search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்கள்"

    பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.ங



    வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.

    வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.
    டெல்லியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #CongressCandidates
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறது. அவ்வகையில், இன்று டெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.  #LokSabhaElections2019 #CongressCandidates

    டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-



    சாந்தினி சவுக் - ஜே.பி.அகர்வால்

    வடகிழக்கு டெல்லி- ஷீலா தீட்சித்

    கிழக்கு டெல்லி- அரவிந்தர் சிங் லவ்லி

    புதுடெல்லி - அஜய் மக்கான்

    வடமேற்கு டெல்லி (தனி) - ராஜேஷ் லிலோதியா

    மேற்கு டெல்லி- மகாபல் மிஸ்ரா

    சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுவேன் என கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறி வந்த நிலையில், அவருக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. #LokSabhaElections2019 #CongressCandidates
    மகாராஷ்டிரத்தில் முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. நாளையுடன் பிரசாரம் ஓய்வதால் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். #Maharashtra #ParliamentElection
    மும்பை :

    மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக வரும் 11-ந் தேதி வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், , யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான கடந்த 28-ந் தேதிக்கு பிறகு, பிரசாரம் சூடுபிடித்தது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், மாநில அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்களும் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது.

    மேலும், செல்போன் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், டுவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் நாளை மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    அதையும் மீறி யாராவது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

    முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்து 181 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் ஆண்களும், 63 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்களும் அடங்குவர், 181 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

    இதற்காக 14 ஆயிரத்து 919 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

    மேலும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 44 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 73 ஆயிரத்து 837 ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துதர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கொளுத்தும் வெயிலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்கு குடிக்க தண்ணீரும், நிழலுக்காக பந்தலும் அமைக்கப்படுகிறது.

    தேர்தலுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வழங்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 11-ந் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப்போடலாம். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மாலை 6 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அனைவரும் வாக்களித்த பிறகே அந்த பூத்தில் வாக்குப்பதிவு முடிக்கப்படும்.

    மேலும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி- சிமூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தேர்தல் நடைபெறுகிறது. #Maharashtra #ParliamentElection
    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடந்த 26-ந்தேதி மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த கால அவகாசத்துக்குள் தமிழகம் முழுவதும் 1,587 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் பரிசீலனை 27-ந்தேதி நடைபெற்றது. அதில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,587 வேட்புமனுக்களில், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 518 வேட்புமனுக்களில் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    அதை தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்ப பெற 2 நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுபவர்கள், 29-ந்தேதி (இன்று) மாலை 3 மணிக்குள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், களத்தில் நிற்கப்போகும், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

    எந்தெந்த தொகுதிகளில் யார்-யார்? களத்தில் நிற்கின்றனர்? எத்தனை பேர் களத்தில் இருப்பார்கள்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று மாலை 3 மணிக்கு மேல் தெரியவரும். இந்த இறுதி வேட்பாளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் இன்று மாலை 3 மணிக்கு மேல் சுயேச்சை வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

    சுயேச்சை வேட்பாளர்கள் பலர் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால், அதை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வேட்பாளருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். தற்போது அ.ம.மு.க., வேட்பாளர்கள் அனைவருமே சுயேச்சை வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.



    அவர்கள் அனைவருக்கும், ஒரு பொதுவான சின்னத்தை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம், வழங்கும் அறிவுரையின் அடிப்படையில், அவர்களுக்கு சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    சின்னங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தேர்தல் களத்தில் பிரசாரம் இன்னும் சூடு பிடிக்கும்.  #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #Congress #BJP
    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் ஒப்படைத்தார். இதுபோல் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை கட்சி மேலிடத்தில் கொடுத்து இருக்கிறார்.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய காங்கிரஸ் செயற்குழு நேற்று பரிசீலனை செய்தது. இதில் தமிழ்நாடு உள்பட வேறு சில மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பா.ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. இது கட்சி மேலிட பரிசீலனையில் உள்ளது.

    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. மாலைக்குள் இந்த பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகம்-புதுச்சேரியில் காங்கிரஸ் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் நிற்கிறது. இதற்கு சீட் வாங்க கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜனதா கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை, ராம நாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இதற்கும் பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனவே இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிய கட்சி தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.



