search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்கள்"

    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார். #FinalVoterslist

    வேலூர், ஜன. 31-

    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார்.

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.19-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், 2019-யின் கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அன்று முதல் கடந்த 31,10,2018 வரையில் சுருக்க திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டது.

    சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டு வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடபட்டது.

    15 லட்சத்து 7187 ஆண்கள் 15 லட்சத்து 61 ஆயிரத்து 446 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 145 பேர் உள்பட 30லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    இறுதிவாக் காளர் பட்டியல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1648 வாக்குச்சாவடி அமைவிடங் களிலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம் என வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். * * * சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். #AssemblyConstituency #VotersList
    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.9.2018 அன்று வெளியிடப்பட்டது.

    1.1.2019 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகிய சரிபார்க்கும் பணிகள் நடந்தன. இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 385 பேர் தங்கள் பெயர்களை சேர்க்கும்படி மனு கொடுத்தனர்.

    ஏற்கனவே இருந்த வாக்காளர்களில் 4 ஆயிரத்து 371 பெயர்கள் நீக்கப்பட்டன. தகுதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் 80 ஆயிரத்து 293 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்திகேயன் வெளியிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த 5 மாதங்களாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் பெயர் விடுபட்டவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் யார்-யார் என்பதை கள ஆய்வு செய்து பட்டியல் திருத்தப்பட்டது. இந்த பணி இன்றுடன் நிறைவுபெற்றது.

    வழக்கத்துக்கு மாறாக இந்த முறை இந்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் 5 மாதங்களை வழங்கி இருந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளின் திருத்தப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

    இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 பேர். பெண்கள் 19 லட்சத்து 34 ஆயிரத்து 78 பேர். இதர பிரிவினர் 932 பேர்.



    தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் வரைவு வாக்காளர் பட்டியலை தவிர 26 ஆயிரத்து 873 வாக்காளர்கள் அதிகம். இது 0.71 சதவீதமாகும்.

    குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி வேளச்சேரி. இங்கு 95 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர்.

    தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 829 பேர். புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.

    கடந்த 10 நாட்களுக்குள் யாராவது இடம்மாறி இருந்தாலோ, பெயர்கள் விடுபட்டு இருந்தாலோ அவர்கள் தகுதியான சான்றிதழ் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம். இது துணை வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் பெரிதாக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என்.ரவி, ராஜேஷ் ஆகியோர் வாக்காளர் பட்டியலை பெற்றுகொண்டனர்.

    தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் மதன் மோகன், மருதுகணேஷ், காங்கிரஸ் மாவட்டதலைவர் சிவராஜசேகர், நாச்சிகுளம் சரவணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

    பேட்டியின்போது சென்னை மாநகராட்சி துணை கமி‌ஷனர் லலிதா உடன் இருந்தார். #AssemblyConstituency #VotersList

    தமிழகம் முழுவதும் இன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். #ElectoralList
    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் இன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.

    குறைந்தப்பட்சமாக செய்யூர் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர்.

    தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    தொகுதி                    ஆண்கள்  பெண்கள்  இதர  மொத்தம்

    சோழிங்கநல்லூர்    311102         307518           75       618695

    ஆலந்தூர்                  177216         179296          10       356522           

    ஸ்ரீபெரும்புதூர் (தனி)155959       163451         47       319457

    பல்லாவரம்                200225       201420            29       401674

    தாம்பரம்                    187273       188022            36       375331

    செங்கல்பட்டு            191480        197261          41      388782

    திருப்போரூர்             130726        134417          23      265166

    செய்யூர்                      105942        107994          27      213963

    மதுராந்தகம்             106872        109397          41      216310

    உத்திரமேரூர்            118826        125857          19      244702

    காஞ்சிபுரம்                140993        149390          12      290395

    மொத்தம்                    1826614      1864023        360    3690997



    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம். #ThiruvarurByElections
    திருவாரூர்:

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி காலமானார். இதனை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 3 ஆயிரத்து 669 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகள் உள்ளன. கொரடாச்சேரி பேரூராட்சி மற்றும் மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. #ThiruvarurByElections

    சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது தொடர்பாக ருசிகர பதிவுகள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பரபரப்பாக காணப்படுகிறது. #AssemblyElection #BJP #MemesJokes
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘மீம்ஸ்’கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளன.

    இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச முதல்-மந்திரியான இவர், பல்வேறு இடங்களின் பெயரை மாற்றி வருகிறார். இதை தேர்தல் முடிவுகளுடன் தொடர்புபடுத்தி பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அதாவது, ‘தோல்வியை, வெற்றி என பெயர் மாற்றுமாறு மோடியிடம் ஆதித்யநாத் கேட்டுக்கொள்வார்’, ‘காங்கிரஸ் கட்சியின் பெயரை பா.ஜனதா என மாற்றுவார்’ என்று வலைத்தளவாசிகள் கிண்டல் செய்திருந்தனர்.

    இந்த மாநிலங்களில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருந்தது. அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் இல்லா இந்தியாவின் தொடக்கம் இது’ என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா, இதில் ‘காங்கிரஸ்’ என்ற பெயரை ‘பா.ஜனதா’ என மாற்றி மறுடுவீட் பண்ணி இருந்தார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ‘பப்பு’ என பா.ஜனதாவினர் கிண்டலாக அழைத்து வருகின்றனர். இதை குறிப்பிட்டு பிரபல எழுத்தாளர் சோபா டே, ‘பப்பு தேர்வில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, உடனடி பி.எச்.டி. பட்டம் ஒன்றையும் பெற்றிருக்கிறார். இதே நிலையில் அவர் தொடர்வார் என நம்புவோம். நாடாளுமன்ற தேர்தல் முழுவதும் இந்தியாவுக்கு அவர் தேவை’ என்று கூறியிருந்தார்.

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ‘பா.ஜனதாவினர் இன்று அதிகம் வருத்தப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் வாக்காளர்கள் அவர்களுக்கு முத்தலாக் கொடுத்து விட்டனர்’ என்று கேலி செய்திருந்தார்.

    இது போன்ற ருசிகர பதிவுகளால் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பரபரப்பாக காணப்படுகிறது. #AssemblyElection #BJP #MemesJokes
    திருவண்ணாமலை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.



    மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜானகி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல், அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தற்போது ஆண்கள் 9 லட்சத்து 54 ஆயிரத்து 913 பேர், பெண்கள் 9 ஆயிரத்து 79 ஆயிரத்து 243 பேர் மற்றும் இதர பிரிவினர் 65 பேர் என மொத்தம் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர்.

    வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தற்போது முதல் தொடங்குகிறது. 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று வரை பிறந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல், திருத்தம், நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்ய வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வாக்குச்சாவடி மையம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி, அக்டோபர் மாதம் 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதி ஆகிய தேதிகளில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும். அன்று அந்தந்த பாகத்தின் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி, அக்டோபர் மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி நடைபெறும். அன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க தேவையான படிவங்கள் பெற்று ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை பெறப்படும் படிவங்கள் அனைத்தும் கள விசாரணை செய்யப்பட்டு வருகிற ஜனவரி 4-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர், திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள டான்காப் கிடங்கில் அமைக்கப்பட்டு உள்ள வைப்பு அறையில் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவின் போது வாக்காளர்கள் தங்கள் வாக்குபதிவினை சரிபார்க்கும் எந்திரங்கள் 3200 ( voter verifiable paper audittrial ) அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வைக்கப்படுவதை தொடங்கி வைத்தார். இந்த வைப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் பணியாளர்கள் எந்திரங்களை தூக்கி சென்றனர். மேலும் தொடர்ந்து அந்த வைப்பு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4,738 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். #TN #TNDraftRoll
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10-1-2018 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது மொத்தம் 18 லட்சத்து 37ஆயிரத்து 652 வாக்காளர்கள் இருந்தனர்.

    அந்த வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்காதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்க விரும்புபவர்கள் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    அதன்படி பலர் விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    பட்டியலை மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் சீனி அஜ்மல்கான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நர்மதா தேவி, பல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    புதிய பட்டியலின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1098 பேர் சேர்க்கப்பட்டு, 272 பேர் நீக்கப்பட்டனர். ஈரோடு மேற்கு தொகுதியில் 1754 பேர் சேர்க்கப்பட்டு, 425 பேர் நீக்கப்பட்டனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் 1005 பேர் சேர்க்கப்பட்டு, 446 பேர் நீக்கப்பட்டனர். பெருந்துறை தொகுதியில் 223 பேர் சேர்க்கப்பட்டு, 42 பேர் நீக்கப்பட்டனர்.

    பவானி தொகுதியில் 780 பேர் சேர்க்கப்பட்டு, 243 பேர் நீக்கப்பட்டனர். அந்தியூர் தொகுதியில் 419 பேர் சேர்க்கப்பட்டு, 65 பேர் நீக்கப்பட்டனர்.

    கோபி தொகுதியில் 875 பேர் சேர்க்கப்பட்டு, 787 பேர் நீக்கப்பட்டனர். பவானிசாகர் தொகுதியில் 961 பேர் சேர்க்கப்பட்டு, 97 பேர் நீக்கப்பட்டனர்.

