search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா"

    இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் 55.5 சதவீத ஓட்டுகளை பெற்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ 10 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக பிரபோவோ சுபின்யான்டோ குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபோவோ ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    அதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். அப்போதும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

    இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “நமது அன்பான நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை நான் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன். சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை” என கூறினார். 
    இந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். #IndonesiaElections #JokoWidodo
    ஜகார்த்தா:

    உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். சில வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, ஓட்டு போட சென்றனர்.



    இந்த தேர்தலில் சுமார் 2.45 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை 19 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும், இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி (போராட்டம்)  தலைவருமான ஜோகோ விடோடோவும் (வயது 57), முன்னாள் ராணுவ தளபதியும் கெரிந்த்ரா கட்சி தலைவருமான பிரபோவோ சுபியாண்டோவும் (வயது 67) போட்டியிடுகின்றனர்.

    கருத்துக்கணிப்பு முடிவுகள் விடோடோவுக்கு சாதகமாகவே உள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவற விட்ட சுபியாண்டோ, இந்த முறை தேர்தல் களத்தில் விடோடோவுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்த முறை வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சுபியாண்டோ குற்றம்சாட்டினார். ஒருவேளை தான் தோல்வி அடைந்தால், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என கூறப்படுகிறது. #IndonesiaElections #JokoWidodo
    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வினால் மக்கள் பீதியில் உறைந்தனர். #Indonesianisland #Sulawesi
    ஜகர்தா:

    புவியியல் அமைப்பின்படி ஆபத்தான  நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன.

    அவ்வகையில், இங்குள்ள சுலவேசி தீவில் (உள்ளூர் நேரப்படி) இன்றிரவு 7.40 மணியளவில்  6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வினால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

    பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Indonesianisland #Sulawesi
    இந்தோனேசியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaLandslide
    ஜெகார்த்தா:

    இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.

    அந்த மாகாணத்தில் அமைந்துள்ள சுரங்கத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த  ஊழியர்கள் சிக்கினர்.

    இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என்றும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என பேரிடர் மேலாண்மை குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #IndonesiaLandslide
    இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. #Indonesiaquake
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

    இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. #Indonesiaquake
    இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானார்கள். #Indonesia #MineCollapse
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், நேற்று முன்தினம் மாலை தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் 3 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 13 பேரை பத்திரமாக மீட்டனர். சுமார் 60 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
    இந்தோனேசியாவில் போலீசில் சிக்கிய குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால், கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான விசாரணை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. #IndonesiaPolice #Snake #Suspectedman
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் செல்போன் திருடிய வழக்கில் பப்புவா போலீசார் வாலிபரை கைது செய்தனர். விசாரணையின்போது அந்த வாலிபர் குற்றத்தினை ஒப்புக்கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் இருந்துள்ளான்.

    இதையடுத்து மிரட்டினால் ஒப்புக்கொள்வார் என நினைத்த போலீசார், மலைப்பாம்பு ஒன்றினை அவன் கழுத்தில் போட்டு சுற்றியுள்ளனர். இதனை வீடியோவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரவியதும், கடும் சர்ச்சை எழுந்தது.

    அந்த வீடியோ பதிவில், குற்றவாளியிடம் போலீசார் கேள்வி கேட்டு விசாரணை நடத்தியது பதிவாகியிருந்தது. அந்த நபர் பதிலளிக்காததையடுத்து, ஒரு அதிகாரி முகத்தின் முன் அந்த பாம்பினை கொண்டு செல்கின்றார். மேலும் ஒரு அதிகாரி எத்தனை முறை இது போன்ற செல்போன்களை திருடி இருக்கிறாய்? என கேட்கிறார். அதற்கு அந்த நபர் வெகு நேரம் கழித்து, ‘2 முறை’ என பதில் கூறுகிறார்.  

    பாம்பை கழுத்தில் சுற்றியதால் பயந்த அந்த வாலிபர், கண்களை மூடிக் கொள்கிறார். அப்போது அவரது வாயின் அருகில் பாம்பினைக் கொண்டு செல்கின்றனர். இது போன்று தொடர்ந்து அந்த வாலிபரை சித்ரவதை செய்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையை பலரும் கண்டித்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு ஜெயவிஜயா தலைமை காவல் அதிகாரி டோனி ஆனந்த ஸ்வாதயா மன்னிப்பு கோரியுள்ளார்.

    ‘விசாரணை செய்தவர்கள் சரியான முறையை பின்பற்றவில்லை. அவர்கள்  பயன்படுத்திய பாம்பு விஷமற்றது. குற்றவாளியின் உடலில் காயம் ஏதும் ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக  கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’ என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். #IndonesiaPolice #Snake #Suspectedman
    இந்தோனேசியாவில் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரியை அறைந்த பிரிட்டன் பெண் கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #BritishWomanJailed
    பாலி:

    இந்தோனேசியாவில் உள்ள பாலி சர்வதேச விமான நிலையத்தில், குடியேற்ற அதிகாரியாக பணிபுரிபவர் குரா ராய்.  இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரிட்டிஷ் பெண் பயணி ஆஜ்-இ தாகத்தாஸ் (42) என்பவரின் விசா, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது அந்த பெண்ணின் விசா காலம் முடிந்தது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து விசா காலம் முடிந்து கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததற்கு அபராதம் செலுத்த வேண்டும் என அதிகாரி கூறினார். இதனால் அவருக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அந்த பெண் குடியேற்ற அதிகாரியை அறைந்து விட்டு, அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை பறித்துச் சென்றுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பாலியில் விசாவில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியை விட 160 நாட்கள் அதிகமாக தங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.  இதையடுத்து அவருக்கு 3,500 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டபோது, ​​கடுமையாக பேசியுள்ளார்.

    கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி பலமுறை கூறியபோதும், அந்த பெண் வர மறுத்துள்ளார். எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்து, கட்டாயம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, வேறு வழியின்றி அவர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து தன்பாட்சர் கோர்ட்டில் தாகத்தாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். #BritishWomanJailed
    இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளது என நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #Indonesiadenguedeath
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து, இந்தோனேசியாவின் நோய் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக 13 ஆயிரத்து 683 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    #Indonesiadenguedeath
    இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #IndonesiaEarthquake
    ஜெகார்த்தா:

    இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் உள்ள கடலின் ஆழத்தில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவான இந்த நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. சேதம் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை. #IndonesiaEarthquake

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
     
    இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நேற்று அதிகாரிகள் கூறினர்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரே நாளில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 400 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
     
    இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 குழந்தைகளும் அடங்குவார்கள்.

    மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #IndonesiaFloods
    ×