    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘இன்று மதியம் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘காங்கிரஸ் பட்டியலில் பெண் பெயரும் இடம் பெறும்’’ என்று கூறியுள்ளார். எனவே குஷ்பு போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #LSPolls #Congress #BJP

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #LokSabhaElection #Candidate #CriminalRecord
    புதுடெல்லி:

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நடைமுறை வருகிற பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அமலுக்கு வருகிறது.

    அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது போலீசில் வழக்கு நிலுவையில் இருந்தால் அது பற்றிய விவரங்கள், தண்டிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது விளம்பரம் செய்ய வேண்டும்.

    குற்ற நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் என்றால், அது குறித்த தகவல்களையும் அந்த வேட்பாளர் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதைப்போல தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித்தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும். அது குறித்த தகவல்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும்.

    தவறும் கட்சிகள் மீது அங்கீகாரம் ரத்து, இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் பாயும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. #LokSabhaElection #Candidate #CriminalRecord
    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParliamentElection #BJP #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆனால், அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பா.ம.க.வும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

    அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பா.ஜ.க. விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.



    அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

    மேலும், பா.ஜ.க.வுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. #ParliamentElection #BJP #ADMK
    பிரசாரத்துக்கு தினமும் ரூ.10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் புதிய கடிவாளம் போட்டுள்ளது. #ElectionCommission
    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தலின்போது பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வாக்காளர்களை அரசியல் கட்சிகள் கவர முயற்சிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

    தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தேர்தல் கமிஷன் கூடுதல் கவனமும், ஆர்வமும் செலுத்தி வருகிறது.

    தேர்தல் பிரசாரத்துக்கு வேட்பாளர்கள் தினமும் ரூ.20 ஆயிரம் அளவுக்குத்தான் ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று 2011-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தேர்தல் கமிஷன் அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

    இப்போது இதில் புதிய கடிவாளத்தை தேர்தல் கமிஷன் போட்டுள்ளது. ரொக்க பரிமாற்றத்தின் அளவை பாதி ஆக்கி உள்ளது. 2017-ம் ஆண்டு, வருமான வரி சட்டம் பிரிவு 40 ஏ(3)-ல் செய்யப்பட்ட திருத்தத்தை கருத்தில் கொண்டு, வேட்பாளர்களின் தினசரி பண பரிமாற்றத்தின் அளவை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் ஆக தேர்தல் கமிஷன் குறைத்துள்ளது.

    இது கடந்த 12-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    மேலும், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் தினமும் ரூ.10 ஆயிரம் மட்டுமே ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும், அதற்கு கூடுதலாக பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை தேர்தலுக்காக வேட்பாளர்கள் தொடங்குகிற வங்கிக்கணக்கில் மின்னணு முறையில்தான் மேற்கொள்ள வேண்டும் அல்லது காசோலை வழியாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

    எனவே பிரசாரத்தின்போது எந்த வேட்பாளரும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக ஒரு நபரிடம் இருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாகவோ, கடனாகவோ பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #ElectionCommission
    தேர்தலில் குற்றப்பின்னணி பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிடாவிட்டால், வேட்பாளர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #ElectionCommission #PublicCriminalRecord
    புதுடெல்லி:

    அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளின் ஆதிக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.

    இந்த நிலையில்தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.



    இந்த வழக்குகளை (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் பல அதிரடி உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர்.

    அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றிய எல்லா தகவல்களையும், டெலிவிஷன் சேனல்களிலும், நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும்; அரசியல் கட்சிகளும் தாங்கள் நிறுத்துகிற வேட்பாளர் மீதான குற்ற வழக்குகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்பவை ஆகும்.

    இந்தநிலையில், தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தல்களில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக அமல்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான ஒரு அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 10-ந் தேதி வெளியிட்டு இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அதில் கூறி இருப்பதாவது:-

    * தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தின்போது தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றி தகவல்களை டி.வி. சேனல் மற்றும் நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறை வெளியிட வேண்டும்.

