search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிருத்"

    கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய பிரபலம் ஒருவரும் படக்குழுவில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    ரஜினிகாந்த் நடிப்பில் `காலா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் துவங்கி நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    பீட்டர் ஹெய்ன் ஏற்கனவே ரஜினியுடன் சிவாஜி, எந்திரன் மற்றும் கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #KarthikSubbaraj

    தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். #Nayanthara #VigneshShivan
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

    இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

    அடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு...’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.



    விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
    ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் என்று இசையமைப்பாளர் அனிருத், ஆர்.கே.நகர் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். #RKNagar #Anirudh
    ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, இரண்டாவது படமாக வைபவை வைத்து ஆர்.கே.நகர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். 

    வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இதில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு டிரைலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை. ஒரு விசிறியாக வந்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகன் வைபவ் நடித்த ‘மேயாதமான்’ படத்தை இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். அந்த படத்தில் வைபவ்வின் காமெடி, டைமிங் ஆகியவற்றை நானும் என் நண்பர்களும் ரசித்திருக்கிறோம். 

    ஆர்.கே.நகர் படத்தின் இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில் முந்தைய படமான ‘வடகறி’ படத்தில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். நண்பர் விவேக்தான் இசையமைத்திருந்தார். இசை சுனாமி பிரேம்ஜிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இசை சுனாமி டைட்டில் பிரேம்ஜிக்கு பொருத்தமாக இருக்கிறது. இதை அவர் வைத்துக் கொள்ள நான் வேண்டிக்கிறேன். 



    சிவாவிற்கும் நான் மிகப்பெரிய விசிறி. நான் தியேட்டரில் படம் பார்ப்பது குறைவு. ரஜினி, அஜித் படங்களை முதல் நாளில் போய் பார்ப்பேன். அதுக்குப் பிறகு சிவாவுடைய படத்தைதான் முதல் நாள் போய் பார்ப்பேன். மேடைக்காக சொல்லவில்லை. உண்மையாக சொல்லுகிறேன். அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரவுக்கும் நான் விசிறிதான். சினிமாவில் நண்பர்கள் கிடைப்பது அரிது. ஆனால், வெங்கட் பிரபு பெரிய நண்பர்கள் பட்டாளமே வைத்துள்ளார். அதை தொடர்ந்து மெயிண்டெயின் பண்ணிட்டு வருகிறார். என்னுடைய நண்பர்கள் குழுவும் இதை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறேன். 

    இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் `காலா' படம் உலகமெங்கம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    ரஜினிகாந்த் நடிப்பில் `காலா' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்திற்கும் நல்ல விமர்சனங்களே வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் இன்று துவங்கியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #KarthikSubbaraj

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ரஜினி பேராசிரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதிகளில் நடக்க இருக்கிறது. கடந்த மாதம் படப்பிடிப்பு நடத்தவிருக்கும் தளங்களை தேர்வு செய்ய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு இமயமலை, காத்மாண்டு ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தனர்.

    கடந்த வாரம் ரஜினி மற்றும் மற்ற நடிகர், நடிகைகளுக்கான ஆடைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று இருக்கின்றன. இந்த படத்துக்கான முதல் பகுதி படப்பிடிப்பை ஒரு மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. கடந்த சனிக்கிழமை ரஜினி விதவிதமான ஆடைகளில் தோன்றும் போட்டோஷூட் நடந்தது. ’கபாலி’ மற்றும் ’காலா’ படங்களில் தனது வெள்ளைத் தாடியுடன் தோன்றிய ரஜினிகாந்த் இந்த படத்தில் கறுப்பு முடி, தாடியோடு தோன்றுகிறார்.

    சில நாட்களாக அந்த தோற்றத்தில் தான் வலம் வருகிறார் ரஜினி. இமயமலையில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ’இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படம்!’ என்று கூறி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். 



    படப்பிடிப்பு கல்லூரியில் தொடங்க இருப்பதால் ரஜினி பேராசிரியராக நடிக்கிறார் என்று ஒரு தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  #Rajinikanth #KarthikSubbaraj

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தனுஷ் பட நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajinikanth
    ரஜினி நடிப்பில் `காலா' படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். 

    ஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி கருப்பு முடி, தாடிக்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது. 

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    இதுதவிர முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #MeghaAkash

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த 4 படங்கள் குறித்து தனுஷ் மனம்திறந்துள்ளார். #Dhanush
    தமிழ் சினி்மாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. தமிழில் இந்த படத்திற்கு `வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்று தலைப்பு வைக்கத்திருக்கிறார்கள்.

    கேன்ஸ் விழாவில் ஃபகிர் படத்தை திரையிடுவதற்காக பிரான்ஸ் சென்ற தனுஷ், தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாகி இருக்கிறார். புரமோஷன் பணிகளை முடித்த பிறகு இந்தியா திரும்பும் தனுஷ், மாரி-2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். 

