search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    ஆட்சியை காப்பாற்ற ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அமைதியாக இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Kushboo #ADMK

    சென்னை:

    பெப்சி அலுவலகத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து ஒரு ஆண்டு முடிவடைந்தது பற்றி?

    பதில்:- வரி கட்டினால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் ஜி.எஸ்.டி. வி‌ஷயத்தில் அருண் ஜெட்லி, அமித்ஷாவுக்கு தெளிவு இல்லை. தவறுதலாக பல வி‌ஷயங்களை செயல்படுத்தி விட்டார்கள். மன்மோகன் சிங் ஜி.எஸ்.டி.யால் ஜி.டி.பி. குறையும் என்று முன்பே கூறினார். அப்போது அவரை பா.ஜ.க.வினர் திட்டினார்கள். இப்போது அதுதானே நடக்கிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. ஜிஎஸ்டியால் ஏகப்பட்ட பொருளாதார பிரச்சினைகள்.

    கே:- பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது பற்றி?

    ப:- தாமசன்ராய்ட்டர் என்ற நிறுவனம் கூறியிருக்கிறது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 2015- 2016 காலகட்டத்தில் இது தொடர்பாக 39 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    2013 -ல் இதே நிறுவனம் இதே வி‌ஷயத்தில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக சொன்னபோது மோடி ஒரு பெண் தலைவியாக இருக்கும் நாட்டில் இப்படியா? என்று சோனியா காந்தியை பார்த்து கேள்வி கேட்டார். இப்போது நாங்கள் கேள்வி கேட்கிறோம். அவர்கள் மழுப்பலாக பதில் சொல்கிறார்கள்.

    கே:- சேலம் சென்னை 8 வழி சாலை பற்றி?

     


    ப:- நாட்டுக்கு வளர்ச்சி தேவை. ஆனால் விவசாயம் பாதிக்க கூடாது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான பதில் இல்லை. ஸ்டெர்லைட் வி‌ஷயத்திலும் மாநில அரசிடம் சரியான பதில் இல்லை.

    கே:- சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடித்ததற்காக பா.ம.க. எதிர்ப்பு தெரிவிக்கிறதே?

    ப:- எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக்கொண்டே இருந்தால் நம் வேலையை நாம் செய்ய முடியாது.

    கே:- தமிழகத்தில் கவர்னர் ஆய்வு தொடர்கிறதே?

    ப:- ராமர்-லட்சுமணர் போல இருக்கும் முதல்வரும் துணை முதல்வரும் எங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்கட்டுமே... தம்பி நீங்க இப்ப பேசக்கூடாது என்று டெல்லியில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். தங்கள் ஆட்சியை 3 ஆண்டுகள் காப்பாற்றுவதற்காக இருவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

    கே:- தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்று கூறினீர்களே?

    ப:- அதுபற்றி பேச வேண்டாம். அது முடிந்து போன வி‌ஷயம். மீண்டும் மீண்டும் அரைத்தால் புளித்துவிடும். மாற்றுவார்களா என பார்ப்போம்.

    கே:- தமிழக மகிளா காங்கிரசில் இருந்து நடிகை நக்மா நீக்கப்பட்டு இருக்கிறாரே?

    ப:- எனக்கும் மகிளா காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. அது மேலிடம் எடுத்த முடிவு.

    கே:- கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு காவிரி வி‌ஷயத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்போகிறதே?

    ப:- இது குறித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் தான் பதில் கூற வேண்டும்.

    கே:- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    ப:- இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்று தெரியாது. எனக்கு சீட் கிடைக்கா விட்டால் எனக்கும் தலைமைக்கும் பிரச்சினை என்பார்கள். கிடைத்து விட்டால் அந்த தைரியத்தில் பேசுகிறார் என்பார்கள். நான் வீடு செல்வதற்குள் என்னவெல்லாமோ நடந்து விடும். அதெல்லாம் வரும் போது பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #ADMK

    தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக குஷ்பு, வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #Khushboo #Vadivelu
    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியிலும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளில் நடந்து வந்தன.

    இதேபோல நத்தம் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு மீதும் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    தங்கள் மீது வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குஷ்பு, வடிவேலு ஆகிய இருவர் சார்பிலும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். #Khushboo #Vadivelu
    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக குஷ்பு ஆதரவாளர்கள் அணி திரண்டு வருகிறார்கள். அவர்கள் திருநாவுக்கரசருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #Congress #Khushboo
    சென்னை:

    நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை விமர்சனம் செய்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் இன்னும் 1 மாதத்தில் நீக்கப்படுவார் என்றார்.

