search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகம்"

    கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர். #Kumaraswamy #IndependentMLAs #WithdrawSupport
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பாஜக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.



    இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குமாரசாமி அரசுக்கு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 117 ஆக குறைந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் விலகலால் குமாரசாமி அரசுக்கு ஆபத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Kumaraswamy #IndependentMLAs #WithdrawSupport
    தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. #SeniorNationalVolleyball #Championship #Karnataka
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கேரள அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ரெயில்வே அணியை வீழ்த்தி 11-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் தொடர்ச்சியாக 9 முறை ரெயில்வேயிடம் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 25-20, 25-14, 25-18 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை தோற்கடித்தது.

    ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் செட்டை தமிழக அணி தனதாக்கியது. 2-வது செட்டை தமிழக அணி மயிரிழையில் இழந்தது. அதன் பிறகு தமிழக அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. முடிவில் கர்நாடக அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற செட் கணக்கில் தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள அணி 25-23, 25-16, 25-19 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்தது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர் தலைமை தாங்கினார். சென்னை ஸ்பார்டன்ஸ் நிறுவன சேர்மன் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். விழாவில் ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ஜோன்ஸ், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் (விளையாட்டு) வைத்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #SeniorNationalVolleyball #Championship #Karnataka 
    பா.ஜனதா பூத்கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர், ஊழல் இல்லாத வளர்ச்சியை கர்நாடகம் விரும்புகிறது என்று பேசினார். #PMModi #BJP
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி, ஒவ்வொரு மாநிலமாக பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

    அதே போல் கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது மோடி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அரசு சொன்னது. அது மிகவும் கொடூரமான நகைச்சுவை ஆகும். ஊழல் இல்லாத வளர்ச்சியை தான் கர்நாடகம் விரும்புகிறது. கர்நாடக மக்கள், பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.



    அதனால், மாநில அரசு மக்களின் நலன்களை புறக்கணிக்கும்போது, அதற்காக நமது கட்சி நிர்வாகிகள் குரல் கொடுக்க வேண்டியது கடமை ஆகும். கர்நாடகத்தில் ஆட்சி செய்பவர்கள், இசை நாற்காலி ஆட்டத்தை ஆடுவது போல் தெரிகிறது.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால், நல்ல நிலையில் உள்ள விவசாயிகளே பயன் பெறுகிறார்கள்.

    நாட்டை சுற்றிவரும் சிலர், விவசாய கடன் தள்ளுபடிக்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார்கள். அத்தகையவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கும் பொறுப்பு ஏற்பார்களா?.

    இவ்வாறு மோடி பேசினார். #PMModi #BJP
    கர்நாடகாவில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #BoilerBlastinaSugarMill
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் முதால் மாவட்டத்தில் உள்ள குலாலி கிராமத்தில் முன்னாள் மந்திரி முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 
     


    கொதிகலன் வெடித்து சிதறியதில் சர்க்கரை ஆலையின் பல்வேறு சுவர்கள் பாதிப்பு அடைந்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 13 பேர் பலியான சில தினங்களுக்குள் மீண்டும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BoilerBlastinaSugarMill
    கர்நாடகத்தில் மாநில அரசு மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பேரில் யூனிட்டுக்கு ரூ.1 முதல் ரூ.1.65 உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #Karnataka #Powertariff
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் 2019-2020-ம் ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின் வாரிய நிறுவனங்கள் கோரிக்கையும், சிபாரிசும் செய்துள்ளன. அதாவது பெஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயர்த்தவும், அதுபோல செஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ரூ.1.65 காசுகள் அதிகரிக்கும்படியும், இதேபோன்று கெஸ்காம் மற்றும் மெஸ்காம் மின் வாரிய நிறுவனங்கள் யூனிட்டுக்கு ரூ.1.30 காசுகள் முதல் ரூ.1.45 காசுகள் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்றும் மாநில அரசின் மின் வாரியத்திற்கு சிபாரிசு செய்து அறிக்கை அளித்துள்ளது.