    ஆக மொத்தமாக மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 115 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். 2 ஆயிரத்து 377 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    புதிய வாக்காளர் பட்டியலில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 9 லட்சத்து 4 ஆயிரத்து 432 ஆண்களும், 9 லட்சத்து 37 ஆயிரத்து 888 பெண்களும் அடங்குவர். ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர். மற்றவர்கள் 70 பேர் உள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட இந்த புதிய பட்டியலில் புதிதாக 4738 வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.

    இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 980 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 103 வாக்காளர்களும் உள்ளனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 960 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 15 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    பவானி தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 687 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 666 வாக்காளர்களும் உள்ளனர்.

    கோபி தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 616 வாக்காளர்களும், பவானி சாகர் 2 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் மொத்தம் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். #TN #TNDraftRoll
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 2 கோடியே 88 லட்சத்து 76 ஆயிரத்து 791 பேர் ஆண்கள். 2 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 404 பேர் பெண்கள். 5184 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    மாநிலத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் உள்ள தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு 6.07 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1.64 லட்சம் வாக்காளர்களுடன் குறைந்த தொகுதியாக துறைமுகம் உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி துணை கமி‌ஷனர் லலிதா வெளியிட்டார்.

    சென்னையில் மொத்தம் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18 லட்சத்து 71 ஆயிரத்து 638 பேர் ஆண்கள். 19லட்சத்து 19 ஆயிரத்து 582 பேர் பெண்கள். இதர வாக்காளர்கள் 906 பேர் ஆவார்கள்.

    இதில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 508 வாக்காளர்களுடன் பெரம்பூர் அதிகபட்ச பேரை கொண்ட தொகுதியாக இருக்கிறது. துறைமுகம் குறைந்தபட்ச தொகுதியாக உள்ளது. அங்கு 1 லட்சத்து 64 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர்கள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2019 அன்று 18 வயதை நிறைவு அடைபவர்கள் (1.1.2001 தேதிக்கு முன்பு பிறந்தவர்கள்) படிவம் 6-யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-யையும், திருத்தம் தொடர்பாக படிவம் 8-யையும் சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்வு விவரத்தை படிவம் 8ஏ-யையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆவண நகலையும் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அக்டோபர் 31-ந்தேதி வரை உள்ள காலத்துக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வருகிற 9,24 மற்றும் அக்டோபர் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

    மேலும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை மாவட்டத்தில் கடந்த முறை 3768 வாக்கு சாவடிகளும், 2 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது வாக்குசாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு சென்னை மாவட்டத்தில் 3754 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. #TN #TNDraftRoll

    சென்னை
    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்:-


    காஞ்சீபுரம்
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 36,35,231. இதில் ஆண் வாக்காளர்கள் 17,99,395. பெண் வாக்காளர்கள் 18,35,497. இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 336. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் விவரம் வருமாறு:-


    திருவள்ளூர்



    வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #OPanneerSelvam #TTVDhinakaran
    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 449 கோவில்களில் பொது விருந்து நடந்தது.

    சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடந்த பொது விருந்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கும் பிரச்சனை முடிந்து போனது. மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மா, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்கு பின் யாருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இதற்கு மாற்றாகத்தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    இதற்கு அ.தி.மு.க. பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது. சிலர், தேவையில்லாமல் பிரச்சனையை நீதிமன்றம் மூலம் கிளப்பி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது எடுபடாது.

    உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். வேட்பாளர்கள் குறித்து உயர்மட்டக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.

    அ.தி.மு.க.வில் முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.


    ஆனால் டி.டி.வி.தினகரன் வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை செய்து வருகிறார். அது உறுப்பினர் சேர்க்கை ஆகாது. வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார். அனைத்து தேர்தலையும் சந்திக்க அ.தி. மு.க. தயாராக உள்ளது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனைக்கு செல்லும் முன்பு வீட்டில் நானும், அமைச்சர்களும் சென்று பார்த்தோம். மருத்துவமனையில் முதல்-அமைச்சர் சென்று பார்த்தார்.

    ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடலுக்கு முதல்-அமைச்சர், நான் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினோம். எனவே இந்த பிரச்சனையை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPanneerSelvam #TTVDhinakaran
    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ‘கர்நாடகாவில் வாழும் என் சகோதர சகோதரிகள் இன்று அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள்  தவறாமல் வாக்களித்து தங்கள் பங்களிப்புடன் இந்த ஜனநாயக திருவிழாவை சிறப்படைய செய்ய வேண்டும்’ என மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
    ×