search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி"

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. 

    தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

    இதில், கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்றார். தமிழிசையைவிட கனிமொழி 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 49,222 வாக்குகள் பெற்றார்.
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசிவருவது உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி, சந்திரசேகர் ராவிடம் பேசியதை போல் மறுபுறம் பிரதமர் மோடியுடனும் பேசி வருகிறார்.

    நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை அறிந்துள்ளதாலும், பதவி, பசி காரணத்தாலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 



    ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்படுவது வாடிக்கைதான் என தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.விடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு தி.மு.க. பேசி வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.
    2-ம் கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வரும் நிலையில் அவர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 30-ந் தேதி முதல் 3 நாட்கள் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் நலச்சங்கங்களுடன் கலந்துரையாடல், மக்களோடு மக்களாக நடைபயணம், வேன் பிரசாரம், திண்ணை பிரசாரம் என பல்வேறு வகைகளில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    இந்நிலையில் 2-வது கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அவர் மாலையிலேயே பிரசாரம் செய்வதால், அதுவரை தங்கி ஓய்வெடுப்பதற்காக தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனால் அந்த விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் பிரசார வேன் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பறக்கும்படையினர் மு.க.ஸ்டாலின் தங்க இருந்த தனியார் விடுதிக்கு இன்று காலை திடீரென வந்தனர். அவர்கள் அந்த விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் மு.க.ஸ்டாலினின் பிரசார வேன் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தி.மு.க.வினரின் வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

    2-ம் கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் வரும் நிலையில் அவர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை அண்ணனே சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiMurder

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மகன்கள் கிளவின்டன், பில்லா ஜெகன் (வயது43), சிமன்சன்(38), சுமன்.

    பில்லா ஜெகன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவராகவும் உள்ளார். மேலும் தூத்துக்குடி புறவழிச் சாலையில் லாரி செட் , நிதிநிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் நடத்தி வருகிறார்.

    அவருடன் அவரது சகோதரர்களும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பில்லா ஜெகனின் சகோதரர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.அவர்கள் அனைவரும்ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சிமன்சனுக்குகடந்த 2016-ம் ஆண்டு மணப்பாட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    பில்லா ஜெகன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பில்லா ஜெகனின் மகளை அதே பகுதியை சேர்ந்த சச்சின் என்பவர் காதலித்து வந்தாராம். இதையடுத்து சச்சின் காரில் கடத்தி கொடூரமாக கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் பில்லா ஜெகன் மட்டுமின்றி அவரது சகோதரர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பில்லா ஜெகனுக்கும், சிமன்சனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையால் சிமன்சனின் மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நேற்று பிற்பகலில் சிமன்சன் தனது மனைவியை சமரசம் செய்து அழைத்து வர மணப்பாடு சென்றார். அதன் பிறகு இரவு வீட்டிற்கு வந்த சிமன்சன், தனது அண்ணனிடம் லாரி தொழிலில் பங்கு தருமாறு கேட்டார். அதற்கு பில்லா ஜெகன் மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பில்லா ஜெகனின் மற்ற சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்றிரவு வெகு நேரம் வரை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் பில்லா ஜெகனுக்கும், சிமன்சனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிமன்சனை சுட்டார். இதில் அவரது தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. உயிருக்கு போராடிய சிமன்சனை அவரது நண்பர்கள் புதியம் புத்தூரை சேர்ந்த மாரீஸ், நாராயணன் ஆகியோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் சிமன்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சிமன்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் (வடபாகம்), ஜெயபிரகாஷ் (மத்திய பாகம்) மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் சிமன்சனை துப்பாக்கியால் சுட்டதுமே பில்லா ஜெகன் தனது வீட்டிலிருந்து தப்பி சென்று விட்டார்.

    தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று பில்லா ஜெகனை தேடி வருகின்றனர். இதனிடையே கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் சிமன்சனின் மனைவி சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதார். #ThoothukudiMurder

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளை மறுநாள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #SushmaSwaraj
    சென்னை:

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளை மறுநாள் (11-ந்தேதி) தேர்தல் பிரசாரத்துக்காக தூத்துக்குடி செல்கிறார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    வர்த்தக பிரமுகர்கள், மீனவர் சங்க பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் மத்தியில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். #LokSabhaElections2019 #SushmaSwaraj

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு, கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    தூத்துக்குடி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
     
    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.



    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் தூத்துக்குடி சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர்.

    இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார். அங்குள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு சென்ற கனிமொழி, சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #Sterlite #Judgement #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.



    இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன், அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், ரோகிணி மூசா ஆகியோர் ஆஜரானார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தானே நேரில் ஆஜராகி வாதாடினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7-ந் தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
    ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரணை நடத்துகிறது. இதில் ஏதேனும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

    அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த இருமனுக்கள் மீதும் விசாரித்த சுப்ரீம் கோர்ட் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவிட்டது.

    இதையடுத்து ஆலையை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்தது. அந்த மனுமீதான விசாரணை கடந்த 24-ந் தேதி நடந்தது.

    அப்போது அரசு தரப்பு மற்றும் ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல்கள் வாதாடினர். மேலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் வாதாடினார்.

    தொடர்ந்து வாதிட்ட ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வக்கீல், ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும், ஆலையை திறக்க இடைக்கால உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனவும், ஏற்கனவே ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் நாளை (29-ந் தேதி) மொத்தமாக விசாரித்து விரைவில் தீர்ப்பளிப்போம் என்று நீதிபதிகள் கூறினர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரணை நடத்துகிறது. இதில் ஏதேனும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் பண்டாரம்பட்டி, குமாரபுரம் உள்ளிட்ட கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 18 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் சஸ்பெண்டு செய்யப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் வராத காரணத்தால் 205 பள்ளிகள் மூடப்பட்டன. இன்று பணிக்கு வராத ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு இன்று மாலை நடைபெறும். பகுதி நேர ஆசிரியர் பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 2600 பேர் விண்ணப்பம் வழங்கி உள்ளனர்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite

    சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    சென்னை:

    சென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக, சமீபத்தில் தமிழக அரசுடன் மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. தற்போது, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை-தூத்துக்குடி இடையே நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தில், சென்னையில் இருந்து விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழிச்சாலையாக கொண்டுவரப்பட இருக்கிறது. தஞ்சாவூர், திருச்சியில் இருந்து சிவகங்கை வழியாக தூத்துக்குடிக்கு 6 வழிச்சாலை அமைய இருக்கிறது. அதாவது, சென்னையில் இருந்து பண்ருட்டி, விருத்தாசலம், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி என இந்த புதிய வழித்தடம் அமைய உள்ளது.

    இந்த புதிய சாலை அமைவதன் மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் அளவுக்கு பயண தூரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னை-தூத்துக்குடி இடையே தூரம் 600 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 2 முறை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார். இனி, நிலப்பரப்பை ஆய்வு செய்வது, எந்த வழியாக சாலையை அமைப்பது, எவ்வளவு இடத்தை கையகப்படுத்த வேண்டும் என்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. 
    காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். #KaanumPongal
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

    மேலும் பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர்.

    சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர். கடற்கரை மற்றும் பூங்காக்களையொட்டி 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தின்பண்டங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று நேரத்தை செலவழிப்பது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் முயல் தீவு மற்றும் தெர்மல் நகர் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் இருக்கும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில், 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதிலும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குற்றங்களை தடுப்பதற்காக சாதாரண உடையிலும் போலீசார் வலம் வந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களிலும் ஏராளமான மக்கள் காணும் பொங்கலை கொண்டாடினார்கள். இப்பகுதியில் உள்ள பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர்களுடன் பச்சையாற்றில் குளித்தனர்.

    இந்தாண்டு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர்கள் விளையாடினர். வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்பட பொருட்கள் கொண்டு வருகிறார்களா? என கடும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு முதல் முறையாக கழிவறை, குடிநீர் வசதி, உடை மாற்றும் அறைகள் உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான அன்வர்தீன் உத்தரவின் பேரில் களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின்படி வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி முன்னிலையில் வனத்துறையினரும், களக்காடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல களக்காடு தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குவிந்திருந்தனர். #KaanumPongal

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளது. #Sterlite #SupremeCourt
    சென்னை :

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜனவரி 21-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நேற்று உத்தரவிட்டது.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் முன்னர் அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி ஜனவரி மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. #Sterlite #MaduraiHC
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜனவரி 21-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று உத்தரவிட்டு உள்ளது.



    ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும் என அந்த ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் நேற்று தெரிவித்த நிலையில், மதுரை ஐகோர்ட் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #MaduraiHC
    ×