாதா வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதிகளில் தொடங்கியபோது ரஜினியின் சில படங்கள் வெளியாகின.

    அந்த படங்களில் ரஜினியின் கையில் ஒரு செம்பு காப்பு இருந்தது. கையில் ஏதோ எழுத்துகள் பச்சை குத்தப்பட்டு இருந்தன. இன்று காலை வெளியாகி இருக்கும் படங்களில் அந்த பச்சையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    ஜிகர்தண்டா, அறம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ராமச்சந்திரன் துரை ராஜ் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



    ரஜினி கையில் மிசா 109 என்று எழுதி இருப்பதால் மிசா கைதியாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.

    1975-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கொண்டு வந்த மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கட்சியினர் முதல் ரவுடிகள் வரை பலர் கைது செய்யப்பட்டனர்.

    1975 காலகட்டத்தில் ரஜினியும் அப்படி கைதானவராக காட்டப்படுகிறாரா? என்ற யூகங்கள் பரவுகின்றன. இது போட்டோ ஷாப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். #Petta #Rajinikanth #Misa109

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு “பேட்ட” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதில் இந்தி நடிகர் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

    ‘பேட்ட’ படப்பிடிப்பு முதல் கட்டமாக டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்தது. அதன்பின் கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி பங்கேற்று நடித்தார்.

    இதையடுத்து அடுத்த கட்டமாக “பேட்ட” படப்பிடிப்பை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ரஜினி கடந்த 7-ந்தேதி சென்னையில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்டு சென்றார். அவரது பாதுகாப்புக்காக 40 பாதுகாவலர்களும் விமானத்தில் சென்றனர்.

    லக்னோ விமான நிலையத்தில் ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அவரது பெயரை உச்சரித்து கோ‌ஷம் போட்டனர். அங்கிருந்து ரஜினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.



    லக்னோவில் பேட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 500 பேர் வரை பணியாற்றி வருகிறார்கள். சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது.

    இதேபோல் வாரணாசி, சன்பாந்தராவிலும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    லக்னோவில் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினிகாந்த் பாதுகாப்புக்கு 25 போலீஸ் காரர்களை லக்னோ போலீஸ் உயர் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.

    போலீசார், ரசிகர்களை ரஜினி அருகே செல்லவிடாமலும், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

    படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். இதற்காக செல்போனுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. #Petta #Rajinikanth

    ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்தான் என்று கூறியிருக்கிறார். #Petta #KarthikSubbaraj #Rajini
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. மிகவும் கலர்புல்லாக வெளியான இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர். மேலும் ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. 



    இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் சின்ன வயதில் இருந்து ரஜினியின் விசிறி. அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரஜினிதான். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது நிறைவேறி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய ஸ்டைலில் கலக்கி வருகிறார். பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பார்க்கும் போது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சீக்கிரமே படத்தை முடித்து, சீக்கிரமே தியேட்டருக்கு வருகிறோம். ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்தை கொண்டாடுவோம்’ என்றார். #Rajinikanth165 #Rajinikanth #Petta
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படம் படைத்த முதல் சாதனை. #Rajinikanth165 #Rajinikanth #Petta
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

    யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர். மேலும் ட்விட்டர் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. மேலும் வெளியிட்ட சில விநாடிகளிலேயே சென்னை டிரெண்டிங்கிலும், இந்தியா டிரெண்டிங்கிலும் இடம் பிடித்தது. #Rajinikanth165 #Rajinikanth #Petta
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. #Rajinikanth165 #Rajinikanth
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது.

    அதன்படி சரியான 6 மணிக்கு ’பேட்ட’ என்ற தலைப்பும், மோஷன் போஸ்டரும் வெளியானது. இது ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


    பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth165 #Rajinikanth #KarthikSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

    இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth165 #Rajinikanth #KarthikSubbaraj

    நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு உதவியது போல் தற்போது சமந்தாவிற்கு அனிருத் உதவி இருக்கிறார். #Anirudh #Samantha
    நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கினாலும் புரமோ‌ஷன் பாடலான கல்யாண வயசு பாடலை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கினார்.

    அனிருத் இசையமைத்து, பாடி, நடித்த அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சமந்தா நடிப்பில் வருகிற 13-ந்தேதி வெளியாக உள்ள யு டர்ன் படத்துக்கும் இதேபோல ஒரு புரமோ‌ஷன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை கிருஷ்ண மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்திற்கு பூமா சந்திரா தேஜஸ்வி இசையமைத்துள்ளார். 



    ஆனால் புரோமோ பாடலுக்காகப் படக்குழு அனிருத்தை ஒப்பந்தம் செய்தது. அவரே பாடி நடித்துள்ள இந்தப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது. விளம்பரத்துக்கு உதவியதற்காக அனிருத்துக்கு சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். வடஇந்தியாவில் படமாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்று வந்தது. முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில் அரங்கில் படமானது. ரஜினிகாந்த்-விஜய் சேதுபதி நடித்த சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்தது.



    இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வருகிறது. #Rajinikanth165 #Rajinikanth #KarthikSubbaraj

    ×