    பிற நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை அதிகரித்துள்ளதாலும், மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகரித்துள்ளதாலும், மின் கட்டணத்தை உயர்த்த சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மின் வாரிய நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்தும்படி கூறி கொடுத்துள்ள அறிக்கையை மாநில அரசும், கர்நாடக மின் வாரியமும் பரிசீலித்து வருவதாகவும், இதுதொடர்பாக ஆலோசித்து மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #Karnataka #Powertariff
    தனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையேயான காவிரி பிரச்சனை தீர வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம் தெரிவித்துள்ளார். #CauveryIssue #NitinGadkari
    ஹாசன்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் டவுன் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று ரூ. 1,865 கோடி மதிப்பிலான சாலை வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் கலந்துகொண்டு ரிமோட் பொத்தானை அழுத்தி சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் பங்கு மிக முக்கியமானது.

    தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்க்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனது பதவி காலம் முடிவடைவதற்குள் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சனை தீர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

    மைசூரு-பெங்களூரு இடையே ரூ.7 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் 8 வழிச்சாலையை அதிநவீன முறையில் மேம்படுத்தப்படும். பெங்களூரு-சென்னை இடையே சாலை வளர்ச்சி பணிக்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இதற்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நாட்டில் உள்ள சாலை வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #CauveryIssue #NitinGadkari
    கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்த பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    பெங்களூரு:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கர்நாடகத்துக்கு ஒரு பேருந்து சுற்றுலா வந்தது. அதில் 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    ஹூப்ளி அருகே அன்னிகிரி தாலுகா பத்ராபூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலை 63ல் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சுற்றுலா சென்ற இடத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident 
    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல் சாமராஜபேட்டையில் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    பெங்களூரு:

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அனந்த குமார் உடல் முப்படை விரர்கள் புடைசூழ மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
     
    அங்கு அவரது உடலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்துக்கான பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மத்திய மந்திரி சதானந்த கவுடா, அசோகா, ஈஸ்வரப்பா, அனுராக் தாகூர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனந்த குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 



    இதையடுத்து தேசிய கல்லூரி மைதானத்திற்கு அனந்த குமார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் அனந்த குமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, பிராமண முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சாமராஜபேட்டில் மதியம் 3.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    விசாரணைக்கு ஆஜராக வந்த ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானை குற்றப் பிரிவு போலீசார் திடீரென கைது செய்தார்கள். #JanardhanReddy
    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி, நிதி நிறுவன அதிபரிடம், 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகான் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில், தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் ஜனார்த்தனரெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதுபோல, விசாரணைக்கு ஆஜராகும்படி அலிகானுக்கும் போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இதையடுத்து, நேற்று மாலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது குற்றப் பிரிவு போலீசார் திடீரென அலிகானை கைது செய்தார்கள்.

    அலிகான் வீட்டில் கடந்த 7-ந் தேதி போலீசார் சோதனை நடத்தியபோது, அவர் வீட்டில் இருந்து 5 தோட்டாக்களை கைப்பற்றி இருந்தனர். சட்ட விரோதமாக தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்ததால் தற்போது அலிகான் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
    தலைமறைவான கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜனார்த்த ரெட்டி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். #Karnataka #JanardhanaReddy
    பெங்களூரு:
     
    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத் துறையில் வழக்கும் பதிவானது.



    இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் உதவியை பரீத் நாடினார். அமலாக்கத்துறை வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு தலைமறைவானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாகிய அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

    இந்நிலையில், தலைமறைவாக கருதப்பட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி இன்று குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்.

    அப்போது அவர் கூறுகையில், தன் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. போலீசாரிடம் எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார். #Karnataka #JanardhanaReddy
    கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.  

    இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி நீடிக்காது எனக்கூறிய பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்.



    காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. அதன் முதல் படிதான் இந்த வெற்றி.

    மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம். தங்கள் கூட்டணி தொடர்பான பாஜக குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்து உள்ளனர் என தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy 
    கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றிபோல் உள்ளது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Chidambaram
    சென்னை:

    கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 2ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.  

    இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறுகையில், கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத பெற்ற வெற்றி டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றிபோல் உள்ளது என தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கர்நாடக இடைத்தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது என பதிவிட்டுள்ளார். #KarnatakaBypoll #Chidambaram
    ×