    இதற்கு பதிலடி கொடுத்த திருநாவுக்கரசர், குஷ்புவை கடுமையாக விமர்சித்தார். அவர் தி.மு.க.வில் இருந்து செருப்பு, முட்டை வீசி வெளியேற்றப்பட்டார் என்றார். இந்த மோதல் காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் குஷ்பு ஆதரவாளர்கள் திருநாவுக்கரசருக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். அவர்கள் திருநாவுக்கரசருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    குஷ்பு ஆதரவாளர்களான தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணிகண்டன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டி சம்மந்தமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நாகரீகமில்லாத மிகவும் தரக்குறைவான கடுமையான வார்த்தைகளால் குஷ்புவை பேசியுள்ளார். தனது தகுதியை மறந்து பேசியுள்ளார்.

    பெண்களை தெய்வமாக போற்றும் நமது நாட்டில் பெண்களைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவது இரும்பு மங்கை எனப்போற்றப்படும் இந்திரா காந்தியின் உருவமாக காங்கிரசாரால் கொண்டாடப்படும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு இழுக்கு என்பதை தாங்கள் ஏன் உணரவில்லை?

    பெண்களை கேவலமாக பேசி ஜாமீன் கூட பெற முடியாமல் ஊர் ஊராக மாறு வேடத்தில் சுற்றித் திரியும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி. சேகரின் பேச்சுக்கும் உங்களின் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்.

    சிறுபான்மை சமுதாயத்தை தாங்கள் இழிவு படுத்துவது புதிதல்ல. தாங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வந்த பிறகு காங்கிரஸ் தலைமையிலான சத்தியமூர்த்தி பவனிலேயே அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் அசீனா தங்கள் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார்.

    பெண்கள் பாதுகாப்பிற்காகவும், சிறுபான்மையினர் பாதுகாப்பிற்காகவும், போராட்டங்களும், மக்கள் இயக்கங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ஆணாதிக்க அரசியலில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியோடு, குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்திலிருந்து அரசியலுக்கு வந்து தேசிய அளவில் பதவியை பெற்று பணியாற்றி வரும் குஷ்புவை பெண் என்றும் பாராமல் தாங்கள் பேசியிருப்பது சிறுபான்மை மக்களின் மீது தாங்கள் கொண்டிருக்கும் மனநிலையை உணர்த்துகிறது.

    இதை வன்மையாக கண்டிக்கிறேன். சொந்த கட்சிக்காரர்களின் சரமாரி கேள்வி கணைகளாலும் மாற்று கட்சி நண்பர்களின் கட்சித் தலைவர் இப்படி பேசலாமா எனும் தொடர் கேள்வியாலும் இக்கோரிக்கையை வைக்கிறோம்.

    ராகுலின் கரத்தை வலுப்படுத்தி ராகுலால் நியமிக்கப்பட்ட எங்கள் மாநில தலைவர் உங்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வீறு கொண்டு எழ ராகுலால் நியமிக்கப்பட்ட குஷ்புவை நீங்கள் மதித்து பேசும் பேச்சு ராகுலை பெருமை படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Congress #Khushboo
    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என கூறிய நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress
    சென்னை:

    காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், “தமிழக காங்கிரஸ் தலைவர் திரநாவுக்கரசர் செயல்பாடு திருப்தியாக இல்லை. 2 மாதத்தில் தலைவர் பதவியில் இருந்து மாற்றம் வரும். திருநாவுக்கரசர் நீக்கப்படுவார்” என்று கூறி இருந்தார்.

    இதற்கு மறைமலைநகரில் நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.

    பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். என்னை பதவயில் இருந்து நீக்குவேன் என்று கூறுகிறார். என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்? அதற்காக தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது? என்று பேசினார்.



    இந்த நிலையில் காங்கிரசின் மூத்த தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யசோதா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி பெரிய பதவி கிடையாது. மாநில தலைவர்தான் பதவிதான் முக்கியமானது. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிதான் முக்கியமானது. இந்த பதவியில் முகுல் வாஸ்னிக் உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் குறைபாடுகள் இருந்தால் இதை மாநில தலைவரிடம் சொல்லலாம். இல்லையென்றால் அகில இந்திய பொதுச்செயலாளரிடம் தெரிவிக்கலாம். அல்லது அகில இந்திய கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எடுத்து கூறலாம். அதைவிட்டு விட்டு மீடியாவில் குறைகளை சொல்வது தவறு. இது கட்சியை பலவீனப்படுத்தும்.

    காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதிர்க்கட்சியினர் குறை கூறும்போது அதற்கு பதில் அளிக்க மீடியாவை பயன்படுத்தலாம். ஆனால் உள்கட்சி விவகாரத்தை மீடியாவில் சொல்வது மிகப்பெரிய தவறு.

    நான் காமராஜர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறேன். எங்களால் எவ்வளவோ பேச முடியும். ஆனாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு நாங்கள் கட்சி இடும் கட்டளையை செயல்படுத்தி வருகிறேன்.