    * இதே போன்று அரசியல் கட்சிகளும் தாங்கள் களம் இறக்குகிற வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

    * குற்றப்பின்னணி தகவல்கள் தொடர்பாக வெளியிடுகிற விளம்பர கட்டணங்களை வேட்பாளர்களும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் ஏற்க வேண்டும். இது தேர்தல் செலவில் வரும்.

    * இந்த விதிமுறைகளை வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் பின்பற்றாவிட்டால், தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் வழக்கு அல்லது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம். தேர்தல் வழக்கை பொறுத்தமட்டில், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக வேட்பாளர்களில் ஒருவர் அல்லது வாக்காளர்களில் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

    * ஒரு வேட்பாளர் பற்றிய குற்றப்பின்னணி தொடர்பாக தவறான தகவல்களை மற்றொரு வேட்பாளர் வெளியிட்டால், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171-ஜி படி நடவடிக்கை எடுக்கலாம். இந்தப் பிரிவு தேர்தல் நடைமுறை ஊழல் பற்றி வழக்கு தொடர வழி வகுத்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 42 கோடீசுவரர்கள் வெற்றி பெறுவதற்காக அதிக அளவிலான பணத்தை செலவு செய்கின்றனர். #BJP #Congress

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 12-ந்தேதியும், 20-ந்தேதியும் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சத்தீஸ்கர் சட்ட சபையில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்-அஜீத்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 187 பேர் களத்தில் உள்ளனர்.

    இவர்கள் பின்னணி பற்றி ஜனநாயக சீர்திருத்த கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது.

     


    வேட்பாளர்களில் பெரும் பாலானவர்கள், வயதானவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 20 சதவீதம்பேர் தான் இளைஞர்கள் என்று புள்ளி விபரம் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    14 பெண் வேட்பாளர்கள் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிகிறது. வேட்பாளர்களில் கணிசமானவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    மொத்த வேட்பாளர்களில் 42 பேர் மிகப்பெரிய கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் 13 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். 4 பேர் அஜீத்ஜோகி கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

    66 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இவர்கள் அனைவரும் பணத்தை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். #BJP #Congress

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. #ElectionCommission #SupremeCourt
    புதுடெல்லி:

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மீதான வழக்குகள் மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதற்கான உத்தரவை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வேட்பாளர்களிடம் உறுதிபடுத்த வேண்டும்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த பின் தன்மீதுள்ள குற்ற வழக்குகள் மற்றும் வழக்குகளில் பெற்ற தண்டனை விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.

    அதன் மூலம் அவரது வேட்பு மனுவை பரிசீலிப்பதா அல்லது ஒப்புதல் அளிப்பதா என முடிவு செய்து ஆணையம் முன்பு சில நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. #ElectionCommission #SupremeCourt
    குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலுக்கும் காரசார வாதம் நடந்தது. #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா தொடர்ந்த பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அமர்வு முன் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. 

    வழக்கு விசாரணையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் சின்னம் அளிக்க மறுக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் வழங்கலாமா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு “அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரம். நீதிமன்றம் அதில் தலையிடக் கூடாது” என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் “இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை” என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார். “அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காத இடத்துக்குள் நுழைய சுப்ரீம் கோர்ட் முயற்சிக்கிறது” என்று அவர் கூறினார்.

    குற்றப் பின்னணி கொண்டவர்களை தடை செய்து சட்டம் கொண்டு வந்தால், பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலை உருவாகும் என்றும் வேணுகோபால் எச்சரித்தார்.

    நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் கருத்தும் மத்திய அரசின் கருத்தும் ஒன்றாக இருந்தது. ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி நாரிமனும் மத்திய அரசு வாதத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். 

    “பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காத வரையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு சின்னத்தை வழங்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியும். நாங்கள் பாராளுமன்றத்தின் எல்லைக்குள் நுழையவில்லை” என்று நீதிபதி நாரிமன் கூறினார்.

    ஆனால், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவை விவாதித்து, ஏற்க மறுத்துவிட்டதாக வேணுகோபால் பதிலளித்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
    ×