    இந்த நிலையில், சமீபத்தில் நடந்த உரையாடலின் போது, தனது அடுத்த 4 படங்கள் பற்றி தனுஷ் தெரிவித்தார். அப்போது, மாரி-2, வடசென்னை ரிலீசுக்கு நடுவே, தனுஷ் இயக்கும் அடுத்த படம் வருகிற ஆகஸ்டில் துவங்க இருக்கிறதாம். மேலும் பாலிவுட்டில் தனுஷை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிப்பதை தனுஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார். 



    அதேநேரத்தில் வேலையில்லா பட்டதாரி-3 படம் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். 

    விரைவில் தனுஷீடன் இணைவேன் என்று அனிருத் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் படம் அல்லது வேலையில்லா பட்டதாரி-3 படத்தில் தனுஷீடன், அனிருத் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. #Dhanush

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தேசிய விருது நடிகர் ஒருவரும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth #BobbySimha
    ரஜினி நடிப்பில் `காலா' படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ரஜினி தற்போது அரசியல் கட்சி தொடங்குவதில் வேலைகளை கவனித்து வருகிறார். விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். காலா ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படும் நிலையில், படத்தில் இடம்பெறும் கலைஞர்கள் தேர்வு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது. 



    மேலும் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாகவும், அவருக்கு இந்த படத்தில் ஒரு பலமான வேடம் என்றும் கூறப்படும் நிலையில், படத்தில் தேசிய விருது நடிகர் பாபி சிம்ஹாவும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மெர்குரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சனத் ரெட்டியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படக்குழுவில் யார்? யார்? இடம்பெற்றுள்ளார்கள் என்று அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth #BobbySimha
    விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபுவை, நடிகர் விஜய் பாராட்டியிருக்கிறார். #CoCo #YogiBabu
    நயன்தாரா அடுத்து நடிக்கும் கோலமாவு கோகிலா படத்துக்காக ஒரு பாடல் வெளியிடப்பட்டு பிரபலமாகி இருக்கிறது. யோகிபாபு நயன்தாராவிடம் காதலை சொல்வதை போல அமைந்திருக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். 

    யோகிபாபு இந்த பாடல் பற்றி கூறியது ‘இந்தப் படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக் கொண்டே இருப்பேன். முன்பு ஒரு நடிகையுடன் பேருந்தில் ஆடி பாடுவது போல எடுத்தபோது அந்த நடிகை என்னை தொட்டு நடிக்க மறுத்துவிட்டார்.



    ஆனால் நயன்தாராவுக்கு பெரிய மனது என்று சொல்லும் யோகிபாபு, ஒரே நேரத்தில் அஜித், விஜய் என இருவருடனும் நடித்து வருகிறார். பாடலை விஜய் பார்த்துவிட்டு யோகிபாபுவை பாராட்டி இருக்கிறார். விரைவில் அஜித்திடமும் பாடலை காண்பிக்க உள்ளார் யோகிபாபு. #CoCo #YogiBabu #Nayanthara #Vijay

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது குறித்து தகவல்கள் கசிந்திருக்கிறது. #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிப்பது மட்டும்தான் உறுதியாகி இருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்று பல யூகங்கள் தோன்றின. அஞ்சலி, திரிஷா, நயன் தாரா என்று முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் காலா இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி ‘என் மகள் வயது பெண்ணுடன் நான் டூயட் ஆடியிருக்க கூடாது’ என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு சிம்ரன் ஜோடியாக நடிக்கலாம் என்று செய்தி வருகிறது. சிம்ரன் ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் அப்போது சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோனது.



    நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வேடத்திற்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்று கருதி பேசி வருகிறார்கள். இதற்கிடையே படத்தில் ரஜினிக்கு ஜோடியே கிடையாது என்றும் ஒரு செய்தி வருகிறது.

    சிம்ரனுக்கு ஒரு வேடம் இருக்கிறது. ஆனால் அது நீலாம்பரி போன்ற ஒரு பலமான வேடம் என்று சொல்கிறது படக்குழு. #Rajinikanth #VijaySethupathi #Simran

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தேசிய விருது வென்ற பிரபலம் ஒருவரும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth #VijaySethupathi
    ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

    சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினி - விஜய் சேதுபதி முதல்முறையாக இணையும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குடனும் பேச்சுவார்த்தை நடத்தட்டது. படத்தின் நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேசிய விருது ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திரு ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    காலா பட ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth #VijaySethupathi #Tirru

    தமிழில் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் பெற்றிருக்கும் நயன்தாரா, தற்போது போதை மருத்து கடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Nayanthara #COCO
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார். அனிருத் அளித்திருக்கும் பேட்டியில் இதை சொல்லி இருக்கிறார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை.

    இதை நெல்சன், பிளாக் ஹியூமர் பாணியில் காமெடியாப் பண்ணியிருக்கார். நயன் எனக்கு நெருக்கமான தோழி. சமயத்தில் விருந்து மாதிரி சாப்பாடு சமைத்து அனுப்புவார். அவருக்கு என் இசை பிடிக்கும். ‘நான் உங்க பெரிய விசிறி என்று சொல்வார். அவங்க வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள்.



    ஆனால் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய வி‌ஷயம்’ என்று சொல்லியிருக்கும் அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போகிறார். ஜனவரி மாதம் படம் துவங்க இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
    ×