    சத்தியமூர்த்தி பவன்தான் எங்களுக்கு கோவில் மாதிரி. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இது தாயகம் போன்றது. ஆனால் சத்தியமூர்த்தி பவனை குறை கூறுவதை ஏற்க முடியாது.

    குஷ்புவுக்கு காங்கிரசின் பண்பாடு, காங்கிரசின் நடைமுறை எதுவும் தெரியவில்லை. 2 வருடத்துக்கு ஒருமுறை காங்கிரசில் தலைவர்கள் மாறுவது வழக்கம். வாழப்பாடி ராமமூர்த்தி உள்பட பல தலைவர்கள் 6 வருடம் வரை தலைவராக இருந்து இருக்கிறார்கள்.


    எனவே இப்போதைய தலைவரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய தலைவர் வரும் போது பேசலாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

    திருநாவுக்கரசர் குரல் பலமாக இல்லையென்றாலும் அவரது செயல்பாட்டை குறைகூற இயலாது. தினமும் அவர் கட்சிக்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று வருகிறார்.

    எதிர்க்கட்சிகாரர்களையும் நாகரீகமாக விமர்சிக்கின்றார். ஆனால் குஷ்பு தேவையில்லாமல் விமர்சிக்கிறார். குஷ்பு ஸ்டார் நடிகையாக இருப்பதால் தொண்டர்களுடன் பழகுவதில் சில சங்கடங்கள் இருக்கலாம். எங்களுக்கு அந்த சங்கடங்கள் கிடையாது.

    ஆனாலும் அநாகீகரிமாக குஷ்பு பேசக்கூடாது. தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரசில் இருந்தபோது தலைவர்களை விமர்சிக்கமாட்டார். நாட்டிய பேரொளி பத்மினி, ஜெயசித்ரா ஆகியோர் காங்கிரசில் இருந்தாலும் அவர்கள் இப்படி தலைவர்களை விமர்சித்தது இல்லை. கட்சி கூட்டங்களில் பேச பணம் கேட்டது கிடையாது.

    ஆனால் குஷ்பு ஒரு கூட்டத்தில் பேச ரூ. 1 லட்சம் வரை பணம் வாங்குகிறார். பணம் கொடுக்காத கூட்டத்தில் பேசுவது இல்லை. இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரை பொறுத்தவரை பணம் தேவையில்லாத ஒன்று. நல்ல வசதியாகதான் உள்ளார்.

    எனவே அவர் காங்கிரசுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தால் அவருக்கு மரியாதை அதிகரிக்கும்.

    இவ்வாறு யசோதா கூறினார். #Congress #Kushboo #Thirunavukkarasar #Yasodha
    தி.மு.க.வில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்ட குஷ்புவின் நடிப்பு காங்கிரஸ் கட்சியில் எடுபடாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukarasar #Kushboo #Congress
    சென்னை:

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்வதில் தவறு கிடையாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எந்த கட்சியுடனும் ஆயுட்கால கூட்டணி வைக்க முடியாது. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ?. அதன்படி நாம் கூட்டணியை அமைக்கிறோம். தற்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருகிறது.

    நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி அவர் கூறலாம். அதற்கான தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது?. தலைமை இவரிடம் கருத்து கேட்டதா?. இதுபோன்ற பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

    குஷ்பு ஒரு நடிகை. படங்களில் அவர் எந்த வேடத்திலும் நடிக்கலாம். ஆனால் காங்கிரசில் அவர் நடிப்பு எடுபடாது. தி.மு.க.வில் இருந்தபோது நீங்கள் ஏன் வெளியேற்றப்பட்டீர்கள் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலவசமாக அவர் பிரசாரம் செய்யவில்லை. ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்தார். பிறகு குளுகுளு அறையில் போய் படுத்துக்கொண்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்ய அந்த தலைவர் அழைத்தபோது, அதிக பணம் கேட்டார். இத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தி.மு.க.வில் நடந்தது போல், காங்கிரஸ் கட்சியிலும் முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடத்தப்படும் நிலை ஏற்படும். அந்த நிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நான் எம்.ஜி.ஆர்., வாஜ்பாய், ராகுல்காந்தி ஆகியோருடன் பழகியவன். அரசியல் பயின்றவன்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபிறகு எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறீர்கள். காசு வாங்காமல் கட்சி பணி ஆற்றியது உண்டா?. நான் ஜெயலலிதாவையே பார்த்தவன், குஷ்பு எம்மாத்திரம். தி.மு.க.வில் அவர் பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது தான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும், தி.மு.க.வினரும் மறக்கவில்லை.

    2 மாதத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடுவதாக கூறுகிறார். முடியுமா?. அப்படி என்னை பதவியில் இருந்து தூக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய அவர் தயாரா?. சொன்னது நிறைவேறவில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா?. வேண்டாத வேலைகளை, கயிறு திரிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thirunavukarasar #Kushboo #Congress 
    ×